டாக்டர். ஹோவிந் - கருத்தரங்கு 2ஆ - தாவரங்களை உண்ணும் டைனோசரஸ் ஏறத்தாள 26 மீட்டர் நீளமும், 30 முதல் 80 டன்கள் எடை உள்ளதாகவும் இருந்தது. தமிழ் (Tamil) ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது. நவீனகால குதிரையின் மூக்குத் துவாரங்களைப் போன்று அதே அளவு மூக்குத்துவாரங்கள் இருந்தன. அவைகளுக்கு மூச்சுத் திணறவில்லையா? அல்லது 6000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வித்தியாசமான சூழ்நிலை அங்கு இருந்ததா? நம்முடைய இன்றைய சூழ்நிலையைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமான ஆரம்பப் படைப்பின் சூழ்நிலை மற்றும் 900 ஆண்டுகளுக்கும் மேல் இருந்தது எவ்வாறு என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள். அது பெரிய தாவரங்களையும் மற்றும் விலங்குகளையும் உற்பத்தி செய்தது. மேலும் டைனோசரஸ் வளர்வதற்கு அது பரிபூரண நிலையைக்கொடுத்தது. கருத்தரங்கு 2ஆ- டாக்டர். ஹோவிந் - www.drdino.com - தமிழ் (Tamil) மொழிபெயர்ப்பு: D. மந்திரி குமார், M.Sc. கருத்தரங்கு 2ஆ- டாக்டர். ஹோவிந் - "ஏதேன் தோட்டம்" எங்களுடன் இணைந்திருப்தற்கு உங்களுக்கு நன்றி. என்னுடைய பெயர் கென்ட் ஹோவிந். பதினைந்து ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடம் கற்றுக்கொடுத்தேன். மற்றும் தற்போது சென்ற 16 ஆண்டுகள் காலமாக படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோசரஸ் பற்றி கருத்தரங்குகள் நடத்திக்கொண்டு வருகிறேன். முதலாவதாக, ஏதேன் தோட்டம் எதைப்போல் இருந்தது என்று நாம் இந்தக் கூடுகையில் பேச இருக்கிறோம். இரண்டாவதாக, வெள்ளம் வருவதற்கு முன்பு 900 ஆண்டுகள் வயது உள்ளவர்களாக மக்கள் ஏன் வாழ்ந்தார்கள் எனப் பேசப்போகிறோம். மூன்றாவதாக, இன்று நாம் பார்க்காத ஆரம்பப் படைப்பிற்கும் மற்றும் தற்போதுள்ளவற்றிக்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதைப் பற்றியும் நாம் பேச இருக்கிறோம். மற்றும் நீங்கள் சொல்லுங்கள்: நான்காவதாக, இந்தப்பூமி ஆரம்பத்தில் இருந்ததுபோல தேவன் மறுபடியும் திருப்பிக்கொள்வார் என்கிற தேவனுடைய வாக்குறுதியை நீங்கள் எவ்வாறு எடுக்க முடியும். (நீங்கள் விரும்பினால் அதில் நீங்களும் பங்குள்ளவராக இருக்க முடியும்.) முதலாவதாக, இது என்னுடைய மனைவியின் படம். அவள் இங்கு இல்லை. புளோரிடா மாநிலத்தில் உள்ள பென்ஸக்கோலா என்ற இடத்தில் வசிக்கிறோம். இன்னும் சுமார் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு வெப்பப் புயலினால் அது தாக்கப்படும். அங்கு வசிக்கும்போது இரண்டு சூறாவளிப் புயல்களை நாங்கள் பொறுத்துக்கொண்டோம், அது அங்கு சகஜமானது. எனக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒவ்வொறுவரும் ஒப்பற்ற சிறப்பானவர்கள். அனைவரும் தற்போது திருமணம் ஆனவர்கள். அது செய்துமுடிக்கப்பட வேண்டிய முக்கியமான காரியம் ஆகும்! தற்போது எங்களுக்கு நான்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். நாம் களைப்படைந்து இருந்தபோது, நாம் பிள்ளைகள் வளர்ப்பதில் பொறுமையை இழக்காமல் இருப்பதற்காக தேவன் தந்த வெகுமதியாய் அவர்கள் இருக்கிறார்கள். இன்னும் பேரப்பிள்ளைகள் வருவார்கள் என எதிர்பார்கிறோம். எங்களின் முழு குடும்பமும் அங்கே வசித்து வருகிறோம். என்னைச்சுற்றிலும் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் மேலும் அவர்கள் என்னைப் பார்ப்பதற்குத் தினசரி வருகிறார்கள். இது மிகவும் அருமையானது! எங்களின் குடும்பம் ஆசிர்வதிக்கப்பட்டது. அவர்களின் வாழ்க்கையுடன் அவர்கள் தேவனுக்கு சேவை செய்ய விரும்புகிறார்கள். வேதாகமத்தில் உள்ள கொலோசெயர் முதலாம் அதிகாரத்தில், "அனைத்தும் அவரால் ( இயேசுவைப் பற்றிப் பேசுகையில்)ஆசீர்வதிகப்பட்டிருக்கிறது. சகலமும் அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது." மேலும் மத்தேயு 19: 4-ல் இயேசு சொன்னார், "ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும் நீங்கள் வாசிக்கவில்லையா?" உண்மையிலே அதுதான் ஆரம்பமாய் இருந்ததா? அதுதான் ஆரம்பம் என்று இயேசு கூறினார். படைப்பின் ஆரம்பத்திலே ஆணும் பெண்ணுமாக தேவன் அவர்களைச்சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. ஒரு மனிதனால் பாவம் உலகத்திற்குள் வந்தது என்றும் பாவத்தினால் மரணம் வந்தது என்றும் வேதாகமம் போதிக்கிறது. மனிதனால் மரணம் வந்தது. மரணமானது மனிதனை உலகத்திற்கு கொண்டு வந்தது என்று பரிணாமம் போதிக்கிறது. மனிதன் மரணத்தை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தான் என்று வேதாகமம் போதிக்கிறது. இந்த இரண்டு கருத்துக்களும் முற்றிலும், முற்றிலும் எதிரெதிரானவைகள். முதல் மனிதன் ஆதாம் என்றும், சேத் பிறக்கும்போது ஆதாமுக்கு 130 வயதாகவும் மற்றும் ஏனோஸ் பிறக்கும்போது சேத்துக்கு 105 வயது என்றும் வேதாகமம் கூறுகிறது. கடந்த கூடுகையில் நாம் அந்தத் தகவலைத் தெரிந்துகொண்டோம். வேதாகமத்தை வாசித்து அதன் காலங்களை நீங்கள் சேர்த்துப் பார்த்தீர்களானால் (செய்வதற்கு மிகவும் கடினமானது அல்ல), ஏறக்குறைய 6,000 ஆண்டுகளுக்கு முன்னரும், கி.மு. 4,000 ஆண்டுகளுக்கு முன்பும் சிருஷ்டிப்பின் காலம் இருந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பீர்கள். வேதாகமத்தில் கொடுக்கப்பட்ட காலங்களை சேர்த்துப் பார்க்கும்போது உங்களுக்கு அந்த காலம் கிடைக்கிறது. தற்போது இரண்டு முடிவுகள் பற்றி நாம் விவாதிப்போம். வெள்ளம் வருவதற்கு முன்பு அது எதுபோன்று இருந்தது? ஒரு மனிதன் 900 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வது சாத்தியமாகுமா? 900 ஆண்டுகளில் நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ளமுடியும்! இதைப்பல மக்கள் ஒருபோதும் சிந்தனை செய்தது இல்லை, ஆனால் இந்த உலகில் உள்ள ஒவ்வொறு மொழியையும் ஆதாம் பேசினான் என்று நீங்கள் உணரமுடிகிறதா? ஏனெனில் அப்போது ஒரே ஒரு மொழி மட்டுமே இருந்தது, சரியா? மேலும், இந்த உலகத்திலே மிகவும் அழகான பெண்ணை ஆதாம் திருமணம் செய்துகொண்டான் என்றும் நமக்குத் தெரியும். கடந்த காலங்களில் மிகவும் வித்தியாசமாக காரியங்கள் இருந்தன. பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசரஸ் வாழ்ந்தது என்று பள்ளியில் உள்ள பாடப்புத்தகங்கள் உங்கள் பிள்ளைகளுக்குப் போதிக்கப்போகின்றன. அது உண்மையா? இந்தப் பூமிக்கு 6,000 ஆண்டுகள் வயது மட்டுமே இருக்கும் பட்சத்தில் அது உண்மையாக இருக்கமுடியாது. டைனோசரஸ் வசிப்பதற்குப் பொறுத்தமான இடம் எது? அந்த விஷயத்தை நாம் விரைவில் பேச இருக்கிறோம். பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசரஸ் வாழ்ந்ததா? அல்லது மனிதர்களுடன் அவைகள் எப்பொழுதும் வாழ்ந்ததா? முந்தைய வரலாற்றுக் காலங்களில் அவைகளுக்கு வேறு பெயர் இருந்தது - ட்ராகான்ஸ் (இறகுகளுள்ள பிராணிகள்) என்று அவைகளை அழைத்தனர். அதுபோன்ற சிருஷ்டிப்பு எதுவாய் இருந்தது? வெள்ளம் வருவதற்கு முன்பு அவைகள் எதைச்சாப்பிட்டன? கிறிஸ்த்துவின் 1000-ம் வருட அரசாட்சியில் நமது உலகம் எதுபோன்று இருக்கும்? ஆரம்பத்தில் இருந்தது மாதிரி பொருட்களை கர்த்தர் எப்போது மறுபடியும் திருப்பிக்கொண்டு வருவார்? வெள்ளத்திற்கான அனைத்துத் தண்ணீரும் எங்கிருந்து வந்தது? மேலும் அந்தத்தண்ணீர் எங்கு சென்றது? மேலும் மூன்று மீட்டருக்கும் மேல் உயரமுள்ள ராட்க்ஷச மக்கள் உண்மையிலே இந்த பூமியில் இருந்தார்களா? பொறுமையாக இருங்கள். எங்களால் முடிந்த மட்டும் இங்கு அவற்றை உங்களுக்கு வழங்க முயற்சிக்கிறோம். நாம் ஆரம்பிக்கலாம்! "முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசி நாட்களில் பரியாசக்காரர்கள் வந்து," என்று வேதாகமத்தில் உள்ள II பேதுரு 3 சொல்கிறது. வேதாகமத்தைப் பரியாசம் செய்கிற மக்கள் அங்கே இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? நான் அவர்களை வழக்கமாக சந்தித்து வருகிறேன். ஒளியுள்ள தடிபோல் நான் அவர்களைக் கவருகிறேன். பரியாசக்காரர்கள் வெளியே அங்கு இருக்கிறார்கள். அவர்கள் எங்களை வெறுக்கிறார்கள்! நான் அவர்களிடத்தில் சரியாக இருக்க விரும்புகிறேன், ஆனால் அவர்கள் என்னை விரும்பவில்லை. "என்ன நேர்த்தியான, அற்புதமான மனிதர் நீங்கள்!" என்று அவர்கள் என்னைப் பாராட்டுவதில்லை. பரியாசக்காரர்கள், தங்களின் சுய இச்சைகளின்படி நடக்கயிருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. மக்கள் வேதாகமத்தை பரியாசம் செய்வதற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? அவர்களின் அறிவியல் காரணங்களுக்காக அல்ல. இது இருக்கிறதென்று அவர்கள் நினைக்கிறார்கள்; ஆனால் அது இல்லை. வேதாகமத்தை அவர்களின் இச்சையினால் அவர்கள் பரியாசம் பண்ணுகிறார்கள். அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று தேவன் அவர்களுக்குச்சொல்வதை அவர்கள் விரும்பவில்லை. ஒவ்வொறு நேரமும், அதுதான் உண்மையான காரணமாக இருக்கிறது. "இயேசுவினுடைய வருகையைப் பற்றிய வாக்குறுதி எங்கே? ஏனெனில், பழமைகள் கடந்துவிட்டன....." என்று பரியாசக்காரர்கள் சொல்லப்போகிறார்கள். சிருஷ்டிப்பின் ஆரம்பத்திலிருந்து அனைத்தும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. அது ஒரு முக்கியமான சொற்றொடர் ஆகும்; வீடியோ எண் 4-ல் நாம் அதைப்பற்றிக் காணலாம். ஆனால் பரியாசக்காரர்கள் சொல்லப்போகிறார்கள்: எப்பொழுதும் நிகழ்ந்துகொண்டே வருவதுபோலவே, இப்பொழுதும் காரியங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரே மாதிரியாக இருத்தல்- அதை இப்பொழுது பார்ப்பதற்கு நமக்கு நேரமில்லை- பகுதி எண் 4-ல் நாம் அதை விபரமாகப் பார்ப்போம். பரியாசக்காரர்கள் இஷ்டப்பட்டு அறியாமல் இருக்கிறார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. கிரேக்க மொழியில் இஷ்டப்பட்டு அறியாதவர்கள் என்பதின் அர்த்தம் "வேண்டுமென்றே பேசாதவர்கள்." என்பதாகும். பரியாசக்காரர்கள் அறியாதவர்களாக இருப்பதற்கு இரண்டு காரியங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள், அவைகளாவன: ஒன்று: தேவனுடைய வார்தையினால் வானங்கள் எல்லாக்காலங்களிலும் இருந்தன." "வானம்" என்கிற வார்த்தையைக் கவனியுங்கள், பன்மையில் "வானங்கள்" என்றிருக்கிறது. நாம் சில நிமிடங்களில் அவைகளைப் பற்றிப் பேசுவோம். தேவன் எவ்வாறு தன்னுடைய வார்தையினால் வானங்களை உண்டாக்கினார் என்பதைப் பரியாசக்காரர்கள் அறியாமல் இருக்கிறார்கள். இரண்டு: "இந்தப் பூமியானது தண்ணீருக்கு வெளியேயும் மற்றும் தண்ணீருக்கு உள்ளேயும் நின்றுகொண்டிருக்கிறது." தற்போது, ஒரு வேற்றுச்சொற்றொடராக அது இருக்கிறது. பூமியானது தண்ணீருக்கு வெளியேயும் மற்றும் தண்ணீருக்கு உள்ளேயும் எவ்வாறு இருக்கமுடியும்? வேதாகமம் சொல்வதைக் கவனியுங்கள், "வானங்களும் பூமியும் அவருடைய வார்தையால் உண்டாக்கப்பட்டது." தேவன் இந்தப் பிரபஞ்சத்தை உண்டாக்கும்போது, அவருடைய ஒரு விரலைக்கூட பயன்படுத்தவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர் ஒரு திருகாணியையோ அல்லது ஆணியையோ திருகவில்லை. அவர் சொன்னார், ஒவ்வொறு மூலக்கூறுகளும் வரிசையாய் நின்றன. அதைப்பற்றி சிந்திப்பது ஆச்சர்யமாயிருக்கிறது. அவர் பேசுகையில், அலைகள் கீழே சென்றன, காற்று வீசுகிறது. அவர் பேசுகையில், இறந்தவர்கள் மறுபடியும் உயிர்பெற்றனர். அவர் பேசுகையில், இந்தப் பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டது. நம்மைத்தவிர, தேவனுக்கு அனைத்துமே கீழ்ப்படிகிறது. அவருக்குச்சில பிரச்சனைகள் நம்மால் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த நாட்கள் ஒன்றில் அதற்கு அவர் பரிகாரம் செய்வார், " அனைத்து முழங்கால்களும் முடங்கும் மற்றும் இயேசு கிறிஸ்துவை ஆண்டவர் என்று நாவுகள் யாவும் அறிக்கை செலுத்தி, பிதாவாகிய தேவனுக்கு மகிமையைச் செலுத்துவார்கள். பூமியின் மேலுள்ள ஒவ்வொருவரும் அப்படிச்செய்வார்கள். ஆனால் தற்போது, தேவன் அவருடைய வார்த்தையினால் வானங்களை உண்டாக்கினார் என்று பரியாசக்காரர்கள் இஷ்டப்பட்டு அறியாமல் இருக்கிறார்கள். மேலும் பூமியானது தண்ணீருக்கு வெளியேயும் மற்றும் தண்ணீருக்கு உள்ளேயும் எவ்வாறு நிற்கிறது என்பதை அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள். உண்மையான, ஆரம்பப் படைப்பைப் பற்றி அவர்கள் அறியவில்லை என்பதே அதன் அர்த்தம். அது எதுபோன்று இருந்தது? அதைப்பற்றி விரைவில் நாம் பேச இருக்கிறோம். அவர்கள் அறியாதிருக்கிற இரண்டாவது காரியம் வெள்ளம். " ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், யாவும் மாண்டன." என்று வேதாகமம் சொல்லுகிறது. இந்த உலகமானது வெள்ளத்தினால் அழிக்கப்பட்டது, முற்றிலும் அழிக்கப்பட்டது. அவர்கள் அறியாதிருக்கிற மூன்றாவது காரியம் என்னவெனில், வரயிருக்கிற நியாயத்தீர்ப்பு ஆகும். அடுத்த வசனம் சொல்கிறது, " அதே வார்தையால், தற்போதிருக்கிற, வானங்களும் பூமியும் பாதுகாக்கப்பட்டன,...... .......நியாத்தீர்ப்பின் நாளிலே அக்கினிக்காக நியமிக்கப்ப்ட்டவர்கள் மற்றும் தேவனற்றவர்களுக்கான அழிவுமாகும்." பரியாசக்காரர்கள் படைப்பைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். தேவன் உலகத்தைச்சிருஷ்டித்தார் என்று ஒப்புக்கொள்ள அவர்களுக்கு இஷ்டமில்லாமல் இருக்கிறார்கள். தேவனுக்கு இது சொந்தம் என்பதே அதன் அர்த்தம். அங்கே ஒரு வெள்ளம் இருந்தது என்பதை ஒப்புக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை, ஏனெனில், அவருடைய சிருஷ்டிப்பை நியாயந்தீர்க்கத் தேவனுக்கு அதிகாரம் உண்டு என்பதை அது நிரூபிக்கிறது. அந்த சிந்தனையை அவர்கள் விரும்பவில்லை. மேலும் அங்கே வர இருக்கிற நியாத்தீர்ப்பையும் அவர்கள் ஒப்புக்கொள்ள நிச்சயமாக விரும்பவில்லை. நான் ஒரு சுவர்விளம்பரத்தில் இவ்வாறு பார்தேன்: "இயேசு வரப்போகிறார் மற்றும் அவர் அதிகக் கோபமாக இருக்கிறார்!" அதுதான் உண்மையாகும். வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், ஆரம்ப சிருஷ்டிப்பு எவ்வாறு இருந்தது என்பதைப் பல பெயர்க்கிறிஸ்தவர்களும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். வெள்ளம் இந்த உலகத்திற்கு என்ன செய்தது என்றும் படைப்பு மற்றும் வெள்ளம் பற்றிய அவர்களின் அறியாமையால், தேவனுடையத் தெளிவான உபதேசத்துடன் சமரசம்செய்ய பெரும்பாலானவர்களுக்கு அது காரணமாகிவிடுகிறது. ஆதியாகமம் முதல் அதிகாரம், முதல் வசனத்தில், "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்." என்பதைப் பார்க்கிறீர்கள். அங்கே "வானம்" என்று ஒருமையில் உள்ளது. அதற்க்குப் பின்பு அனைத்துப் பகுதிகளிலும் பன்மையில் "வானங்கள்" என்று உள்ளது. தேவன் முதலாவது சிருஷ்டித்தபோது ஒரு வானமாக இருந்தது. அதன்பின்பு, அவர் அதை மூன்று நிலைகளாகப் பிரிக்கிறார்: முதல் வானம், இரண்டாம் வானம் மற்றும் மூன்றாம் வானம் என்றும் பிரிக்கிறார். நாம் விரைவில் அதை விபரமாகப் பார்ப்போம்; ஆனால் ஐந்தாம் வசனத்தைப் பாருங்கள். "சாயங்காலமும் விடியற்காலமுமாகி, முதலாம் நாள் ஆயிற்று," என்று வேதாகமம் சொல்லுகிறது. இதை ஆங்கிலத்தில் பார்க்கும்போது, குறிப்பிட்டுச்சொல்லும் வார்த்தையான "the" என்கிற t-h-e வார்த்தையைக் கவனியுங்கள். இது ஆங்கிலத்தில் திட்டமான நிலையைக் குறிக்கும் deninite article லான the என்பதினால் அழைக்கப்படுகிறது, அந்த "THE" முதலாம் நாள். நான் பயன்படுத்துகிற கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் அந்த வார்தை இருக்கிறது. மேலும் ஆங்கிலம் பேசுகிற ஒவ்வொருவரும் அதைப் பயன்படுத்த நான் சிபாரிசு செய்கிறேன். வேதாகமத்தின் மற்ற மொழிபெயர்ப்புகளையும் நான் சேகரிக்கிறேன். அவைகளினால் நான் பயப்படவில்லை; இருப்பினும், மற்ற சில மொழிபெயர்ப்பு வேதாகமத்தில், சில முக்கியமான பிழைகள் இரூந்து வருகின்றன. டஜன் கணக்குகளுக்கும் மேலான இடங்களில் "இரத்தம்" என்கிற வார்த்தையானது விடுபட்டுக்காணப்படுகிறது; கிறிஸ்துவின் தெய்வத்திற்கு என்கிற குறிப்புகளை பலர் நீக்கியிருக்கிறார்கள். சிலவைகள் முக்கியமான மாற்றங்கள்: 200க்கும் அதிகமான வசனங்களை சீர்கேடு அடையச்செய்துவிட்டனர். நாம் அவைகளைப் பற்றி அதிகமாக வீடியோ எண் 7-ல் பார்க்கலாம். ஏன் கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு வேதாகமம் மிகவும் சிறந்தது என்று நாங்கள் விவாதிக்கிறோம். Revised Standard Version மொழிபெயர்ப்பு வேதாகமத்தை நான் பரிசோதித்துப் பார்த்தேன். அது எனக்கு மெதடிஸ்ட் ஆலயத்தில் என்னுடைய வருகைக்காகக் கிடைத்த ஒரு பரிசு வேதாகமம் ஆகும். இல்லினாய்ஸில் உள்ள பெயோரியாவில் இருக்கும் மிகவும் உதாரணமான மெத்தடிஸ்ட் ஆலயத்தில் நான் வளர்க்கப்பட்டேன். அனைத்து மெத்தடிஸ்ட் ஆலயங்களும் உதாரணமானவைகள் என்று நான் சொல்லவில்லை, ஆனால் என்னுடைய பெற்றோர்களுடையது மிகவும் உதாரணமானது. அந்த ஆலயத்தில் இரண்டுப் பிரசங்க மேடைகள் இருந்தன; அது மிகவும் புதுவிதமானது! அங்கே ஒரு பிரசங்க மேடையில் வேதாகமத்தை வாசிக்கிறார்கள், பிரசங்கியார் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்க்கு நடந்து சென்று அடுத்த பிரசங்க மேடையில் பிரசங்கம் செய்வார். ஏன் அதை அவர்கள் செய்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதற்கு எனக்கு நீண்ட நாட்கள் ஆனது. ஆனால் இறுதியில் நான் புரிந்துகொண்டேன்: இந்த மேடைமேல் அவர் என்ன வாசிக்கிறார் என்பதற்கும், அடுத்த மேடையில் அவர் என்ன பிரசங்கிக்கிறார் என்பதற்கும் மிகவும் தூரமிருக்கிறது, எனவேதான் தனித்தனியே இரண்டுப் பிரசங்கமேடைகளை அவர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் நான்காம் வகுப்புப் படிக்கும்போது முழு வருகை எனக்கு இருந்தது. அவர்கள் எனக்கு ஒரு Revised Standard Version வேதாகமத்தைக் கொடுத்தார்கள், உண்மையிலே அது ஒரு துணை-நியம வேதாகமமாக இருந்தது. எனவே, ஆதியாகமத்தில் உள்ள நிகழ்வுகள் எவ்வாறு மற்ற மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் காணப்படுகிறது என்கிற எனது வேதாகம சேகரிப்பில் பார்த்தேன். "Substandard version" [RSV] என்கிற மொழிபெயர்ப்பு வேதாகமத்தில், அது இவ்வாறு சொல்கிறது, "அங்கே சாயங்காலமும் மற்றும் அங்கே காலையும், ஒரு நாள்." தற்போது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்! "the first day" என்கிற "அந்த முதல் நாளுக்கு" என்ன நிகழ்ந்தது? வரலாற்றில் எத்தனை "அந்த முதல் நாட்கள்" என்கிற "the first days" இருக்கின்றன? ஒன்று. வரலாற்றில் எத்தனை "ஒரு நாட்கள்" என்கிற "one days" இருக்கின்றன? அவை அனைத்தும், அவைகளில் ஏதாவது, எனக்குறிப்பிடுவது சரியா? "ஒரு" நாள் என அதை அவர்கள் அழைப்பது ஏன்? கீழேயுள்ள எட்டாவது வசனத்தில், "அந்த இரண்டாம் நாள்" என்பதற்குப் பதிலாக "ஒரு இரண்டாம் நாள்" என்று அதை அவர்கள் அழைக்கிறார்கள். "substandard version" மொழிபெயர்ப்பை உருவாக்குகிறவர்கள் வார்த்தையின்படியே உள்ள ஆறு நாட்கள் சிருஷ்டிப்பை நம்புவதில்லை என்று நான் கற்றுக்கொண்டேன். "அந்த முதல் நாள்" என்பதை "ஒரு நாள்" என்று ஏனைய மொழிபெயர்ப்புகளும் அதை மாற்றுகின்றன. நீங்களே அதை ஆராய்ச்சி செய்யமுடியும். இந்த மக்களில் பலரும் "இடைவெளிக் கோட்பாடு" என்கிற "the gap theory" யை நம்புகிறார்கள். எத்தனைபேர்கள் ஏற்கனவே இடைவெளிக் கோட்பாட்டை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? 1814-ல் இந்த இடைவெளிக் கோட்பாடு கண்டுபிடிக்கப்பட்டது. தாமஸ் சேமர்ஸ் என்கிற ஸ்காட்லாந்து பிரசங்கியாரால் அது கண்டுபிடிக்கப்பட்டது. "வசனம் ஒன்றிற்கும், வசனம் இரண்டிற்கும் இடையில் இடைவெளி இருக்கிறது." என்று அவர் கூறுகிறார். "பல மில்லியன்கள் அல்லது பில்லியன்கள் ஆண்டுகள் அவைகளுக்கு இடையில் உள்ளன" என்றும் கூறுகிறார். 1800-ஆம் வருடம்வரை இடைவெளிக் கோட்பாடு பற்றி எவருமே சிந்திக்கவில்லை. இந்தப் பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று போதிப்பதற்கு பிரபலமாகும் வரைக்கும் அது தெரியாது. இந்தப் பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று சொல்கிற ஒரு புத்தகம் 1795-ல் எழுதப்பட்டது. மேலும் சில கிறிஸ்தவர்கள் அதை நம்பி, இவ்வாறு சொன்னார்கள், " வேதாகமம் அதைச்சொல்கிறது என்று நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது." எனவே, இடைவெளிக் கோட்பாடு, நாள்-வயதுக் கோட்பாடு, படிப்படியான வளர்ச்சிப் படைப்பு போன்ற பல்வேறு சமரசம் செய்யும் நிலைமைகளையுடைய பலவற்றை அவர்கள் கண்டுபிடித்தார்கள். இன்னும் சில நிமிடங்களில் நாம் அதைப்பற்றி அதிகம் போதிக்க இருக்கிறோம். ஆனால், அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டவைகளில் இடைவெளிக் கோட்பாட்டை 1814-ல் அவர்கள் கண்டுபிடித்தார்கள். முதல் இரண்டு வசனங்களுக்கும் இடையில் மில்லியங்கள் அல்லது பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று போதிப்பதற்காக ஒருவேளை அப்படிச்செய்திருக்கலாம். நான் வேதாகமக் கல்லுரிக்குச் சென்றபோது அதுதான் எனக்குப் போதிக்கப்பட்டது. Scofield Reference Bible அதைத்தான் போதிக்கிறது. ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் வசனங்களுக்கு இடையில் அனைத்து புவியியல் காலங்களூக்கும் அதிகமான காலங்கள் இருக்கிறது என்று அவர்கள் போதிக்கிறார்கள். ஆதாமுக்கு முந்தின எதிர்ப்பு ஒன்று இருந்தது என்றும் லூசிபரின் நியாத்தீர்ப்பு நிகழ்ந்தது என்றும் அவர்கள் முன்வைக்கிறார்கள். சில கேள்விகளை இது எழுப்புகிறது: ஆதாமுக்கு முன்பு இங்கு யாராவது இருந்தார்களா? ஆதாமுக்கு முந்தின எதிர்ப்பு இருந்ததா? மேலும், சரியாக எப்பொழுது லூசிபர் நியாயந்தீர்க்கப்பட்டு வானத்திலிருந்து கீழே விழுந்தான்? வேதாகமம் என்ன சொல்கிறது என்று நாம் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். "பூமியானது ஒழுங்கின்மையும், வெறுமையுமாய் இருந்தது." என்று ஆதியாகமம் 1:2 சொல்லுகிறது. "டுஹுவாவ்பொஹு," என்று எபிரெய மொழியில் அது இருக்கிறது. அதன் அர்த்தம் "வெறுமையாகவும் மற்றும் நிரப்பப்படாமலும்." என்பதாகும். "ஒழுங்கின்மைக்கான அர்த்தம் ஒழுங்கின்மை" ஆகும். "வெறுமை" என்பதன் அர்த்தம் "வெறுமை" வெற்றிடம் என்று உங்களுக்குத் தெரியும். இன்னும் முடிவு பெறவில்லை என்பதே அதன் அர்த்தம். அவ்வளவுதான். ஆழமான மற்றும் விபரமான ஆராய்ச்சி நடத்த நீங்கள் விரும்பினால் வெளியே உள்ள மேஜையில் ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. நீங்கள் "வெறுமையாகவும் மற்றும் நிரப்பப்படாமலும்" என்கிற இந்த ஒன்றை வாசிக்கலாம்; இல்லையெனில் சுருக்கிய, சிறிதாக்கிய மொழிபெயர்ப்பை நிங்கள் விரும்பினால் வாசிக்கலாம். "இடைவெளிக் கோட்பாடு" பற்றிய நான் எழுதியுள்ள அந்த ஒன்றைப் பெற்றுக்கொள்ளுங்கள். கிறிஸ்தவ வரலாற்றில் அது ஒரு மிகவும் ஆபத்தான மத எதிர்ப்புக்கொள்கைகளில் ஒன்று என்று என்னைப் பொறுத்தவரையில் கூறுகிறேன். மற்றும் அது மத எதிர்ப்புக்கொள்கையாக அது இருக்கிறது. உதாரணமாக, இந்த வீடு வெறுமையாகவும் மற்றும் நிரப்பப்படாமலும் இருக்கிறது. ஒருவரும் இதின் உள்ளே வசிக்கவில்லை, ஆனால் இது அழியவில்லை. அழிந்துபோனது என்கிற வார்த்தைக்குறிய அதே அர்த்தத்தை வெறுமையாகவும் மற்றும் நிரப்பப்படாமலும் என்கிற வார்த்தைகள் தராது. "ஒழுங்கின்மையும் மற்றும் வெறுமையுமாய் இருந்தது" என்கிற அதே வார்த்தைகளானது எரேமியா புத்தகத்தில் இருக்கிற வசனத்திலும் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில், அழிக்கப்பட்ட ஒரு நகரத்தைப் பற்றி எரேமியா இந்தப் பகுதியில் பேசுகிறார். அவர் இவ்வாறு விவரிக்கிறார், " மலைகள்......நடுங்கின, குன்றுகள் அசைந்தன....அங்கே மனிதன், பறவைகள் பறப்பதோ இல்லை." சிருஷ்டிப்பைப் பற்றி இது பேசவில்லை. ஐந்தாம் நாள்வரைக்கும் பறவைகள் சிருஷ்டிக்கப்படவில்லை. எரேமியாப் புத்தகத்தில் சிருஷ்டிப்பைப் பற்றி பேசவில்லை. நியாயந்தீர்க்கப்பட்ட ஒரு பட்டணத்தைப் பற்றிப் பேசுகிறது. சிருஷ்டிப்புக்குண்டான எதுவும் இந்தப் பகுதியில் இல்லை. இந்த வீடும் ஒழுங்கின்மையும் மற்றும் நிரப்பப்படாமலும் இருக்கிறது. "கர்த்தர் ஆறு நாட்களூக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி," என்று வேதாகமத்தின் யாத்திராகமம் 20-ஆம் அதிகாரத்தில் கூறுகிறது. அவர் அதை என்னவென்று அர்த்தம் கொள்கிறார் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? பத்துக்கட்டளைகளின் ஒரு பகுதியாக இது இருக்கிறது. தேவனுடைய விரலினால் இதைக் கற்பலகைகளில் அவர் எழுதினார். தேவன் திக்கிப்பேசுவது இல்லை. அனைத்தையும் ஆறு நாட்களில் அவர் செய்தார் என்பதை அவர் நமக்குச்சொல்ல முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறார் என்பதைப் போன்று அது எனக்குக் காணப்படுகிறது. லூசிபரையும் சேர்த்தா அது சொல்கிறது? தேவ தூதர்களையும் சேர்த்தா அது சொல்கிறது. அது அனைத்தையும் உள்ளடக்குகிறது, அது இருக்காதா? வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் அது சேர்த்துச்சொல்கிறது. "அது என்ன சொல்கிறது"என்பது கேள்வியில்லை; "அது என்ன சொல்கிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா?" என்பதே கேள்வியாகும். எனவே, "சிருஷ்டிப்புக்கு முன்னரே லூசிபர் வானத்திலிருந்து விழுந்தான்" என்று யாராவது சொன்னால், அப்படியானால், யாத்திராகமம் 20:11-ல் சொல்லிக்கொண்டிருக்கும் "ஏழாம் நாளிலே அவர் ஓய்ந்திருந்தார்" என்கிற வசனத்தை அவர்கள் ஏற்கனவே ஒத்துக்கொள்ளவில்லை என்று அர்த்தமாகிறது. ஆதியாகமம் முதல் மற்றும் இரண்டாம் வசனங்களுக்கிடையே இடைவெளி இருக்குமானால் அது "அந்த" ஏழாம் நாள் அல்ல. ஆனால், "அந்த ஏழாம் நாள்" பற்றி வேதாகமத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அது குறிப்பிடுகிறது. "அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ......என்று யாத்திராகமம் 31:17-ல் உள்ளது. "கர்த்தர் ஆறு நாட்களுக்குள்ளே வானத்தையும் மற்றும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்." "அந்த ஏழாம் நாள்" என்று மறுபடியும், மறுபடியும் குறிப்பிடுகிறது. எபிரெயர் 4-ஆம் அதிகாரத்தில் "அந்த ஏழாம் நாள்" காணப்படுகிறது. ஒரே மனிதனால் பாவம் இந்த உலகத்திற்கு வந்ததுயென்றும், பாவத்தினால் மரணம் வந்தது" என்றும் ரோமர் 5-ஆம் அதிகாரத்தில் நமக்குச்சொல்லுகிறது. ஆதாம் முதல் மோசே வரை மரணம் நேரிட்டது. மனிதனால் மரணம் வந்தது என்று வேதாகமம் மிகவும் தெளிவாக அதைக் கூறுகிறது. ஆனால், இடைவெளிக் கோட்பாடு உண்மையானால், ஆதாமுக்கு முந்தின நாகரீகம் இருந்தது என்றும், மற்றும் லூசிபர் வானதிலிருந்து கீழே விழுந்தபோது அவர்கள் இறந்தனர் என்றும், அப்போது உங்களுக்குப் பாவத்திற்கு முன்பே மரணம் இருக்கிறது என்கிற ஒரு மத எதிர்ப்புக் கொள்கையாகிறது. வேதாகமம் போதிப்பது அதுவல்ல! மரணம் ஒரு எதிரி என்றுவேதாகமம் சொல்கிறது. "மரங்கள் மரிப்பதில்லையா?" என்று மக்கள் கேட்கிறார்கள். கனியை ஆதாம் சாப்பிட்டதால், அது சாகவில்லையா? தாவரங்கள் உண்மையிலே உயிருள்ளவைகளா என்பதை நீங்கள் முதலாவதாகத் தீர்மானிக்க வேண்டும். அவைகளுக்கு இரத்தம் இல்லை, சுவாசம் இல்லை. அவைகள் உலர்ந்துபோகின்றன. அவைகள் வாடிவிடுகின்றன. வீடியோ எண் 7-ல் நாம் அவைகள் அனைத்தையும் காண இருக்கிறோம். வேதாகமத்தின் அடிப்படையில் வகைப்படுத்துகையில், தாவரங்கள் உயிருள்ளவைகள் கிடையாது. தேவன் ஆதாமிடம், "பூமியை நிரப்புங்கள்" என்றார் என்று வேதாகமம் சொல்லுகிறது. இடைவெளிக் கோட்பாடு கொள்கைக்காரர்கள் எப்பொழுதும் சொல்கிறார்கள், "அங்கே பாருங்கள், "replenish" என்பதற்கான வார்த்தையின் அர்த்தம் "மறுபடியும் பூர்த்திசெய்யுங்கள்" என்று அது கூறுகிறது. அகராதியைப் பாருங்கள். உறுதியாக, நீங்கள் அகராதியைப் பாருங்கள், அது சொல்கிறது, "replenish: மறுபடியும் நிரப்பு." நல்லது, 1611-ல் அதன் அர்த்தம் என்னவென்று நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும், அவர்கள் இதை மொழியாக்கம் செய்தபோது, "ஆண்" என்பதற்கான வார்த்தையின் அர்த்ததிற்கு "பூர்த்தி செய்" என்ற எபிரெய வார்த்தையை கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பாளர்கள் பார்த்தனர். அவர்கள் "replenish" என்கிற ஆங்கில வார்தையைத் தேர்ந்தெடுத்தார்கள், "ஏனெனில் 1611-ல் "replenish" என்பதன் ஒரே அர்த்தம் "பூர்த்தி செய்." என்பதாகும். பின்பு, 1650-ல் பேகன் என்கிற ஆசிரியர் அந்த வார்த்தைக்கு இரண்டாவது வரையறையான "மறுபடியும் நிரப்பு" என்று சேர்த்தார். 1650-ஆம் ஆண்டுவரையில் "மறுபடியும் நிரப்பு" என்கிற அர்த்தத்தை அது அர்த்தப்படுத்தவில்லை. பழைய அகராதியில், 1828-ஆம் ஆண்டு அகராதியில், நீங்களே இதைப் பார்க்க முடியும், "replenish" என்ற வார்த்தைக்கான முதல் அர்த்தம் "நிரப்பு"என்றும், இரண்டவது அர்த்தம் "மறுபடியும் நிரப்பு, நிறைவை மறுபடியும் கொண்டுவா" என்று பிரான்ஸிஸ் பேகன் சேர்த்தார். 1891-ஆம் ஆண்டின் அகராதி இங்கு ஒன்று இருக்கிறது. அந்த வார்த்தையின் முதல் வரையறை "பூர்த்தி செய்." இரண்டவது வரையறை "நிறைவை மறுபடியும் கொண்டுவா." என்பதாகும். அந்த வரையறைகளை அந்த அகராதிகள் 1892-ல் மாற்றின. 1891-ல் அதன் முதல் அர்த்தம் "நிரப்பு": 1892-ல் அதன் முதல் அர்த்தம் "மறுபடியும் நிரப்பு" மற்றும் அதன் இரண்டாவது அர்த்தம்" நிரப்ப." என்று மாறுகிறது. எனவே, இங்கே என்ன நடந்தது? நவீன அகராதிகள் அதை மறுபடியும் மாற்றின. 1989-ல் "மறுபடியும் நிரப்பு." என்பதை மட்டும் காண்பிக்கின்றன. "நிரப்பு" என்கிற வார்த்தையின் ஆரம்ப வரையறையை விட்டுவிட்டனர். 21-ஆம் நூற்றாண்டின் அகராதி ஒன்று அங்கே இருக்கிறது. "Replenish" என்பதன் அர்த்தம் "மறுபடியும் நிறைவாக்கு." என்று இருக்கிறது. பாருங்கள், எப்பொழுதும் ஆங்கிலமொழியின் வார்த்தைகளின் அர்த்தங்கள் மாறுகின்றன. நான் சிறுவனாய் இருந்தபோது, "குளிர்ச்சி" என்பதன் அர்த்தம் "உஷ்ணமில்லாத" என்றிருந்தது. மற்றும் "உல்லாசமான" என்பதன் அர்த்தம் "சந்தோஷமான" என்றிருந்தது. பழமையான வழக்கமுள்ள நாட்களை யாராவது நினைக்கிறீர்களா? யாக்கோபு 2-ஆம் அதிகாரத்திலிருக்கிற இந்த வசனத்தை நீங்கள் எவ்வாறு மொழிபெயர்பீர்கள்? "மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனை நீங்கள் மதிக்கிறீர்கள்." கடந்த 30 ஆண்டுகளில் அந்த வார்த்தையின் அர்த்தங்கள் மாறியிருக்கின்றன என்பதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? மேலும் அது இன்று யாருக்கோ என்று ஒருவேளை நீங்கள் சொல்லக்கூடாது: "மினுக்குள்ள வஸ்திரங்களை நீங்கள் வைத்திருக்கிறீர்கள், ஆச்சர்யமாக இருக்கிறது!" நீங்கள் உங்கள் பற்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்காக, அது நல்ல காரியம் என்று சொல்லமுடியாது, சரியா? "நான் உங்களிடத்தில் வந்திருப்பேன், ஆனால் இதுவரைக்கும் எனக்குத் தடையாக இருந்தது," என்று பவுல் சொல்கிறார். "தடைசெய்யப்பட்டது" என்பதை அர்த்தம் கொள்வதற்காக "let" என்ற வார்த்தைப் பயன்படுத்தப்பட்டது என்று உங்களுத் தெரியும். " தேவன் தமது வார்த்தையை பாதுகாக்கிறார் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். நமது ஆங்கில மொழியைப் பாதுகாக்கிறார் என்று அவர் வாக்குறுதி அளிக்கவில்லை. லூசிபர் எப்போது வானத்திலிருந்து விழுந்தான் என்று எசேக்கியேல் 28-ஆம் அதிகாரத்தில் அது விவரிக்கப்பட்டுள்ளது. அது சொல்லுகிறது, "கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய் செய்யப்பட்ட முத்திரை மோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன், பூரண அழகுள்ளவன். நீ [லூசிபர்) தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இரூந்தவன்:" சகலவித இரத்தினக்கற்களையும் மற்றும் அனைத்தையும் பற்றி அது இங்கே பேசுகிறது. அது சொல்லுகிறது, " நீ சிருஷ்டிக்கப்பட்டபோது." "நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம் பண்ணப்பட்ட (தேவ தூதன்} கேரூப்; பதினைந்தாம் வசனத்தில் அவர் சொல்லுகிறார், " நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டு பிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய்." நாம் லூசிபரைப் பற்றிய அனேகக் காரியங்களை இந்தப் பகுதியில் கற்றுக்கொள்ளலாம். முதலாவதாக, அவன் சிருஷ்டிக்கப்பட்டவன், இரண்டுமுறை அவ்வாறு அது சொல்கிறது. தேவன் இருப்பதுபோல் அவன் நித்தியமாய் இல்லை. அவன் சிருஷ்டிக்கப்பட்டவன். இரண்டாவதாக, அவன் ஏதேனில் இருந்தான். மேலும், மூன்றாவதாக, அவன் பாவஞ்செய்யும் வரையில் அவன் ஏதேனில் இருந்தான். ஆறாம் நாள் வரும் வரையில் ஏதேன் தோட்டம் உருவாக்கப்படவில்லை என்று நமக்குத் தெரியும். எனவே, ஆதியாகமம் முதல் வசத்திற்கும் மற்றும் இரண்டாம் வசனத்திற்கும் இடையில் லூசிபர் வானத்திலிருந்து விழுந்தான் என்று நீங்கள் சொல்லமுடியாது. ஏனெனில், இன்னும் ஏதேன் தோட்டம் உருவாக்கப்படாமல் இருந்தது. ஒருவேளை, லூசிபர் ஏதேன் தோட்டத்தில் ஒரு நல்ல நபராகக் கொஞ்சக் நேரம் இருந்திருக்கலாம். சாத்தான் பெருமையுடையவனாக மாறினான்; அவன் உயர்த்தப்பட்டான் என்று எசேக்கியேல் நமக்குச்சொல்லுகிறது." நான் ஒரு தேவன்" என்று அவன் சொன்னான். அவனுடைய ஞானத்தினால் அவன் உயர்த்தப்பட்டான், அவனுடைய ஆஸ்திகளினால், அவனுடைய அழகினால், மற்றும் அவனுடைய வல்லமையினால் அவன் உயர்த்தப்பட்டான். இன்னும் மக்களை அசுத்தப்படுத்துகிற நான்கு காரியங்கள் எவைகள் எனில்: ஞானம், ஆஸ்தி, அழகு மற்றும் வல்லமையாகும். அவனுடைய இருதயம் உயர்த்தப்பட்டது. இது நிகழ்வதற்கு முன்பு, அவன் தேவனுடைய புத்திரர்களில் ஒருவனாக இருந்தான் என்று யோபு 38-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. "தேவனுடைய புத்திரர்கள்" என்று ஐந்துமுறை பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்பொழுதும் தேவ தூதர்களைக் குறிக்கிறது. தேவன் யோபுவினிடத்தில் சொல்லுகிறார், "நான் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது நீ எங்கே இருந்தாய்?....... ........தேவ புத்திரர் எல்லாரும் [தேவ தூதர்கள்] கெம்பீரித்தார்களே. தேவன் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்தனர் என்பது தெளிவாகத்தெரிகிறது. லூசிபரும் இந்தக் குழுவில் இருந்திருந்து அவனும் ஆச்சர்யப்பட்டிருப்பான்! ஆகா, தேவன் இந்தக் கோளின்மீது எதையோ செய்யப்போகிறார். அது எப்பொழுது? அவர் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது. அவர் பூமியைச்சிருஷ்டித்தபோது அல்ல. அவர் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது. அவர் வெட்டாந்தரையைக் காணும்படியாக ஆக்கின அந்த மூன்றாம் நாள் என்று நான் நம்புகிறேன். பூமியானது முதலில் சிருஷ்டிக்கப்பட்டபோது அது ஒரு தண்ணீரால் ஆன உருண்டையாக ஒழுங்கின்மையும் மற்றும் வெறுமையுமாய் இருந்தது. அதன்பின்புதான் மூன்றாம் நாளில் அவர் வெட்டாந்தரையைக் காணும்படியாக உண்டாக்கினார். அதன் அர்த்தம் என்னவெனில், முதல் நாளிலோ அல்லது இரண்டாம் நாளிலோ தேவ தூதர்கள் சிருஷ்டிக்ப்பட்டிருக்க வேண்டும். இப்படி வேதாகமம் நமக்குச் சொல்லவில்லை, ஆனால், அந்த இரண்டு நாள்களில் ஒன்றில் அது இருந்திருக்க வேண்டும். ஏனெனில், அனைத்துமே ஆறு நாட்களில் சிருஷ்டிக்கப்பட்டது, லூசிபரும் சிருஷ்டிக்கப்பட்டவனே. ஆறாம் நாள் இறுதியிலே, தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்து "அது மிகவும் நன்றாயிருந்தது" என்றார். கெட்ட ஒரு நபராக பிசாசு சுற்றிலும் ஓடிக்கொண்டிருக்காவிட்டால் அது மிகவும் நன்றாக இருந்திருக்காது. அனைத்தும் மிகவும் நன்றாய் இருந்தது. "சிருஷ்டிக்கப்பட்டது" மற்றும் "உருவாக்கப்பட்டது" என்கிற வார்த்தைகள் மாறுபட்டதாக இருக்கமுடியுமா?" என்று மக்கள் கேட்கிறார்கள். இல்லை. அவைகள் ஒன்றிற்குப்பதிலாக இன்னொன்றாக இருக்கின்றன. "நமது சாயலில் மனிதனை உண்டாக்குவோம் என்று அப்படியே அவருடைய சாயலில் மனிதனை உண்டாக்கினார். வேதாகமத்தில் காணப்படும் அனைத்து வகையான பொருட்கள் பற்றிய முழுப்பட்டியலையும் வீடியோ எண் 7-ல் நான் வைத்திருக்கிறேன். இந்த மரங்கள் "உருவாக்கப்பட்டது" இந்த மரங்கள் "சிருஷ்டிக்கப்பட்டது." இந்த பூச்சிகள் "உருவாக்கப்பட்டது" இந்தப் பூச்சிகள் "சிருஷ்டிக்கப்பட்டது." இந்தப் பறவைகள் "உருவாக்கப்பட்டது"; இந்தப் பறவைகள் "சிருஷ்டிக்கப்பட்டது." அதுபற்றிய அனைத்து வசனங்களையும் வீடியோ எண் 7-ல் முழுமையாக நான் சொல்லியிருக்கிறேன். "முதலாவது பூமி" அழிக்கப்பட்டதென்றும், தேவன் பூமியை "மறுபடியும் உருவாக்க" வேண்டியிருந்தது என்றும் இடைவெளிக் கோட்பாட்டுக்காரர்கள் நமக்குக் கற்பிக்கிறார்கள். ஜான் ஹாகி என்பவர் தன்னிடம் ஒரு அழகான வரைபடத்தை வைத்துக்கொண்டு மக்களின் முன் பிரசங்கிக்கிறார். வானத்திலிருந்து சாத்தான் கீழே விழுந்தபிறகு "முதல் பூமியானது" அழிக்கப்பட்டது என்றும் அதற்குப் பிறகு "இரண்டாம் பூமி" உண்டாக்கப்பட்டது என்றும் அவர் கற்றுக்கொடுக்கிறார். "மூன்றாம் பூமி'யைத் தேவன் ஒரு நாளில் உருவாக்கப்போகிறார் என்று அந்தப் பிரசங்கியார் சொல்லுகிறார். அது ஒரு திறமையான பிரசங்கம் மற்றும் அவர் நன்றாகப் பிரசங்கிக்கிறார். மேலும் அது ஒரு அழகான வரைபடம்; ஒரு நல்ல ஓவியர் அவரிடம் இருக்கிறார்; ஆனால் அது வேதாகமத்தின் அடிப்படையில் அல்ல. நாம் இன்னும் முதல் பூமியில்தான் நின்றுகொண்டிருக்கிறோம். "நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்;......என்று வெளிப்படுத்தின விஷேசத்தில் 21--ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். ........முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின." இன்னும் அந்த ஒன்றுதான் இருக்கிறது. வெள்ளத்தின்போது சற்று மறுபடியும் ஒழுங்குசெய்யப்பட்டது என்று உங்களுக்குத்தெரியும். ஆனால் இப்போது இருப்பதுதான் முதல் பூமியாகும். எபிரெயர் நமக்குச்சொல்லுகிறது, "இரட்சிப்பைச் சுதந்தரிக்கப் போகிறவர்களினிமித்தமாக ஊழியம்செய்யும்படிக்கு(தேவ தூதர்கள்) அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?" நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பீர்களானால், பாதுகாக்கிறத் தேவ தூதர்கள் உங்களுக்கு இருக்கிறார்கள். என்னுடைய தேவ தூதர்கள் விரைவில் ஓய்வெடுக்க இருக்கிறார்கள். ஏறக்குறைய ஒவ்வொறு ஆறு மாதங்களுக்கும் ஒருமுறை அவர்கள் சொல்லுகிறார்கள், "ஆண்டவரே, வேறுயாரையாவது நான் பாதுகாக்க என்னை அனுமதிப்பீர்களா? அவர் எப்படி காரை ஓட்டுகிறார் என்று நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? ஆண்டவரே, வேறு ஒருவரை காப்பாற்ற நான் விரும்புகிறேன், எனக்குத் தயவு செய்யுங்கள். அவர்கள் என்னை அங்கே கீழே கொலைசெய்யப்போகிறார்கள்." இங்கு கருதவேண்டிய சில காரியங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அனைத்தும் ஆறு நாட்களுக்குள் சிருஷ்டிக்கப்பட்டது. இரண்டாவதாக, சாத்தானும் சிருஷ்டிக்கப்பட்டவன். சாத்தான் பாவஞ்செய்யும்வரைக்கும் அவன் ஏதேனில் இருந்தான். ஆறாம் நாளில் ஏதேன் உண்டாக்கப்பட்டது. நமக்குப்பணிவிடைகள் செய்வதற்காக தேவ தூதர்கள் உண்டாக்கப்பட்டனர். எனவே நாம் இங்கு இருப்பதற்கு முன்பாக அவர்களைத் தேவன் ஏன் பல மில்லியங்கள் ஆண்டுகளுக்கு முன்பே சிருஷ்டிக்கவேண்டும்? பூமியின் அஸ்திபாரங்களைப் போட்டபோது சாத்தான் சந்தோஷப்பட்டான்; மூன்றாம் நாளில் அஸ்திபாரங்கள் போடப்பட்டன. ஆறாம் நாளின் இறுதிவரைக்கும் அனைத்தும் மிகவும் நன்றாக இருந்தன. மேலும் சேத் பிறந்தபோது ஆதாமிற்கு 130 வயதாக இருந்தது. அதற்கு முன்பாகவே காயினும், ஆபேலும் பிறந்திருந்தனர்; ஆனால் தேதிகள் கொடுக்கப்படவில்லை. எனவே நீங்கள் அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால், சிருஷ்டிப்பிற்குப் பிறகு ஒருவேளை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்குப் பின்பு சாத்தான் வானத்திலிருந்து கீழே விழுந்திருக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க இயலும். சிருஷ்டிப்புக்கு முன்பே அவன் வானத்திலிருந்து கீழே விழுந்திருக்க முடியாது. மற்ற வேதாகமப் பகுதிகளுக்கு இது பொருந்தாது. "வேதத்திலுல்ல எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளையுடையதாயிராததென்று." என்று 1 பேதுரு 20-ஆம் வசனம் நமக்குச்சொல்லுகிறது. நீங்கள் வேதாகப்பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும், அது ஒன்று மட்டுமே அதனுடன் ஒத்துப்போகும். தாமஸ் சால்மர்ஸ் என்னும் பெயரையுடைய ஸ்காட்லாந்து மறையியலார் கண்டுபிடித்ததே இடைவெளிக் கோட்பாடாகும். பல வேதாகமப் பகுதிகளை அது மீறுகிறது. பாவத்திற்கு முன்பே மரணம் என்று அது வைக்கிறது. ஏழாம் நாளுக்கு முன்பாக சாத்தான் விழுந்தான் என்று கூறுகிறது. இடைவெளிக் கோட்பாட்டுக்காரர்கள் இதை நம்புகிறார்களா என்று அறிய நீங்கள் பல கேள்விகளை அவர்களிடம் கேட்க முடியும். அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் இடைவெளிக் கோட்பாடு குறித்து நான் எழுதியுள்ள என்னுடைய சிறிய புத்தகத்தை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இடைவெளீக் கோட்பாட்டுக்கான வாதங்கள் எல்லாம் மிகவும் பெலவீனமானதாகவோ அல்லது தவறாகவோ அல்லது தேவனுடைய வார்த்தையை மாற்றுவதற்கு உட்படுத்துகிறதாகவோ இருக்கிறது. வேதாகமத்தை ஒப்பிடுகையில், ஆழ்ந்த சோதனைக்கு நிற்கக்கூடிய இடைவெளிக் கோட்பாட்டிற்கு வாதிடுவதற்கு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எனவே, என்னுடைய வேதாகமச்சேகரிப்பில் Living Bible மொழிபெயர்ப்பில் நான் சோதனை செய்தபோது அது சொல்லுகிறது, " ஒவ்வொறு வகையான புற்களையும் மற்றும் தாவரங்களைத் தாங்கியும், மற்றும் பழ மரங்களையும் தரக்கூடிய விதைகளைப் பூமி வெடித்துக் கொடுப்பதாக..... இது நிகழ்ந்தது மூன்றாம் நாள் ஆகும்." நான் அதைப் படித்துச்சொன்னேன், " ஆமா, நமக்கு ஒரு நல்ல மொழிபெயர்ப்பு இங்கு இருக்கிறது," புத்தகத்தின் பக்கத்தினடியில் எழுதப்படும் குறிப்பை நான் பார்க்கும் வரைக்கும். "இது நேரத்தின் கால அளவு" என்று கென் டைலர் கீழே சேர்த்திருந்தார். ஒரு நாள் என்பதற்குப் பதிலாக, ஒவ்வொறு நாளும் ஒரு நீண்ட கால அளவு என்றிருக்கிறது. எத்தனைபேர்கள் இதற்குமுன் அந்த யோசனையைக் கேள்விப் பட்டியிருக்கிறீர்கள்? ஆதியாகமத்தின் நாட்கள் எல்லாம் நாட்களில்லாமல் இருக்கலாம்: நீண்ட கால அளவுகளின் நேரமாக இருக்கலாம். "ஆயிரம் வருடங்கள் நேற்றுக் கழிந்த நாள் போலவும்" என்கிற சங்கீதம் 90-ஆம் அதிகாரத்தை அவர்கள் எப்பொழுதும் குறிப்பிடுகிறார்கள். அல்லது II பேதுரு 3-ஆம் அதிகாரத்தில், "ஒரு நாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒரு நாள் போலவும்" என்று குறிப்பிடுகிறார்கள். அந்த இரண்டு வசனங்களையும் கவனித்துப் பாருங்கள், "ஆயிரம்," என்று சொல்கிறதே தவிர"மில்லியன்கள்" என்று சொல்லவில்லை. இந்த இரண்டு வசனங்களில் எதுவுமே சிருஷ்டிப்பைப் பற்றிச்சொல்லவில்லை. தேவனுக்கு நேரத்திற்கான எல்லைகள் இல்லை என்பதை மட்டுமே இந்த வசனங்கள் நமக்குச்சொல்லுகின்றன. பரலோகத்தில் இது 2005-ஆம் ஆண்டாக இல்லை. அங்கே நேரம் இல்லை. "சிருஷ்டிப்புக்கு முன்பு தேவன் என்ன செய்துகொண்டிருந்தார்? என்று யாராவது கேட்கும் நேரத்தில், உண்மையிலே தேவன் இருக்கிறதைப் பற்றி அவர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை என்பதை உடனே நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். ஏனெனில் வேதாகமத்தின் தேவன் நேரம், விண்வெளி அல்லது வஸ்த்துக்களினால் பாதிக்கப்படுபவர் அல்ல. நாம் மட்டுமே நேரம், விண்வெளி மற்றும் வஸ்த்துக்களினால் அடைக்கப்படுகிறோம். தேவன் எல்லையற்றவர். தேவன் நேரத்தினால் கட்டுப்படுத்தப்படுவாரானால், அவர் தேவன் இல்லை. எனவே, சிருஷ்டிப்புக்கு முன்பு, " நேரம்" என்பதே இல்லை. தேவன் நேரத்தைச்சிருஷ்டித்தார். நாம் வீடியோ எண் 7-ல் அதைப்பற்றி அதிகம் தெரிந்துகொள்ள இருக்கிறோம். இந்த நாட்களில் ஒன்றில் நேரம் மறுபடியும் நின்றுவிடும் என்று நான் உங்களுக்குச்சொல்கிறேன். பரலோகத்தில் நேரம் என்பதே கிடையாது. "நாம் 10,000 ஆண்டுகளாக அங்கு இருந்துவருகையில்......" என்கிற இந்தப் பாடலை நாம் பாடுகிறோம். அது மிகவும் பெயர்பெற்ற ஒரு பாடல், நான் அதை விரும்புகிறேன்; ஆனால் அது வேதாகமத்தின் அடிபடையிலானது அல்ல. நாம் 10,000 ஆண்டுகள் அங்கு இருக்கப்போவதில்லை. நாம் அங்கு இருக்கப்போகிறோம். நேரமே இல்லை. பரலோகம் சென்றவுடன் நீங்கள் செய்யவேண்டிய காரியம் உங்கள் கடிகாரத்தை நீக்கிவிடுங்கள், மேலும் அந்தப் பக்கம் தூக்கி எறியுங்கள். இனிமேல் அது உங்களுக்குத் தேவைப்படாது. சட்டைப்பையில் உள்ள பாக்கெட் காலண்டரை வெளியே எடுத்து, அதைத் தூர எறிந்துவிடுங்கள். இனிமேல் அது உங்களுக்குத் தேவைப்படாது. நீங்கள் ஒருபோதும் மறுபடியும் தாமதமாக இருக்க மாட்டீர்கள். எனவே சிருஷ்டிப்புக்கு முன்பு நேரமே இல்லை. இறுதியில் நேரம் நின்றுவிடும். தேவ தூதர் பறந்துவந்து அறிவிப்பார்கள், "இனிமேல் நேரமே இருக்காது." நீங்கள் உண்மையாக அதைப்பற்றி சிந்தித்தால், அதன் அர்த்தம் என்னவெனில்,"நேரமே இல்லாத ஒரு நேரம் இருந்தது." அந்த ஒன்றைப் பற்றி நீங்கள் சிந்திக்க முயற்சி செய்யலாம். மேலும் உங்களின் மூளையானது புண்பட ஆரம்பிக்கும். 1903லிருந்து இருக்கும் Ferrar Fenton வேதாகமம் இங்கு இருக்கிறது. "சூரிய ஒழுங்கு முறையை உருவாக்கின ஒன்றை தேவன் கால அளவுகளிலில் உண்டாக்கினார்; அது பூமியை உண்டாக்கியது." என்று அவர் கூறுகிறார். ஆதியாகமம்1:1 போன்று அது உங்களுக்குச் சரியாக இருக்கிறதா? ஐந்தாவது வசனத்தைக் கவனித்துப் பாருங்கள்: "இதுவே முடிவாகவும் முதல் காலத்திற்கு விடிவு காலமாகவும் இருந்தது....." முடிவாகவும் மற்றும் இரண்டாம் காலத்தின் விடிவு காலமாகவும் இருந்தது." பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று வேதாகமம் சொல்லுகிறது என்று உருவாக்க அவர் அதிகமாக முயற்சிசெய்துகொண்டு வருகிறார். இதனிடையே, அந்த வேதாகமம் அதிகமாக விற்பனையாகவில்லை. எனவே நீங்கள் கீழே உள்ள 11-ஆம் வசனத்தைப் பாருங்கள். "தேவன் சொல்லுகிறார், பூமியானது புற்கள், செடிகள் மற்றும் பழ மரங்களை மூன்றாம் நாளில் கொடுக்கக்கடவது." நான்காம் நாளிலே அவர் சூரியனை உண்டாக்கினார். தற்போது, அந்த நாட்கள் மில்லியன்கள் ஆண்டுகளாக இருந்தால், தாவரங்கள் அதிக நீண்ட காலமாக சூரியனின் உதயத்திற்காக காத்துக்கொண்டிருக்க கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் என அது காணப்படுகிறது. மேலும் ஐந்தாம் நாளிலே அவர் பூச்சிகளை உருவாக்கினார்: அவைகள் தாவரங்களை மகரந்தச்சேர்க்கையாக்கின. எனவே, நீண்ட கால நேரங்கள் உள்ள காலமே நாட்கள் என்று அவர்கள் போதித்தால், இங்கே மிகவும் முக்கியமான பிரச்சனை அவர்களுக்கு இருக்கிறது. ஏதேனில் சூரியன் இல்லாத தாவரங்கள் உங்களுக்கு இருக்கிறது, அவைகள் மகரந்தச்சேர்க்கை செய்ய பூச்சிகளோ அல்லது பறவைகளோ இல்லை. பல மில்லியன்கள் ஆண்டுகளாக அப்படி ஒரு நிலை. அது ஒரு அதிசயமாக இருக்கிறது. ஒரு பெரிய அதிசயமாக இருக்கிறது என்று நான் சொல்லுவேன். ஆதியாகமத்தில் காணப்படுகிற நாட்கள் என்பது 24-மணி நேரங்கள் அல்லாமல் வேறு இருக்காது என்று எந்த எபிரெய மொழிப்பேராசிரியரும் சொல்லமாட்டார். அவர்கள் அதை நம்பாதிருக்கலாம், ஆனால் அதைத்தான் ஆதியாகமப் புத்தகம் போதிக்கிறது என்று அவர்களுக்குத் தெரியும். ஆதியாகமத்தின் நாட்கள்தான் வழக்கமான நாட்கள் என்று இந்தப் புத்தகம் தெளிவாகப் போதிக்கிறது. "கர்த்தருடைய நாள்" என்பதுபோன்று "yom" என்ற வார்தையின் அர்த்த்ம் 'நாள்' என்று இருக்கலாமா? என்று அவர்கள் எப்பொழுதும் கேட்கிறார்கள். 1,800 தடவைகள் பயன்படுத்தப்பட்ட "yom" என்ற வார்த்தைக்கு ஒரு குறிப்புள்ளது. ஒரு நாள் என்பதுதான் எப்பொழுதும் அது அர்த்தம் தருகிறது. நாள் என்கிற வார்த்தைக்கு 3 அர்த்தங்கள் உள்ளன: (1)அ 24-மணி நாள்; (2) இயேசு சொன்னார், "ஒரு நாளில் 12 மணி இல்லையா?" வெளிச்சம் இருக்கும் பகுதியாக அந்த நாள் இருப்பது. (3) மேலும் அது சொல்லுகிறது, " கர்த்தருடைய நாளில்" தற்போது ஒரு நீண்ட கால அளவுள்ள நேரத்தைப் பற்றியாப் பேசிக்கொண்டிருக்கிறது? அல்லது ஒரு நாளைப் பற்றிக் குறிப்பிடுகிறதா? எனக்குத் தெரியவில்லை; ஒரு நாள் என்பதுதான் அதன் அர்த்தம் என்றே நான் நினைக்கிறேன். நிச்சயமாக, "சாயங்காலமும் காலையும்" என்று சொல்கிற "அந்த முதல் நாள்," "அந்த இரண்டாம் நாள்," என்று அது சொல்லுகிறது. நம்மிடம் இன்றுள்ள 24-மணி நேர நாட்களே அல்லாமல் வேறொன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. 24-மணி நேர நாள் என்கிறது அல்லாமல் வேறு எதையும் குறிப்பிடும் "yom" என்ற வார்த்தை வேதாகமத்தில் எந்தவொரு வசனமும் இல்லை. இதுபற்றி ஆழ்ந்து ஆராச்சிசெய்ய நீங்கள் விரும்பினால் எங்களது இடைவெளிக் கோட்பாடு புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள், அல்லது என்னுடைய சிறிய புத்தகமாகிய "இடைவெளிக் கோட்பாடு" புத்தகத்தை வாங்கிக்கொள்ளுங்கள். 1795-ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஹட்டன் எழுதிய புத்தகத்திற்குப் பின்புதான், இந்தப் பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று மக்கள் சிந்திக்க ஆரம்பித்தார்கள். இடைவெளிக் கோட்பாட்டை தாமஸ் சால்மர்ஸ் என்பவர் கண்டுபிடித்து அதை வேதாகமத்தில் பொருத்துவதற்காக அவர் முயற்சி செய்தார். அந்த யோசனையானது அப்பொழுதிலிருந்தே கிறிஸ்தவர்களால் விழுங்கப்பட்டது. அது வேதாகமத்திற்கு உகந்ததல்ல. அதற்குப் பின்பு 1859-ஆம் ஆண்டில் டார்வினின் புத்தகம் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில், பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்கிற யோசனையைக் கிறிஸ்தவர்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தனர். அப்போது, பரிணாமக்கொள்கையை அறிமுகப்படுத்தியபோது உண்மையிலே சக்திவாய்ந்த எதிர்ப்பும் இல்லாமல் இருந்தது. கிறிஸ்தவர்கள் டார்வினின் கொள்கைக்கு எதிராகக்கூட எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்கிற கருத்தை அவர்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டிருந்தனர். எனவேதான் நான் சொல்லுகிறேன் இது ஆபத்தான, அபாயகரமான சமய பேதம் என்று கூறுகிறேன். இன்று, கிறிஸ்தவக் குடும்பங்களிலிருந்து பொதுப் பள்ளிகளுக்குச் செல்கிற 75 % பிள்ளைகள் கிறிஸ்தவ விசுவாசத்தை மறுக்கிறார்கள். இந்தக் கொள்கையினால்தான் பூமிக்கு மிகவும் அதிகமான வயதிருக்கிறது என்பதை நாம் நேற்றுப் பார்த்தோம். இந்தப் பூமிக்கு பில்லியன்கள் ஆண்டுகள் வயது இல்லை என்று நாம் நிரூபித்துக் காட்டவேண்டும். ஆம், சிருஷ்டிப்பின் ஒவ்வொரு நாளும் நீண்ட கால அளவு நேரம் உள்ளவை என்று ஹக் ரோஸ் என்பவர் போதிக்கிறார். அவர் "Reasons to Believe." என்கிற ஒரு இணைய தளம் வைத்திருக்கிறார். நான் அவருடன் ஜான் ஆங்கர்பெர்க் TV நிகழ்ச்சியில் மூன்று மணி நேரம் விவாதித்திருக்கிறேன். அவர் மறுபடியும் என்னுடன் விவாதிக்க மாட்டார்; நான் எந்த நேரமும், எந்த இடத்திலும் அவருடன் விவாதிக்க ஆயத்தமாக இருக்கிறேன். அவர் மிகவும் புத்திசாலியானவர். அவர் தேவனுக்காக கொண்டிருக்கிற அன்பில் மிகவும் கபடமற்றவர் என்று நான் நிச்சயமாகச்சொல்கிறேன். நான் அதைக் கேள்வி கேட்கமாட்டேன். ஆனால், அவர் என்ன நம்புகிறார் என்பதில் அவர் தவறு செய்கிறார். சிலர் சிரிப்புடன், அழகாக, மற்றும் புத்திசாலியாக இருப்பதனால், அவர்கள் சரியானவர்கள் என்பது அர்த்தமாகாது. வேதப்பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பாருங்கள், வேதத்தை ஆராய்ந்து பாருங்கள்; இந்தக் காரியங்கள் இப்படியாகவா இருக்கிறது என்று பாருங்கள். ஆதியாகமம் முதலாம் அதிகாரம் சொல்லுகிறது, " பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாய விரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்." ஆகாய விரிவு என்றால் என்ன? அது மாசுவாக இருக்க வேண்டும் என்று சில மக்கள் சொல்லுகிறார்கள், ஏனெனில் தண்ணீரிலிருந்து மாசுவானது தண்ணீரைப் பிரிக்கிறது. இல்லை, அது மாசு அல்ல. 20-ஆவது வசனத்தை மேலும் படியுங்கள், அது சொல்லுகிறது, "பூமியின்மேல் வானம் என்கிற ஆகாய விரிவிலே பறக்கும் பறவைகளையும்," பறவைகள் ஆகாய விரிவிலே பறக்கின்றன. பறவைகள் மாசுவில் பறப்பதில்லை. பறவைகள் காற்றில் பறக்கின்றன. எனவே, முதலாம் வானம் என்று நமக்கு இங்கே சொல்லிக்கொண்டிருப்பது எதுவெனில் பறவைகள் பறக்கும் பகுதியாகும். வேதாமமம் தானாகவேஅதற்கு விளக்கமளிக்கிறது. இரண்டாம் வானம் என்பது எதுவெனில், சூரியன், நட்சத்திரம் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கிற பகுதியாகும். தேவன் சொன்னார், "பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்." அதுதான் இரண்டாவது வானம். ஒருமுறை மட்டுமே மூன்றாம் வானம் பற்றி வேதாகமத்தில் II கொரிந்தியரில் 12-ஆம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுளது. அப்போஸ்தலனாகிய பவுல், தான் "நித்திரைக்குள்ளாக்கப்பட்டதைக்" குறித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறார். இல்லையெனில், உண்மையிலே அவர் கல் எறியுண்டு கொல்லப்பட்டிருப்பார், அவர் மூன்றாம் வானம் வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டார் என்று அவர் சொல்லுகிறார். வேதாகமத்தில் குறிப்பிட்ட வானங்கள் மூன்று ஆகும்: முதலாம் வானம் என்பது பறவைகள் பறக்கும் பகுதியாகும். இரண்டாம் வானம் என்பது சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் இருக்கும் பகுதியாகும்; மூன்றாம் வானம் என்பது தேவன் வாழும் பகுதியாகும். ஒரு நாளில் நாம் அங்கே செல்லுவோம்; எக்காள சத்தத்தை நாம் கேட்க இருக்கிறோம். ஒருவேளை, ஆங்கிலிக்கர்கள் (Anglicans) முதலாவதாக புறப்படுவார்கள்; ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலில் எழுந்திருப்பார்கள்" என்று அது சொல்கிறது. மேலும் அதற்குப் பின்பு நாமும் நட்சத்திரங்களினூடே உயரப்பறந்து சென்று மூன்றாம் வானத்தை சென்றடைவோம். நாம் விரைவில் அங்கு இருப்போம். சங்கீதப் புத்தகம் 19-ஆம் அதிகாரத்தில் வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது என்று சொல்லுகிறது. ஆதியாகமம் 1:1-ல் அது ஒருமையில் வானம் என்றிருக்கிறது என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்குப் பின்பு அவர் மூன்று அகன்ற துண்டுகளாகப் பிரிக்கிறார்; முதலாம் வானம், இரண்டாம் வானம் மற்றும் மூன்றாம் வானம் என்பவைகள். "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன." "தேவன் ஆகாய விரிவை உண்டுபண்ணி, ஆகாய விரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும், ஆகாய விரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும்," தற்போது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். பறவைகள் பறக்கும் பகுதிக்கும் மேலே உள்ள தண்ணீர்களைப் பற்றி அவர் இங்கே சொல்லிக்கொண்டிருக்கிறாரா? "ஆகாய மண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத்துதியுங்கள்" என்று சங்கீதம் 148-ஆம் அதிகாரத்தில் கூறுகிறது. ஒருவேளை விண்வெளிக்கும் வெளிப்பகுதியை அடுத்து இன்னும் தண்ணீர்கள் இருக்கிறது. தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார் என்று வெதாகமம் கூறுகிறது. நாம் பார்கிற இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சம் என்பது நாம் உற்றுப் பார்க்கிற இந்த நட்சத்திரங்கள் மற்றும் மற்றவைகள் அடங்கியவையாக இருக்கலாம். அது முழுமையும் தண்ணீரால் சூழப்பட்டிருக்கலாம். இந்தக் கோட்பாட்டிற்கு நான் ஆதரவு அளிக்கும் வசனம் அது மட்டுமே. அல்லது ஒருவேளை தேவனுடைய மேஜையின் மேல் இருக்கும் சிறிய கண்ணாடி உருண்டைப் பந்துகளில் ஒன்றின் உள்ளே நாம் பார்க்கிற அனைத்தும் அடங்கியிருக்கலாம். அதை நீங்கள் மேலே எடுத்து அசைத்து அதின் உள்ளே சுழலும் பனியை நீங்கள் கவனிக்கலாம். "நீங்கள் அனைவரும் அதின் உள்ளே எவ்வாறு இருக்கிறீர்கள்? என்று தேவன் கேட்கலாம். "ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும்," என்று II பேதுரு நமக்குச் சொல்லுகிறது. வெளிப்படையாகக் கூறவேண்டுமெனில், தேவன் பூமியைச் சிருஷ்டித்தபோது, அதன்மேல் ஒரு தண்ணீர் மேல்கட்டு அல்லது பனிக்கட்டியை உடையதாக இருந்தது. இப்போது அது அங்கு இல்லை. வெள்ளத்தின்போது அவைகள அனைத்தும் கீழே விழுந்துவிட்டன. ஆனால், ஆண்டவர் பூமியின் வட்டத்தில் அமர்ந்திருக்கிறார் என்று ஏசாயா நமக்குச் சொல்லுகிறார். சுவாரஸ்யமானது! பூமி உருண்டையானது என்று மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதாகமம் கூறுகிறது. பூமி தட்டையானது என்று கிறிஸ்தவர்கள் ஒருபோதும் கற்பித்தது இல்லை. சில கிறிஸ்தவரல்லாதவர்கள் அதை நம்பி, கிறிஸ்தவர்களை குற்றவாளிகளாக ஆக்க முயற்சி செய்தார்கள். ஆனால் பூமி உருண்டையானது என்று எப்பொழுதுமே நாம் தெரிந்திருக்கிறோம். வேதாகமத்தில் 17 தடவைகளில் "அவர் வானங்களை பரப்பினார்" என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒருவேளை ஒளியின் அலை நீளத்தை வானவியலில் நாம் ஏன் கவனிக்கிறோம் என்பதை அது விவரிக்கிறது. "நட்சத்திரங்களிலிருந்து ஒளி எவ்வாறு இங்கு நமக்குக் கிடைக்கிறது?" என்று மக்கள் கேட்கிறார்கள். அனைத்தும் இதற்கு மாறாக இருக்கிறது. தேவன் பூமியை முதலாவதாகவும், பின்பு நட்சத்திரங்களையும் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. எனவே, கேள்வி என்னவெனில், "நட்சத்திரங்கள் இங்கிருந்து அங்கே ஒளியைப் எவ்வாறு பெறுகின்றன?" இல்லை, ஒளி எவ்வாறு அங்கிருந்து இங்கே அடைகிறது?" நாம் இதைப் பற்றி வீடியோ எண்7-ல் அதிகமாகப் பார்க்க இருக்கிறோம். ஆனால் அவர் வானங்களை பறப்பினார் என்பது சுவாரஸ்யமாக இருக்கிறது! இன்று நாம் சுவாசிக்கிற சுற்றுப்புறத்தில் ஆறு அடுக்குகள் இருக்கின்றன. அவைகளாவன: ட்ரோபோஸ்பியர், ஸ்ட்ராடோஸ்பியர், மெஸோஸ்பியர், தெர்மோஸ்பியர், எக்ஸோஸ்பியர் மற்றும் அயனோஸ்பியர் ஆகியவைகளே. ஏழாம் அடுக்கும் வழக்கமாக அங்கு இருக்கிறது. வான்மண்டலத்தில் உள்ள தண்ணீர் அல்லது பனிக்கட்டி அடுக்கே அந்த ஏழாவது அடுக்காகும். அது என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியாது, ஏனெனில் இப்போது அது இல்லை. அது பற்றிய ஒரு கோட்பாட்டை நம்மால் உருவாக்க முடியும். பனிக்கட்டிக் கோட்பாடு என்று அது அழைக்கப்படுகிறது. காற்று மண்டலத்திற்கு மேல் ஒரு தண்ணீர் அடுக்கு அல்லது பனிக்கட்டி அடுக்கு ஒருவேளை இருந்திருக்கலாம் என்று அந்த கோட்பாடு கூறுகிறது. அது ஒருவேளை 10 அல்லது 20 அங்குலம் பனிக்கட்டி, சூப்பர் குளிர்ச்சி பனிக்கட்டியாகக் காந்தப் புலத்தினால் தொங்கிக்கொண்டிருந்தது என்று நான் நம்ப நேரிடுகிறது. ஒரு காந்தத்தின் மேல் இன்னொரு காந்தம் எவ்வாறு மிதக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அது மிஸ்னெர் விளைவு என்று அழைக்கப்படுகிறது. நாம் அதை வீடியோ எண் 6-ல் அதிகம் காண இருக்கிறோம். ஆனால், பூமியின் காந்தப் புலத்தில் ஒரு பனிக்கட்டி மேல்கட்டு தொங்கிக்கொண்டிருத்திருக்க முடியும். அது பூமிக்கு மேலே மிதந்திருக்கும். இந்தப் பனிக்கடி அல்லது தண்ணீரானது அல்ட்ரா வைலட் ஒளியைத் தடுத்திருக்கும்; அது காற்று அழுத்தத்தை அதிகரித்திருக்கும். இன்று அந்தக் காற்றானது சுமார் நூறு மைல்கள் தடிப்பாக இருக்கிறது. ஒருவேளை அது எல்லாம் பிழியப்பட்டு கீழே வந்து 10 அல்லது 20 மைல்கள் தடிமனாக இருந்திருக்கும், பூமிக்கு மேல் அது அழுத்தத்தை இரட்டிப்பாக ஆக்கியிருக்கும். இதனிடையே, வானிடையில் பெருங்காற்று உருவாகி அது காலியாகி பனி மேகங்களாக உருவாகிக்கொண்டிருக்கிறது. அப்போது பனி மேகமானது பூமியின் வட துருவம் மற்றும் தென் துருவமாக அங்குமிங்கும் மிதந்து சென்று சுமார் 80 கிலோமீட்டருக்கு மேல் ஆர்க்டிக் பகுதியில் இருக்கிறது. பனிக்கட்டி மேகங்கள் மிதக்கின்றன! அவைகள் விழவில்லை; ஒருவேளை காந்தப் புலத்தில் தொங்கிக்கொண்டிருந்தன; அது ஒரு கோட்பாடு ஆகும். இருப்பினும், அதைப் பற்றிய ஒரு கட்டுரை இங்கு இருக்கிறது. ஜோசப்பஸ் என்பவர் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எபிரெயர்களின் நம்பிக்கை பற்றி எழுதியுள்ளார். தேவன் பூமியை இரண்டாம் நாளில் சிருஷ்டித்தபோது, அவர் அதைச் சுற்றிலும் ஒரு பளிங்குபோல் உள்ள ஆகாயத்தை வைத்தார் என்று கூறுகிறார். பளிங்குபோன்ற வானமா? ஒருவேளை சூப்பர்-குளிர்ந்த பனிக்கட்டி இருக்கலாம். பூமிக்கு மேலே ஒரு தண்ணீர் மேல்கட்டு மட்டும் இருக்கவில்லை, பூமியின் மேல்பட்டையில் தண்ணீரும் இருந்தது. "பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்." என்று சங்கீதம் 24-ஆம் அதிகாரம் கூறுகிறது. தற்போது கடலில் இருக்கின்ற அதிகப்ப்டியானத் தண்ணீர், ஆதியில் பூமியின் மேல்பட்டையில் உள்ளே இருந்த தண்ணீராகும். கர்த்தர், தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினார் என்று சங்கீதம் 136-ஆம் அதிகாரம் சொல்லுகிறது. இன்று இருக்கிறதுபோல் அன்று இல்லை. ஒருவேளை ஆதி சிருஷ்டிப்பில், பூமிக்கு மேலே சுமார் 25 அல்லது 50 செண்டிமீட்டர்களில் உள்ள பனிக்கட்டி அடுக்கு இருந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்; மேலும் அதற்கடுத்து சுமார் 15 அல்லது 30 கிலோமீட்டர்கள் சுவாசிப்பதற்கு என்று ஒரு அடுக்கு இருந்திருக்கலாம்; அதன்மேல் மாசும், பாறைகளும் இருந்திருக்கலாம் என்றும் நான் நம்புகிறேன். நான் உறுதியாகக் கூறவில்லை. இன்று நாம் பார்க்கிற பூமியின் (விளிம்பு) மேல்பட்டை இருக்கிறது. ஆனால் பூமியின் மேல்பட்டையின் உள்ளே, தண்ணீர் இருந்தது. ஆழத்தில் உள்ள ஊற்றுக்கண்கள் திறந்து வெடித்தபோது வந்த தண்ணீர்தான் பூமிக்கு மேலே பலமாய் வெளியேறி தீவிரமாக வந்தன. இதனிடையே, பூமியின் மேல்பட்டைப் பகுதியின் உள்ளே இன்னும் அதிகமான தண்ணீர் இப்பொழுதும் இருக்கிறது. அப்படியில்லையெனில், கடலின் அடியிலிருந்து வெப்பத்தண்ணீர் வெளிவிடும் துவாரங்களிலிருந்து நீங்கள் வெப்பத்தண்ணீர் பெறமுடியாது. உங்களுக்கு கடலின் அடியிலிருந்து வெப்பத்தண்ணீர் பீரிட்டுக்கொண்டு வரவில்லையெனில், அந்த வெப்பத்தண்ணீர் எங்கிருந்து வருகிறது? இன்னும் அதிக அழத்திலிருந்து அது வரவேண்டும். கடல்களின் அடியில் இன்னும் அதிகமான வெப்பத்தண்ணீர் வெளிவிடும் துவாரங்கள் இருக்கின்றன. அந்தத் தண்ணீரில் கொஞ்சம் இன்னும் மேலே வந்துகொண்டிருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். வீடியோ எண் 6-ல் ஹைட்ரோ பிளேட் கொள்கையை விளக்கும்போது நாங்கள் இது பற்றி அதிகமாக விவரித்துள்ளோம். ஆனால், வெள்ளத்தின்போது திறப்பதற்கு உடைந்த பிளவுகள் இன்னும் இந்தப் பூமியில் இருக்கின்றன என்று நான் நினைக்கிறேன். பல ஆண்டுகள் நான் அறிவியலைப் போதித்தேன். பல தகடுகளாக இந்தப் பூமி உடைந்திருக்கிறது; அது ஆட்சேபிக்கப்படாமல் இருக்கிறது. சேன் ஆன்றியாஸ் பிழை (Andreas Faults), ஹேவர்டு பிழை, நியூ மேட்ரிட் பிழை மற்றும் கோல்டன் பிழை போன்றவற்றிக்குச் சென்றிருக்கிறேன். நான் பிழைகளை உண்டாக்கவில்லை, ஆனால் அவைகளில் சிலவற்றை நான் பார்த்து இருக்கிறேன். பூமியின் மேல்பட்டையில் பிளவுகள் இருக்கின்றன என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை; மேலும் அவைகள் சுற்றிலும் நகரும்போது கட்டிடங்கள் கீழே விழுகின்றன. அதுதான் பூமியதிர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. அவைகளினால் சுனாமி பேரலைகள், தண்ணீருக்கடியில் நிலச்சரிவுகள் மற்றும் தீவிரமான மின்னோட்டங்களை உண்டுபண்ணுகிறது. பூமியானது பல பிளவுகளாக உடைந்து காணப்படுகிறது என்பதில் எந்தவிதக் கேள்வியும் இல்லை. அந்தப் பிளவுகள் இன்னும் நகர்ந்துகொண்டிருக்கின்றன என்பதில் எந்தவிதக் கேள்வியும் இல்லை. இவைகள் அனைத்தும் நிகழ்ந்தது எப்போது? என்பதே கேள்வியாக இருக்கிறது. தற்போது, பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு இது நிகழ்ந்தது என்று பரிணாமவாதிகள் சொல்லுவார்கள். சிருஷ்டிப்பை நம்புபவர்கள் சொல்லுவார்கள், இல்லை, ஒருவேளை, வெள்ளத்தின்போது இந்தக் கோரச்சம்பவங்கள் அனைத்தும் ஆரம்பித்திருக்கும் என்று சொல்லுவார்கள். ஆழத்தில் உள்ள நீருற்றுக்கள் வெடித்துத் திறந்தபோது, பிழை அடுக்குகளை உண்டாக்குகிறது; அதன்பின்பு தண்ணீரானது பீரிட்டுக்கொண்டு பூமியின் மேல் பரப்பிற்கு சென்றது, அதுதான் இன்று இங்கே இருக்கிறது. ஒரு நேரம் நான் ஒரு கடவுள் நம்பிக்கையில்லாதவரிடம் விவாதித்துக்கொண்டிருந்தேன்; அந்தக் கூட்டத்தில் அமர்திருந்தவர்கள் கேள்விகள் கேட்கும் நேரத்தின்போது, ஒரு மாணவன் எழுந்திருந்து சொன்னான், "ஹோவிந் அவர்களே, வெள்ளத்தின்போது வந்த அனைத்துத் தண்ணீரும் எங்கே சென்றது? "ஓ, அதுவா, அது இன்னும் இங்கே இருக்கிறது." என்று நான் சொன்னேன். "கடல்கள் மிகவும் பெரியவைகள்! நீங்கள் பூமியைச் சமமட்டமாக்கினால், போதுமான தண்ணீர் கடல்களில் இருக்கிறது." என்று நான் சொன்னேன். அந்தத் தண்ணீரானது, பூமியெங்கும் இரண்டு கிலோமீட்டர்கள் ஆழம் உள்ளதாக மூடிவிடும். "ஆஸ்திரேலியாவிலிருந்து பசிபிக் பெருங்கடலுக்கு மேல் அந்தத் தண்ணீர் சென்றுவிடும் என்று என்னுடைய அலுவலகத்தில் உள்ள ஒருவரிடம் நான் சொன்னேன். "மனிதனே, அந்தப் பசிபிக்கடல் மிகவும் பெரியதாக இருக்கிறது! "ஓ, தண்ணீரின் மேல்பகுதி மட்டுமே அது என்று அவர் கூறினார்." என்ன ஒரு சிந்தனையாக அது இருக்கிறது! இன்னும் பீரிட்டுக்கொண்டு வருகிற வெப்பத்தண்ணீர் சிறு துவாரங்களானது பூமியின் மேல்பட்டையில், தண்ணீர் இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் ஆகும். ஒருவேளை அதிகமான தண்ணீர் தற்போது இல்லாமல் போனது, அது இப்போது பூமியின் மேற்பறப்பில் உள்ளது. ஆதி சிருஷ்டிப்பின்போது பூமிக்கு மேல் இருந்த தண்ணீர் மேல்கட்டானது, தாவரங்களை வளர்க்கப் பயன்படும் ஒரு பெரிய கண்ணாடி வீடுபோன்று பூமி முழுமைக்கும் உருவாக்கியிருக்கும். உங்களில் எத்தனைபேர்களுக்கு கண்ணாடி வீடு என்றால் என்ன என்று தெரியும்? அவைகளுக்கு கண்ணாடியிலான சுவர்கள் இருக்கின்றன. ஒரு கண்ணாடி வீட்டில் நீங்கள் வசிப்பீர்களானால், கட்டிடத்தின் அடித்தளத்திலேதான் நீங்கள் ஆடைகளை அணிய வேண்டும். பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையில் மிகவும் அதிகமான தண்ணீர் விண்வெளியில் இருப்பதாக இன்னும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள். வான் இடைவெளி விண்வெளியில் மிகவும் அதிகமான தண்ணீர் இருக்கிறது. சுயாரஸ்யமாக இருக்கிறது! நாங்கள் அதைப்பற்றிப் பின்பு விளக்கமளிக்கிறோம். "டைனோசரஸ் இறந்துபோனதற்கு ஒருவேளை ஆக்ஸிஜன் இல்லமல்போனது ஒரு காரணமாக இருக்கலாம்." என்று விஞ்ஞானிகள் ஒரு புதிய கோட்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆக்ஸிஜன் இல்லாததா? ஏன் அவர்கள் அதைச்சொல்லுகிறார்கள்? விஞ்ஞானிகள் 1993-ஆம் ஆண்டில் ஒரு பெரிய கூட்டத்தை நடத்தினார்கள். அப்பட்டோசரஸ் பற்றி ஆய்வு செய்வதற்காக அநேக விஞ்ஞானிகள் ஓரிடத்தில் கூடினர். மேலும் அவர்கள் சொன்னார்கள், "மக்களே, நமக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது. 25 மீட்டர் உள்ள அப்பட்டோசரஸ் ஒன்றிற்கு, ஒரு குதிரைக்கு இருக்கிற அதே அளவு மூக்குத்துவாரங்கள் இருந்திருக்கின்றன. ஒரு குதிரைக்கு இருக்கிற அதே அளவுள்ள மூச்சுத் துவாரங்களின் மூலம், 25 மீட்டர் அளவுள்ள ஒரு விலங்கு எவ்வாறு காற்றைச் சுவாசிக்க முடியும்? அது சுவாசிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டிருக்கும், உராய்வினால் உண்டாகும் தீயில் அதை வைத்ததுபோல் இருந்திருக்கும். காற்றில் உள்ள விசில்போன்ற ஊதலினால் அது அங்கே சுவாசித்திருக்க முடியாது. நல்லது, வெளிப்படையாக அவைகள் சுவாசித்தன.கோளின் அனைத்துப் பகுதியிலும் டைனோசரஸ்ஸின் எலும்புகள் உள்ளன. அண்டார்ட்டிக்கா மற்றும் அலாஸ்காவில்கூட அவைகளின் எலும்புகள் உள்ளன. டைனோசரஸ் எங்கும் வாழ்ந்தன. எனவே, 25 மீட்டர் அளவுள்ள ஒரு விலங்கிற்கு காற்று எவ்வாறு கிடைத்தது? இன்று ஒருவேளை 25 மீட்டர் அளவுக்கு வளர்வதற்கு அந்த விலங்கினால் நன்றாக சுவாசிக்க முடியாது! ஆனால் நான் நினைக்கிறேன், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, தண்ணீருள்ள காற்று பனிக்கட்டியின் மேல்கட்டிற்கு மேல் அவைகள் சுவாசித்திருக்கலாம் என நான் நினைக்கிறேன். காற்று அழுத்தத்தை அது அதிகரிக்கச்செய்யும். மேலும் அவைகளுக்குப் போதுமான ஆக்ஸிஜன் இருந்திருக்கும். உங்களுக்குத் தெரியும், அவைகள் பூமியின் பிசின்போன்ற பகுதியில் துவாரமிட்டபோது.......எத்தனைபேர்கள் 'ஜுராஸ்ஸிக் பார்க்" திரைப்படம் பார்த்திருக்கிறீர்கள்? உங்களுக்குத் தெரியும், கொசுக்களின் இரத்தத்தை வெளியே எடுப்பதற்காக அங்கே அவைகள் துவாரமிட்டன. சில நேரங்களில் பூமியின் பாறைப்பிசின்களுக்குள்ளே, அதாவது மரங்கள் மக்கி இருகிப்போன பகுதியில் அவைகள் காற்றுக் குமிழிகளைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தக் காற்றுக் குமிழிகளை அவர்கள் ஆராய்ச்சி செய்கிறபோது, இன்று நம்மிடம் உள்ளதைக் காட்டிலும் 50% அதிகமான ஆக்ஸிஜன் இருப்பதாக விஞ்ஞானிகள் கற்றுக்கொள்கிறார்கள். இன்று நாம் 21% ஆக்ஸிஜனைச்சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். பாறைப்பிசின்களின் குமிழிகளுக்குள்ளே 32% ஆக்ஸிஜன் இருக்கிறது. இரண்டு மடங்கு காற்று அழுத்தமாகவும் மற்றும் 50% மேல் உள்ள ஆக்ஸிஜனும் உள்ள ஒரு உலகில் நீங்கள் வாழ்ந்தீர்கள் எனில், "சுவாசிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்! ஆகா! அது நகைச்சுவையாக இருக்கிறது." என்று ஆதாம் ஆச்சரியப்படுவான். "ஏய் ஏவாளே, அதுபோன்று மறுபடியும் சுவாசிப்போம். ஆயத்தமாக இரு, போ." என்று ஆதாம் கூறியிருப்பான். தற்போது பூமியில் இருக்கும் ஆக்ஸிஜனைக் காட்டிலும் அதிகமான ஆக்ஸிஜன் உள்ளதாக இந்தப் பூமி இருந்தது. சிறுவர்களாகிய உங்களுக்கு, ஆரம்பத்தில் இந்தப்பூமியில் ஆக்ஸிஜன் இல்லை என்றுப் பாடப்புத்தகங்கள் மூலம் சொல்லப்படப் போகிறது. வாழ்க்கை வளர்ந்துகொண்டிருந்தது என்று சொல்லுகிற ஒரு "சூழ்நிலையை சுருக்குதல்" சொல்லிக்கொடுக்கப்படப்போகிறது. அது அர்த்தமற்ற செயல்களாகும்! வாழ்க்கை எப்படி ஆரம்பித்தது என்பதைப் பற்றி வீடியோ எண் 4-ல் நாங்கள் அனைத்தையும் விவரித்திருக்கிறோம். ஆக்ஸிஜனுடனோ அல்லது ஆக்ஸிஜன் இல்லாமலோ வாழ்க்கை வளர்ச்சியடைந்திருக்க முடியாது. ஆனால், காற்று அழுத்தத்தை இருண்டு மடங்காக்கி மற்றும் ஆக்ஸிஜனை அதிகமாக்கினால், உங்களின் இரத்த செல்கள் ஆக்ஸிஜனை எடுப்பதோடூ அல்லாமல், உங்களின் பிளாஸ்மாவானது ஆக்ஸிஜன் உள்ள முற்றிலும் நனைத்த பகுதியாக மாறிவிடும், அதன் அர்த்தம் என்னவெனில், நீங்கள் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் ஓடமுடியும் என்பதாகும். சோர்வு என்பதே இல்லாமல் ஓடமுடியும்! ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஒரு கார் இருக்கத் தேவையில்லாதிருந்தது. பேரப்பிள்ளைகளிடத்தில் அவர்காளால் ஓடமுடிந்தது! ஏவாளுக்குத் தாத்தாவோ அல்லது மாமியாவோ இல்லாத காரணத்தினால் பேரப்பிள்ளைகளிடத்தில் ஓட முடிந்தது; ஆதாமிற்கும் ஏவாளுக்கும் மாமியா மற்றும் மாமனார் பிரச்சனைகளே இல்லை. உண்மையிலே, என் மனைவிக்கு ஒரு பெரிய மாமியாள் இருந்திருக்கிறார்கள். வெள்ளம் வருவதற்கு முன்பே இருந்திருக்கிறார்கள். பல காரியங்கள் மிகவும் மாறுபட்டதாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதிகமான ஆக்ஸிஜன் இருக்கும்போது நீங்கள் மிகவும் விரைவில் குணமடைவீர்கள். டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஒரு கிணற்றில் ஒரு சிறுபெண் குழந்தையான பேபி ஜெஸிக்கா விழுந்த செய்தியை எத்தனைபேர்கள் நினைவில் வைத்திருக்கிறீர்கள்? 18 மாதங்கள் வயதான அந்தப்பெண் குழந்தையின் இடது கால் ஒரு குழாயின் உள்ளே வழுவிச்சென்றது, அவளுடைய வலதுகால் குழாயின் மேல் நோக்கியிருந்தது, மேலும் 20 செண்டிமீட்டர் இரும்புக் குழாயின் உள்ளே விழுந்ததால் அவளின் உருவம் மாறிவிட்டது. அந்தக் குழாயின் உள்ளே 6 மீட்டர் ஆழத்திற்குச்சென்றபின்பு, அங்கே இரண்டரை நாட்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தாள். அண்டைவீட்டுக்காரரின் வீட்டையும் உடைத்து, கிணற்றிலுள் விழுந்த குழந்தையை வெளியே எடுக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒருமுறை இந்தச்செய்தி அறிவிக்கப்பட்டது. உங்களுக்கு அது நினைவில் இருக்கிறதா? பேபி ஜெஸிக்கா இன்னும் உயிருடன் இருக்கிறாள்! அவளைக் கிணற்றிலிருந்து இறுதியாக வெளியே எடுத்தபோது இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால், அவளுடைய பெரும்பான்மையான சரீரத்தின் பகுதிகள் கருப்பு நிறமாய் மாறியிருந்தது, அவளுடைய வலது காலானது முற்றிலும் கருப்பாக மாறிவிட்டது. ஏனெனில் உள்ளே திருகிப்போகி முகத்தில் தடுக்கப்பட்டு உருவமே வளைந்து காணப்பட்டது. "நாம் உடனடியாக அவளின் ஒரு காலை துண்டிக்கவேண்டும்!" என்று மருத்துவர்களில் ஒருவர் கூறினார். "பொறுத்திருங்கள், அவளுடைய காலைத் துண்டிப்பதற்கு முன்பு அவளை ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் அறைக்குள் போட்டுப்பார்க்க வேண்டும் என்று இன்னொரு மருத்துவர் கூறினார். எதின் உள்ளே? ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் அறைக்குள்ளே! இந்த அறைகளில் ஒன்றில் அவர்கள் ஜெஸிக்காவை வைத்து அந்த அறையை சுத்தமான ஆக்ஸிஜனால் நிரப்பினார்கள். மேலும் சாதாரணமாக இருப்பதைக் காட்டிலும், இரண்டு மடங்கு அழுத்தத்தை அந்த அறையின் உள்ளே செலுத்தினார்கள். சில மணி நேரங்களிலே அவளுடைய கால் இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. அவளுடைய இரத்த ஓட்டத்தை மறுபடியும் கொண்டுவந்தனர். அவர்கள் அவளுடைய காலைக் காப்பாற்றினர். அவளுடைய காலின் சிறுபெருவிரலில் பாதியளவை மட்டும் வெட்டி எறியவேண்டியிருந்தது. அவர்களால் அந்தப் பகுதியைக் காப்பாற்ற இயலவில்லை. ஒரு கால் முழுவதும் இழப்பதைக்காட்டிலும் அது எவ்வளவோ பரவாயில்லை. பாதிக்கப்பட்டக் காலுடன் நடப்பதைக்காட்டிலும் இது மிகவும் அதிக எளிமையாக நடக்கமுடிகிறது. ஒரு கால் முழுமைக்கும் இழப்பதற்குப் பதிலாக, ஒரு சிறு பகுதியை இழந்திருக்கிறாள். புளோரிடாவில் உள்ள பென்ஸகோலாவில் ஹைபர் பேரிக் அறை ஒன்று உள்ளது. அவசரமான ஒரே நேரத்தில் 30 பேர்கள் இதன் உள்ளே இருக்கலாம். இந்த ஹைபர் பேரிக் அறைகளை பல மருத்துவமனைகள் வாங்குகின்றன. டென்னிஸியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் இந்த ஹபர் பேரிக் அறை ஒன்று உள்ளதா? அவர்கள் வைத்திருக்கிறார்களா? உங்களுக்கு அது எவ்வளவு பெரியது என்று தெரியுமா? அது ஒருவர் அல்லது இருவர் அல்லது மூன்றுபேர்கள் இருக்கக்கூடிய அறையா? ஓ, ஒருவர் மட்டும் இருக்கக்கூடிய அறையாக இருகிறது. மேற்கு ஜெர்மனியில் நரம்பினால் பாதிக்கப்பட்ட நோய்களுக்கு ஹைபர் பேரிக் ஆக்ஸிஜன் கொடுத்து சிகிச்சையளித்துக் கொண்டுவருகின்றனர். அதனால் நோயாளிகள் மிகச்சிறந்த குணமாகுதலைப் பெற்றுவருகின்றனர். இங்கிலாந்து நாட்டில் இந்த சிகிச்சைமுறையைப் பல நோய்களைக் குணப்படுத்தப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் இந்த முறையினால் குஷ்டரோகத்தைக் குணப்படுத்தச் சிகிச்சையளிக்கிறார்கள், அதனால் ஆச்சர்யமானப் பலனைப் பெறுகிறார்கள் இங்கு ஒரு குழந்தைக்கு மூளை நரம்பினால் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து குணமடைவதற்காக ஹைபர் பேரிக் ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது. அறுவைசிகிச்சையின் நேரத்தில் நோயாளிகளுக்கு மயக்க நிலையில் இருக்கும்போது, மருத்துவர்கள் அதிக ஆக்ஸிஜனை அந்த நோயாளிகளுக்குக் கொடுத்தால், பாதி எண்ணிக்கையிலுள்ள நோயாளிகள் மட்டுமே தொற்று நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் மற்றும் பாதி எண்ணிக்கையிலுல்ல நோயாளிகள் மட்டுமே வாந்திபண்ணுகிறார்கள் என்றும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். மயக்க நிலையில் இருக்கும் நோயாளிக்கு அதிகளவு ஆக்ஸிஜன் கொடுப்பதினால் இவ்வாறு நிகழ்கிறது, சுயாரஸ்யமாக இருக்கிறது! ஹைபர்பேரிக் ஆக்ஸிஜன் மூலமாக சுயமாக சிகிச்சையளிக்கும் ஒரு அறையானது நியூயார்க்கில் ஒன்று உள்ளது. "குணமாக்கும் உபகரணமாக வளரும் ஹைபர்பேரிக் சிகிச்சை பயன்படுகிறது" என்று ஒரு கட்டுரை கூறுகிறது. ஒரு நேரத்தில் ஒருவருக்கு சிகிச்சையளிக்கும் ஒரு அறை ஒன்று இங்கே இருக்கிறது. டல்லஸ் குதிரைப்பராமரிப்போர் கால்பந்து அணிக்கு ஹைபர்பேரிக் அறை ஒன்று உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? விளையாட்டைத் தொழிலாக செய்துவரும் விளையாட்டு அணிகள் ஹைபர்பேரிக் அறையை விரும்புவது ஏன்? அது ஏனெனில், அவர்களின் காயமடைந்த விளையாட்டு வீரர்கள் இரண்டுமடங்கு விரைவாக குணமடைகிறார்கள் என்று அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஒரு விளையாட்டு வீரருக்கு பந்துடன் விளையாடும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1000 டாலர் தொகை வழங்குவீர்களானால், அந்த விளையாட்டு வீரர் எப்பொழுதும் விளையாட்டு மைதானத்திற்கு வெளியே இருக்க நீங்கள் விரும்புகிறீர்கள், அப்படி அவர் இருந்துகொண்டு ஒவ்வொரு நிமிடத்திற்கும் 1000 டாலர் சம்பாதிப்பார் அல்லது அவர்கள் எதையாவது சம்பாதிப்பார்கள். சேக் என்கிற டால்பின் மீன் இங்கு இருக்கிறது. அதனை வளர்ப்பவர் கூறுகிறார், " சீசன் காலங்களில், ஒரு வாரத்திற்கு மூன்றுமுறை, சேக் என்கிற அந்த டால்பின் மீன் ஒருமணி நேரம் ஓய்வு எடுக்கிறது அல்லது ஹைபர்பேரிக் அறையில் உள்ளது. 18 கன மீட்டர் அளவுள்ள சுத்தமான ஆக்ஸிஜன் நிரம்பிய பையானது, உடலைக் குணமாக்குகிறது மற்றும் நன்றாக இருக்கும் ஒரு உணர்வையும் அது மேம்பட வைக்கிறது. நீங்கள் விரும்பினால், உங்களுக்கென ஒரு தனி ஹைபர்பேரிக் தூங்கும் பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம், ஓரிகனில் உள்ள என்னுடைய நண்பர்களில் ஒருவர் ஒரு ஹைபர்பேரிக் அறையை வைத்திருக்கிறார். இங்கே எனது மகன் (பின்புறத்திலிருந்து கேமராவின்மூலம் படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்) அவனுடைய மனைவி மற்றும் நானும் அலாஸ்காவில் உள்ள ஒரு "ஆக்ஸிஜன் அறைக்குள்" இருக்கிறோம். அது மதுபானம் குடிக்கும் அறை அல்ல. நான் என் வாழ்க்கையில் மதுபானம் குடித்ததே இல்லை. மதிய உணவுக்காக நீங்கள் அங்கே உட்கார்ந்து, சுத்தமான ஆக்ஸிஜனை அந்த அறையில் நீங்கள் சுவாசிக்கலாம். ஐந்து டாலர் தொகை செலுத்தி நீங்கள் மதிய உணவு சாப்பிடும்போதே சுத்தமான ஆக்ஸிஜனை அங்கே நீங்கள் சுவாசிக்கலாம். மேலும், நீங்கள் அதை முடித்தவுடன், மறுபடியும் கடைக்குச்செல்லவேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். அது ஒரு இரகசியத்திட்டம், அதை இப்போது உங்களுக்கு என்னால் சொல்லமுடியும்! அந்த இரசியத்திட்டத்தின் முழுமையான நோக்கமே நீங்கள் அதிகப் பணத்தை அதற்காக செலவு செய்ய வேண்டும். ஆனால் நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகக் காணப்படுவீர்கள். ஓரிகனில் உள்ள எனது நண்பர் ஹைபர்பேரிக் அறை ஒன்று வைத்திருக்கிறார். நான் அவரை சந்தித்தேன். "சகோதரர் ஹோவிந் அவர்களே, அந்த அறைக்குள் உட்கார்ந்து இருக்க நீங்கள் முயற்சிசெய்கிறீர்களா?" என்று அவர் என்னிடம் கேட்டார். "ஆம்!" என்றேன். அவர் என்னை அங்கே உட்காரவைத்தார். அவர் ஒரு புத்தகத்தை என்னிடம் வாசிக்கக்கொடுத்துவிட்டு, "நான் கதவை இப்பொழுது அடைத்துவிடுவேன், அதன்பின்பு மூன்றுமடங்கு அழுத்தம் இருக்கும் அளவுக்கு ஹைபர்பேரிக் ஆக்ஸிஜனை இந்த அறைக்குள் செலுத்துவேன்" என்று கூறினார். அவர்கள் தண்ணீரில் மூழ்கும் சில வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். 30 மீட்டர் ஆழத்தில் தாவிக்குதிக்கும் உணர்வைக்கொடுக்கிறது என்று கூறுகிறார்கள். நீங்கள் அங்கே அந்த அறையில் உட்கார்ந்துகொண்டுதான் இருக்கிறீர்கள், ஆனால் 30 மீட்டர் ஆழத்தில் தாவிக்குதிக்கிறதுபோன்ற உணர்வு உங்களுக்கு ஏற்படுகிறது. "நான் ஒரு மணி நேரம் சென்ற பிறகு இந்த அறையைவிட்டு வெளியே வரச்சொல்லுவேன்" என்றார். நான் அந்த அறையில் சுத்தமான ஆக்ஸிஜனை ஒரு மணி நேரம் சுவாசித்தேன். சாதாரணமாக இருப்பதைக்காட்டிலும் மூன்றுமடங்கு அழுத்தமுள்ள அந்த அறையில் என்னுடைய புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் என்னை வெளியே கொண்டுவந்து, " நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?" என்று கேட்டார். "உலகத்தைச் சுற்றிவருகிறதுபோல் நான் உணர்கிறேன்!" என்று நான் அவருக்குப் பதில் கூறினேன். அது மிகவும் அற்புதமானது! சுறுசுறுப்பான ஆசைகள் உங்களை கைவிட்டுவிட்டதாக எத்தனை முதியோர்கள் உணர்கிறீர்கள்? நான் எதைப்பற்றிச்சொல்கிறேன் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களைப் பரவசமடையச்செய்தது எது என்று நீங்கள் சிந்தித்துப் பார்த்தால், அது ஞாயிற்றுக்கிழமை மதிய உணவிற்குப் பிறகு எடுக்கும் ஒரு சிறிய தூக்கமாக இருக்கும், சரியா? வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, இரண்டு மடங்குக் காற்று அழுத்தமும் அதிகமான ஆக்ஸிஜனும் அவர்களுக்கு இருந்தபோது, எல்லா நேரங்களிலும் நீங்கள் அதிக முழுச்சக்தியுள்ளவராக இருந்திருப்பீர்கள்! கார்பன்-டை ஆக்ஸைடை(CO2) அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தித் தக்காளிப்பழச்செடியை வளர்க்கிற ஒரு ஜப்பானியர் இருக்கிறார். தாவரங்கள் ஆக்ஸிஜனை அல்ல, கார்பன்-டை ஆக்ஸைடை சுவாசிக்கின்றன என்று உங்களுக்குத் தெரியும். அவருடையத் தக்காளிச்செடியானது சாதாரணமாக வளர்வதைவிட அதிக வேகமாக வளர்ந்தது. அந்தத் தக்காளிச்செடிக்கு இரண்டு ஆண்டுகள் வயதாகிறபோது, அது 16 அடி உயரம் வளர்ந்து 900 தக்காளிப்பழங்களை விளைவித்தது. அவர்கள் அதை விற்பனை நிலையத்திற்குக் கொண்டுசென்று அதன் கிளைகளை தூக்கிப்பிடிப்பதற்கு ஏற்றவாறு உள்ள ஒரு மேடை ஒன்றைக் கட்டினார்கள். "இது 10,000 தக்காளிப்பழங்களை விளைவிக்க வேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். இந்த ஒரு தக்காளிச்செடியா! இறுதியாக அது 40 அடி உயரம் வளர்ந்து 15,000 தக்காளிப்பழங்களைக் கொடுத்தது. இவைகள் அனைத்தும் ஒரே செடியிலிருந்து கிடைத்தன. செர்ரி தக்காளி என்பது அதன் வகையாகும். கிரிக்கெட் பந்து அளவுகளில் அந்தத் தக்காளிச்செடியில் பழங்களாகப் பழுக்கின்றன. லோவாவில் உள்ள ஒரு விவசாயி ஒரு ஆர்வமுள்ள கேள்வியைக் கேட்டார். அது என்னவெனில், " சூரியன் உதயமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே பறவைகள் கீச்சிடுகின்றதே, அது ஏன்?" இலைகளில் உள்ள செல்களில் ஸ்டொமேட்டா திறக்கும்போது உருவாகும் அதிர்வுகளினால் பறவைகள் அதிகாலையில் கீச்சிடுகின்றன என்று அவர் கண்டுபிடித்தார். ஒவ்வொரு இலையின் அடிபாகத்தில், உருவத்தைப் பெரிய அளவாகக் காட்டக்கூடிய கண்ணாடியின் உதவியினால் நீங்கள் பார்ப்பீர்களானால், கார்பன்-டை ஆக்ஸைடை(CO2) இலையின் உள்ளே அனுமதிப்பதற்காக சிறிய துவாரங்கள் அந்த நேரத்தில் திறக்கின்றன. அதுவே இலைகளை அதிகாலையில் எழும்பச்செய்கின்றன. நல்லது, இனிய இசையின்போது அந்த அதிர்வு உண்டாகிறது என்று அவர் கண்டுபிடித்தார். எனவே பீத்தோவன், பாக் மற்றும் சோபின் போன்ற இசைகளை அவருடைய விளைநிலத்தில் கேட்கும்படிச்செய்தார். அவர் ஒரு பைத்தியமாகிவிட்டார் என்று அவரின் வீட்டிற்கு அருகில் இருக்கும் அயலகத்தார் நினைத்தனர். "அந்தப் போராட்டத்திலிருந்து அவரின் மனம் விடுபட்டுக்கொண்டிருக்கிறது." "அவருடைய நல்ல உணர்வுகள் ஒரு நாள் ஓய்வு எடுத்துவிட்டன." எப்படியோ, அவருடைய விவசாயப்பயிர் 4 மீட்டர் உயரம் வளரும்வரை அவர்கள் அந்த விவசாயியை பைத்தியக்காரன் என்று நினைத்தனர். அவர் பழச்சாறு கொடுக்கும் பழத்தாவரத்திற்கு இசையை கேட்கும்படிச்செய்தார். ஒரு இலையில் ஒரு பழத்திற்குப் பதிலாக, ஒரு இலையில் 5 பழங்களை அந்தத் தாவரம் விளைவித்தது. அவர் தன்னுடைய கருப்பு அக்ரோட்டு மரத்திற்கு இசையைக்கேட்கும்படி செய்தார். அது சாதாரணமாக வளர்வதைவிட இரண்டு மடங்கு அதிக விரைவாக வளர்ந்தது. அவருடைய உருளைக்கிழங்குச்செடியானது சாதாரணமாக இருக்கக்கூடிய அளவுள்ள உருளைக்கிழங்குகளைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அளவுள்ள உருளைக்கிழங்குகளை விளைவித்தது. கால்பந்துகளைப் போன்று அவருடைய தர்ப்பூசனிக்காய்கள் இருந்தன. அவர்கள் அதை "சோனிக் மலர்" என்று அழைத்தனர். "கிரியேசன் இல்லஸ்ட்ரேட்டடு" என்கிற ஒரு நல்ல பத்திரிக்கை இருக்கிறது. இங்கே உள்ள இந்த மேஜையின்மேல் அதின் ஒரு பத்திரிக்கைப் பிரதி இருக்கிறது. இரண்டு கிரியேசன் பத்திரிக்கைகள் இருக்கின்றன: ஒழுங்காக வெளிவருகிற "கிரியேசன் பத்திரிக்கை," அது ஒரு நல்ல பத்திரிக்கையாக இருக்கிறது, மேலும் இந்த "கிரியேசன் இல்லஸ்ட்ரேட்டடு" என்கிற இந்தப் பத்திரிக்கையாகும். இதை நீங்கள் என்னுடைய இணைய தளமான www.drdino.com என்கிற இணைய தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் "கிரியேசன் இல்லஸ்ட்ரேட்டடு" பத்திரிக்கையின் புள்ளியின்மீது கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு அவர்கள் ஒரு இலவச பத்திரிக்கையை அனுப்பி வைப்பார்கள். இந்தப் பத்திரிக்கையின் ஆண்டுச்சந்தா 20 டாலராகும், ஆனால், நீங்கள் என்னுடைய இணைய தளமான drdino சென்று அங்கு கிளிக் செய்தால், நீங்கள் ஒரு இலவச பத்திரிக்கைப் பிரதியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த "சோனிக் மலர்" என்கிறதைப் பற்றி ஏற்கனவே வெளிவந்துள்ள பத்திரிக்கைப் பிரதியில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. அது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும்; அங்கே உள்ள மேஜையின் மீது அது இருக்கிறது. drdino.com என்கிற இணைய தளத்தில் கையெழுத்திட்டு அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் யூஜின் ஸ்காட் அவர்களுடன் விவாதித்துள்ளேன். கலிபோர்னியாவில் உள்ள பெர்க்கிலியில் அறிவியல் கல்விக்கான தேசிய மையத்தின் தலைவியாக அவர்கள் இருக்கிறார்கள். "தேசிய" மையம் என்கிற சிறிய கட்டிடத்தில் ஐந்துபேர்கள் பணிபுரிகிறார்கள். அறிவியல் கல்விக்கான தேசிய மையத்தில் ஜெனி ஸ்காட் என்பவருடன் நான் விவாதித்தேன். "டாக்டர் ஹோவிந் அவர்களே, மத்திய மேற்குப் பகுதியில் 80 தனித்தனியான நிலக்கரி அடுக்குகள் இருக்கின்றன." என்று அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது சரிதான். அவர்கள் சொன்னார்கள், " இன்றைய தினத்தில், உலகில் உள்ள நிலக்கரியின் மொத்த அளவையும், உயிர்ப்பொருள்களையும், உலகின் அனைத்துத் தாவரங்களையும் பார்பீர்களானால், நிலத்தில் உள்ள இயற்கை எண்ணையின் அந்த அளவுக்கு மாற்றியிருப்பதற்கு வாய்ப்பில்லை." என்று கூறினார். அவர்கள் மறுபடியும் கூறியது சரியே. நீங்கள் ஒவ்வொரு மரத்தையும், புற்களையும் மற்றும் புதர்ச்செடிகளையும் மக்கிப்போகச்செய்தால், உலகத்திலே உங்களுக்கு அதிமான நிலக்கரி இருக்கிறது. நீங்கள் அவைகள் அனைத்தையும் நிலக்கரியாக மாற்ற முடியாது. பூமியில் அந்த அளவுக்கு அதிகமான நிலக்கரி இருக்கிறது. "ஜெனி அவர்களே, நீங்கள் சரியாகச்சொல்லுகிறீர்கள்" என்று நான் கூறினேன். அவர்கள் சொன்னார்கள், "நல்லது, ஹோவிந் அவர்களே, அனைத்து நிலக்கரி மடிப்புகளும் கீழே சென்று இருப்பதற்கு மிகவும் அதிகமான காலம் இருந்திருக்க வேண்டும் என்று நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்டார்கள். ஓ இல்லை, இல்லை, இல்லை. அங்குதான் அவர்கள் தவறுசெய்கிறார்கள். நீங்கள் பாருங்கள், இன்றைய உலகம் எவ்வாறு இருக்கிறது என்றும் மற்றும் இது எவ்வாறு எப்பொழுதும் இருந்துவருகிறதென்றும் அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களுக்கு அதிகமான மரங்கள் இருந்தபோது, வெள்ளத்திற்கு முன்பாக இந்த உலகத்தை புதைத்ததிலிருந்து பலனாகக் கிடைப்பதே இன்று நாம் இந்தப் பூமிக்கடியில் கண்டுபிடிக்கிற நிலக்கரியாகும். 60 மீட்டர் தடிமனுள்ள 26,000 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் நிலக்கரி காணப்படும் நிலக்கரிச்சுரங்கம் ஒன்று மண்டனா என்கிற இடத்தில் உள்ளது. 90 மீட்டர் தடிமனுள்ள நிலக்கரி மடிப்பை சமீபத்தில் அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம் கூறினார். அதிகமான நிலக்கரி இருக்கிறது; அதிகளவில் நிலக்கரி இருக்கிறது! மனிதர்களுடைய கலைஉண்மைகள் நிலக்கரியில் சில நேரங்களில் கண்டுபிடிக்கப்படுகின்றன. இந்த மணியானது நிலக்கரிக் கட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரும்புப் பானையானது நிலக்கரிக் கட்டியின் உள்ளே கண்டுபிடிக்கப்பட்டது. ஷு செருப்பின் அடிப்பாகமானது நிலக்கரிக் கட்டியின் உள்ளே காணப்பட்டது. நாம் இதைப் பற்றிய நிலக்கரி உருவாகுதலை வீடியோ எண் 6-ல் அதிகமாகக் காண இருக்கிறோம். ஆனால், பூமியின் அனைத்தின்மேலும் தாவரங்கள் இருந்தன என்று வேதாகமம் கூறுகிறது. இன்று இருப்பதுபோல் அன்று இல்லை. பூமியில் 70% தண்ணீர் இருக்கிறது என்று உங்களுக்குத்தெரிந்திருக்கலாம். தேவன் உலகத்தைப் படைத்தபோது சமுத்திரங்களானது தாவரங்களினால் நிரம்பியிருக்கவில்லை. பூமிதான் தாவரங்களினால் நிரப்பப்பட்டிருந்தது. தென் துருவத்தைத் தாண்டி 400 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள அண்டார்டிக்காவில் இலைகள் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் இலைகளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்! தென் துருவத்தில் இன்று மரங்கள் கிடையாது. பூமியின் 70% தண்ணீருக்கு அடியில் இருக்கிறது. மனித இனம் வாழ்வதற்கு ஏற்றதாக 3% மட்டுமே பூமி உள்ளது என்று உங்களுக்குத்தெரியுமா? இந்தப் பூமியின் அதிகளவானது பாலைவனமாகவும், ஐஸ் கட்டியாகவும், தூந்திரப்பிரதேசங்களாகவும் மற்றும் மலைப்பகுதிகளாகவும் இருக்கிறது. அங்கு ஒருவரும் வாழ இயலாது. வாழ்வதற்கு ஏற்ற நிலப்பரப்பு 3% இருக்கிறது. இன்று நாம் பார்க்கிற இந்த நிலையில் ஆதாமும் ஏவாளும் பார்க்கவில்லை. வாழ்வதற்கு ஏற்றதாக இருப்பதற்காகவே தேவன் இந்த உலகத்தைப் படைத்தார் என்று வேதாகமம் கூறுகிறது. எனவேதான் தேவன் அதைச்சிருஷ்டித்தார். ஒருவேளை வெள்ளத்திற்கு முன்பு இந்தப் பூமியானது 80% தரையாகவும் 20% தண்ணீராகவும் இருந்திருக்கலாம்.(நான் இந்த சதவீதத்தை உத்தேசமாக மட்டும் நினைக்கிறேன்), அங்கே சமுத்திரங்கள் இல்லை! தண்ணீரானது பூமியின் மேல்பட்டையில் அல்லது தண்ணீர்க்கட்டியின் மேல் இருந்தது. ஆனால், வெள்ளம் வருவதற்கு முன்பு ஒரு துருவம் துவங்கி மறு துருவம் வரை மரங்கள் இருந்தன. பூமியின் மேலிருந்த தண்ணீர் அடுக்கானது, புற ஊதாக்கதிர்களையும் மற்றும் எக்ஸ்ரே கதிர்களையும் தடுக்கும் வேலியாக இருந்திருக்கும். சூரியனிலிருந்து வருகிற இதர தீங்கிழைக்கும் பொருட்களைத் தடுத்திருக்கும். நீங்கள் பாருங்கள், சூரியனானது ஒளியைமட்டுமல்லாமல் மற்ற ஏராளமானவைகளையும் வெளிவிடுகிறது. அது எக்ஸ்ரே கதிர்கள், காமாக் கதிர்கள் மற்றும் பீட்டாக் கதிர்களையும், மேலும் இங்கு கீழே வருகிற அனைத்துவிதமான அடிப்படைக் கதிர்களையும் வெளிவிடுகிறது. நமது உடல்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைகளாக அவைகள் இருக்கின்றன. குறிப்பாக எக்ஸ்ரே கதிர்கள் மிகவும் ஆபத்தானவைகள். எத்தனைபேர்கள் இதற்கு முன்பு எக்ஸ்ரே எடுத்திருக்கிறீர்கள்? நான் வளரும் பருவத்தில் இருந்தபோது ஒன்பது எலும்புகளை உடைத்தேன். எனது சகோதரர் 21 எலும்புகளை உடைத்தார். எங்களுடைய அயலகத்தாரோடு மிகவும் கடினமாக விளையாடினோம். எங்களது அயலகத்தாரில் ஒருவர், அவருடைய சகோதரரின் காலை குறுக்கு வில்லினால் உடைத்தார். "குறுக்கு வில்லில் அம்பு ஏற்றப்பட்டிருந்தது எனக்குத் தெரியாது" என்று அவர் சொன்னார். குறுக்கு வில்லில் அம்பு ஏற்றப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எவ்வாறு தெரிந்துகொள்வீர்கள்? எப்படியோ, நீங்கள் மருத்துவமனைக்குச்செல்லுங்கள், " உங்கள் அனைத்து உடைகளையும் களைந்துவிட்டு இந்த கவுனை அணிந்துகொள்ளுங்கள்." என்று அவர்கள் கூறுவார்கள். நீங்கள் இந்தச்சிறிய கவுனை அணியவேண்டும், ஆனால், அது முற்றிலுமாக பின்புறம் சேர்ந்து வராது. அதற்குப் பதிலாக அது உங்களை கட்டி அணைத்துக்கொள்ளும். "தற்போது கீழே இறங்கி இந்த அரங்கத்தில் 20 கிலோமீட்டர் நடந்து செல்லுங்கள்" என்று அதற்குப் பின்பு அவர்கள் சொல்லுவார்கள். மேலும் நீங்கள் எக்ஸ்ரே அறையைக் காண்பீர்கள். நல்லது, நீங்கள் அந்த வழியே சென்றால், " ஓ, நீங்கள் இதைத் செய்ததற்காக நாங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறோம். தயவுசெய்து இந்த மேஜையின்மீது நீங்கள் படுக்கிறீர்களா?" என்று சொல்லுவார்கள். நீங்கள் அங்கே செல்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, குளிரூட்டும் சாதனதிலிருந்து அந்த மேஜையை அவர்கள் நீக்கிவிடுவார்கள். எத்தனைபேர்கள் அதே மேஜையின்மீது இருந்திருக்கிறீர்கள்? நான் எதைப்பற்றிப் போதித்துக்கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். பனிக்கட்டிக் குளிராக அது இருக்கிறது. அதற்குப் பிறகு பயங்கரமான இயந்திரத்தை அவர் உங்கள் மீது கொண்டுவந்து, மருத்துவர் சொல்லுவார், "தற்போது சுவாசத்தை நீட்டித்து இழுத்து விடுங்கள்........ நிறுத்துங்கள்." என்று சொல்லிவிட்டு, அவர் நீண்ட அறையின் உள்ளே ஓடுகிறார். மேலும் ஒரு காரீய தடுப்பு ஆடையை உங்கள்மீது வைத்திருக்கிறார். "டாக்டர், இங்கே வாருங்கள், இந்த இயந்திரம் ஆபத்தானதா?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். "இல்லை, இது தீங்கிழைக்கக்கூடியது இல்லை" என்று டாக்டர் பதில் கூறுகிறார். அவர் பொய்யைச் சொல்லிக்கொண்டிருக்கிறார். "டாக்டர், இந்த இயந்திரம் எப்படி செயல்படுகிறது?" என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவர் இவ்வாறு விளக்கமளிக்கிறார், " இயந்திரத்தில் உள்ள பொத்தானை அழுத்துகிறபோது, எக்ஸ்ரே குண்டுகள் இந்த இயந்திரத்திலிருந்து வெளிவரும்; மேலும் மிகச்சிறிய குண்டுகளாக உங்களின் உடலை ஊடுருவிச்செல்லும். மேலும் பல கண்ணுக்குத்தெரியாத துவாரங்களை உங்கள் உடலினூடே நாங்கள் உருவாக்கபோகிறோம். அவைகளில் பில்லியன்களின் எண்ணிக்கையில் மிகச்சிறிய எக்ஸ்ரே துவாரங்களை உருவாக்கப்போகிறோம். உண்மையிலே உங்கள் உடலின் உள்ளே என்ன இருக்கிறது என்பதின் நிழலை உருவாக்கப்போகிறோம். [எது, இதனிடையே, வாழ்க்கையைப் பற்றிய எதிர்மறைப் பார்வையை பல கதிரியக்க நிபுணர்கள் வைத்துள்ளார்கள்]; பல துவாரங்களில் நாங்கள் உங்களை ஊதப்போகிறோம்!" என்று மருத்துவர்கள் சொல்லுவார்கள். ஆனால், எக்ஸ்ரே கதிர்களின்மேல் உங்கள் உடலை அதிக நேரம் படச்செய்வது ஆபத்தானது என்று அவருக்குத்தெரியும். எனவேதான் அவர் காரீய ஆடையை அணிந்துகொண்டு காரீய சுவற்றிற்குப் பின்புறமாக ஓடுகிறார். அந்த எக்ஸ்ரே கதிர்கள் தன்னுடைய உடலை படும்படிச்செய்ய அவர் விரும்பவில்லை. ஒவ்வொரு நாளும் சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் நம்மீது படுகிறது என்பதை பலபேர்கள் உணருவதில்லை. இப்பொழுதுகூட எக்ஸ்ரே கதிர்கள் நம் அனைவரின் மீதும் பட்டுக்கொண்டிருக்கின்றன. காங்கிரீட்டானது எக்ஸ்ரே கதிர்களைத் தடுக்கும், தண்ணீரானது எக்ஸ்ரே கதிர்களைத் தடுக்கும்; ஆனால், இந்த ஆலயத்தின் கூரையானது எக்ஸ்ரே கதிர்களைத் தடுக்காது. அவைகள் கூரையினூடே ஊடுருவிச்சென்று உங்களின் உடலினூடே உள்ளே செல்லும். அங்கே நீங்கள் உட்கார்ந்து இருக்கும்போது உங்கள் மீது எக்ஸ்ரே கதிர்கள் விழுகின்றன; அதைத்தடுக்க உங்களால் ஒன்றும் செய்ய இயலாது. நீங்கள் என்ன செய்யமுடியும் என்று ஒரு நிமிடத்தில் உங்களுக்குச் சொல்லுகிறேன். இந்த எக்ஸ்ரே கதிர்களின் முழுத் தாக்கமும் உங்கள் தோலின்மீது விழுகிறது. அதற்குப்பிறகு, உங்கள் உடல் பழுதடைந்ததை சரி செய்யவேண்டும். நீங்கள் ஒவ்வொரு நாளும் உங்களின் தோலில் உள்ள லட்சக்கணக்கானத் துவாரங்களை சரி செய்கிறீர்கள். அவைகளில் லட்சக்கணக்கானவைகளை சரி செய்கிறீர்கள். மேலும் ஒன்று மட்டும் நிச்சயம்; 50 அல்லது 60 ஆண்டுகளில்.......70 அல்லது 80 ஆண்டுகளில், பழுதடைந்ததை தடுக்கும் ஆற்றல் போரில் நீங்கள் தோல்வியடைந்து வருகிறீர்கள் என்பதை உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவரும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். உங்களுடைய தோல் சுருங்கத்தொடங்குகிறது! "சகோதரர் ஹோவிந் அவர்களே, நான் முதிர்வயதாகவும் மற்றும் சுருங்கிய தோலுடனும் இருக்க விரும்பவில்லை." என்று நீங்கள் கூறுகிறீர்கள். சரி, நீங்கள் தோல் சுருக்கமில்லாமல் இருக்க விரும்பினால், அதற்குச் சில காரியங்கள் நீங்கள் செய்ய இயலும். முதலாவதாக, நீங்கள் முதிர்வடைவதற்கு முன்னதாகவே இறந்துவிடலாம், அல்லது, ஒரு காரீய அல்லது காங்கிரீட் குடையை உங்கள் தலையின்மீது நிரந்தரமாக வைத்துக்கொள்ளலாம். எப்பொழுதும் எக்ஸ்ரே கதிர்கள் உங்கள்மீது படுவதை தடுத்துவிடுங்கள். அல்லது, மூன்றாவதாக, எலிசபெத் டெய்லர் செய்தது போல் நீங்களும் செய்ய முயற்சிக்கலாம். எத்தனைபேர்கள் எலிசபெத் டெய்லரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அவள் பல ஆண்டுகளாக நட்சத்திரத் திரைப்படங்களில் புகழ்பெற்றவளாக இருந்துவருகிறாள்.. நான் சிறுவனாக இருக்கும்போது யாரோ ஒருவர் இதை எனக்குக் கூறினார், "அவளுடைய முகத்தில் ஒரு பெரிய துளை இருக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் அவளின் முகத்துளையை அலங்காரப் பொருட்களினால் அடைத்து மூடிமறைக்கிறாள், மேலும் அதைக்கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது, ஆனால்...... உங்களுக்குத் தெரியும். உண்மையில் அது ஒரு ஆழமான இரகசியம்!" அதற்குப் பிறகு ஒரு நேரத்தில் வால்-மார்ட் என்கிற இடத்தில் பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தேன், என்னுடைய பொருட்களைப் பெற்றுக்கொள்வதற்காகக் காத்துக்கொண்டிருந்தேன். அங்கே இந்தப் பல பத்திரிக்கைகள் அருகில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தன, அவைகளில் ஒன்றில் எலிசபெத் டெய்லருடைய படத்தை முன்பக்கத்தில் வெளியிட்டிருந்தார்கள். அவளுடைய நாற்பதாவது திருமணம் பற்றியது, அல்லது அதுபோன்றது. மேலும் நான் நினைத்தேன், " தற்போது அந்த வதந்தியைக் கண்டுபிடிக்கபோகிறேன்." நான் அவளுடைய முகத்தில் உள்ள இந்தத் துவாரத்தைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால், அது உண்மைதானா என்று நானே பார்க்க விரும்புகிறேன். எனவே, என்னுடைய ஸ்வீடன் இராணுவக் கத்தியை வெளியே எடுத்தேன். உருவத்தைப் பெரியதாகக்காட்டும் கண்ணாடியானது அதன்மீது இருக்கிறது. நான் அந்தப் பத்திரிக்கையை எடுத்தேன், அவளுடைய படத்தின் முகத்தை மிகவும் அருகில் வைத்துப்பரிசோதித்தேன். மக்கள் என்னைப்பார்த்துக்கொண்டே கீழே இறங்கிச்சென்றுகொண்டிருந்தார்கள். "ஏய், உங்களுக்கு என்ன ஆயிற்று? நான் ஒரு பத்திரிக்கையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறேன், சரியா? கடையில் பொருட்களை வாங்குங்கள்!" என்று நான் கூறினேன். நான் சற்று நேரம் அதைப்பார்த்துவிட்டு, என்ன ஒரு இரகசியமான பாதிப்பு என்பதைபப்பற்றி இறுதியாகக் கண்டுபிடித்தேன். என்னைப்பற்றி நான் மிகவும் பெருமையாக் எண்ணினேன். அந்தப்பெண் பல ஆண்டுகளாக, தன்னுடைய தோலின் சுருக்கங்களை நீக்குவதற்காகப் பல தோல் அறுவை சிகிட்சைச்செய்திருக்கிறார்கள், ஆனால் தன்னுடைய முகத்தின் அழகைத் தானே அழித்துவிட்டாள். நீங்கள் வால்-மார்ட் என்கிற இடத்திற்குச்செல்லுங்கள்.(இந்த வாரம்கூட அவளுக்கு இன்னுமொரு திருமணம் நடக்கலாம்); அங்கே அவளின் படத்தைப்பார்க்கலாம். "நல்லது, சகோதரர் ஹோவிந் அவர்களே, நான் முதிர்வயதடையக்கூடாது மற்றும் தோலில் சுருக்கம் இருக்கக்கூடாது." என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். நீங்கள் முதிர்வயதடைந்து விட்டால், தோலில் சுருக்கங்கள் உங்களுக்கு உண்டாகத்தான் செய்யும். உண்மையை ஏற்றுக்கொள்ள நீங்கள் கற்றுக்கொள்ளவேண்டும். ஆனால், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு அது நிகழவில்லை. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, அவர்கள் 900 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தார்கள் என்று வேதாகமம் கூறுகிறது. மேலும் ஒருவேளை அவர்களுக்குத் தோல் சுருக்கங்கள் இருந்திருக்காது, "அந்த மக்கள் உண்மையிலே 900 ஆண்டுகள் வாழவேண்டும் என்று வாழவில்லை." என்று தன்னை ஒரு படைப்பாளி என அழைத்துக்கொள்ளும் ஒரு மனிதர், ஆசிரியர், கூறுகிறார். அவர்கள் ஒவ்வொரு மாதத்தையும் ஒரு ஆண்டாகக் கணக்கிட்டார்கள். சந்திரனுடைய காலக்குறிப்பைப் பயன்படுத்தினார்கள். அந்த எண்ணிக்கையை 12-ஆல் நீங்கள் வகுக்கவேண்டும் என்று கூறுகிறார். அப்படியானால், அது ஒரு மிகப்பெரிய அற்புதமாக இருந்திருக்கும். ஏனோக்கு மெத்துசலாவைப் பெற்றபோது ஏனோக்கிற்கு 65 வயதாயிருந்தது. பன்னிரெண்டால் நாம் வகுத்துப்பார்ப்போமானால், இருவரின் வயதுமே 65 ஆகிறது. ஏனோக்குத் தகப்பனாகும்போது அவனுக்கு 5 1/2 ஆண்டுகள் என்றாகிவிடுகிறது. நான் அதை அதிகமாகச் சந்தேகிக்கிறேன். நான் அதை நம்புவது மிகவும் கடினமான நேரமாகயிருக்கும். இல்லை, 900 ஆண்டுகள் வாழ்வதற்காக அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் பெரியவர்களாகவும் வளர்ந்தனர். இந்த நூற்றாண்டில் 2.74 மீட்டர்கள் மிகவும் உயரமான மனிதர் இராபர்ட் வேட்லோ என்பவருடன் நான் இங்கு இருக்கிறேன். அவருக்கு 37-ஆம் எண் ஷு இருந்தது; மிகவும் பெரிய பையன்! சரி. ஏறக்குறைய 2.9 மீட்டர்கள் உயரமுள்ள கோலியாத்தைவிட சில அங்குல வளர்த்தியில் குறைவானவராக இராபர்ட் வேட்லோ இருந்திருக்கலாம். சாரணர் இயக்கத்தில் இருந்த இராபர்ட் வேட்லோவின் வயது பன்னிரெண்டாக இருக்கும்போது, அவர்தான் உலகின் உயர்ந்த சாரணர் மாணவராக இருந்தார். அவர் தன்னுடைய பன்னிரெண்டாவது வயதில் சாரணர் இயக்கத்தில் இருந்தது இங்கே இருக்கிறது. ஏறத்தாள 9 அடி உயரமுள்ள அவரை, மிகவும் பெரியவராக இருக்கலாம் என நாம் கருதினோம். ஆனால், வெள்ளத்திற்கு முன்னர் அவரைக்காட்டிலும் பெரிய அளவில் மனிதர்கள் வளர்ந்தார்கள் என்று நான் நினைக்கிறேன். இங்கு 3.5 மீட்டர்கள் வளர்த்தியுள்ள ஒரு ஆணின் எலும்புக்கூடு உள்ளது. நல்லது, உயரமானது அல்ல, நீளமானது. ஏனெனில் இப்பொழுது அவன் படுக்கைவசமாக இருக்கிறான். 3.5 மீட்டர்கள். அவ்வாறு உள்ளவர்களில் ஒருவர் உங்களின் கூடைப்பந்து அணியில் இருந்தால், நீங்கள் எவ்வாறு விரும்புவீர்கள்? இப்பொழுதிலிருந்து டென்னிஸியின் பல்கலைக்கழக மாணவர்கள் வெற்றிபெற்ற வீரர்களாக இருப்பார்கள், அப்படியிருக்கமாட்டார்களா? 3.5 மீட்டர்கள். சில நேரங்களில் இங்கே பெண்கள் ஒரு விஷயத்தை குறைகூறுவார்கள். மேலும் அவர்கள் சொல்லுவார்கள், " இப்பொழுது, அந்த எலும்புக்கூடு ஒரு ஆணிணுடையது" என்று நீங்கள் சொன்னீர்கள். "அது ஒருவேளை, பெண்ணிணுடையதாக இருக்கலாம்" என்று கேட்கிறார்கள். நல்லது, நான் உயிரியியல் மற்றும் உடற்கூறுயியல் கற்றுக்கொடுத்தேன். ஒரு ஆண் அல்லது பெண்ணின் எலும்புக்கூட்டிற்கு இடையில் உள்ள வித்தியாசத்தை எவ்வாறு சொல்லுவது என நான் தெரிந்துகொள்ள நேரிட்டது. விலா எலும்புகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அல்ல. ஆதாம் மாத்திரமே சற்று நேரத்திற்கு விலா எலும்புகளில் ஒன்று அவருடைய உடலில் இல்லாதிருந்தார். ஏனெனில், நீங்கள் நீக்கிவிட்டால் மறுபடியும் வளரக்கூடிய எலும்பு, மனிதர்கள் உடலில் ஒன்று மட்டுமே உள்ளது. உங்களுடைய கீழ் விலா எலும்புப்பகுதி மாத்திரமே நீங்கள் கீழ் விலா எலும்பை நீக்கிவிட்டபோதும் மறுபடியும் வளர்ச்சியடையும். உங்களுக்குத் தெரியும், பல்லியின் வாலை நீங்கள் துண்டித்தால், பல்லியின் உடலிருந்து வால்பகுதி மறுபடியும் வளர்ச்சியடையும். நீங்கள் கீழ் விலா எலும்பை வெளியே எடுத்துவிட்டால், கீழ் விலா எலும்பு இருந்த இடத்தில் மறுபடியும் கிழ் விலா எலும்பு வளர்ச்சியடையும். ஆதியிலிரூந்தே தேவன் எவ்வாறு ஞானத்தில் பரிபூரணமுள்ளவராக இருக்கிறார் என்பதற்கு இது ஒரு ஆதாரமாகும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணின் எலும்புக்கூட்டின் வித்தியாசத்தைச்சொல்லுவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன என்று சிலர் சொல்லுகிறார்கள். கால்களைப் பார்த்து அடையாளம் காண்பது ஒரு வழியாகும். கடைத்தெருவை நோக்கி அந்தக் கால்கள் இருக்குமானால், அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடாகும். தாடை எலும்பின் இணைப்பைப் பார்ப்பதின்மூலம் தெரிந்துகொள்வது இன்னொரு வழியாகும். பேசுவதிலிருந்து அந்த இணைப்பு அதிகமாகக் களைத்துக் காணப்பட்டால், அது ஒரு பெண்ணின் எலும்புக்கூடாகும். "அது ஏனெனில், ஆண்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றையும் நாங்கள் இரண்டுமுறைகள் சொல்லவேண்டியிருக்கிறது" என்று ஒரு பெண் அதற்கு விளக்கமளித்தார்கள். முதன்முறையாகச் சொல்லும்போதே நீங்கள் கேட்பது இல்லை! என்றார்கள். சரியா, குற்றம், குற்றம்! இந்தப் படம் எடுக்கப்பட்டபோது இந்த உலகத்திலே மிகவும் உயரமான மனிதர் 2.5 மீட்டர்கள் உயரமாக இருந்தார். அவர் தற்போது 2.6 மீட்டர்கள் உயரமாக, அழகான அளவுடைய பையனான, உக்ரையின் நாட்டில் வசித்து வருகிறார் என்று நான் சமீபத்தில் கேள்விப்பட்டேன். 2.6 மீட்டர்கள் உயரம்; பெரிய கைகள்! ஒரு கைபேசியைப் பயன்படுத்த அவர் முயற்சித்துக்கொண்டுருக்கிறார். அது கடினமாக இருப்பதுபோல் தெரிகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பாக 2.6 மீட்டர்கள் உயரமுள்ளவராக மேக்ஸிமஸ் என்கிற ரோமப் பேரரசர் இருந்தார்; அதிலிருந்துதான் ஆங்கில வார்த்தையான (maximum) மேக்ஸிமம் என்கிற வார்த்தை வந்தது. ஏறத்தாள மூன்று மீட்டர்கள் உயரமான ஒரு எலும்புக்கூடு இண்டியானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. நிவேதாவில் உள்ள விர்ஜீனியா நகரில் 2.75 மீட்டர்கள் உயரமுள்ள இரண்டு எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. லூயிஸியானாவில் உள்ள இந்தக் கல்லரை மண்மேட்டில் காணப்படும் ஒவ்வொரு 20 எலும்புக்கூடுகளில் ஒன்றில் 2.75 மீட்டர்கள் உயரமுள்ளதாக இருந்ததாகக் கண்டுபிடிக்கப்படுகிறது. நிவேதாவில் ஹம்போல்ட் ஏரியில் 3 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. குஆம் தீவில் இராட்சதர்கள் வாழ்வது வழக்கம் என்கிற ஒரு பழைய கதை இருக்கிறது. மேலும் அவர்கள் இந்தப் பெரிய "நவீன" கற்களை அங்கே கட்டினார்கள். இண்டியானாவில் எட்டு இராட்சதர்கள் புதைக்கப்பட்டதுக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் 2.4 மீட்டர்கள் முதல் 2.75 மீட்டர்கள் நீளம் இருக்கிறார்கள். அவர்கள் மிகவும் எடையுள்ள செம்புக்கவசங்களை அணிந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றி அருங்காட்சியகம் ஆர்வப்படவில்லை. பொதுமக்களின் பார்வைக்காக 2.75 மீட்டர்கள் எலும்புக்கூடுகளை அருங்காட்சியகத்தில் வைக்க ஆர்வமில்லாதது ஏன்? நாம் சிறியதாக ஆரம்பித்து பெரியதாக வளர்கிறோம் என்கிற பரிணாமக் கொள்கைக்காக அது இருக்கலாமா? அந்தக்கொள்கை உண்மையிலே ஒன்றை உணரக்சொல்லுகிறது, அது என்னவெனில், நாம் வளர்ந்துகொண்டிருக்கிறோம். "நீங்கள் தேவர்களைப்போல் ஆகிவிடுவீர்கள்." என்பதே சாத்தானின் இரண்டாவது பொய்யாக இருந்தது. " நீங்கள் முன்னேற்றமடைந்துகொண்டுவருகிறீர்கள்." என்பது அதனுடைய முற்றிலும் எதிரான உண்மையாக இருக்கலாமா? வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு மக்கள் மிகவும் பெரியவர்களாக இருந்தார்கள், ஆனால் தற்பொழுது நாம் மிகவும் மோசமடைந்துகொண்டு வருகிறோமா? அதை மறைப்பதற்கு அவர்கள் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். கலிபோர்னியாவில் லொம்போக் ரான்கோ என்னுமிடத்தில் 3.6 மீட்டர்கள் அளவுள்ள ஒரு எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்கள். அரிஸோனாவில் உள்ள டக்ஸனில் அதே அளவுள்ள இன்னொரு எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தார்கள். அந்த மனிதனுக்கு 6 கைவிரல்கள், 6 கால்விரல்கள் மற்றும் ஒரு பறவையின் வடிவில் உள்ள தலையில் அணியும் ஆடை இருந்தது. கோர்டஸ் என்பவர் மெக்ஸிகோவிற்குச் சென்று அதன் பகுதியளவை வெற்றிகண்டபோது, அங்குள்ள மக்கள் சொன்னார்கள், "நீண்ட காலங்களுக்கு முன்பு, இந்தக் கண்டத்தில் இராட்சதர்கள் வாழ்ந்தார்கள்." அவர்கள் அவருக்கு பழங்கால இராட்சதர்களின் எலும்புகளில் ஒன்றைக்காண்பித்தார்கள். அந்தத் தொடை எலும்பானது கோர்டஸின் உயரத்திற்கு இருந்தது! ஒரு தொடை எலும்பு அந்தளவு இருந்தது! "நான் ஒரு நல்ல அளவின் மனிதன், நான் ஒரு நல்ல அளவுள்ள மனிதன், ஆனால் என் உயரத்திற்கு இந்த எலும்பு இருந்திருக்கிறது." என்று அவர் சொன்னார். இது பாறையின் இராட்சதக் கல்துண்டாக இருக்கிறது. இந்தப்பொருட்களை அசைப்பதற்கு இந்தப் பூமியில் யாரால் இயன்றது? கவனியுங்கள், அளவுக்காக அதற்கு முன்பு ஒரு ஒட்டகம் இருக்கிறது. இந்தப்பொருட்களை எல்லாம் வெட்டிக்கொண்டும் மற்றும் நகற்றிக்கொண்டும் இருந்தது யார்? இது 18 கிலோ எடையுள்ள ஒரு கோடாரியின் தலைப்பகுதியாகும். 4.5 கிலோ எடையுள்ள ஒரு சுத்தியலை எடுத்து சுழற்றிப்பாருங்கள், அப்பொழுது ஒரு 17.7 கிலோ எடையுள்ள கோடாரியைச் சுற்றியவரைப்பற்றி ஏன் நான் ஆச்சர்யப்படுகிறேன் என்று உங்களுக்குப் புரியும். சீவித்துண்டாக்குவதற்கு பெருவிரலுக்கும், மற்ற விரல்களுக்கும் இடையில் பிடிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு கல் இருக்கிறது. இராட்சத மனிதர்களைப் பற்றிய பெரும்பாலான கண்டுபிடிப்புகளை மறைத்து வைத்திருப்பதற்கு இந்த ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகம் பொறுப்பாக இருக்கிறது. இந்த இராட்சத மனிதர்களைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வதை, அவர்கள் விரும்பவில்லை. ஏனெனில் பரிணாம வளர்ச்சிக்கொள்கைக்கு எதிராக அது போகிறது. நிவேதாவில் உள்ள வின்னிமூக்கா என்கிற இடத்தில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டதை, சில ஆண்டுகளுக்கு முன்பாக அவர்கள் அங்கிருந்து நீக்கிய ஒரு மண்டைக்கூடு இதுவாகும். இதன் அடிப்பாகமானது மறைக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதைப் பார்பதற்கு ஒரு சிறப்பு விண்ணப்பம் கொடுக்கவேண்டும். ஒரு இராட்சத மனிதனின் மண்டை ஓடு இதுவாகும். இங்கு ஒரு சாதாரண மனிதனின் பெருவிரல் இருக்கிறது; அதற்கும் கீழே ஒரு இராட்சத மனிதனின் பெருவிரல் இருக்கிறது. அராரத் மலைக்கு மிகவும் அருகில், துருக்கியில் உள்ள ஒரு கல்லரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு எலும்புக்கூட்டின் ஒரு பகுதி இதுவாகும். நோவாவின் கல்லறையைக் கண்டுபிடித்து விட்டதாத் துருக்கியின் அரசு சொல்லுகிறது. அந்த எலும்புக்கூட்டின் உயரமானது 3.6 மீட்டர்கள் இருந்தது. அவருடைய கைகள் நீண்டு இருக்கும் என்பதுபோல் தெரிகிறது. நோவாவும் மற்றும் அவரது மூன்று மகன்களும் சேர்ந்து அந்த அளவு படகை ஒருபோதும் கட்டியிருக்க முடியாது என்று மக்கள் வாதிடுகிறார்கள். ஆனால், அவர்கள் அந்தப் பையன்களை பார்க்கவில்லை! "ஏய் பப்பா, அந்த மரத்தை என்னிடம் கொண்டுவா, செய்வாயா?" "நிச்சயமாக கொண்டுவருகிறேன் அப்பா, அதை எங்கே வைக்க நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று நோவாவும் அவனுடைய மகன்களும் பேசியிருப்பார்கள். ஒரு மனிதனிடம் வாங்கின தொடை எலும்பை எங்களது அருங்காட்சியகத்தில் ஒட்டி வைத்திருக்கிறோம். அது ஏறக்குறைய நான்கு மீட்டர்கள் உயரமுள்ளதாகும். அதுபோன்ற ஒருவரை நீங்கள் சந்தித்தால், அவரை "ஐயா" என்று அழையுங்கள். நீங்கள் அதிகம் படிக்க விரும்பினால், அங்கே கீழேயுள்ள மேஜையின் மேல் ஒரு கட்டுரை இருக்கிறது, அது அதைப்பற்றி அதிகமாக விளக்குகிறது. துருக்கி நாட்டில் உள்ள ஒரு உணவுவிடுதியில் பார்வைக்காக இந்த தாடை எலும்புக்கூடுகள் வைக்கப்படுகின்றன; இரண்டு தாடைகளின் இணைப்புகளுக்கும் இடையில் 16.5 செண்டிமீட்டர்கள் இடைவெளி உள்ளது. உங்களில் எவரேனும் உங்கள் தலையை இந்தத் தாடை எலும்பின் உள்ளே வைத்துக்கொண்டுத் துள்ளலாம். சாதரண மனிதனின் மண்டைஓட்டையின் அளவைக் காட்டிலும் மூன்றுமடங்கு அதிகமுள்ள ஒரு மனிதனின் மண்டைஓட்டை வாஸக்கீயில் உள்ள விஸ்கான்ஸினில் அவர்கள் கண்டுபிடித்தார்கள். அவர்கள் அதை ஒரு பழங்கால மலைவாழ் மக்களின் சடலப்புதையல் கல்குவியலிலிருந்து கண்டுபிடித்தார்கள். இராட்சத மனிதர்கள் அந்த நாட்களில் பூமியில் இருந்தார்கள். அதைத்தான் வேதாகமம் கூறுகிறது. இங்கே இராட்சத மனிதர்கள் இருந்தார்கள். தேவனின் சாயலில் நாம் சிருஷ்டிக்கப்பட்டோம் என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது, தேவனின் சாயலில் நாம் சிருஷ்டிக்கப்பட்டோம் எனில், இது தாத்தாவாக இருக்கிறார் என்று சிறுவர்களுக்குப் போதிப்பதற்கு நாம் ஏன் சம்பளம் கொடுக்கிறோம்? குகையில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய உண்மை என்னவாக இருக்கிறது? எப்படியோ, குகையில் வாழ்ந்த மனிதர்கள் இந்தப் படத்தில் எவ்வாறு பொறுத்தமாக இருக்கிறார்கள்? வேதாகமம் உண்மையாகவும் மற்றும் இந்தப் பூமிக்கு 6,000 ஆண்டுகள் மட்டுமே வயதாகிறது எனில் குகையில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றிய காரியம் என்னவாக இருக்கிறது? ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு நாம் அதைப்பற்றி பேச இருக்கிறோம். அடுத்து குகையில் வாழ்ந்த மனிதர்கள் வருகிறார்கள். கருத்தரங்கு 2அ முற்றுப்பெறுகிறது-டாக்டர் கென்ட் ஹோவிந் - www.drdino.com - தமிழ் (Tamil) கருத்தரங்கு 2ஆ ஆரம்பம் -டாக்டர் கென்ட் ஹோவிந் - மொழிபெயர்ப்பு: D.மந்திரி குமார், M.Sc. தமிழ் (Tamil) கருத்தரங்கு 2ஆ பகுதியில், குகை மனிதர்களைப் பற்றியும் மற்றும் ஏராளமான மற்றத் தலைப்புகளைப் பற்றியும் நாம் பேச இருக்கிறோம். "நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக." என்று தேவன் கூறினார் என்று வேதாகமத்தில் ஆதியாகமம் 1-ஆம் அதிகாரத்தில் கூறுகிறது. தேவனுடைய சாயலாக நாம் சிருஷ்டிக்கப்பட்டிருந்தால், வாலில்லாக் குரங்கு தாத்தாவாக இருந்தது என்று சிறுவர்களுக்கு நாம் கற்றுக்கொடுப்பது ஏன்? நாம் வளர்ச்சியடைந்துகொண்டு வருகிறோம் என்றும் ஏதோ ஒரு நாளில் நாம் தேவர் ஆகப்போகிறோம் என்றும் பரிணாமம் நமக்குப் போதிக்கிறது. உண்மையிலே, நாம் மிகவும் மோசமாக மாறிக்கொண்டிருக்கிறோம். காரியங்கள் வேறு ஒரு பக்கமாக விழுந்துகொண்டு வருகின்றன. நாம் ஒரு மிகப்பெரிய ஜீன்களைப் பற்றிய சுமையைச் சுமக்கிறோம். நாம் ஆதாம் மற்றும் ஏவாளை ஒப்பிடும்போது, மனதளவிலும் மற்றும் சரீரத்திலும் குறைவுள்ளவராக இருக்கிறோம். காரியங்கள் முன்னேற்றமானவைகளாக இல்லை, ஆனால் வாலில்லாக் குரங்குதான் தாத்தா என்று அவர்கள் போதிக்கிறார்கள். குகை மனிதர்களைப் பற்றிய உண்மை என்னவாக இருக்கிறது? வாலில்லாக் குரங்கு போன்ற ஒரு பிராணி மனிதனாக மாறமுடியுமா? "குகை மனிதர்கள்" என்று நீங்கள் அர்த்த்ம் கொள்ளுகிற மனிதனைப் பொறுத்து இருக்கிறது. இன்றைக்கும் குகையில் வசிக்கும் மக்கள் இருக்கிறார்கள். நாம் அவர்களை அரை வாலில்லாக் குரங்கு, அரை மனிதன் என்று அழைப்பதில்லை. உலகம் முழுவதும் மிகவும் அதிகமாகத்தேடப்படும் ஒசாமா பில் லேடன் என்கிற குகை மனிதன் அங்கே இருக்கிறான். முன்பு இருந்த குகை மனிதன் ஒருவன் அங்கே இருக்கிறான். யாரோ ஒருவன் நம் அனைவரையும் குரங்குகள் போல ஆக்குவதற்கு முயற்சித்துக்கொண்டிருக்கிறான் என்று நான் நினைக்கிறேன். உங்களுடைய முன்னோர் ஒரு வாலில்லாக் குரங்கு போன்ற பிராணியாக இருந்தாரா? அவ்வாறு இருக்காது என்று நான் நினைக்கிறேன். குகை மனிதர்கள் என்று சிலர் அழைக்கிற ஒருசிலரைப் பற்றி நாம் பேச இருக்கிறோம். இந்தத் தலைப்பைப் பற்றிப் பேசுவதற்கு நாம் பலமணி நேரங்கள் செலவிடலாம், ஆனால் பல விபரங்களை நாம் இன்னும் பேச வேண்டியிருக்கிறது. பரிணாமத்தின் ஆதாரத்திற்காக பல ஆண்டுகளாக நெப்ரஸ்கா என்கிற மனிதன் காண்பிக்கப்படுகிறான். நெப்ரஸ்கா என்கிற ஒரு மனிதன் இருந்தான் என்பதற்கு அவர்கள் கண்டுபிடித்த ஒரே ஆதாரம் ஒரு பல் ஆகும். அங்கே பாருங்கள், ஒரு பல்லானதுதான் முழுமையான நெப்ரஸ்கா மனிதனாக இருக்கிறான்! அவர்கள் அந்த ஒரு பல்லில் இருந்து ஒரு முழு மனிதனைக் கண்டுபிடித்தார்கள், பிறகு அவனுக்கு ஒரு மனைவியைக் கண்டுபிடித்தார்கள். அவனுடைய பல்லை ஆராய்ச்சி செய்து அவனுடைய மனைவி என்னமாதிரி இருப்பாள் என்று தெரிந்துகொள்வதற்கு நீங்கள் மிகவும் திறமைசாலியாக இருக்கவேண்டும். இவர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள்; இவர்களைக் கேள்வி கேட்கக்கூடாது அல்லது சந்தேகிக்கக்கூடாது; அவர்களுடைய சொந்த அதிகாரத்தில் நம்பிக்கையுடையவர்கள். அது உண்மையிலே ஒரு பன்றியிலிருந்து வந்தது என்று அவர்கள் இறுதியாகக் கண்டுபிடித்தார்கள். அங்கே பாருங்கள், உண்மையான நெப்ரஸ்கா மனிதன் இருக்கிறான்! தற்பொழுது, பில்டவுன் மனிதனைப் பற்றிப் பார்போமானால், இங்கிலாந்தில் உள்ள பில்டவுன் என்கிற இடத்தில் காணப்படுகிற சரளைக்கல் குழிக்கு பின்பு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் மனிதனுடைய மண்டைஓட்டையும் மற்றும் வாலில்லாக் குரங்கினுடைய தாடை எலும்பையும் சேர்த்தார், அவர்கள் அவைகளை கீழே செதுக்கி ஒவ்வொருவரையும் முட்டாளாக ஆக்கியிருக்கிறார்கள். அவர்கள் 1912-ஆம் ஆண்டில் இந்த பில்டவுன் மனிதனைக் "கண்டுபிடித்தார்கள்." இது "நியூயார்க் டைம்ஸ்" என்கிற பத்திரிக்கையில் இருந்தது. பில்டவுன் மனிதன் உண்மை என டார்வின் கொள்கை ஆதாரங்களைக் காண்பித்தது. "அது திட்டமிட்ட ஒரு செயல்" என 1925-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தின் ஆதாரம் சொல்லுகிறது, ஜான் ஸ்கூப்ஸ் என்பவர் பரிணாமத்தைப் போதிக்க முயற்சி செய்கிறபோது அவ்வாறு கூறப்பட்டது, ஆனால் நீதிபதி சொன்னார், "கேள்வி என்னவெனில், பரிணாமத்திற்கு ஆதாரம் இருக்கிறதா என்பதல்ல; மாறாக பரிணாமத்தைப் போதிப்பதில் அவர் சட்டத்தை மீறினாரா? என்பதுதான் என்று கேட்டார். எனவே, சட்டத்தை மீறினக் குற்றவாளியாக அவர் இருக்கிறார் என்று அவர் கண்டுபிடிக்கப்பட்டார். இங்கு டென்னிஸியில் உள்ள டேடன் என்னுமிடத்தில் இருந்து அங்கு சென்ற ஆசிரியர்தான் ஜான். T. ஸ்கோப்ஸ் என்பவராவார். இருப்பினும், பில்டவுன் மனிதன் ஒரு ஏமாற்றுக்காரனாயிருந்தான். யாரோ ஒருவர் வாலில்லாக் குரங்கினுடைய தாடை எலும்பையும், ஒரு மனிதனுடைய மண்டைக்கூட்டையும் பெற்றுக்கொண்டு, இணைப்புகளை மாற்றி, அவைகளை ஒன்றாகச்சேர்த்து, ஒவ்வொருவரையும் ஏமாற்றினார். அவர்கள் பற்களையும் கீழே அடுக்கினார்கள்.! பரிணாமத்திற்கு ஆதாரமாக 40 ஆண்டுகள் அதைப் பாடப்புத்தகங்களில் வெளியிட்டிருந்தார்கள். அது ஒரு மோசடியாக இருந்தது; அது ஒரு மோசடி என்று 1953-ஆம் ஆண்டு வெளிக்கொண்டு வரப்பட்டது. நியாண்டர்தல் மனிதன் (நெற்றியில் கண்புருவம் தடித்தும் இருக்கிற), இன்னும் டென்னிஸியில் உள்ள நாக்ஸ்விலியில் பாடப்புத்தகங்களில் இருக்கிறானே! ஆனால், பரிணாம சம்மந்தமானவற்றிக்கு அது தொடர்பில்லை என பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாண்டர் பள்ளத்தாக்கிற்கு ஒரு சரித்திரம் இருக்கிறது, ஜோயாக்கிம் நியாண்டர் என்கிற பெயரையுடைய ஒருவர் ஒரு பாட்டுப்புத்தகத்தை எழுதினார், "சிருஷ்டிப்பின் இராஜாவாகிய சர்வவல்லக் கர்த்தரைத் துதியுங்கள்." என்று எழுதின ஒரு பெரிய தெய்வீக மனிதனாக அவர் இருந்தார். 1856-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அங்கே ஒரு மக்கி இறுகிப்போன எலும்புக்கூட்டைக் கண்டுபிடித்தனர். நியாண்டர் பள்ளத்தாக்கில் ஒரு மனிதனுடைய எலும்புகள் மக்கி இறுகிப்போகிக் காணப்பட்டது, எனவே அவர்கள் அதற்கு நியாண்டர்தல் மனிதன் என்று பெயரிட்டனர். பின்புறமானது அதிகமாக வளைந்து காணப்பட்டது. வாலில்லாக் குரங்கு நான்கு கால்களால் நடக்கின்றன, மனிதன் இரண்டு கால்களால் நடக்கிறான்; எனவே, டார்வின் கொள்கை பிரபலமானபோது, அவர்கள் நியாண்டர்தல் மனிதனை மறுபடியும் அறிமுகப்படுத்தி, "ஒருவேளை அவன் மெதுவாக வளர்ந்து, நிமிர்ந்தவனாக மாறிவிட்டான்." என்று சொன்னார்கள் இருப்பினும், அவன் எலும்பு இணைப்புகளில் வீக்கமுடைய, கீழே குனிந்து நடக்கும், ஒரு வயதுமுதிர்ந்த மனிதன் என்று அவர்கள் தெரிந்திருந்தார்கள். அவன் மேலே வரப்போவதே இல்லை. அவன் கீழே குனிந்து இருந்த ஒரு முதிர்வயதானவன், ஆனால் அவர்கள் அவனை இன்னும் பாடப்புத்தகங்களில் வைத்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்து, ஏறக்குறைய 300 நியாண்டர்தல் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நமது மூளைகளைக் காட்டிலும் அவர்களின் மூளைகள் பெரியதாகக் காணப்படுகிறது. அவர்களின் எலும்பு அமைப்பு மிகவும் வலிமையுள்ளதாக இருந்தது. அவர்கள் மிகவும் பெரிய தசைகளையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். மேலும் அவர்களில் ஒரு சராசரியான நியாண்டர்தல் மனிதன் ஒரு கால்பந்து வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கோல்போஸ்ட்டின் மேலே தூக்கி எறிகிறவராக இருந்திருப்பார். நியாண்டர்தல் மனிதனுக்கு விதிவிலக்குள்ள ஆற்றல் இருந்தது. "அவன் வாழ்க்கையில் என்னவாக இருந்திருப்பான்?" என்று அவர்கள் ஒரேமாதிரியான எலும்புக்கூட்டை 9 படம் வரையும் ஒவியர்களிடம் கொடுத்துக் கேட்டிருப்பார்கள். அவர்கள் 9 வித்தியாசமான பதில்களை ஓவியர்களிடம் பெற்றார்கள். "நாங்கள் படம் வரையும் ஓவியர்கள் என்று உங்களுக்குத் தெரியும். அவன் எதைப்போன்று இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?" என்று ஓவியர்கள் கேட்டார்கள். "வாலில்லாக் குரங்குபோல் அவன் இருக்க விரும்புகிறீர்களா? அல்லது மனிதனைப்போல் இருக்கவேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என்று எங்களுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அதைச்செய்கிறோம்." என்று சொல்லியிருப்பார்கள். நியூ ஜெர்ஸியில் உள்ள எனது நண்பர்களில் ஒருவரான ஜாக் கூஸோ, கடந்த 32 ஆண்டுகளாக பல் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். பென்ஸகோலாவில் சில வாரங்களுக்கு முன்பு நடந்த பயிற்சி முகாமில் வந்திருந்து ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். ஐரோப்பாவில் உண்மையான நியாண்டர்தல் மனிதனின் மண்டைஓட்டைப் பற்றிப் படித்தார். "முன்பு ஒரு காலத்தில் வாழ்ந்த சாதாரண மனிதர்களின் சரியான நியாண்டர்தல்கள் இவைகளாக இருக்கின்றன." என்றும் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, 900 ஆண்டுகள் வாழ்வதற்காக வாழ்ந்தார்கள். ஆனால் வெள்ளத்திற்குப் பின்பு, வாழும்காலம் 400 ஆண்டுகள், அதற்குப் பின்பு 200 ஆண்டுகள், பின்பு 100 ஆண்டுகள் எனக்குறைந்துவிட்டது. தற்போது அதுதான் வாழ்வதற்கு நீண்ட காலமாக இருக்கிறது. உங்களுடைய கண்புருவ முகடுகள் வளர்வது ஒருபோதும் நிற்பதில்லை என்பது ஒரு எளிமையான உண்மையாகும். எனவே, நீங்கள் 300 அல்லது 400 ஆண்டுகள் வயதுள்ளவர்களாக வாழ்வீர்களானால், உங்களது கண்புருவ முகடுகள் வித்தியாசமாக இருக்கும்! ஆஸ்திரிலேயாவின் பூர்வீகக்குடி மக்கள் எப்பொழுதும் அவர்களின் தாடை எலும்புகளை மற்றபொருட்களை தொங்கவிடுவதற்குப் பயன்படுத்தும் கொக்கிகளாக பயன்படுத்துவதுபோல, இன்றைக்கும் தங்களின் தாடை எலும்புகளைப் பயன்படுத்துகிறவர்கள் ஏராளம் இருக்கிறார்கள். (அவர்கள் தங்களுடன் கருவிப்பெட்டியை சுமப்பதில்லை), அவர்கள் மெல்லுவதனால் அவர்களுடைய கண்புருவ முகடுகள், வெளியே நீண்டு இருக்க எலும்புகள் இழுக்கின்றன. நியாண்டர்தல் மனிதர்கள் 200 அல்லது 300 ஆண்டுகள் வயது வரையில் வாழக்கூடிய சாதாரண மனிதர்களாக இருந்தார்கள். அவர்கள் அப்படியிருக்கிறார்கள் அவ்வளவுதான். நம்முடைய மூளைகளைவிட அவர்களின் மூளைகள் பெரியதாக இருந்தது. அவர்கள் துணை-மனிதர்களாக இல்லை. அவர்கள் மிகவும் வயதுமுதிர்ந்தவர்களாக இருந்தார்கள். அங்கே தூரத்தில் இடதுபுறமாக ஒரு பூர்வீகக் குடிமனிதன் இருக்கிறார். முன்னால் நீட்டிக்கொண்டிருக்கிற அந்த கண்புருவ முகடைப்பாருங்கள். மெல்லுவதினால் அல்லது உங்களது தாடையின் சதைகளைப் பயன்படுத்துவதினால் அப்படியிருக்கிறது. பல்வேறுபட்ட தலை வடிவங்கள் இருக்கின்றன. நீங்கள் இந்த நகரத்தின் மக்களை வரிசையாக நிறுத்திவைத்து பல்வேறுபட்ட மண்டை ஓடுகளைக் காட்டி, பரிணாம வளர்ச்சிக்கு ஆதாரங்கள் என்று உரிமை கொண்டாடலாம். கீழே நகரத்திற்குக் காரை ஓட்டிச்செல்லுங்கள்; நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இன்னும் பாடப்புத்தகங்களில் பயன்படுத்தப்படும் குரோ-மேக்னன் (Cro-Magnon man) மனிதன் இருக்கிறான். இருப்பினும் அவனும் முற்றிலும் ஒரு சாதாரண மனிதனே. விடுபடும் இணைப்பு என்று அந்த எலும்புக்கூடு கருதப்படுவது ஏன்? அவர்கள் ஹோமோ சேப்பியன்கள் என்கிற நவீன மனிதனை உடையவர்களாயிருக்கிறார்கள். அவன் குரோ-மேக்னன் என்று வரிசைப்படுத்தப்படுகிறான். அவன் விடுபடும் இணைப்பு அல்ல. அவர்கள் தற்போது அங்கே வைத்திருக்கிற ஒன்று என்னவெனில், ஆஸ்ட்ராலோபித்திகஸ் ஆப்பிரிக்கனஸ் என்பதாகும். 1973-ஆம் ஆண்டிலேயே அது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பாக தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதே! அவர்கள் பரிணாமத்திற்கான ஆதாரம் என இன்னும் ஏன் அதைப் பாடப்புத்தகங்களில் வைத்திருக்கிறார்கள்? அவர்கள் ஆஸ்ட்ராலோபித்திகஸ் அபிரன்ஸிஸ் என்கிறதை வைத்திருக்கிறார்கள். அது லூசி என்று அறிந்துகொள்வதே பரவாயில்லை. எத்தனைபேர்கள் இதற்கு முன்பு எப்பொழுதாவது லூசியைப் பற்றிக்கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? டொனால்டு ஜோஹன்ஸன் என்பவர் லூசியை எத்தியோப்பியா நாட்டில் 1974 -ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். அவர் விடுபடும் இணைப்பைக் கண்டுபிடிப்பதற்காக மானியத்தொகையுடன் அங்கே சென்றிருந்தார். யாரோ ஒருவர் அவருக்குப் பணம் கொடுத்து, "விடுபடும் இணைப்பைச் சென்று கண்டுபிடியுங்கள், நீங்கள் ஒருவரைக் கண்டுபிடிக்காவிட்டால், உங்களுக்கு இனிமேல் பணம் கிடைக்காது." என்று கூறினார். இரண்டு வாரங்களுக்குப் பின்பு அவருடைய மானியத்தொகை தீர்ந்துவிட்டது, அப்பொழுது அவர் கண்டுபிடித்ததுதான் லூசியாகும். அவர் அதிகமாக உற்சாகப்படுத்தப்பட்டார் என்பதுபோல் தெரிகிறது. நீதிமன்றச் சட்டத்தில், அது சந்தேகத்திற்கு உரிய நடத்தையாகும் எனக்கருதப்படவேண்டும். லூசி என்பது மூன்று அடி உயரமுள்ளதாக இருந்தது; மனிதனைப்போல் இருக்கக்கூடிய குரங்கின் வகையைச் சேர்ந்ததாக அது வெளிப்படையாகத்தெரிகிறது. மண்டை ஓட்டின் எலும்புகளானது முற்றிலுமாக அழுத்தப்பட்டிருந்தது. நீங்கள் அந்த எலும்புக்கூட்டைப் பற்றி அதற்குமேல் எதுவும் சொல்ல இயலாது, ஆனால் அவர்கள் அவைகளை ஒன்றாக்கிப் பிள்ளைகளின் பாடப்புத்தகங்களில் போட்டபொழுது, அதைப் பாதி மனிதனாகவும், பாதிக் குரங்காகவும் இருக்கும் விதத்தில் உண்டாக்கினர். அவர்கள் அதற்கு லூசி என்று பெயரிட்டனர், ஏனெனில் அவர்கள் இந்தப் பாடலைக்கேட்டனர், "லூசி வானத்தில் வைரங்களுடன் " என்கிற, அந்த நேரத்தில் மிகவும் பிரபலமான பாடலாக அது இருந்தது. LSD என்கிற போதைப் பொருளைப் பற்றி விவரிப்பதற்காக எழுதப்பட்டது. அவர்கள் இதைக் கண்டுபித்தபோது, அவர்கள் போதையில் இருந்திருக்கலாம். தேசிய புவியியல் பத்திரிக்கையில், லுசியின் முழுங்கால் என்று முழுங்காலின் இணைப்பில் சீட்டு ஒட்டியிருந்தது, உண்மையிலேயே இரண்டு கிலோமீட்டர்கள் தூரத்திலும் 61 அடி ஆழத்திலும் கண்டுபிடிக்கப்பட்டதாக இருந்தது. தேசிய புவியியல் அதற்கு லூசியின் முழுங்கால் என்று சீட்டு ஒட்டியது. அது லூசியின் முழங்கால் அல்ல. அது இரண்டு கிலோமீட்டருக்கும் தொலைவிலிருந்து தோண்டியெடுக்கப்பட்டதாகும். அந்த முழுங்காலின் இணைப்பைப் பற்றி இன்னும் அதிகமான முரண்பாடு இருக்கிறது. லூசி மனிதனாக வளர்ச்சியடைந்தது என்பதற்கு அந்த முழுங்காலை அவர்களுக்குச் சிறந்த ஆதாரமாக வைத்திருக்கிறார்கள். ஏனெனில், மனிதக்குரங்கிற்குக் கீழ் மற்றும் மேல் காலின் ஒவ்வொன்றுடனும் ஒரே நேராக இருக்கிறது. மனிதனுடைய காலானது முழுங்கால் வரை சென்று முழங்காலின் அருகில் விலகி இருக்கிறது, ஏனெனில் உங்களுடைய இடுப்பானது உங்களின் முழங்காலைவிட அகலமானது. லூசியின் முழங்கால் அருகில் விலகியிருக்கிறது. தொடையின் எலும்பில் இடைவெளியிருக்கிறது. பாருங்கள், அவள் மனிதனாக மாறிக்கொண்டிருந்தாள் என்று டொனால்டு உரிமைகொண்டாடினார். இல்லை, மரம் ஏறுகிற எந்த குரங்கிற்கும் தொடையின் எலும்பில் இடைவெளியிருக்கிறது. அவர் கண்டுபிடித்தது என்னவெனில் அது ஒரு மரம் ஏறும் குரங்காகும். அது மனிதனாக மாறிக்கொண்டிருந்தது என்பதற்கான ஆதாரம் இல்லை. வழக்கமாக உள்ள மனிதக்குரங்கின் எலும்புகளைவிட ச்சற்றுப் பெரியதாக இருக்கிறது என்று அவர் மேலும் சொன்னார். அது உண்மைதான், ஆனால், அது மனிதனாக மாறிக்கொண்டிருந்தது என்பதை அது நிரூபிக்கவில்லை. வழக்கமாக உள்ள குதிரையின் எலும்புகளைக் காட்டிலும், ஒரு கிலைடெஸ்டேலின் (Clydesdale) எலும்புகள் சற்றுப் பெரியவைகளே. அது ஒரு கனரக வாகனமாக மாறிக்கொண்டிருக்கிறது என்று அது நிரூபிக்காது, எந்தப் பகுத்தறிவினாலும் அது அப்படியாகாது. அவர் கண்டுபிடித்தது என்னவெனில் ஒரு பலமான மனிதனைப் போன்ற குரங்காகும். அது ஒருவேளை வெள்ளத்திற்கு முன்பு இருந்த மனிதக்குரங்குகளாக இருக்கலாம், மேலும் அனைத்து சிருஷ்டிப்புகளும் அப்பொழுது பலமானதாக இருந்தன. அவைகள் நீண்ட ஆயுசுடனும் மற்றும் அதிக ஆரோக்கியமாகவும் இருந்திருந்தால், அதுதான் அவர் கண்டுபிடித்ததாகும். இதனிடையே, இன்றும் பெரிய குதிரைகளும் சிறிய குதிரைகளும் இருக்கின்றன. அவர்களின் லூசி கண்காட்சியில் பரி. லூயிஸ் ஸு மனிதனின் காலை வைத்தார். ஒரு கால் எலும்போ அல்லது ஒரு கை எலும்போ அங்கு காணப்படவில்லை. ஒன்றுகூட இல்லை. கண்டுபிடிக்கப்பட்ட ஒவ்வொரு ஆஸ்ட்ராலோபித்திஸினினுடையதும் சுருண்ட பெருவிரல்களை உடையதாக இருந்தது. அந்தச் சிலையானது முற்றிலும் தவறான அடையாளமாக இருக்கிறது என்று வாஷிங்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் மெண்டன் கூறினார். பொய் என்று கூறுவதற்கு அது ஜோடிக்கப்பட்டப் பெரிய வார்த்தையாக இருக்கிறது. நான் சிறிய வார்த்தையை விரும்புகிறேன். அது ஒரு பொய்யாக இருக்கிறது. சரிசெய்வதற்கு அருங்காட்சியகத்தின் அதிகாரிகளுக்குத் திட்டங்கள் இல்லை என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் கூறினார். ஒவ்வொரு புதிய ஆதாரத்துடனும் ஒவ்வொரு பார்வைக்கு வைக்கப்பட்டப் பொருட்களின் தகவல்களை சமீபத்திய தகவலுள்ளதாக எங்களால் ஆக்க இயலாது. அனைத்துக் காட்சிப்பொருட்களையும் அது உருவாக்குகிற கருத்தையும் பார்க்கிறோம், மேலும் இது உருவாக்குகிற கருத்து சரியானது என்று நாங்கள் நினைக்கிறோம் என்றார். புரூஸ் அவர்களே, இந்த அருங்காட்சியகத்தின் மூலம், இங்கு வருகிற சிறுவர்களுக்கு, பரிணாமம் உண்மை என்கிற கருத்தைத்சொல்லுவீர்கள் என்று நீங்கள் என்னிடத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? உண்மைகளைவிட உங்களது கொள்கை மிகவும் முக்கியம் என்று நீங்கள் அர்த்தங்கொள்ளுகிறீர்களா? அவர்கள் செய்வது அதுதான். அவர்கள் இதுபோன்ற அறிவியல் மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களின் மூலமாக அங்கு போகின்ற பிள்ளைகளுக்குப் பொய்யைச்சொல்லுவார்கள். பரிணாமக் கொள்கை உண்மை என்று அந்தச்சிறுவர்களை நம்பவைப்பதற்காவே அப்படிச்சொல்லுகிறார்கள். அவைகளில் பாடப்புத்தகங்களில் ஏறக்குறைய 60 பொய்கள் இருக்கின்றன. பாடப்புத்தகங்களில் உள்ள பொய்களைப் பற்றி வீடியோ எண் 4-ல் நாம் காணலாம். அவர்கள் சாம்பல் அடுக்கிலிருந்து கல்லாக மாறின சாதாரண மனிதனின் முழு கால் அடிச்சுவடுகளை ஆப்பிரிக்காவில் கண்டுபிடித்தார்கள். சாதாரண மனிதனின் முழு கால் அடிச்சுவடுகள்! சாம்பலில் உள்ள கால் அடிச்சுவடுகள் ஏறத்தாள 4 மில்லியன்கள் வயதுடையவைகள் என அவர்கள் நினைத்து அவர்கள் உரிமைபாராட்டுகிறார்கள். இன்றைய நாட்களில் நமக்கு இருப்பதுபோன்று அப்படியே இந்தக் கால் அடிச்சுவடுகள் இருக்கின்றன என்று அவர்கள் அந்த கால் அடிச்சுவடடுகளை ஆராய்ந்தபின்பு கூறினார்கள். சிக்காகோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் ரூஸல் டட்டில் என்பவர் அந்தக் கால் அடிச்சுவடுகளை மிகவும் கவனமாக ஆராய்ச்சிசெய்தார். அவர் மக்கள் இதுவரை ஷுக்களைப் பயன்படுத்தாத ஒரு இடத்தைக் கண்டுபிடித்தார். மக்கள் இதுவரை ஷுக்களை எப்பொழுதுமே அணியவில்லை! மேலும் அவர் அவர்களின் கால் அடிச்சுவடுகளைப் பற்றி படித்தார். சகதியின் வழியே ஓடினது, சகதியின் வழியே நடந்தது, உங்களுக்குத் தெரியும் சகதியின் வழியே மெதுவாக ஓடினது, துரிதமாக ஓடியது மற்றும் தாவியது போன்றவைகளைக் கண்டார். இதுவரை ஷுக்களை அணியாத மக்களின் இந்தக் கால் அடிச்சுவடுகளானது, ஆப்பிரிக்காவில், லேயேடோலில் உள்ள கால் அடிச்சுவடுகளைப் போன்று அப்படியே இருக்கிறது. அதே போன்றது. அதன்பின்பு அவர் கூறினார், லேயேடோலில் உள்ள கால் அடிச்சுவடுகள் மிகவும் பழமையானதாக இருப்பதாகத் தெரியவில்லையெனில், நமது சொந்த இனத்தின் ஒரு உறுப்பினரால் அவைகள் உண்டாக்கப்பட்டவைகள் என நாம் முடிவு பண்ணலாம். இன்னொரு விதத்தில் சொல்லப்போனால், அவைகளப் பற்றி நாம் பரவாயில்லாமல் தெரிந்துகொள்ளவில்லையெனில், ஒரு மனிதன் அவைகளை உண்டாக்கினான் என்று நாம் சிந்திப்போம்! நல்லது, பரவாயில்லாமல் நீங்கள் எவ்வாறு தெரிந்துகொள்வீர்கள்? எங்கே ஒரு பொதுவான புரிந்துகொள்ளுதலுக்கும் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிக்கும், பரிணாம கொள்கையானது ஒரு தடையாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகும். அது அறிவியலுக்கு மிகவும் பெரிய தடையாக இருப்பவைகளில் ஒன்றாக இருக்கிறது. அது அறிவியலின் ஒரு பகுதியல்ல. அது அறிவிலை உண்டாக்குவதற்கு எதிராக இருக்கிறது. அதன்பின்பு தேசிய புவியியல் மையமானது, மனிதன் மற்றும் வாலில்லாக்குரங்கின் சிறப்பம்சப் படங்களைச் சிருஷ்டிப்புகளுடன் கலந்து சாம்பலின் வழியே செல்லுவதுபோல், மனதில் பதிய வைக்கிறார்கள்; ஒரு எலும்புகூடக் கண்டுபிடிக்கப்படவில்லை. கால் பாதங்களின் எலும்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. நீங்கள் சாதாரண மனிதனின் முழு கால் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்தால், கருமையானத் தோலைப் போட்டதற்கு நீங்கள் எதை நியாயப்படுத்துவீர்கள்? அங்கே உங்களது வரைபடங்களில் மனிதக்குரங்கு பிராணியானது நடந்துகொண்டிருக்கிறதா? நான் ஒரு ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், அவர்களின் விடுபதல் இணைப்பிற்கு, எப்போதுமே கருப்பு நிறத்தைக் காண்பிக்கிறார்கள் என்று நான் குற்றம்சாட்டியிருப்பேன். பரிணாமவாதிகளின் செய்தி இதுவாக இருக்கிறது: கருமையான நிறமானது குறைந்த வளர்ச்சி உள்ளதாக இருக்கிறது. இங்கே அவர்கள் இதைத்தான் குறிப்பிட்டுச்சொல்ல முயற்சிக்கிறார்கள். மேலும் அவர்கள் இந்தப் பெருவிரலைத் தனியாக சேர்ப்பது ஏன்? கவனியுங்கள்; இந்தப் படத்தில் பெரிய பெருவிரலானது, மற்றவைகளிலிருந்துத் தனியாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதை வேண்டுமென்றே செய்தார்கள், ஏனெனில் அங்கேதான் ஒரு வாலில்லாக்குரங்கின் காலிலிருந்து ஒரு மனிதனின் காலானது மாறுகிற பிரச்சனையே இருக்கிறது. பெருவிரல் இருப்பதுபோன்று மனிதக்குரங்குகளின் பெருவிரல்கள் பக்கமாக ஒட்டியிருக்கின்றன. அப்படித்தான் அவர்கள் ஒரு மரத்தின் கிளையை திடீரென ஒடித்து. அவைகளின் பின் கால்களின் அருகில் தொங்கவிடுகிறார்கள். அதை உங்களால் செய்ய இயலாது. அதை நீங்கள் செய்துபார்க்க விரும்பினால், மரத்தின் கீழே உள்ளே ஒரு கிளையில் அதைச்செய்துபார்க்க நான் உங்களுக்கு ஆலோசனை கூறுகிறேன். ஏனெனில் உங்கள் தலையை நீங்கள் காயப்படுத்தப்போகிறீர்கள். ஆனால், "இரண்டு கால்களால் நான்கு மில்லியன்கள் ஆண்டுகள் நடந்துகொண்டு" என்று இங்கே அவர்கள் உரிமை பாராட்டுகிறார்கள். அவர்கள் அறிவித்திருக்கிற விடுபடும் இணைப்பு ஒவ்வொன்றிற்கும், அவர்கள் மனிதனின் கால்களை உருவாக்கிக்கொண்டார்கள். வெளிப்படையாகக் கூறவேண்டுமானால், அந்தக் காலானது ஒரு முக்கியமானப் பிரச்சனையாக பரிணாமவாதிகளுக்கு இருக்கிறது. மனித வம்சத்துடன் தொடர்பில்லாத ஒரு விலங்கின் எலும்பைப் பிரதிபலிப்பதாக லூசியின் எலும்புகள் இருக்கின்றன என்று சார்லஸ் ஆக்ஸ்னார்டு ஆய்வு செய்து சொன்னார். இது விடுபடும் இணைப்பு இல்லை. எலும்புகளின் வேறுபாடுகள் பற்றி அவர் கணிணியில் ஆராச்சி செய்தார். இன்றும் சுமத்திராத் தீவுகளில் வாழும், நிமிந்து நடக்கும், சிறிய வாலில்லாக்குரங்கு போன்ற பிராணிகளின் அதே பிராணிகளாக இவைகள் இருக்கலாம். இப்பொழுதும் வாழ்ந்துவருகிற ஒரு விலங்கிற்கு அடையாளமாக லூசி இருக்கலாம். கால்களில் அதிக உரோமங்கள் உள்ள மனிதன் பரிணாமத்திற்குப் பல ஆண்டுகளாக ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறான். இரண்டாம் உலகப்போரின்போது அனைத்து ஆதாரங்களும் மறைந்துவிட்டன; ஆனால் அவர்கள் ஒரு குகையைக் கண்டுபிடித்தார்கள். அங்கே பல குரங்குகளின் மண்டைஓடுகள் நொறுக்கப்பட்டிருந்தன. அந்த எலும்புக்கூடுகள் தூள்களாக நொறுக்கப்பட்டிருந்தன. மேலும் மனிதர்கள் பயன்படுத்தும் ஆயுதங்களின் சேகரிப்பையும் அவர்கள் கண்டுபிடித்தனர். அப்பொழுது, சில புத்திசாலியான விஞ்ஞானிகள் கூறினர், "பாருங்கள்! இந்த குரங்குகள் ஆயுதங்களை உருவாக்கக் கற்றுக்கொண்டுவருகின்றன என்றும், மேலும் அவைகளின் தலைகளையே அவைகள் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன" என்றும் கூறினர். உண்மையிலே, அது ஒரு நல்ல நகைச்சுவையை உண்டாக்குகிறது. இங்கே வலப்பக்கமாக அதில் ஒன்றை வைத்திருப்போம். அவர்கள் மற்றவர்களுக்குச்சொல்ல மறுக்கிறது என்னவெனில், அதே குகையில் பத்து சாதாரண மனிதர்களின் எலும்புக்கூடுகளையும் கண்டுபிடித்தார்கள் என்பதே. சில கலாச்சாரங்களில், மக்கள் குரங்குகளின் மூளைகளை உண்பதற்கு விரும்பினார்கள். இண்டியானா ஜோன்ஸ் என்கிற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அங்கே மக்கள் குரங்குகளைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது, அவர்கள் குகையில் எதைக்கண்டார்கள்? ஒருவேளை அவர்களின் விருந்துகளை அங்கே சாப்பிட்டார்கள். அது விடுபடும் இணைப்பு இல்லை. ஒரேமாதிரி நிமிர்ந்த நிலைகள் இன்னும் பாடப்புத்தகங்களில் இருக்கின்றன. ஆரம்பத்தில் ஜாவா மனிதன் ஒரேமாதிரி நிமிர்ந்த நிலைக்கு அழைக்கப்பட்டான். பிறகு அவர்கள் பலசாலியான நிலைக்கு (pithecanthropus erectus) மாற்றினார்கள். தற்போது அது ஒரேமாதிரி நிலைக்கு (Homo erectus) அழைக்கப்படுகிறது. ஹாலந்து நாட்டைச் சேர்ந்த டாக்டர் டுபோயிஸ் என்பவர், இந்தோனேசியாவிற்கு இந்த நோக்கத்திற்காகவே சென்று, விடுபடும் இணைப்பைக் கண்டுபிடிக்க முயற்சி செய்தபொழுது இதைக் கண்டுபிடித்தார். சிறையில் இருந்த குற்றவாளிகளில் ஒரு குழுவை தோண்டுவதற்காக அவர் வாடகைக்கு அமர்த்தினார். அவர்கள் அதைக்கண்டுபிடித்தபோது அவர்கூட அங்கு இல்லை. அவர்கள் கண்டுபிடித்தது என்னவெனில், வாலில்லாக் குரங்கின் மண்டை ஓடு, மூன்று மனித பற்கள், மற்றும் ஒரு ஆண்டுக்குப் பிறகு 15 மீட்டர்கள் தொலைவில் ஒரு தொடை எலும்பையும் கண்டுபிடித்தார்கள். டுபோயிஸ் அவைகள் அனைத்தையும் ஒன்றாக வைத்துச் சொன்னார், "நமக்கு ஒரு விடுபடும் இணைப்பு இங்கே இருக்கிறது." என்றார். அந்த எலும்புக்கூடுகள் அனைத்தும் ஒன்றுசேர்ந்தவைகளா? என்றுகூட உங்களுக்குத் தெரியாது. மூன்று பற்கள், ஒரு தொடை எலும்பு மற்றும் வாலில்லாக்குரங்கின் மண்டை ஓடு ஒன்றா! ஸ்கூப்பின் குரங்குச்சோதனையில், 1925 ஆம் ஆண்டு பரிணாமத்திற்கு ஆதாரமாக இருப்பதற்காக அந்த ஜாவா மனிதன் திட்டமிட்ட ஒன்றாக இருந்தானா! என்னுடைய கருத்தின்படி, உண்மையிலே, இந்தப்பிராணியானது ஒரு பெரிய, நீண்ட கைகளுள்ள, ஒரு குரங்கின் இனத்தைச்சேர்ந்த விலங்காகும் என்று புகழ்பெற்ற உடற்கூறு அமைப்பியல் நிபுணர் விர்ச்சோ கூறினார். மண்டை ஓட்டுடன் தொடை எலும்புக்கு எந்தவித இலேசான தொடர்பும் இல்லை என்றும் கூறினார். அதே பகுதியில் இரண்டு மனித எலும்புக்கூடுகளையும் டாக்டர் டுபோயிஸ் (Dr. Dubois) கண்டுபிடித்தார் என்கிற உண்மையை அவர் மறைத்துவிட்டார். "கதை சொல்லும் இருதயம்" என்று எட்கார் ஆலன் போ கதையில் உள்ளதுபோல், அவர் அந்த விபரங்களைத் தன்னுடையக் கட்டிலுக்குக் கீழே, தரைக்குக் கீழே மறைத்துவிட்டார். இது கதை சொல்லும் தலையாக மட்டும் இருந்தது. மனிதன் விலங்கிலிருந்து தோன்றினான் என்பதை விளக்கிக்கூறுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மனிதன் பழங்கால படிகப்பொருளிலிருந்து தோன்றினான் என்பது துண்டு துண்டாகப்போனது. பழங்கால படிகப்பொருளிலிருந்து மனிதக்குரங்குத் தோன்றியது என்பதற்கான பரிணாம ஆதாரம் முற்றிலுமாக இல்லை. மனிதக்குரங்குகள் எவ்வாறு தோன்றின என்பதற்கான ஆதாரம் இல்லை. இருப்பினும், எல்லா நேரங்களிலும் பரிணாமம் பற்றிய கட்டுரைகள் பத்திரிக்கைகளில் காணப்படுகின்றன. "நாம் எங்கே சென்றுகொண்டிருக்கிறோம்?" என்பதை உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். நீங்கள் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாவிட்டால், நேராக நரகத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறீர்கள். அது மிகவும் சுலபமானது, அதற்குப் பெரிய புத்திசாலித்தனம் தேவையில்லை. ஓர்ஸ் மனிதன் (Orce man) என்றவனைப் பற்றிய ஒரு பெரிய கண்காட்சியை அவர்கள் ஸ்பெயின் நாட்டில் வைக்க ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தார்கள். ஓ-ஆர்-சி-ஈ (Orce man) என்கிற மனிதன். விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஒரு பெரிய ஓர்ஸ் மனிதனைப் பற்றி விளக்குவதற்காக அவர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்தனர். அது 4 மாத வயதுள்ள ஒரு கழுதையின் மண்டை ஓட்டின் ஒரு துண்டானது, விடுபடும் இணைப்புக்கு வைக்கப்பட இருந்தது என்று பின்னர் அவர்கள் உணர்ந்துகொண்டனர். ஒருவர் விளக்கமளிக்கும் வரைக்கும், ஒரு டால்பின் மீனின் விலா எலும்பின் மேல் " இது மனிதனின் கழுத்து எலும்பு" என்று ஒரு அருங்காட்சியகத்தில் எழுதிக்குறிப்பிட்டிருந்தனர். "அது ஒரு டால்பின் மீனின் விலா எலும்பு, ஒரு மனித கழுத்து எலும்பு அல்ல." 2004-ஆம் ஆண்டில் இங்கு தி ஹோபிட் (The Hobbit) என்கிற இறந்த சடலமானது கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சிறிய மனிதனின் சடலமாக அது இருந்தது. ஒருவேளை, அது பிறப்பில் குறைவுடைய, சிறிய மண்டை ஓட்டையுடைய, குள்ளமான, ஒரு மீட்டர் உயரமுள்ள ஒரு நவீன மனிதனாக இருக்கலாம். பூமியின் மேல் ஒவ்வொரு நாட்டிலும் இன்றைக்கு அதனால் பாதிக்கப்படுகிற மக்கள் இருக்கிறார்கள். குகைமனிதர்கள் என்று அழைக்கப்படுகிற தலைப்பில் ஒரு புத்தகம் அங்கே இருக்கிறது. நீங்கள் விரும்பினால் அந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். பள்ளியிலே நீங்கள் இவைகளினால் போதிக்கப்படுவீர்களானால், மார்வின்.எல். லூப்னவ் (Marvin L. Lubenow) என்கிறவர் எழுதின புத்தகமான " எலும்புகளின் வாதம்" (Bone of contention) என்ற புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். அது மிகச்சிறந்த ஒரு புத்தகமாகும். அது அனைத்தையும் உண்மையுள்ளக் கண்ணோக்குடன் உங்களுக்கு வைக்கும். இந்த மனிதர்களில் காணப்படும், விடுபட்ட இணைப்பு எதுமட்டுமெனில், அவர்களின் காதுகளுக்கு மேல் உள்ள இடைவெளியாகும். ஏதோ ஒன்று அந்த இடத்தில் விடுபடுகிறது. இந்தப் பேராசிரியர்களில் சிலர், அவர்களின் அனைத்து ஓய்வு நேரங்களையும், குப்பைகளைத் தோண்டுவதிலும், எலும்புகளைத் தேடிக்கண்டுபிடிப்பதிலுமே செலவு செய்கின்றனர். என்னுடைய நாயும் அதே காரியத்தைத்தான் செய்கிறது. ஆனால் அது அப்படிச்செய்யும்போது, வரிச்செலுத்துவோரிடம் தங்களின் சம்பளத்தைக் கட்டச்செய்வதில்லை. பாடப்புத்தகங்கள் சரியாக இருப்பதற்கு, பெரும்பாலான மாநிலங்களில் சட்டங்கள் தேவைப்படுகிறது. புளோரிடா மாநிலத்தில் ஒன்று; கலிபோர்னியாவில் ஒன்று: டெக்ஸாஸில் ஒன்று; விஸ்கான்ஸினில் ஒன்று; அலபாமாவில் ஒன்று. பாடப்புத்தகங்கள் சரியாக இருப்பதற்கு, சட்டங்கள் தேவைப்படுகிறது. "ஆசிரியர்கள் வேண்டுமென்றே பாடத்தின் விஷயத்தை நசுக்கக்கூடாது அல்லது திரித்துக்கூறக்கூடாது" என்று வினிஸ்ஸோட்டா மாநிலச் சட்டம் சொல்கிறது. ஆனால், வினிஸ்ஸோட்டா மாநிலத்தில் உள்ளப் பாடப்புத்தகங்கள் அனைத்தும், பரிணாமத்திற்கான ஆதாரங்கள் இவைகள் என்று போதித்துக்கொண்டிருக்கின்றன. விடிபடும் இணைப்பாக இவைகள் இருக்க வாய்ப்பில்லை என்று சிவப்பு வட்டமிட்ட அனைத்தும் நிரூபிக்கப்பட்ட பின்பும், அவ்வாறு பாடப்புத்தகங்கள் போதிக்கின்றன. இதனிடையே, வினிஸ்ஸோட்டாவின் பாடப்புத்தகத்தில் (தற்போது பெரும்பாலானப் பாடப்புத்தகங்களில்) மனிதர்கள் என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக "ஹோமோ ஸேப்பியன்கள்" (Homo Sapiens) என்று குறிப்பிடப்படுகின்றது. ஆரம்பத்தில் அறிவியல் செய்ததுபோல், அவர்கள் தற்போது "ஹோமோ ஸேப்பியன்கள்" என்று குறிப்பிடுகின்றனர். அதன் அர்த்தம் என்ன? "ஸேப்பியன்கள் (Sapiens) எனில் "ஞானம்" (Wise) என்று அர்த்தமாகும். எனவே அவர்களைத் தாங்களாகவே ஞானம், ஞான மனிதன் என்று கூறுகிறார்கள். "தங்களை ஞானிகள் என்று கூறிக்கொள்பவர்கள், தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக்கொள்கிறார்கள்" என்று வேதம் கூறுகிறது. உங்களூடைய முன்னோர் வாலினால் மரத்தில் தொங்கினார் என்று நீங்கள் நம்பினால், நீங்கள் ஒரு முட்டாள் என்று வெளிப்படையாகத்தெரிகிறது. "நம் அனைவருக்கும் அப்பாவாக இந்தக் குரங்கு இருக்கிறது" என்று இந்தப் பாடப்புத்தகம் சொல்கிறது. ஆ, அது அற்பத்தனமாக இருக்கிறது. யாருடைய அப்பாவாக அது இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. எலும்புகளைக் குப்பைகளில் கண்டுபிடிக்கும்போது, அது யாருடைய முன்னோர் என்று உங்களுக்குத் தெரியாது. ஸ்மித்ஸோனியன் என்பவரின் புத்தகத்தில், " அனைத்துப் பாலூட்டிகளின் தாய்" என்று அது சொல்லுகிறது. நிங்கள் எலும்புகளைக் கண்டுபிடிக்கும்போது, அது எதனுடைய தாய் என்று உங்களுக்குத் தெரியாது. நிங்கள் குப்பையில் பழங்கால படிகப் பொருட்களைக் கண்டபோது, உங்களுக்குத் தெரிந்த அனைத்தும் என்னவெனில், அது இறந்தது. அதற்கு ஏதாவது பிள்ளைகள், ஏதாவது ஒரு வகை, அல்லது வித்தியாசமான வகை என்று உங்களால் நிரூபிக்க முடியவில்லை. இன்றைய விலங்குகள் செய்ய இயலாததை, குப்பையில் கண்டுபிடித்த எலும்பு செய்ய முடிந்தது என்று ஒருவர் ஏன் கற்பனை செய்கிறார்? தங்களுடையவைகள் அல்லாத ஒன்றை எது உண்டாக்குகிறது? நீதிமன்றச்சட்டத்தின்படி, எந்தப் பண்டைக்கால படிகப் பொருட்களும் பரிணாமத்திற்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே, "கற்காலம்" என்கிறது எங்கே வேதாகமத்தில் பொருந்துகிறது? கற்காலம் என்று ஒன்று எப்போதாவது இருந்ததா? நினைத்துப்பாருங்கள், வெள்ளத்திற்குப் பின்பு, நோவா, தன்னுடைய பேரனை பொருட்கள் வைக்கும் அறைக்குச் செல்லவும், ஒரு மண்வெட்டிபோன்ற மண்வாரியை வாங்கிக்கொண்டு வரும்படியும் சொல்ல முடியவில்லை. அங்கே ஆயுதங்கள் வைக்கும் அறைகள் இல்லை. பழைய சமுதாயம் பாழாய்போனது. அவர்கள் பேழையைவிட்டு வெளியே வந்தபோது, வெளியில் இருந்த அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது. மக்கள் நடமாட்டமில்லாத ஒரு தீவில், எந்த உதவியும் இல்லாத் நிலையில் அவர்கள் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும். உங்களுக்கு இருந்த வளம் என்பது புத்திசாலியான மக்களே. ஒவ்வொருவரும் புத்திசாலியாக இருக்கவில்லை; சிலர் புத்திசாலியாக இருந்திருக்கலாம்; ஒருவராவது குறைந்தபட்சம் இருந்திருப்பார். பாழாய்ப்போன இந்த கோளில் அவர்கள் கால்வைத்தனர். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் மறுபடியும் கட்டவேண்டியிருந்தது, மேலும் அவர்கள் கற்களினால் ஆயுதங்களைச்செய்ய ஆரம்பிக்கவேண்டும். ஏனெனில் புதைந்து கிடக்கும் இரும்பைத்தோண்டி எடுப்பதைக்காட்டிலும் , தாதுப்பொருட்களை எடுத்து அவைகளிலிருந்து உருக்கி எடுப்பதைக்காட்டிலும் மற்றும் ஒரு இரும்பு ஆயுதம் உருவாக்குவதைக்காட்டிலும் அதிக விரைவாகச்செய்வதாக அது இருந்தது. இரும்புக்கோடாரியைச்செய்வதற்கு ஒருவேளை 3 வாரங்கள் ஆகலாம், அதற்காக பட்டினியாக இருந்து இறக்க நேரிடலாம். எனவே கற்களினால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கலாம். ஒரு பெரிய சமுதாயத்திலிருந்து வெளியே தள்ளப்பட்ட அவர்கள் சுற்றிலும் பிரயாணம் செய்து சிறிய அளவில் உறவுமுறைகள் உள்ளவர்களாகவும், குழுக்களாகவும், விலங்குகளூடன் இடம்பெயர்ந்து சென்று வசித்தனர். 30 கிலோ எடையுள்ள கற்களால் ஆன ஆயுதங்களை அவர்கள் சுமந்துகொண்டு செல்ல விரும்பவில்லை. உங்களுக்குத் தேவையான கற்களால் ஆன ஆயுதங்களை ஒவ்வொரு இடத்திலும் உருவாக்கிக்கொள்வது உங்களுக்கு மிகவும் விரைவாக இருக்கிறது. நீங்கள் யானைகளையும் அல்லது எருமைகளையும் சென்று பிடித்துவிட்டு, அதன்பின்பு விரைவாக உங்கள் ஆயுதங்களை உருவாக்குங்கள், எருமையை அல்லது யானையைக் கொன்று, அதன்பின்பு அவைகளை ஆயுதங்களால் வெட்டினபின்பு, உங்கள் கற்களினால் ஆன ஆயுதங்களை அந்த இடங்களிலே போட்டுவிட்டு அடுத்து வேறு ஒரு இடத்திற்குச் செல்லுங்கள். மேலும், இன்றும்கூட நாம் பல கற்களினால் ஆன ஆயுதங்களை கண்டுபிடித்து, இவ்வாறு சொல்கிறோம், "தற்போது இந்த குளோவிஸ் முனையைப் (Clovis point) பாருங்கள்." இது சரியாக வடிவமைக்கப்பட்டுள்ளது, சரியாக சீர்தூக்கி அமைக்கப்பட்டது; இந்த மனிதன் நாகரீக முன்னேற்றமடைந்த திறமையானவனாக இருந்தான். அதன்பின்பு அவர்கள் இன்னொரு ஒழுங்கற்ற அம்பு முனையைக் கண்டனர். அது மிகவும் வழுவழுப்பானது அல்ல. "இந்த மனிதன் மனிதனுக்கு முன்பிருந்த ஆதிமனிதன், அவன் முற்றிலும் புத்திசாலியானவன் அல்ல" என்று அவர்கள் வலியுறுத்திச்சொல்லுகிறார்கள். ஒருவேளை நீங்கள் அதைப்பற்றிய முற்றிலும் தவறான கண்ணோட்டமுள்ளவராக இருக்கலாம். ஒருவேளை வழுவழுப்பற்ற அந்த அம்பின் தலையை உருவாக்கின அந்த மனிதன் பெரிய அவசரமான நிலையில் இருந்திருக்கலாம். ஏனெனில் அந்தப்பெரிய யானையானது தப்பித்துக்கொண்டிருக்கிறது. அவனுக்கு அங்கே உட்காருவதற்கு நேரம் இல்லை, மற்றும் அம்பின் தலையைவைத்து இன்னும் ஒரு மணி நேரம் விளையாட முடியவில்லை. அந்த விலங்கு ஓடுவதற்குள் இப்பொழுது அவன் குறிவைத்து அடிக்கவேண்டும். எனவே, அதின்மேல் அவன் எவ்வளவு நேரத்தைச்செலவிட வேண்டியிருந்தது என்பதற்கு இது ஒரு உதாரணமாக இருக்கலாம். அவர்களுடைய புத்திசாலித்தனத்திற்கு இது ஒரு உதாரணம் இல்லை. நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா? வெள்ளத்திற்கு முன்பு மக்கள் மட்டும் நீண்ட காலமாக வாழவில்லை, விலங்குகளும் கூட நீண்டகாலமாக வாழ்ந்தன. மற்றும் அவைகள் பெரியவைகளாக வளர்ந்துகொண்டிருந்தன, ஒருவேளை மிகவும் பெரியவைகளாக வளர்ந்துகொண்டிருந்தன. இங்கே ஒரு கொம்பு இல்லாத 5.5 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு காண்டாமிருகம் இருக்கிறது. அது ஒரு பெரிய காண்டாமிருகம்! அது வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்த விலங்கு என்று மக்கள் நினைத்தனர். ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர்வரை "வரலாற்றுக் காலத்திற்கு முன்பு" (Prehistoric) என்கிற வார்த்தையானது அகராதியில்கூட இல்லை என்று உங்களுக்குத் தெரியுமா? எங்களுடைய அறிவியல் மையத்தில் பழங்கால அகராதிகளைச் சேகரிக்கிறோம். 1700 அல்லது 1800-ஆம் ஆண்டுகளிலிருந்த்து இருக்கும் பழங்கால அகராதிகள் உங்களிடத்தில் இருக்குமானால், நாங்கள் அவைகளை வாங்குவதற்குப் பிரியப்படுகிறோம். 1766-ஆம் ஆண்டிலிருந்து இருக்கக்கூடிய ஒரு அகராதி என்னிடம் உள்ளது; "வரலாற்றுக் காலத்திற்கு முன்பு" என்கிற வார்த்தை அங்கு இல்லை. 1860-ஆம் ஆண்டிலிருந்து இருக்கக்கூடிய ஒரு அகராதி என்னிடம் உள்ளது; "வரலாற்றுக் காலத்திற்கு முன்பு" என்கிற வார்த்தை அங்கு இல்லை. வரலாற்றுக் காலத்திற்கு முன்பு என்கிற வார்த்தை 1860-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அப்படி ஒரு வார்த்தையானது இல்லை. 1892-ஆம் ஆண்டிலிருந்து இருக்கக்கூடிய ஒரு அகராதி அங்கே இருக்கிறது; வரலாற்றுக் காலத்திற்கு முன்பு என்கிற வார்த்தை இன்னும் அங்கே இல்லை. பாருங்கள், வெள்ளத்திற்கு முன்னர் உள்ள பொருட்கள் இருக்கின்றன; ஆனால் வரலாற்றுக் காலத்திற்கு முன்பு என்று ஒன்று உண்மையிலே இல்லவே இல்லை. "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" என்கிற ஆரம்பத்தின் முதல் நாளிலிருந்து வரலாறு நம்மிடம் இருக்கிறது. அதற்கு முன்பு நீங்கள் செல்ல முடியாது. எனவே " வரலாற்றுக்குக் காலங்களுக்கு முன்பு" என்பது அங்கே இல்லை. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர், இந்தத் தண்ணீர் கட்டியானது காற்றின் அழுத்தத்தை அதிகரித்திருக்கும். அது உயிரினங்களை மிகவும் வித்தியாசமாக செயல்பட வைத்திருக்கும். அது பூச்சிகளை மிகவும் பெரியதாக வளரச்செய்திருக்கும். பூச்சிகளுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவிற்குக் கிடைக்கிறதோ, அதைப்பொறுத்து அவைகளின் அளவுகளில் மாறுபடுகிறது. ஆக்ஸிஜன் அதிகமுள்ள தண்ணீர்களில் வாழும் பூச்சிகளானது, அப்படிக்கிடைக்காத பூச்சிகளைக் காட்டிலும் 1,000 மடங்கு அதிகக் கனமாக இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மேற்பரப்பு வீதத்தை அது பயன்படுத்த வேண்டும். அரைமணி நேரம் ஒவ்வொருவரும் சளைப்படையாமல் இருக்க, ஒரு பெரிய பூச்சியானது, அதிக இடத்தின் பரும அளவைப் பெறுகிறது. ஆனால், அதனுடைய கன அளவை ஒப்பிட்டு அல்ல. அதனுடைய மேற்பரப்பு பகுதியின் விகிதமானது அதன் கன அளவிற்குக் குறைகிறது. இங்கே உள்ள வரைபடத்தின்மேல் நீங்கள் அதைக்காண முடியும். ஒரு பூச்சியானது பெரியதாகும்போது, அதற்குப்போதுமான தோல் இருப்பதில்லை. ஏனெனில், பூச்சிகள் அவைகளின் தோலினால் சுவாசிக்கின்றன. இருப்பினும், பெரிய பூச்சிகளின் படிகப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 1.3 மீட்டர் இறகுகளை உடைய இதுபோன்ற ஒரு தட்டான்பூச்சி போன்றவைகள். ஒரு மணி நேரத்திற்கு 110 கிலோமீட்டர் வேகத்திற்கு சுற்றிக்கொண்டிருக்கும்போது, அவைகளில் ஒன்றை நீங்கள் எவ்வாறு அடிப்பீர்கள்? அது இரகசியமாகப் பொருத்தப்பட்ட பாகத்தை நீக்கிவிட்டு, காரை மூடிவிட்டு மற்றும் உங்களை முதல் இருக்கையில் இருக்க இணைத்துக்கொள்ளும். இந்தக்கோளில் பெரிய தட்டான்பூச்சிகளின் படிகப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று அவைகள் 4 அல்லது 5 அங்குல இறகுகளையுடையதாக இருக்கின்றன. அது மிகவும் பெரிதானவை அல்ல. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு அவைகள் பெரியவைகளாக இருந்தன. இன்று கரப்பான்பூச்சிகள் பெரிய அளவில் வளருகின்றன. நாங்கள் அவைகளை பென்ஸகோலாவில் வளர்க்கிறோம்; மடகஸ்கார் என்கிற சீறும் சத்தத்தைக்கொடுக்கிற கரப்பான் பூச்சிகள் இருக்கின்றன. இருப்பினும், பெரிய கரப்பான் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? கரப்பான் பூச்சியின் படிகங்கள் 45 செண்டிமீட்டர் நீளமுள்ளதாக இருக்கின்றன. நீங்கள் அந்த நாட்களில் அவைகளைத் தொந்தரவுகொடுக்கும் பிராணிகளை நீக்குபவர் என்று அழைக்கவில்லை. உங்களுடைய வீட்டிலிருந்து அவைகளைச் சுட்டுவெளியேற்ற உங்களுக்கு ஒரு இராணுவம் தேவைப்பட்டிருக்கும், இல்லையா? 2.6 மீட்டர்கள் நீளமுள்ள ஒரு பெரிய படிகமானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படிகமாக்கப்பட்ட 60 செண்டிமீட்டர்கள் நீளமுள்ள வெட்டுக்கிளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகளிலிருந்து நீங்கள் ஒரு நல்ல உணவை தயாரிக்கலாம். மூன்று அடி கால்கள் நீளமுள்ள ஒரு எட்டுக்கால் பூச்சியின் படிகம்; 18 மீட்டர்கள் உயரமுள்ள நாணல் தாவரத்தின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டெக்ஸாஸிலிருந்து 2.75 மீட்டர்கள் உயரமுள்ள ஒரு கழுதை, ஆம், டெக்ஸாஸில் அனைத்துமே பெரியவைகள். பெரிய தேவாங்குகள் வெளிப்படையாக இந்தக் கோளில் வாழ்ந்தன. அவைகளுக்கு எல்லாம் மில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று உங்களூக்குச் சொல்லப்படும். இல்லை, அது அப்படி இல்லை; வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு வாழ்ந்த, 3.7 மீட்டர்கள் அளவுள்ள கொம்புகளுள்ள எருமைகள் கண்டுபிடிக்கப்படுகின்றன. 3.7 மீட்டர்கள் கிளைகளுள்ள மான் கொம்புகள். " அந்தக் கொம்புகள் ஒரு பெரிய வெற்றியின் சின்னத்தை உருவாக்கியிருக்கும்." என்று உங்களில் உள்ள சில மான் வேட்டையாடுவோர்கள் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களில் எத்தனைபேர்கள் வெளியே சென்று பம்பியினுடைய (Bambi's daddy) அப்பாவைச் சுடுவதற்கு முயற்சி செய்தீர்கள்? நேர்மையான பதிலைச் சொல்லுங்கள். நாம் அங்கே செல்லுகிறோம்! நல்லது, நல்லது; அதைச் சாப்பிடவும் செய்கிறோம். 3 மீட்டர்கள் உயரமுள்ள கங்காருகளின் படிகப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிய வேன் அளவில் உள்ள (wombat) தாவரங்களை உண்ணும் பைகளுள்ள பாலூட்டியின் படிகப்பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 680 கிலோ எடையுள்ள எலியைப்போலுள்ள பிராணியின் (Rodent) படிகப்பொருள் இங்கே இருக்கிறது. அது ஒரு பெரிய கின்னியா பன்றியாக இருந்தது. 4 மீட்டர்கள் உயரமுள்ள பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒரு யானைப் பறவையின் முட்டை ஒன்று இங்கு இருக்கிறது. அதற்குப் பின்புறமுள்ளது, நெருப்புக்கோழியின் ஒரு முட்டையாகும்; அதுவும் மிகவும் பெரியதாக இருக்கிறது. அவர்கள் வரலாற்றுக் காலத்திற்கு முன்பிருந்த ஒரு வாத்தின் படிகப்பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள். அது ஒரு யானையின் உயரமுள்ளதாகவும் மற்றும் அரை டன் எடையுள்ளதாகவும் இருக்கிறது. நீங்கள் அதை ஒரு விடுமுறையின் விருந்திற்கு எவ்வாறு சமைப்பீர்கள்? அந்த வாத்தைப்பற்றி சிறிய தீமோத்தேயுவே சொல்லு! 2.4 மீட்டர்கள் நீளமுள்ள பெருச்சாலிகள் (Beavers) போன்ற பிராணிகளின் படிகப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2 மீட்டர்களுக்கும் மேலான நீளமுள்ள ஒரு பெருச்சாலியைப்போன்ற பிராணியிலிருந்து, ஒரு தாடை எலும்பைப் பிடித்திருக்கும் ஒரு மனிதன் இங்கே இருக்கிறான். ஓஹியோவில் கண்டுபிடிக்கப்பட்ட 2 மீட்டர்கள் நீளமுள்ள பெருச்சாலியைப்போன்ற பிராணியின் படிகம் இங்கு ஒன்று உள்ளது. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு பெரிய மரங்களை உடையவர்களாக நீங்கள் இருந்தால், அவைகளை அசைபோடுவதற்குப் பெரிய பெருச்சாலிகள் போன்ற பிராணிகள் தேவைப்படும். தேவன் அந்த நாட்களில் அனைத்தும் சீராக இருக்கவைத்தார். இன்று நீண்ட வாலுள்ள பிராணியான (Salamanders) சலமேண்டர்கள் 12 முதல் 20 செண்டிமீட்டர் நீளமுள்ளவைகளுக்கு உதாரணமுள்ளவைகளாக இருக்கின்றன. 2 மீட்டர்கள் நீளமுள்ள சலமேண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா? காற்று அழுத்தத்தை அதிகமாக்குதல் எனில், அதிக வாயு தண்ணீரின் உள்ளே செல்கிறது என்று அர்த்தம். மேலும் மீனானது தண்ணீரில்தான் சுவாசிக்க வேண்டும். அவைகளின் செதில்களின் மூலமாக சுவாசிக்கவேண்டும். எனவே, அதிகமான காற்று அழுத்தத்திலிருந்து அதிகமான வாயு தண்ணீரில் கரைந்திருந்தால், மீனானது பெரியதாக வளர முடியும். மேலும் கடலின் ஒரு கன கிலோமீட்டருக்குள் அதிகமான மீன்களைப் பெறமுடியும். இன்று ஒரு சுறா மீனிற்கு 2.5 செண்டிமீட்டர்கள் நீளமுள்ள ஒரு பல் இருக்குமானால், அந்தச் சுறா மீனானது ஒருவேளை ஏறத்தாள 4.5 மீட்டர்கள் நீளமுள்ளதாக இருக்கும் என்று அது குறிப்பிடுகிறது. சுறா மீனின் பற்கள் படிகங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இந்தக் கோளில் 2.5 மீட்டர்கள் நீளமுள்ளதாக சுறா மீன்கள் ஒரு நேரம் வளர்ந்தது என்பதைக்குறிக்கிறதா? 25 மீட்டர்கள் சுறா மீனை உங்களால் கற்பனைசெய்து பார்க்கமுடிகிறதா? "ஜாஸ்" (Jaws) என்கிற திரைப்படத்தில் வருகிற சுறா மீனானது 7.6 மீட்டர்கள் நீளமுள்ளதாக இருந்தது. மெகாலோடன்களில் (Megalodons) ஒன்றைப் பிடிப்பதற்கு நீங்கள் அந்த சுறாமீனை கண்ணி-உணவாகப் பயன்படுத்தியிருக்கலாம். டாக்டர் பக் (Dr. Baugh) என்பவர் பிரன்ஹா (Piranha) என்கிற மீனை, ஒரு மீன் தொட்டியைச்சுற்றிலும் அதிகக் காந்தப்புலம் இருக்கும் அந்த மீன் தொட்டியில் வளர்த்துக்கொண்டுவருகிறார். காந்தப்புலத்தை அதிகமாக்குவதென்பது ஏதோவொன்றை செய்வதுபோலாகும், ஏனெனில் அவருடைய பிரன்ஹா மீனானது சாதாரணமானவைகளைவிட 4 மடங்கு பெரியதாக இருக்கின்றன. ஒரு ஹபர்பேரிக் அறையில், பழங்களின்மேல் சுற்றித்திரியும் பூச்சிகளை அவர் வளர்த்தபோது, சாதாரணமானதைக் காட்டிலும் 10 மடங்கு அதிகக் காலத்திற்கு வாழ்ந்தன. காற்றில் அழுத்தத்தை அதிகமாக்கினதால்! காற்று அழுத்தத்தையும், வடிகட்டப்பட்ட சூரிய வெளிச்சத்தையும் மற்றும் காந்தப்புலத்தையும் ஒன்றாகச் சேர்த்தால், நீங்கள் ஒருவேளை ஏதேனின் தோட்டம் போன்ற நிலைகளப்பெறலாம். நாம் ஒருவேளை இந்த மூன்று பொருட்களையும் இழந்துவிட்டோம். ஒருவேளை அதிலிருந்து பல பொருட்களை நாம் இழந்திருக்கலாம். கடல் ஆமைகள் நல்ல அளவில் வளர்ந்தன. இடதுபுறமாக உள்ள அந்த ஒரு கடல் ஆமையானது பெரியதாக இருக்கிறது. கடல் நீரின் மட்டத்தைவிட 3 கிலோமீட்டர்கள் உயரத்தில் சிப்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 3.4 மீட்டர்கள் சிப்பிகள், 270 கிலோ எடையுள்ளவைகள், தென் அமெரிக்காவின் கடல் நீர் மட்டத்திற்கு மேல் 3 கிலோமீட்டர் உயரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! மனிதர்கள் முதலாவது எவரெஸ்ட் சிகரத்திற்கு ஏறினபோது, உச்சியில் (clams) கடல் சிப்பிகளைக் கண்டார்கள். இந்தக் சிப்பிகளைப் பற்றின ஆர்வமூட்டும் காரியம் என்னவெனில், அவைகள் படிகமாகவும் மற்றும் மூடிய நிலையிலும் இருந்தன. முதலாவதாக நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில், கடல் இருக்கும் இடத்திலிருந்து எவரெஸ்ட் சிகரம் மிகவும் தொலைவில் உள்ளது. சுமார் 700 கிலோமீட்டர்கள் கடற்கரைக்கு தொலைவில் அது இருக்கிறது, மற்றும் கடல் சிப்பிகள் மலைகளில் நன்றாக ஏறுவது இல்லை. மேலும், ஒரு கடல் சிப்பி இறக்கும்போது, அது திறக்கிறது! நீங்கள் கடற்கரையில் நடந்து ஒரு மில்லியன்கள் கடல் சிப்பிகளைக் காணலாம். நீங்கள் ஒரே மாதிரியான ஜோடி சிப்பிகளைப் பார்ப்பது அரிது, மற்றும் அவைகள் இறந்திருந்தால், நீங்கள் மூடின நிலையில் காண முடியவே முடியாது. அவைகள் அப்போது திறக்கின்றன. படிகமான மூடின நிலையில் உள்ள கடல் சிப்பிகளை எவரெஸ்ட் மலையின் உச்சியில் எவ்வாறு கண்டுபிடித்தார்கள்? ஒரு வெள்ளம் ஏற்பட்டது என்று நான் நினைக்கிறேன்; அந்த வெள்ளம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சிக்குமேல் இருந்திருக்காது என்று நினைக்கிறேன். அங்கே எவரெஸ்ட் சிகரம் இல்லை. வெள்ளத்தின் இறுதிப் பகுதியில்தான் மலைகள் எழும்பின என்று சங்கீதம் 104-ஆம் அதிகாரம் நமக்குச்சொல்லுகிறது. வெள்ளத்தின் இறுதியில்தான் மலைத்தொடர்கள் உருவாகின்றன. ஒருவேளை, பூமியின் மேற்பரப்பில் விரிசல் ஏற்பட்டுத் திறந்து மற்றும் வெடித்துச் சிறிய துண்டுகளாக மாறினதால் அப்படி ஆகியிருக்கலாம். மற்றும் துண்டுகள் மேலே எழும்பி முன்னும் பின்னும் அசைந்திருக்கலாம். நாம் வீடியோ எண் 6-ல் அவைகள் அனைவற்றையும் பற்றிப் பார்க்க இருக்கிறோம். ஊரும் பிராணிகள் வளர்வதை நிறுத்தவே இல்லை. இது மிகவும் எளிமையான உண்மை. பெரும்பாலான ஊர்ந்துசெல்லும் பிராணிகள் வளர்ச்சியை எப்பொழுதும் நிறுத்துவதில்லை. அவைகள் வாழ் நாள் எல்லாம் வளர்ந்துகொண்டிருக்கின்றன. மக்கள் வளர்ச்சியடைவதில் நின்றுவிடுகின்றனர். உங்களுக்கு 16 அல்லது 18 வயதாகும்போது நீங்கள் அதிகமாக வளர்கிறீர்கள், குறைந்தபட்சமாக செங்குத்தாக வளர்கிறீர்கள். சிலர் அதற்குப் பிறகு படுக்கைவசமாக வளர்கின்றனர். ஆனால், ஊரும் பிராணிகள் வளர்வதை ஒருபோதும் நிறுத்துவதில்லை. ஒரு ஊரும் பிராணியை ஏதேனின் தோட்டத்தில் விட்டு, அதை 900 ஆண்டுகள் வயதுவரை வளர விடுவீர்களானால், அந்த ஊரும் பிராணிக்கு என்ன நிகழும்? உங்களுக்கு ஒரு பெரிய பல்லியானது கிடைக்கும்- ஒரு பெரிய பல்லி! வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர், ஆதாம் மற்றும் ஏவாளுடன் வாழ்ந்த டைனோஸரஸ்களானது பெரிய ஊரும் பிராணிகளாக இருந்தன. செல்லப்பிராணிகள் வளர்க்கும் கடையில், நீங்கள் இந்த ஜேக்ஸன் ஜேமிலியன்களை இப்போதும் வாங்கிக்கொள்ளலாம். ஏறக்குறைய 15 டன்கள் எடையுள்ள அது என்னவாக காணப்படப்போகிறது? ஒருவேளை மூன்று கொம்புகளுள்ள முகம் உள்ள (triceratops) டைனோஸரஸ் போன்ற வகையாக இருக்கலாம். "டைனோஸரஸ்" என்பதின் அர்த்தம் என்னவெனில் பயங்கரமான பல்லியாகும், மேலும் டைனோஸர்கள் அனைத்துச்சரித்திரக் காலத்திலும் மனிதர்களுடன் வாழ்ந்தன. அவைகளுக்கு வேறு ஒரு பெயர் வழங்கப்பட்டது, நாம் வீடியோ எண் 3-ல் டைனோஸரஸ் பற்றி அதிகம் காணலாம். டைனோஸரஸின் எலும்புகளும் மனிதனின் எலும்புகளும் சேர்ந்தாற்போன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. படிகமாக்கப்பட்ட மனிதனின் இந்தக் கைகள் காணப்பட்ட அதே பாறையின் அடுக்கில் டைனோஸரஸின் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. டைனோஸரஸின் எலும்புகளும் பாலூட்டிகளின் எலும்புகளும் சேர்ந்தாற்போன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதன் டைனோஸரஸை ஓட்டிக்கொண்டிருப்பதுபோன்ற ஐகா (Ica) கற்களில் ஒன்று இங்கு காணப்படுகிறது. டாக்டர் பக் என்பவர் அவருடைய அருங்காட்சியகத்தில் ஒரு ஜோடி இந்தக் கற்களை வைத்திருக்கிறார். தற்போது எங்களுடைய அருங்காட்சியகத்தில் 8 ஐகா என்கிற கற்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய சேகரிப்புகள் எங்களிடம் உள்ளது என்று நான் நினைக்கிறேன். பெரு நாட்டில் உள்ள இந்த ஐகா கற்களில், அங்கே டைனோஸரஸ் இருந்தன எனக்காண்பிக்கிறது. கருத்தரங்கு பகுதி 3-ல் டைனோஸரஸ் மற்றும் வேதாகமும் பற்றி அதிகம் பார்க்க இருக்கிறோம். டெக்ஸாஸில் உள்ள கிளன் ரோஸ் (Glen Rose) என்னுமிடத்தில் சேர்ந்தாற்போன்று காணப்படும் டைனோஸரஸ்களின் மற்றும் மனிதர்களின் கால்களின் அடிச்சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதைப்பற்றிய கருத்துவேறுபாடு உள்ளது என்று எனக்குத் தெரியும். நான் அங்கே 5 முறை சென்றிருக்கிறேன். அதின்மேல் உள்ள அனைத்து விமர்சனங்களையும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பரிசோதிப்பதற்காக நானே அங்குசென்றிருக்கிறேன். டல்லஸ்க்கு, டெக்ஸாஸிற்குச் சென்று, அங்கிருந்து 72 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள கிளன் ரோஸ் என்னுமிடத்திற்குச் செல்லுங்கள். இந்தச் சிறிய நகரத்தின் வழியே பாலக்ஸி நதி ஓடுவதை நீங்கள் கண்டுபிடிக்கலாம். இந்த நகரம் சுண்ணாம்பு கற்களின்மேல் கட்டப்பட்டுள்ளது. நாக்ஸ்விலியைச்சுற்றிலும் காணப்படுவதுபோல் அந்தப் பகுதி முழுவதும் சுண்ணாம்புக்கல்லாயிருக்கிறது. அந்த நதியானது சுண்ணாம்புக் கற்களின் அடுக்குகளின் வழியாகச்சென்று அந்த நகரத்தைப் பிரிக்கிறது. 1908-ஆம் ஆண்டில் அங்கு ஒரு வெள்ளம் ஏற்பட்டது. இந்த நதியானது ஒரு மைல் தூரத்திற்கு 5 மீட்டர்கள் இறங்குகிறது, ஆனால் இந்த வெள்ளம் மிகவும் அழிவை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. அது சுமார் 9 மீட்டர்கள் வெள்ளத்தின் நிலைக்குமேல் இருந்ததாக மதிப்பிடப்பட்டது. அது 1908-ஆம் ஆண்டின் ஒப்பற்ற ஒரு வெள்ளமாக இருந்தது. அது ஆற்றின் அடிப்பாகத்தை பழுதடையச்செய்தது, சுண்ணாம்பு அடுக்கைப் பிளந்தது....6 மீட்டர்கள் சுண்ணாம்புப் பாறையை உடைத்துவெளியே எடுத்துவிட்டது. அதனடியில் புதிய சுண்ணாம்பு அடுக்கு இருந்தது, மற்றும் அடுத்தக் கோடைகாலத்தில் அந்த ஆற்றில் தண்ணீர் வற்றியது, அவர்கள் அங்கே நூற்றுக்கணக்கான டைனோஸர்களின் கால் அடிச்சுவடுகளைக் கண்டுபிடித்தனர். டைனோஸர்களின் கால் அடிச்சுவடுகள். அது டைனோஸர் மாநிலப் பள்ளத்தாக்குப் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. அங்கே ஒரு புத்தகம் அந்த மேஜையின்மேல் இருக்கிறது, நீங்கள் அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் அதைப் படிக்கலாம். அவர்கள் அவைகளில் பல கால் அடிச்சுவடுகளை உளியால் வெட்டிஎடுத்தனர், அவைகள் அடுத்துவருகிற தண்ணீரில் அரித்துவிடாதபடி இருக்க, அவைகளை அருங்காட்சியகத்திற்கு எடுத்துச்சென்றனர். 1930 -ஆம் ஆண்டுடில் அவைகளின் அதிகமான கட்டிகளை வெளியே வெட்டி எடுத்து, டைனோஸரஸ்களின் எலும்புக்கூடுகளின் அடியில் வைத்தனர். அந்த கால் அடிச்சுவடுகள் பெரியதாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றில் ஒரு குழந்தை இங்கே குளித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் சிலவேளைகளில்,இதே பகுதியில் டைனோஸரின் கால் அடிச்சுவடுகளுடன் மனிதனின் கால் அடிச்சுவடுகளையும் அவர்கள் கண்டுபிடிக்கின்றனர். மனிதனின் அடிச்சுவடுகளின் பாதைகளும் மற்றும் டைனோஸர்களின் அடிச்சுவடுகளின் பாதைகளும் சேர்ந்தாற்போன்றே! நாம் நாள்முழுவதும் அதைப் பற்றிப்பேசலாம். இதைப் பற்றிய ஆயிரக்கணக்கான அறிக்கைகள் அங்கே இருந்து வருகின்றன. சிலர் அதை நம்புகின்றனர்; சிலர் அதை நம்பவில்லை. டைனோஸரஸின் அடிச்சுவடுகளின் இடையே காணப்படும் மனிதனின் அடிச்சுவடுகள் உள்ள பாதை ஒன்று இங்கு உள்ளது. மேலும் மனிதனுடைய கால் அடிச்சுவடுகளில், சிலவைகள் மிகவும் பெரியதாக இருக்கின்றன. மற்றும் சிலவேளைகளில், அவைகள் டைனோஸரஸின் கால் அடிச்சுவடுகளின் உள்ளே கண்டுபிடிக்கப்படுகின்றன. நீங்கள் வெள்ளத்தினின்று தப்பிப்பதற்கு, சேற்றின்வழியே ஓடிக்கொண்டிருந்தால், அந்த நேரத்தில் கால் வைப்பதற்கு ஏற்ற இடம் அதுவாகத்தான் இருக்கும், ஏற்கனவே ஒருவர் கால்வைத்த இடத்தில் நீங்களும் கால் வைப்பீர்கள். அது ஆழமான பனியின் வழியே நடந்துகொண்டிருப்பதுபோல் இருக்கும். பல மக்கள் தவறான எண்ணம்கொள்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். நோவா பேழைக்குள் சென்றபின்பு, மழை ஆரம்பித்தது என்றும் அனைவரும் மழை ஆரம்பித்த 10 நிமிடங்களில் இறந்தனர் என்றும் அவர்கள் நினைக்கின்றனர். அது ஒருவேளை இந்த கோளில் உள்ள அனைவரையும் சாகடிப்பதற்கு 6 மாதங்கள் எடுத்திருக்கலாம். அவர்கள் மேடான இடங்களை நோக்கி ஒடிக்கொண்டிருந்தனர். வெள்ளத்தின் தண்ணீர் மேலே வந்துகொண்டிருந்தது. மழையானது 40 நாட்கள் பெய்துகொண்டிருந்தது, ஆனால் தண்ணீர் 150 நாட்கள் மேலே வந்துகொண்டிருந்தது என்று வேதாகமம் சொல்லுகிறது. ஏனெனில் பெரும்பாலான தண்ணீர் பூமியின் உள்ளே உள்ள பூமியின் மேல்பட்டையிலிருந்து வந்துகொண்டிருந்தது. ஆழத்தின் நீரூற்றுகளிலிருந்த்து தண்ணீர் வெளியே வந்தது. அநேகமாக மழையானது வெள்ளம் ஏற்பட ஒன்றும் செய்யவில்லை. பூமியின் உள்ளேயிருந்து வந்த தண்ணீர்தான் வெள்ளத்தை உருவாக்கியது. அது அனைவரையும் அழிப்பதற்குச் சுமார் 6 மாதங்கள் எடுத்துக்கொண்டது. எனவே, தண்ணீரின் அலைகளினால் ஏற்பட்ட மாற்றத்தினால் அவர்கள் ஓடிக்கொண்டிருந்திருப்பார்கள், மேடான இடத்தை நோக்கி ஓடியிருப்பார்கள். விரைவில் அவர்கள் இந்த மேடான இடத்திற்காக சண்டையிட்டிருப்பார்கள், அது மிகவும் அபூர்வமான இடமாக மாறியிருக்கும். கால் அடிச்சுவடுகள் மிகவும் பெரியதாக இருக்கின்றன. நீங்கள் இவற்றில் ஒன்றை வாங்கவிரும்பினால், நாங்கள் இவற்றின் அச்சுகளை விற்பனை செய்கிறோம். இது எங்களுடைய இணைய தளமான www.drdino.com வில் இருக்கிறது. 24-ஆம் எண் அளவுள்ள மனிதனுடைய கால் அடிச்சுவட்டை நீங்கள் பார்க்கலாம். ஒரு நேரம் இதை நிரப்புவதற்கு முயற்சி செய்ய ஒரு பெரிய இளைஞர் எங்களிடம் இருந்தார்; அவரால் இதை முற்றிலுமாக நிரப்ப முடியவில்லை. அவருக்கு 18-ஆம் எண் உள்ள கால் அளவு இருந்தது. அவர்கள் பாறையின் விளிம்புகளை உளியினால் உடைத்தபோது, இதுவரை பாதிக்கப்படாத சுண்ணாம்புக் கல்லின் அடியிலிருந்து அதிகமான கால் அடிச்சுவடுகளை கண்டுபிடித்தார்கள். பெருவிரல்களின் குறுக்காக ரம்பத்தால் அறுத்து எடுக்கப்பட்ட கால் அடிச்சுவடுகளில் ஒன்று அங்கு இருந்தது. அவர்கள் அதன் நுனிப்பகுதியைப் பார்த்தார்கள், அது கீழே நெருங்கியும் மற்றும் மேலே உள்ள அடுக்குகளின் வரிகள் உருக்குழைந்து இருப்பது எங்கே என்றும் நீங்கள் பார்க்கலாம். அதைப்பற்றி விவாதங்கள் அங்கே இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். ஒருவேளை அவைகளின் அனைத்துத் தலைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். நான் அதைப்பற்றி நிச்சயமாக அதிகம் வாசித்திருக்கிறேன். அவைகள் நியாயமானவைகள் என்று அதிகமாக நான் அறிவுறுத்தப்பட்டேன். அந்தச் சுவடுகள் சுமார் 2 மீட்டர்கள் நீளமுள்ள நீண்ட சுவடாய் இருக்கிறது. ஒரு பெரிய மனிதனுக்கு 2 மீட்டர்கள் நீளத்தில் ஒவ்வொரு முறையும் கால்வைக்க வேண்டியது இருக்கும். அவர்கள் அந்த அடிச்சுவடுகளை வெட்டி எடுக்கும்போது, என்னுடைய நண்பர்களில் ஒருவர் அங்கே கீழே இருந்தார். அவர் இந்தக் கடிதத்தை எனக்கு எழுதினார். அரிஸோனாவில் உள்ள தென் பாப்திஸ்து சபையின் ஒரு துணைப்போதகராக இப்பொழுது இருக்கிறார். அவர் இவ்வாறு எழுதினார், "டாக்டர் ஹோவிந் அவர்களே, நான் கிளன் ரோஸில் வளர்ந்தேன். டாக்டர் கார்ல் பக் (Dr. Carl Baugh) தோண்டி எடுத்துக்கொண்டிருக்கும்போது, அவருடன் நான் இருந்தேன். .......டைனோஸரஸினுடைய கால் அடிச்சுவடுகளின் அருகில் மனிதனுடைய கால் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து சென்றோம். மனிதன் டைனோஸரசுடன் நடந்துசெல்வதைப்போன்று அது இருந்தது. தோண்டிஎடுப்பதைப் படம் எடுப்பதற்காக நோவா தொலைக்காட்சி குழுவினர் அங்கே இருந்தனர். டாக்டர் பக்குடன் (Dr. Baugh) முழு நேரமும் வாதிட்டுக்கொண்டிருந்த ஒரு பரிணாம வாதியும் அங்கே இருந்தார். நோவா தொலைக்காட்சியானது நாங்கள் கண்டுபிடித்தப் பாதைகளையோ அல்லது நாங்கள் தோண்டிக்கொண்டிருந்ததையோ அதிகம் படம் எடுக்காமல், அந்தப் பரிணாம வாதியுடன் பேட்டி எடுத்தனர். பரிணாமம் பொய் என நிரூபிக்கும் எதையும் அவர் அங்கே காணவில்லை என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர் எங்கள் பக்கமாக திரும்பிப் பார்க்க மறுத்தார் என்பதையும், நாங்கள் தோண்டிக் கண்டுபிடித்தப் பாதைகளைப் பார்க்க மறுத்தார் என்பதையும் தொலைக்காட்சி கேமரா செய்தியின் வழியே அவர் சொல்லவில்லை." "அவர்கள் ஒன்றைக் கண்டுபிடித்து, அவரின் தோள்பட்டையைத் தட்டி, "ஐயா, நீங்கள் இதைப் பார்க்க விரும்புகிறீர்களா? என்று கேட்பார்கள். அதற்கு அவர் சொல்லுவார், "இல்லை, நான் அதைப்பார்க்க விரும்பவில்லை." என்று கூறுவார். தோண்டுவதற்குப் பின்பும் மற்றும் அடிச்சுவடுகளின் பாதைகளுக்குப் பின்பும் அவர் நின்றுகொண்டு பேசிக்கொண்டிருப்பார். அந்த அடிச்சுவட்டின் பாதைகளைப் பார்க்க மறுத்த மனிதன் யார்? என்று நோவா தொலைக்காட்சி நிலையத்தார்களுக்குத் தெரியும், ஆனால் அவர்கள் அதுபற்றி எந்த அறிக்கையும் கொடுக்கவில்லை. பரிணாமக் கொள்கைக்கு நோவாத் தொலைக்காட்சித் தன்னை அர்ப்பணம் செய்துள்ளது என்பதுபோல் தெரிகிறது. அந்தக் கொள்கைக்கு மாறாக எது நடந்தாலும், அந்தத் தொலைக்காட்சி அதை ஒருபோதும் ஒளி பரப்புச்செய்யாது. காலம். அவர்களின் கோட்பாடானது எல்லாவித விமர்சனங்களிலிருந்தும் பாதுகாக்கப்படவேண்டும். ஒரு மனிதன் இவ்வாறு சொன்னார், "டைனோஸரஸின் கால் அடிச்சுவடுகளுடன் மனிதனின் அடிச்சுவடுகளையும் அவர்கள் கண்டுபிடித்தால், அது அனைத்தும் எதை நிரூபிக்கிறது எனில், மனிதனின் கால் அடிச்சுவடுகளைப்போல் உடைய டைனோஸரஸ்கள் இருந்திருக்கின்றன என்று அர்த்தமாகும்." அவர்கள் புத்திசாலியான அறிவியல் பார்வைகளை உருவாக்கிக்கொண்டிருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு ஒரு தடையாக இருக்கும் பரிணாமக் கொள்கைக்கு இது இன்னொரு உதாரணமாகும். மனிதர்களும் டைனோஸர்களும் ஒரே காலத்தில் வாழ்ந்தவை என்று சிருஷ்டிப்பை நம்புகிறவர்கள் கூறுகிறார்கள். இந்த மிகவும் முக்கியமான அறிக்கை உண்மையெனில், காலத்தின் தாழ்வாரங்களில் அவர்களின் பெயர்களின்மேல் இடி விழுந்துவிடும், இருபதாம் நூற்றாண்டில் மிகவும் நிலைத்து நிற்கும் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தவர்கள் என்கிற தனி நபர்களின் பெயர்களாகிவிடும்." அதிகாரிகளால் அந்தச்செய்தி தடுக்கப்படாதபட்சத்தில் அதுதான் உண்மையாகும். அதைப்பற்றி அநேக நல்ல புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் அவர்கள் ஒரு சுத்தியலைக் கண்டுபிடித்தார்கள், படிகமான, மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சுத்தியல் அதுவாகும். "வெள்ளத்திற்கு முன்பு அவர்களிடம் இரும்பு இல்லை" என்று மக்கள் சொல்லுகிறார்கள். ஆனால் உண்மையில் மக்களிடம் இரும்பு இருந்தது. தூபால் காயீன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான் என்று ஆதியாகமம் 4:22 கூறுகிறது. உங்களது சாய்வு மேஜையில் அதை வைக்க நீங்கள் விரும்பினால், சுத்தியலின் அதே நகலை நீங்கள் பெறமுடியும். அதை எங்களது பட்டியலில் பார்க்கவும் அல்லது எங்களது www.drdino.com இணையதளத்தில் காணலாம். இந்த மணியானது நிலக்கரியின் குவியலுக்கு உள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பே அவர்கள் இரும்பு மற்றும் உலோகங்களைப் பற்றித்தெரிந்திருந்தனர். அவர்கள் மிகவும் புத்திசாலிகளாயிருந்தார்கள். புவியியல் தூணானது, பூமியின் வரலாற்றைப் பிரதிபலிக்கிறது என்று பள்ளிகளில் உங்களின் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்கப்படப்போகிறது, கரி உருவாக்கப்பட்ட காலமே கரிப்பொருள் காலம் என்று கற்றுக்கொடுப்பர். அது முட்டாள்தனமாக இருக்கிறது. வெள்ளத்தின்போது கரி உருவாக்கப்பட்டது, ஏனெனில் அந்த உலகம் புதைக்கப்பட்டது. 1881-ஆம் ஆண்டின் பின்பகுதியில், இல்லினாய்ஸில் உள்ள ஒரு நிலக்கரிக் கட்டியின் உள்ளே இருந்து அவர்கள் ஒரு தங்கச் சங்கிலியைக் கண்டுபிடித்தனர். இந்த இரும்புப் பானையும் நிலக்கரிக் கட்டியின் உள்ளே இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகும். 600 மில்லியன்கள் ஆண்டுகள் வயதிருக்கும் என்று உரிமைபாராட்டுகிற ஒரு இருகிய பாறையிலிருந்து இந்தப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே நான் நம்பாவின் உள்ளே, இடஹோவில் நம்பா பொம்மை என்றழைக்கப்படுகிறதைப் பிடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு கிணறுதோன்றும் மனிதன் இந்தச் சிறிய பொம்மையை 320 அடி ஆளத்தில் ஒரு கிணற்றுக்காகத் துளையிடும்பொழுது கண்டுபிடித்தான். அது ஒருவேளை வெள்ளத்திற்கு முன்பிருந்த பொம்மையாக இருக்கலாம். 2,000 ஆண்டுகள் வயதிருக்கும் என்று மதிப்பிடப்படும் இந்த மின்கலமானது ஈராக் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட காலங்களுக்கு முன்பே அவர்கள் மின்சாரம் பற்றித் தெரிந்திருந்தனர். எகிப்தியர்கள் மின்சாரம் பற்றித் தெரிந்து இருந்தார்கள். பொருட்களில் மின்னேற்றம் எவ்வாறு செய்வது என்பதை அவர்கள் அறிந்து இருந்தார்கள். ஒரு வெள்ளிச்சுரங்கப் பாறை அடுக்கில், மனிதனின் எலும்புகளையும் மற்றும் ஒரு தாமிர அம்பின் தலையையும் சரங்கத் தொழிலாளர்கள் கண்டுபிடித்தனர். கலிபோர்னியாவில் உள்ள ஒரு தங்கச்சுரங்கத்தில் கற்களால் ஆன நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவர்கள் இந்த மலையின் நடுப்பாகத்தில் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள், ஒரு சரளைக்கல் குழியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். 55 மில்லியன்கள் ஆண்டுகள் வயதிருக்கும் என்று நினைகிற அக்கினிக்குழம்புகளின் கீழே உள்ள அடுக்குகளில் தோண்டிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் மனிதனின் ஆயுதங்களை அங்கே கண்டுபிடிக்கின்றனர். கலிபோர்னியாவில் கண்டுபிடிக்கப்படும் கண்டுபிடிப்புகளைப்பற்றி அதிகம் பேசப்படுபவர்களில் ஒருவர்தான் ஸ்மித்ஸோனியனைச் சேர்ந்த பேராசிரியர் ஹோம்ஸ் என்பவராவார். "ஒருவேளை இன்று புரிந்துகொண்டதுபோல், மனிதனின் பரிணாமம் பற்றிய கதையைப் பேராசிரியர் ஒயிட்னி என்பவர் முற்றிலுமாகப் பாராட்டியிருப்பாரானால், முடிவுகளை அறிவிப்பதில் அவர் தயக்கம் காட்டியிருக்க வேண்டும், ஏமாற்றுகிற சாட்சியின் படைவகுப்பை எதிர்க்காதவர் என்று கூறினார். இந்தக் கண்டுபிடிப்பை அறிவித்திருக்கக்கூடாது என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிறாரா? ஏனெனில் அந்தக் கோட்பாட்டிற்கு அது எதிராகச்செல்கிறது. இதைத்தான் அவர் சொல்லிக்கொண்டிருக்கிறாரா? அதைத்தான் அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார். உங்கள் அனைவருக்கும் நான் சொல்லிக்கொண்டிருகிறது என்னவெனில், அவர்களுடைய முட்டாள்தனமான பரிணாமக் கோட்பாட்டிற்கு மிகவும் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மக்கள் இருக்கிறார்கள். அந்தக் கோட்பாட்டிற்கு எதிராக எதுவும் சென்றால், அவர்களால் முடியுமானால், மனதிற்குச்செல்லுவதிலிருந்தும் மற்றும் அச்சடிப்பதிற்கும் எதிராக தடுத்துவிடுவார்கள். மதவெறிபிடித்தவர்களைப்போல் அவர்கள் அவர்களின் கோட்பாட்டைப் பாதுகாக்கின்றனர். பரிணாமத்திற்கு எதிரான ஆதாரங்களை மறைப்பதற்கு அதிக முயற்சி எடுப்பதில் ஸ்மித்ஸோனியன் அருங்காட்சியகம் முக்கியப் பொறுப்பாக இருக்கிறது. ஒரு சரளைக்கல் குவியலிலிருந்து நவீன கற்களால் ஆன ஆயுதங்களை கனடா நாட்டிலுள்ள தேசிய அருங்காட்சியகத்தைச் சேர்ந்த தாமஸ் லீ (Thomas Lee) என்பவர் 1950-ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். அதில் என்ன பிரச்சனை எனில், அந்த சரளைக்கல் குவியலுக்கு 65 முதல் 125 ஆயிரம் ஆண்டுகள் வயது வரை இருந்தது. மனிதர்கள் கனடாவில் இருப்பதற்கு அது அதிக வயதாக இருந்தது. கண்டுபிடிப்பாளரை வெளியேற்ற மறுத்த காரணத்திற்காக, அந்த அருங்காட்சியகத்தின் இயக்குநர் வேலையிருந்து நீக்கப்பட்டார். டன்கள் கணக்கிலான கலைஉண்மைகள் சேமிப்புத் தொட்டியிலிருந்து மறைந்துவிட்டன. கண்டுபிடிப்பானது நீக்கப்படவேண்டியதாய் இருந்தது. ஏறத்தாள அந்த விஷயத்தைப் பற்றிய அனைத்துமே மறுபடியும் ஒவ்வொரு புத்தகத்திலும் எழுதப்பட அது வற்புறுத்தியிருக்கும். "எங்களுடைய கோட்பாட்டிற்கு எதிராகச்செல்லுவதை கண்டுபிடிக்கும் உங்களை நாங்கள் வேலையில் வைத்திருக்க முடியாது, ஏனெனில், நாங்கள் அச்சிட்டு வைத்திருக்கிற புத்தகங்கள் அனைத்தும் எங்களுடைய கோட்பாடு எவ்வளவு அழகானது என்பதைப் பற்றி பேசுகிறது. மேலும் நீங்கள் இந்தப் புத்தகங்களை எல்லாம் மறுபடியும் எழுதச்சொல்ல எங்களை வற்புறுத்தப்போகிறீர்கள். எனவே, நீங்கள் வேலையிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள்." என்று கூறியிருப்பார்கள். இல்லினாய்ஸில் ஒரு கிணறு தோண்டுபவரால், பூமியின் மேற்பரப்பிலிருந்து 30 மீட்டர்களுக்கும் கீழே ஆழத்திலிருந்து இந்தக் காசு கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளால் அது பரிசோதிக்கப்படவே இல்லை. அந்த உலகத்தை அந்த வெள்ளம் புதைத்துவிட்டது. தேவன், வெள்ளத்திற்கு முன்பு அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று மட்டுமல்லாமல், எவ்வாறு வாழ்வது என்றும் கூறினார். அவர்கள் என்ன சாப்பிடவேண்டும் என்றும் அவர் கூறினார். அவர் அவர்களுக்கு ஒரு முழுமையான உணவைக்கொடுத்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாய் இருக்கக்கடவது என்று கூறியதை ஆதியாகமம் 1:29-ல் பார்க்கிறோம். நாம் ஞானமாய்ச் சாப்பிடுவதில்லை. நாம் இறைச்சி,எண்ணெயிலிட்ட உணவுகள் மற்றும் இனிப்பிட்ட பானங்களை விரும்புகிறோம். பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகளை சாப்பிடுங்கள் என்று தேவன் சொன்னார். நீங்கள் பழங்களைச் சாப்பிடும்போது, விதைகளையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும். நீங்கள் பீச் (Peach) என்கிற பழத்தைச் சாப்பிடும்போது, அதன் விதையும் சாப்பிடுங்கள். அது கடினமானது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது, ஒரு சுத்தியலைக் கொண்டு அதை உடைத்து திறவுங்கள். விதையின் கூட்டின் உள்ளே விதை இருக்கிறது. மேலும் அங்கே அதுபற்றிய ஒரு நல்ல புத்தகம் இருக்கிறது. ஒரு பெண் என்னுடையக் கருத்தரங்கைப் பார்த்தாள், பரவசமடைந்தாள், ஏதேனின் தோட்டம் பற்றிய உணவை சாப்பிட்டு, அவளுடைய உடலின் ஆரோக்கியத்தில் முற்றிலுமான ஒரு மறுரூபத்தை அடைந்தாள். ஏதேனின் உணவைத் தொடர்ந்து அதைப்பற்றிய ஒரு புத்தகத்தை எழுதினாள். நீங்கள் அதை வாங்க விரும்பினால், அது "அழகாக இருப்பதற்குரிய உங்களின் உரிமையாக இருக்கிறது." ஆனால், நீங்கள் விதைகளை உண்ணவேண்டும். இயற்கை உரமிட்ட இடங்களில் வளர்ந்த தாவரத்தின் விதைகளாக இருக்க உறுதிசெய்துகொள்ளுங்கள். கொழுப்புள்ளதும் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்பட்டதுமான இடங்களில் வளர்ந்தவைகள் அல்ல. விதைகள் ஒரு கசப்பானப் பொருளாகிய சையனைடு என்பதை உடையதாக இருக்கின்றன. அது உங்களுக்குச் சுமார் ஒருமணியிலிருந்து ஒன்றரை மணி நேர சுருக்கத்தைக் கொடுக்கும். சுருக்கம், சுருக்கம் என்று சொல்லுகிறீர்களே, அது என்ன? என்று நினைக்கிற சில முதியவர்கள் என்னைப்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் எனக்குத் தெரிந்தது. உன்னுடைய மனைவிக்கு அந்த அறையின் குறுக்கே சென்று ஒரு முத்தம் கொடுக்கப்போகிறாய் எனில் உனக்கு வயதாகப்போகிறது என்று என்னுடைய அப்பா சொல்லுகிறார். அதற்குப் பிறகு நீங்கள் ஏன் அங்கு வந்தீர்கள் என்பதை மறந்துவிட்டீர்கள். ஆம், நீங்கள் வயதாகிக்கொண்டிருக்கும் ஒரு அப்பா. வைட்டமீன் B-17 என்கிற வைட்டமீனை இந்த விதைகள் பெற்றிருக்கின்றன. அது அரை சையனைடாகும். ஓ, அது விஷமாக இருக்கிறதே என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். அது அப்படி இல்லை. ஹைட்ரஜன் வெடிக்கக்கூடியது; ஹிண்டன்பர்க்கில் இருந்தவர்களிடத்தில் கேளுங்கள். அவர்கள் உண்மையிலே கற்றவர்கள். எரிவதற்கு ஆக்ஸிஜன் உதவிபுரிகிறது. எந்த ஒரு ஆரோக்கியமான மனதுடன் இருக்கும் மனிதன், தீயை அணைப்பதற்கு ஹைட்ரஜனையும் மற்றும் ஆக்ஸிஜனையும் தீயின்மேல் தூவுவான்? கோளில் உள்ள ஒவ்வொரு தீயணைப்பு மனிதனும்! நீங்கள் ஹைட்ரஜனையும் மற்றும் ஆக்ஸிஜனையும் ஒன்றாகச் சேர்த்தால் எதைப்பெறுகிறீர்கள்? தண்ணீர். சோடியம் விஷமுள்ளது; குளோரினும் விஷமுள்ளது. நீங்கள் அவைகளை ஒன்றாகக்கலக்கும்பொழுது, உங்களுக்கு உப்பு கிடைக்கிறது. அது முற்றிலும் அருமையாக இருக்கிறது. எனவே, விதைகளில் காணப்படுகிற சையனைடானது பென்ஸால்டிஹைடுடன் ஒன்றாகசேர்க்கப்படுகிறது. இரண்டுமே விஷமுள்ளவைகள், ஆனால் அவைகளை ஒன்றாகச் சேர்த்தால், அவைகள் புற்றுநோயின் செல்லில், தற்செயலாகச் சந்திக்கும்வரையில் திங்குவிளைவிப்பவைகள் அல்ல. "புற்றுநோயில்லா உலகம்" (World without cancer) என்கிற தலைப்பில் அதுபற்றிய ஒரு புத்தகம் அங்கே இருக்கிறது. நீங்கள் அந்தத் தலைப்புப் பற்றி அதிகம் படிக்க விரும்பினால், ஏராளமான இணையதளங்கள் இருக்கின்றன. அங்கே உள்ள திரையிலும் மற்றும் என்னுடைய இணைய தளமான www.drdino.com மிலும் ஏராளமான தகவல்கள் உள்ளன. ஹன்ஸா (Hunza) என்றழைக்கப்படுகிற ஒரு மலைவாழ் மக்கள் குழு, பாகிஸ்தானின் வடபகுதியில் இருக்கின்றனர். ஹன்ஸா மக்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வராது. இந்த மலைவாழ் மக்கள் குழு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவர்களுடைய சராசரி வயது 160 ஆண்டுகளாக இருந்தது. இமய மலைகளின் மேல் உள்ள பள்ளத்தாக்குகளில் இதுவும் ஒன்றாக இருக்கிறது. சங்கரி-லா (Shangri-La) என்ற பழங்காலச் சொல்லுக்கு நேராக இது வழிநடத்தினது. நீங்கள் என்றென்றும் வாழும் பள்ளத்தாக்காகிய சங்கிரி-லா பள்ளத்தாக்கை உங்களில் எந்தனைபேர்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? அவர்கள் என்றென்றும் வாழவில்லை, ஆனால் அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்தார்கள். அந்த ஹன்ஸா மக்களுக்கு மிகவும் பிடித்த உணவு ஆரஞ்சுப்பழம் போன்று உள்ள அப்ரிகாட் (Apricot seeds) விதைகளாகும். இன்று அவர்கள் உதாரணமாக 90 ஆண்டுகள் வாழ்கின்றனர். உலகின் மற்ற பாகங்களில் உள்ளவர்களோடு அவர்களுக்குத் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால் அப்ரிகாட் விதைகளானது மிகவும் கவனத்தைக் கவரக்கூடியதாக மாறிவிட்டன. அவர்கள் அப்ரிகாட் விதைகளை நொறுக்கிப்பிழிந்து அவைகளிலிருந்து எண்ணெய் எடுக்கின்றனர். அந்த எண்ணெய்யை அவர்களின் தோலின்மீது தேய்க்கின்றனர், அப்பொழுது பெண்கள் சுருக்கமடைவதில்லை. அவர்கள் 70 அல்லது 80 வயதிலும் பார்வைக்கு நன்றாக இருக்கிறார்கள். நாம் பட்டாணியைச் சாப்பிடுவதுபோல், ஹன்ஸா மக்கள் இந்த அப்ரிகாட் விதைகளைச் சாப்பிடுகிறார்கள். அவர்கள் உண்மையிலேயே அவைகளை மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்கள்; அவர்களுக்கு ஒருபோதும் புற்றுநோய் வந்ததில்லை. உங்களுக்குத் தெரியும், மக்கள் தங்களின் புற்றுநோய் குணமடைவதற்கு, உணவுவகைகளைச் சாப்பிட்டு குணமடையும் வைத்திய முறையின் மூலம் மிகவும் மேலான வாழ் நாள் வீதத்தைப்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்னும் வாழவில்லை என்பது எனக்குப் புரிகிறது. இருப்பினும், வாழ்வதற்கு ஏற்ற திறமையை சுமார் 10 மடங்கு அது அதிகம் தருகிறது. வழக்கமான வைத்தியத்தைக் காட்டிலும் வலிமையுள்ளதாக இருகிறது. இந்தத் தலைப்புப் பற்றி ஏராளமான புத்தகங்கள் அங்கே இருக்கின்றன. நீங்கள் அப்ரிகாட் விதைகளைச் சாப்பிட்டு உங்கள் புற்றுநோயைக் குணப்படுத்திக்கொள்ள ஜேஸன் வாலி போதிக்கிறார். அப்ரிகாட் விதைகளை உட்கொள்ளுகிற ஒரு மனிதனின் உடலில் புற்றுநோய் வாழமுடியாது என்று அவர் விவரிக்கிறார். மக்கள் அப்ரிகாட் விதைகளை உண்பதற்கு ஜேஸன் வாலி எளிமையாக சிபாரிசு செய்கிறார். அப்படிச்சொன்னதற்காக அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்ரிகாட் விதைகளை மக்கள் உண்ணவேண்டும் என்று சொல்லுவதற்காக அவர் இப்பொழுதும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அது ஏன் எனில், செயற்கை மருந்துகளை நோயாளிகள் பயன்படுத்தலாம், ஆனால் அப்ரிகாட் விதைகளைப் பயன்படுத்தக்கூடாது என்று மருத்துவ அதிகாரிகள் விரும்புகின்றனர். ஏனெனில் இந்த விதைகளை அவர்களால் ஒழுங்குபடுத்த முடியாது. விதைகளிலிருந்து அவர்களால் பணம் சம்பாதிக்க முடியாது. பணத்தின்மேலும் மற்றும் செல்வத்தின் மீதும் உள்ள ஆசையானது பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது. தங்கத்தின்மேலும் மற்றும் செல்வத்தின்மீதும் உள்ள நாட்டம் வருத்தத்தையும் மற்றும் அழிவையும் நோக்கி வழி நடத்துகிறது. கப்பலோட்டிகள் பல ஆண்டுகளாக ஸ்கர்வி என்கிற கொடுமையான நோயினால் இறந்தனர். இங்கிலாந்தின் கப்பல் படையானது ஒரு மில்லியன் கப்பலோட்டிகளை ஸ்கர்வி என்ற நோயினால் இழந்தது. அவர்கள் ஸ்கர்வி என்ற நோயை எவ்வாறு குணமாக்கினார்கள் என்று யாருக்காவது தெரியுமா? வைட்டமீன்-C யின் மூலமாகக் குணமாக்கினார்கள். அவர்களுக்கு வைட்டமீன் -C என்றுகூடத்தெரியாது இருந்தனர். நீங்கள் எலுமிச்சையைச் சாப்பிட்டால், உங்களுக்கு ஸ்கர்வி நோய் வராது என்று அவர்களுக்குத் தெரிந்தது. கப்பலில் எழுமிச்சைகளை எடுத்துச்செல்லுங்கள்! இன்று நாம் ஒரு வைட்டமின் குறைவினால் பல நோய்களுக்கு ஆளாகிறோம். நீங்கள் என்னத்தை உண்ணுகிறீர்களோ அது உங்களைக் கொன்றுகொண்டிருக்கவில்லை. நீங்கள் என்னத்தை உண்ணாதிருக்கிறீர்களோ அது உங்களைக் கொன்று கொண்டிருக்கிறது. உங்களுக்குப் போதுமான வைட்டமீன் -B இல்லாதிருந்தால், பெரிபெரி, பெலக்ரா மற்றும் ரிக்கட்ஸ் போன்ற நோய்கள் வருகின்றன. அவைகள் அனைத்தும் வைட்டமீன்கள் சத்துக்குறைவினால் ஏற்படும் நோய்களாகும். தேவன் செடிகளை மனிதனின் சேவைக்காகவும் மற்றும் உணவை மனிதனுடைய இருதயத்தைப் பெலப்படுத்தவும் கொடுத்தார் என்று வேதாகமம் கூறுகிறது. உங்களின் இருதயத்தைப் பெலப்படுத்துவதற்காக உணவு வடிவமைக்கப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா? ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்குத் தெரிகிறபடி, பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேறாராக இருக்கிறது. அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே கற்றுக்கொண்டனர். தானியங்களிலிருந்து வைட்டமீன் -E, லெஸித்தின் மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் போன்றவைகளை நீங்கள் கோதுமையிலிருந்து நீக்கினால், கோதுமை மாவை வெள்ளையாக ஆக்கினால், ரொட்டியானது அதிக மாதங்களுக்கு கெடாமல் இருக்கும். ஆனால் மக்கள் இருதய அடைப்பு, இரத்த ஒட்ட நிறுத்தம் மற்றும் இரத்த ஓட்டப் பிரச்சனைகளினால் இறக்க ஆரம்பித்தனர். இது மிகவும் எளிய சூத்திரம்: ரொட்டி எந்த அளவு வெள்ளையாக இருக்கிறதோ, அந்தளவிற்கு நீங்கள் விரைவில் இறக்கப்போகிறீர்கள். வெள்ளை ரொட்டி உங்களை கொன்று கொண்டிருக்கவில்லை; அந்த வெள்ளை ரொட்டியில் என்ன இல்லையோ அதுதான் உங்களைக் கொன்று கொண்டிருக்கிறது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் இருதயத்திற்குப் பெலனைக் கொடுப்பதற்காகத் தேவன் ரொட்டியைக் கொடுத்தார். அன்றன்றுள்ள அப்பம் என்று கூறுகிற வேதாகமத்தை நினையுங்கள். ஆனால் வியாபாரிகள் விற்பதற்காக ரொட்டியைத் தயாரிக்கிறார்கள். அலமாரியில் வைத்திருந்த பாதியளவு ரொட்டியானது கெட்டுப்போனதினால் வருத்தமடைந்துவிட்டனர், மற்றும் அவற்றிற்குப் பிறகு அதை அவர்கள் விற்க இயலாது. என்வே, லாபமானது அதிகரிப்பதற்காக, அவர்களின் ரொட்டியானது நீண்ட நேரம் கெடாமல் இருப்பதற்கு ஒரு வழியைக் கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. அது பணத்தின் பின்பாகச் செல்லுகிறது, மக்கள் தங்கம் மற்றும் செல்வத்தின் பின்னே வேட்டையாடச் செல்லுகின்றனர். ஆரோக்கியத்தைப் பற்றிய இரண்டு தத்துவங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று: பரிணாமக் கோட்பாட்டின் அடிப்படையிலானது. அது என்ன சொல்லுகிறது எனில், உங்களது சரீரம் வேதியல் ரசாயானங்களில் ஒன்றாக திடிரென பல பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. எனவே, உங்களது நோய்களைக் குணப்படுத்த, அவர்கள் அதிக ரசாயானப்பொருட்களை சேர்க்கின்றனர். இதற்குப்பெயர் மருந்துகொடுத்து குணமாக்கும் முறையாகும். உங்களுக்குத் தலைவலி இருந்தால், "டாக்டர், எனக்குத் தலை வலிக்கிறது" என்று சொன்னால், அவர் "இங்கே இருக்கிற ஆஸ்பிரின் மாத்திரையைச் சாப்பிடுங்கள்" என்று கூறுகிறார். நன்றாகச் சிந்தியுங்கள், மற்றும் ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். உங்களுக்குத் தலைவலியை உண்டாக்கியது எது? ஆஸ்பிரின் இல்லாதது உங்களுக்குத் தலைவலியை ஏற்படுத்தினதாக இருந்ததா? ஆஸ்பிரின் குறைவினால் நீங்கள் வியாதியாய் இருக்கிறீர்களா? வியாதிக்கான காரணத்திற்கு சிகிட்சை அளிப்பதற்குப் பதிலாக வியாதியின் அறிகுறிக்கு சிகிட்சை அளிக்கிறீர்களா? நீங்கள் அதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும். கீழேயுள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு நீங்கள் காரை ஓட்டிச்சென்றால், எண்ணெய் ஒளியானது உங்களது காரின் மேல் வருகிறது. உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. பிரச்சனையைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்யுங்கள். அல்லது ஒளியை எடுத்துவிடுங்கள். "நான் எப்பொழுதும் ஒளியைப் பிடுங்கி எறியமாட்டேன் . அது முட்டாள்தனமானது" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். ஆம் அது முட்டாள்தனமானது என்று எனக்கும் தெரியும். ஒளி என்பது பிரச்சனை அல்ல; அந்த ஒளி ஒரு பிரச்சனையைச் சொல்ல முயற்ச்சித்துக்கொண்டிருக்கிறது நீங்கள் அதை நம்புகிறீர்களோ இல்லையோ, தலைவலி உங்களது பிரச்சனை அல்ல. உங்களது தலைவலி ஒரு பிரச்சனையைப் பற்றிச் சொல்லுகிறது. உங்களுக்கு மெக்னீசியம் அல்லது புரதம் ஏதாவது குறைவாக இருக்கலாம், எனக்குத் தெரியாது. இன்று நாம் பயன்படுத்துகிற பெரும்பாலான மருந்துகள் எல்லாம், எச்சரிக்கும் ஒளியை பிடுங்குவதாக இருக்கின்றது. அவைகள் பிரச்சனைகளை சரிசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டவைகள் அல்ல. அவைகள் அறிகுறிகளை மூடுவதற்கு இருக்கின்றன. சிலவேளைகளில் அதுவும் தேவைப்படுகிறது. எல்லா நேரங்களிலும் மருந்துகள் பயன்படுத்துவதற்கு நான் எதிரானவன் அல்ல; நண்பர்களே, நாம் முட்டால்தனமாக மாறிவிட்டோம் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். நீங்கள் நன்றாக இருந்தால், மருந்துகள் தயாரிக்கும் கம்பெனிகள் பணம் சம்பாதிப்பதில்லை, பண ஆசையே எல்லாத்தீமைக்கும் காரணமாக இருக்கிறது. பெரும்பாலான நோய்களுக்குக் காரணம் சத்துக்குறைவே காரணமாக இருக்கிறது. உங்களுக்கு வைட்டமீன் அல்லது தாது உப்புகள் அல்லது எண்ணெய் குறைவாக இருக்கிறது. உங்களது உடலுக்கு ஒவ்வொரு நாளும் 16 வைட்டமீன்கள், 60 தாது உப்புகள் மற்றும் 3 எண்ணெய்கள் தேவைப்படுகிறது. இவைகளை உங்களது உடலுக்கு அதிகம் கொடுங்கள். கலிபோர்னியாவில் உள்ள எனது நண்பர் பில் ஸர்டி (Bill Sardi) எழுதிய "குணமாகுதலின் வல்லமை" (The Power of Healing) என்றழைக்கப்படுகிற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த மேஜையின்மேல் மீதம் எதுவும் கிடையாது, ஆனால் அவற்றை உன்கள் தேவைக்கு எழுதிக்கேட்டுப்பெற்றுக்கொள்ளலாம். ஆரோக்கியம் அல்லது அவருடைய மற்ற புத்தகமான ஆரோக்கியத்திற்கும் மற்றும் நீண்டவாழ்வுக்கும் வேதாகம மருத்துவ முறை "The Bible Prescription for Health and Longevity" படிக்கவிரும்பினால் படிக்கலாம். உங்களது தண்ணீரில் ஃப்ளோரின் போட்டு அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு முன்பு, நமது தண்ணீர் வழங்கள் முறையில் ஃப்ளோரின் தண்ணீருடன் கலப்பதில் உள்ள ஆபத்தான உண்மையைப் பற்றி நீங்கள் வாசித்து அறிய விரும்பவேண்டும். 1845-ஆம் ஆண்டின் பின்பகுதியில், ஆஸ்ட்ரியா நாட்டின் வியன்னாவில் உள்ள ஒரு மருத்துவர் திகிலடைந்தார். ஏனெனில், மருத்துவமனையில் குழந்தைகளைப் பெற சேர்க்கப்பட்ட 30% பெண்கள் இறந்துவிட்டனர். முப்பது சதவீதம்! எனவே, இந்த மருத்துவர் கவனித்தார், மருத்துவர்கள் இறந்த பெண்களின் சடலங்களை ஆய்வு செய்துவிட்டு, அதன்பிறகு, தங்களின் கைகளைக் கழுவாமல், அடுத்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்கச் சென்றனர். அவர்கள் அதன்பின்னே உள்ள மைக்ரோஸ்கோப்பிக் உயிரிகளை அறியவில்லை. ஆனால் டாக்டர் செம்மல்விஸ் (Dr. Semmelweis) என்பவர், அவருடைய மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் இறந்தவர்களின் சடலங்களை பரிசோதித்த பின்பு கைகளைக் கழுவுகின்றனர் என்று வலியுறுத்துகிறார். இறப்பு விகிதம் இரண்டு சதவீதம் குறைந்தது. டாக்டர் செம்மல்விஸின் பெரிய கண்டுபிடிப்பினால் என்ன நடந்தது என்று யாருக்காவது தெரியுமா? அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வித்தியாசமான மூன்று மருத்துவமனைகள் அவரைப் பணி நீக்கம் செய்தன. இறுதியாக, அவர் ஒரு மன நலம் பாதிக்கப்பட்டோர் நிலையத்தில் சேர்க்கப்பட்டார், உங்கள் கைகளைக் கழுவுங்கள் என்று வலியுறுத்தியதற்காக, இன்னொரு நோயாளி இவரைக் கொலைசெய்தார். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, வேதாகமத்தின் லேவியராகமப் புத்தகத்தில், தேவன் மோசேயிடம் கூறியிருந்தார், நீங்கள் ஒரு இறந்த சடலத்தைத் தொட்டால், நீங்கள் அசுத்தமடைகிறீர்கள் என்று மக்களுக்குச் சொல் என்றார். வேறு எதையாவது ஒன்றைத் தொடுவதற்கு முன்பு உங்களின் கைகளையும் உங்களின் சரீரத்தையும் கழுவுங்கள் என்றார். அறிவியல் காரணங்களைப் புரிந்துகொள்வதற்கு முன்பே 3,000 ஆண்டுகளுக்கு முன்பே தேவன் அதைக் கட்டளையிட்டார். மருந்துகளின் இன்னொரு தத்துவம் சிருஷ்டிப்பை அடிப்படையாகக் கொண்டது, உங்களது உடலானது தேவனால் வடிவமைக்கப்பட்டது என்று அது கூறுகிறது. தேவன் நம்முடைய உணவுத் தேவைகளான வைட்டமீன்கள், தாதுப்பொருட்கள் மற்றும் இதரவைகளை உணவில் கொடுத்தார். அதற்கு உணவுப்பொருட்கள் சிகிட்சைமுறை என்று பெயர். அவைகளைப் பற்றி அதிக தகவல்கள் வீடியோ வரிசையான "வேதாகமும் ஆரோக்கியமும்" (The Bible and Health) என்கிறதில் உள்ளது. அந்தத் தலைப்பில் அதிகம் அறிந்துகொள்ள நீங்கள் விரும்பினால் அதைப் பாருங்கள். மூலிகைகளை உட்கொள்ளும் ஆண்டுச் சராசரி அமெரிக்கரின் இறப்பு எண்ணிக்கையானது பூஜ்ஜியமாகும். வைட்டமீன்களை உட்கொள்ளுவதால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3 பேர்கள் இறக்கின்றனர். பரிந்துரைக்கப்படாத மருந்துகளை உட்கொள்ளுவதால் ஒவ்வொரு ஆண்டும் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 320 பேர்களாக இருக்கிறார்கள். உணவில் நோய்கள் இருப்பதனால் இறப்பவர்களின் எண்ணிக்கை சுமார் 9,000 இருக்கிறது. சரியாகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சமாகமாக இருக்கிறது. இதில் தவறாகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்கள் சேர்க்கப்படவில்லை. மருத்துவர்கள் உங்களுக்குச் சொல்லி, நீங்கள் உட்கொண்டு, நீங்கள் இறந்ததை இது குறிப்பிடுகிறது. வியட்நாம் நாட்டில் பத்து ஆண்டுகளாகப் போராடி இறக்கிற அமெரிக்கர்களின் எண்ணிக்கையின் இரண்டு மடங்காக, சரியாகப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை உட்கொள்ளுபவர்களின் ஆண்டு இறப்பு இருக்கிறது. அரசாங்கக் கொள்கையில் இரண்டு வகைகள் உள்ளன. நாம் இவைகளைப் பற்றி அதிகமாக வீடியோ எண் 5-ல் பார்க்க இருக்கிறோம். ஒன்று பரிணாமத்தின் அடிப்படையானது, மனிதனுடைய கருத்துக்களிலிருந்துதான் சட்டங்கள் வருகின்றன என்று கூறும் பரிணாமக் கொள்கையாகும். அரசாங்கத்தால் வழங்கப்படுகிற உரிமைகள், மற்றும் அரசாங்கமானது அனைத்தையும் கொடுக்கிறதாக இருக்கவேண்டும். சமூக நலம் மற்றும் அனைத்துமே. அதற்குப் பெயர் ஜனநாகம் என்று அழைக்கப்படுகிறது. அரசாங்கத்தின் ஆபத்தான வடிவமாக ஜனநாயகம் இருக்கிறது. அவர்கள் எப்பொழுதுமே சர்வாதிகாரிகளாக இருக்க மாறிவிடுகிறார்கள்; அவர்கள் அநேகமாக உலகலாவிய ஆரோக்கியத்தின் அக்கரை பற்றி எப்பொழுதும் பேசுகிறார்கள். அமெரிக்காவில் தன்னில் தூண்டப்பட்ட பிரச்சனைகளிலிருந்து 70 லிருந்து 80 சதவீதமானது அனைத்து ஆரோக்கியத்திற்கும் செலவாக இருக்கின்றன. நீங்கள் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்து, மதுவைக் குடித்துவிட்டுப் புகைப்பீர்களானால், அது உங்களின் பணியாக இருக்கிறது. ஆனால் நீங்கள் வியாதியில் இருக்கும்போது அதற்காக நான் பணம் கட்ட நீங்கள் விரும்புவீர்களானால், அது என்னுடைய பணியாக இருக்கிறது. உலகலாவிய ஆரோக்கியத்தை நாம் பெறப்போகிறோம் எனில், உலகலாவிய சுயமாக ஆரோக்கியத்தைப் பேணுதலை நாம் ஏன் பெறக்கூடாது? அப்பொழுது, ஒரு மரத்தில் உங்களின் கார் மோதினால், அந்த அரசாங்கம் உங்களுக்கு ஒரு கார் வாங்கித்தருகிறது. கார்களை நிறுத்திவைக்கும் இடங்களில் நிங்கள் இன்னொரு காரின்மேல் மோதி அதில் உராய்வு உண்டாக்கினால், அது உங்களின் பிரச்சனை அல்ல. அந்த அரசாங்கம் அதற்குப் பரிகாரம் செய்கிறது. நீங்கள் உங்களது காரில் எண்ணெய் ஊற்ற மறந்துபோய் இருந்து உங்களின் காரின் இயந்திரம் வெடித்துவிட்டால், பிரச்சனையே இல்லை, அரசாங்கம் அதைச் சரிசெய்துதரும். உலகலாவிய வீடு பராமரிப்பை நாம் ஏன் வைத்திருக்கக்கூடாது? யாருக்காவது உங்களின் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, உங்களுக்குப் புரியும். நான் எதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பது எந்தனை பேர்களுக்குத் தெரிகிறது? வீட்டு உரிமையாளர் பராமரிக்கப் பார்ப்பதுபோல் வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்கள் பராமரிக்கப் பார்ப்பதில்லை. மேலும் உங்களின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க நீங்கள் பொறுப்பெடுக்கும்போது, நீங்கள் அதைப் பராமரிப்பீர்கள். நீங்கள் ஒரு காரை வாங்கும்போது, நீங்கள் ஒரு மரத்தின்மீது அதை மோதவிடமாட்டீர்கள். பின்பு அதைப் பற்றி சிரிக்கமாட்டீர்கள். ஒரு மரத்தின் மீது உங்கள் கார் மோதினால் நீங்கள் அழுவீர்கள். இன்னொரு தத்துவம் என்னவெனில், சிருஷ்டிப்பின் அடிப்படையிலான அரசாங்கம். அது சட்டங்கள் சிருஷ்டிகரிடமிருந்து வருகின்றன என்று கூறுகிறது. நமது உரிமைகள் நிரந்தரமானவைகள் மற்றும் அரசாங்கம் ஒரு அளவுடன் செயல்படும். அது குடியரசு என்று அழைக்கப்படுகிறது; அது பற்றிய அதிக விபரத்தை வீடியோ எண் 5-ல் காணலாம். நாம் அதைப் பற்றி இரண்டு மணி நேரங்கள் பேச முடியும். ஆதியாகமம் 1:30-ல் மேலும் நாம் இங்கிருந்து வெளியே செல்லுவோம். பூமியிலுல்ல சகல மிருக ஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிக்கும் பசுமையான பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்று தேவன் கூறினார். வெள்ளத்திற்கு முன்பு பூமியில் வாழ்ந்த ஒவ்வொன்றும் தாவரங்களைச் சாப்பிட்டன என்று நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்கள். அது முற்றுலும் சரியானதே. "சகோதரர் ஹோவிந் அவர்களே, பற்களைப் பாருங்கள், நிச்சயமாக மாமிசப் பட்சிணி என்று நீங்கள் கூறுகிறீர்கள். இல்லை, அது ஒரு பாலூட்டிக் கரடியாக இருக்கிறது. சுறாவின் பற்கள் இறைச்சி உண்பதற்கு அடையாளமாக இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? சீனாவில் ஒரு மான் இருக்கிறது. அது தண்ணீர் மான் என்று அழைக்கப்படுகிறது. அந்தத் தண்ணீர் மானை வலைத்தளத்தில் நீங்கள் பார்க்கலாம். வளைந்த பற்களுள்ள புலியின் பற்களைப் போல் அது இருக்கிறது. நீங்கள் ஒரு வளைந்த பற்களைப் பார்க்கிறீர்கள். "உண்மையில் அது ஒரு மாமிச பட்சிணி." இல்லை, அந்த விலங்கு தாவரங்களை மட்டும் உண்ணும் பிராணியாகும். அதைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள். "அது ஒரு இறைச்சி உண்ணும் பிராணியாக இருக்கிறது! கூர்மையான பற்களைப் பாருங்கள் ஹோவிந் அவர்களே." என்று கூறுகிறீர்கள். இல்லை, மன்னித்துக்கொள்ளுங்கள், அது ஒரு பழ மட்டை.யாக இருக்கிறது. "அதைப் பற்றி என்ன சொல்லுகிறீர்கள்? அது ஒரு மாமிசப் பட்சிணி!" இல்லை, அது ஒரு தாவரங்களை உண்ணும் குரங்காகும். தன்னுடைய வாழ் நாள் அனைத்தும் மாமிசத்தை உண்ண மறுத்த ஒரு சிங்கம் இருந்தது. அது 11 ஆண்டுகள் வயதுவரை வாழ்ந்தது. ஒரு நடிக்கும் பிராணியாக அது திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது. இறுதியாக அது ஒரு திரைப்படத் தயாரிப்பின்போது கொல்லப்பட்டது. எந்த வகையான மாமிசத்தையும் உண்ண அது மறுத்தது. வெள்ளத்திற்குப் பின்பு, ஆதியாகமம் 9-ஆம் அதிகாரத்தில் கூறப்பட்டதுபோல், தேவன் நோவாவையும் அவன் குமாரர்களையும் ஆசீர்வதித்து, போங்கள் பலுகிப் பெருகுங்கள் என்றார். மேலும் அவர்கள் பலுகிப்பெருகினார்கள். உண்மையிலே இங்கு நாம் இருக்கிறோம். அவர் சொன்னார், "உங்களைப் பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும் உண்டாயிருக்கும்." என்றார். வெள்ளத்திற்குப் பின்பு என்ன மாற்றம் முதலில் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? விலங்குகள் மனிதனைக் கண்டு அஞ்சின. அவைகள் அதற்கு முன்பு அஞ்சவில்லை. இப்பொழுது அவைகள் மனிதனுக்கு அஞ்சுகின்றன. வெள்ளத்திற்குப் பின்பு நடந்த இரண்டாவது மாற்றம் என்னவெனில்; "நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக." என்று தேவன் கூறினார். தற்போது நீங்கள் மாமிசத்தை உண்ணலாம், மற்றும் உலகத்திலே அதனால் பல துன்பங்கள் இருக்கின்றன. விலங்குகள் துன்பப்படுகின்றன, எனவே நம்மால் சாப்பிட முடிகிறது. மேலும் மாமிசத்தை உண்பது முற்றிலும் சரியாக இருக்கிறது. ஆனால், தேவன் ஒரு முழுமையான உலகத்தைச் சிருஷ்டித்தார், மேலும் மனிதன் அதை ஆண்டான். மனிதன் மரணத்தையும் மற்றும் பாவத்தையும் இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தான். " இக்காலத்துப் பாடுகள் எனக்கருதுகிறேன்...." என்று பவுல் இவ்வாறு எழுதுகிறார்; இன்றைய உலகில் துன்பம் இருக்கிறதா? அதிகமாகவே இருக்கிறது. இந்த முழு உலகமும் புலம்பலினாலும் மற்றும் பிரசவ வேதனையினாலும் மற்றும் வேதனையினாலும் நிறைந்திருக்கிறது. "நான் காட்டில்விடப்பட்டவனைப்போல் இருக்கிறேன். தேவனின் மீதுள்ள விசுவாசத்திற்கு எதிராக எழுத எனக்கு நோக்கமில்லை, ஆனால் உலகத்தில் மிகவும் பரிதாபமானது இந்த உலகத்தில் இருப்பதுபோலத் தெரிகிறது." என்று சார்லஸ் டார்வின் கூறுகிறார். சார்லஸினால் ஏன் என்பதைப் புருந்துகொள்ள முடியவில்லை. துன்பங்கள் உள்ள ஒரு உலகத்தைத் தேவன் படைத்தார் என்று சார்லஸ் கூறினார். சார்லஸ் அவர்களே, தேவன் துன்பம் உள்ள இந்த உலகத்தைப் படைக்கவில்லை! "போரிலிருந்து பஞ்சம், இயற்கையின் மரணம் இவைகளிலிருந்து மிகவும் உயர்த்தப்பட்ட பொருள் வருகிறது, நாம் திறமையுள்ள ஒன்றாக மாறிக்கொண்டு வருகிறோம்." என்று சார்லஸ் டார்வின் முடிவாகச் சொல்லுகிறார். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். சார்லஸ் அவர்களே, போர், பஞ்சம் மற்றும் மரணமானது நம்மை உயர்த்துகிறது என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? எது நம்மை உயர்ந்த நிலைக்கு உயர்த்திக்கொண்டிருக்கிறது? அதைத்தான் அவர் சொல்லுகிறார், மேலும் அதைத்தான் இன்று பரிணாமம் போதிக்கிறது. ஒன்றும் மாற்றமடையவில்லை. பரிணாமவாதிகளுக்கு மரணம் என்பது நமது வரலாற்றின் தலைவன் என்பதாக இருக்கிறது. தேவன் பரிபூரணமான உலகத்தைச் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. மனிதன் அதை ஆண்டான். ஒரு மனிதனால், பாவம் உலகத்திற்குள் வந்தது, மற்றும் பாவத்தினால் மரணம் வந்தது. அது ஆதாமின் குற்றம். நீங்கள் மோதி உடைத்த காருக்கு அதன் தயாரிப்பாளரைக் குற்றம் சொல்ல முடியாது. உடைக்கப்பட்ட காரின் படத்தைத் தயாரிப்பாளருக்கு அனுப்பி, இதுபோன்ற ஒரு காரை ஏன் உருவாக்கினீர்கள்? என்று கேட்டுப்பாருங்கள். தொழிற்சாலையிலிருந்து இது வெளியே சென்றபோது நான் இவ்வாறு பார்க்கவில்லையே என்று கூறுவார். இன்று, நண்பர்களே, நாம் குப்பைகள் கிடக்கும் இடத்தில் வாழ்ந்து வருகிறோம். பூமிக்கோளின் மேல் வாழ்ந்து வருவதை நான் பாராட்டுகிறேன், மற்றும் நாக்ஸ்விலியானது மிகவும் அழகான இடமாகும்; ஆனால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆதாமும் மற்றும் ஏவாளும் பார்த்ததிற்கு ஒப்பிடும்போது இது ஒன்றுமே கிடையாது. இது குப்பைகள் கிடக்கும் இடமாக இருக்கிறது, ஆனால் தேவன் மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவருவார். ஒரு நாளில், "நரியானது ஆட்டுக்குட்டியுடன் தங்கியிருக்கும், சிறுத்தைப் புலியானது சிறுவனுடன் கீழே படுக்கும்; மேலும் கன்றுக்குட்டியும் சிங்கமும் சேர்ந்திருக்கும், மேலும் ஒரு சிறுவன் அவைகளை நடத்திச்செல்லுவான்." ஒரு சிறுவன் சிறுத்தைப் புலியை அல்லது சிங்கத்தை வழி நடத்தப்போகிறானா? "ஏய், அம்மா, நான் கண்ட அந்தப் பெரியப் பூனையைப் பார். நான் அந்தப் பூனையை வைத்துக்கொள்ளவா அம்மா?" " நிச்சயமாக, என் பிரியமே, பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் போட்டு அதற்கு கொஞ்சம் புல்லைக் கொடு." என்று விலங்குகள் பேசிக்கொள்ளும். ஹோவிந் அவர்களே, சிங்கங்கள் புல்லைத்திண்ணாது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஓ, அவைகள் ஒரு நாளில் திண்ணும். சிங்கங்கள் காட்டுமாடுகள் புல்லைத்திண்பதுபோல் வைக்கோலைத் திண்ணும். கனடாவில் உள்ள ஒரு மனிதர், தன்னுடைய தோட்டத்தில் கரடிகள் தொடர்ந்து இரண்டு மணி நேரங்கள் புல்லைத் திண்ற காட்சியின் வீடியோ படக்காட்சியை எனக்கு அனுப்பினார். வேறோன்றும் இல்லை, புல்லைத் திண்றது. சிறுவன் நூறு வயதாகும்போது இறப்பான் என்று வேதாகமம் கூறுகிறது. இறுதியாக நாம் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருடங்கள் ஆட்சிசெய்ய இருக்கிறோம். அதை உறுதிசெய்யப் போதுமான விபரங்கள் வேதாகமத்தில் இல்லை, ஆனால் ஆயிரம் வருடங்கள் உள்ள காலப்பகுதி வரப்போகிறது என்று தெரிகிறது. இந்தக் காலத்தின் இறுதிக்குப்பின்பு, நீங்கள் மீட்கப்பட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகள் இங்கே இருப்பதற்கு நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்கள். அனைத்துமே ஏதேனின் தோட்டத்தின் நிலையில் இருந்த மாதிரி மறுபடியும் கொண்டுவரப்படும்! பிள்ளைகளே, உங்களுடைய சொந்த வளர்ப்புப் பிராணியாகிய டைனோஸரஸை உடையவர்களாக இருப்பீர்கள். அது மிகவும் சிறப்பாக இருக்கப்போகிறது. அதற்குப்பிறகு தேவன் புதிய வானங்களையும் மற்றும் புதிய பூமியையும் சிருஷ்டிப்பார். இவைகளைப் பற்றி ஏசாயா 65-ஆம் அதிகாரம், II பேதுரு 3-ஆம் அதிகாரத்தில் புதிய வானங்கள் மற்றும் புதிய பூமியைப் பற்றிக் கூறுகின்றன. வெளிப்படுத்தின விஷேசம் 21-ஆம் அதிகாரத்தில், புதிய வானம், புதிய பூமியைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். அது எதுபோன்று இருக்கும் என்று நீங்கள் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது. அதை என்னால் கற்பனை செய்துபார்க்கமுடியவில்லை. "கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, மனிதனின் இருதயத்தில் அது நுழையவுமில்லை, அவரை நேசிப்பவர்களுக்குத் தேவன் ஆயத்தமாக்கினவைகளை." என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் சிந்திக்கக்கூட முடியாத காரியங்களைத் தேவன் தன்னுடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கத் திட்டம் வைத்திருக்கிறார். நீங்கள் சிந்திக்க முயற்சிசெய்வதற்காக ஒன்றை நான் உங்களுக்குத் தருவேன், அதன்பின்பு நாம் இந்தக் கூட்டத்தை முடித்துவிட்டு மதிய உணவுக்குச் செல்லலாம். இது மின்காந்த நிறமாலையாக இருக்கிறது. நான் இயற்பியலைப் போதித்தேன். இங்கு எங்கேயோ ஒரு இடத்தில் அதை நான் பொருத்தவேண்டும். இது அனைத்துவிதமான வித்தியாசமான அலைவரிசைகளையுடையது; வானொலி அலைகள், நுண்ணலைகள், ஒளி என்கிற மிகச்சிறிய பகுதியிருக்கும் பகுதி உட்பட இருக்கிற நிறமாலையாகும். சிவப்பு, மஞ்சல், பச்சை, ஊதா, இண்டிகோ மற்றும் கத்திரிப்புக் கலர். உங்களது கண்களால் அந்த நிறங்களைக் காண முடிகிறது. பெரிய நிறமாலையின் ஒரு சிறிய துண்டுதான் அதுவாக இருக்கிறது. ஒருவேளை, தேவன் நாம் பரலோகம் சென்றபின்பு புதிய கண்களை நமக்குத் தருவாரானால், முழுமையான நிறமாலையை நம்மால் பார்க்க முடிகிறது. அதன் அர்த்தம் என்னவெனில், அங்கே முற்றிலும் புதிய நிறங்கள் இருக்கும். இந்த நிறங்களின் புதிய நிழல்கள் கிடையாது; முற்றிலும் புதிய நிறங்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன். எனவேதான் பரலோகம் மிகவும் பெரியதாக இருக்கவேண்டும். பெண்களுக்கான ஆடைமாற்றும் அறைக்காக அப்படியிருக்கும். "அன்பே, இந்த நிறம் இதற்குப் பொருத்தமாக இருக்குமா?" என்று என்னுடைய மனைவி சொல்லுவாள். "அன்பே, பூமியில் இருந்தது மாதிரி என்னால் சொல்ல முடியாது." என்று நான் அவளுக்குச் சொல்லுவேன். அவள் என்னுடைய கழுத்து அணிகளுடன் என்னுடைய ஆடைகளை எண்ணவேண்டியது இருக்கும், ஏனெனில் எது எதுவுடன் சரியாக இருக்கும் என்பது எனக்குத் தெரியாது மேலும், நான் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். ஆடையணிந்திருக்க விரும்புவேன், அவ்வளவுதான். இதைத் தயவுசெய்து வெளியே வைக்க முடியுமா? யாராவது இதுபோன்று உணர்கிறீர்களா? "எதுவுடன் எது இருக்கப்போகிறது என்று எனக்குத் தெரியாது. அதை ஒன்றுசேர்த்தாற்போன்று எனக்காக வையுங்கள்." என்று நீங்கள் சொல்லுவீர்கள். அங்கே நீங்கள் செல்லுகிறீர்கள். "அது உங்களுக்குப் பொறுத்தமாக இல்லை." என்று உங்களின் அம்மா அல்லது மனைவி சொல்லுகிறார்கள். ஒருவேளைத் தெரிந்துகொள்வது எனக்கு எவ்வாறு இருக்கும்? அதற்குரிய விதிமுறைப் புத்தம் எங்கே இருக்கிறது? நாம் பரலோகம் சென்றபின்பு, தேவன் நிறமாலையைக் காண்பதற்கு நமக்குப் புதிய கண்களைக் கொடுப்பதை கற்பனை செய்துபாருங்கள். மேலும் இசைக்கருவிகளிலிருந்து வருகிற சத்தத்தை நாம் பார்க்க இயலும். தற்போது அவைகளை நாம் கேட்க மட்டுமே முடிகிறது. நீங்கள் அவைகளைக் காணமுடிந்தால் அல்லது அவைகளை நுகரமுடிந்தால் என்ன? ஆ.... ஒரு சுவையான சத்தம். அதை மறுபடியும் வாசியுங்கள். முழுமையான நிறமாலையைக் கேட்பதற்கு நாம் புதிய செவிகளைப் பெற்றால் என்ன? நிறங்களை நீங்கள் கேட்கமுடியுமானால், அல்லது நுகரமுடியுமானால் அல்லது சுவைக்கமுடியுமானால் என்ன? ஆச்சர்யமாக இருக்கிறது, ஊதா, ஆச்சர்யமாக இருக்கிறது! தற்போது ஐந்து உணர் உறுப்புகளே நமக்கு இருக்கின்றன. அங்கே ஒருவேளை அதிகமாகவும் இருக்கலாம். ஆனால், இந்த ஐந்து உணர் உறுப்புகளை எடுத்து அவைகளை முற்றிலுமாக விரிவாக்கினால், பரலோகத்தைச் சுற்றிலும் நாம் என்றென்றும் நடந்துகொண்டிருப்போம். "ஆச்சர்யமாக இருக்கிறது, நீங்கள் அதை நுகர்ந்தீர்களா? அதை சுவைத்துப்பாருங்கள். ஆச்சர்யமாக இருக்கிறது" என்று சொல்லுவீர்கள். என்னுடைய முதல் கணினியானது IBM XT-8088. 4.77 மெகாஹெர்ட்ஸ்ஸாக இருந்தது. ஒரு திட்டத்தை நீங்கள் அதில் ஏற்றவேண்டுமானால், நீங்கள் மதிய உணவு உண்டபின்புதான் உங்களது மின்னஞ்சலுக்குச் செல்ல முடியும். மேலும் ஒரு சிறிய தூக்கமே தூங்கிவிடலாம், ஏனெனில் அது நீண்ட நேரம் எடுக்கப்போகிது. எத்தனைபேர்கள் பழங்காலத்துக் கணினிகளை வைத்திருந்தீர்கள்? நாம் அவைகளை மேம்பாடடையச்செய்தோம். இங்கே இருக்கிற இந்தக் கணினியானது பெண்டியம் 4, 3.4 ஜிகாஹெர்ட்சுடன் அதிக இழைகளுடன் ஆனது மற்றும் ஒரு 60 ஜிக் ஹார்ட் ட்ரைவ், 2 ஜிக் ரேம் உடையது. அதே திட்டங்கள் ஓடுகின்றன, ஆனால் அதிக வேகமானவை மற்றும் அவைகள் பல நிறங்களில் இருக்கிறது! கணினி மேம்பாடடையச் செய்தல் என்று அது அழைக்கப்படுகிறது. நீங்கள் உங்களது உடலில் பார்வைகளுடனும் மற்றும் ஒலியுடனும் வாழ விரும்புகிறீர்கள் எனில், மற்றும் இந்த உலகத்தை சுவைக்கவும், பொறுத்திருங்கள் பரலோகம் செல்லும்வரை முடிந்ததா? நீங்கள் ஒரு முறையினை மேம்பாடடையச்செய்கிறீர்கள், அது உங்களை ஆச்சர்யப்படுத்தப்போகிறது. ஒரே கேள்வி என்னவெனில்: நீங்கள் ஆச்சர்யப்படப்போகிறீர்களா? 14 ஆண்டுகளுக்கு முன்பாக கிறிஸ்துவுக்குள் பிடிக்கப்பட்டு மூன்றாம் வானம் வரை சென்ற ஒரு மனிதனை நான் அறிவேன் என்று பவுல் கூறுகிறார். அவரைப் பற்றியே அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் இறந்து மற்றும் மூன்றாம் வானம் வரை பிடிக்கப்பட்டார் என்று நான் நினைக்கிறேன். மேலும் சொல்லமுடியாத காரியங்களை அவர் கேட்டார். அதை உங்களால் விவரிக்கக்கூட முடியாது. பிறவியிலே கண்பார்வையில்லாதவனாய்ப் பிறந்தவருக்கு, நிறங்களைப் பற்றி உங்களால் விவரிக்க முடியுமா? சிலவேளையில் அதை முயற்சித்துப் பாருங்கள். பிறவியிலே காதுகேட்காதவராகப் பிறந்த ஒருவருக்கு ஒலியினைப் பற்றிய விளக்கங்களை நீங்கள் எழுதமுடியுமா? சிலவேளையில் அதை முயற்சித்துப் பாருங்கள். பூமியில் வசிக்கிற ஒருவருக்குப் பரலோகம் பற்றி விவரிக்கமுடியுமா? அதைச் செய்துமுடிக்க இயலாது. உங்களால் அதை விளங்கிக்கொள்ள முடியாது. உங்களுடையத் திறமைகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், பவுல் அந்த அனுபத்திலிருந்து திரும்பி பூமிக்கு வந்தபோது, அவருடைய வாழ்வின் மீதி நாட்களில், அவர் மறுபடியும் பரலோகம் செல்லுவதற்கு மிகவும் ஆர்வமுள்ளவராய் இருந்தார். "நான் தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம்." என்று பவுல் பிலிப்பியர்களுக்குக் கூறினார். "பவுல் பிரசங்கிக்க நகரத்திற்குச் சென்றிருந்து, அவர்கள் சொல்லியிருக்கலாம், "பவுலே, நீங்கள் அதைப் பிரசங்கிப்பதை நிறுத்தாவிட்டால், நாங்கள் உங்களைக் கொன்றுவிடுவோம்." "உண்மையாகவா? மனிதரே, உங்களுடைய சிறந்த முயற்சியை எனக்குக் கொடுங்கள். நான் செல்லுவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்." என்று பவுல் கூறியிருப்பார். அவர் செல்லுவதற்கு ஆவலுள்ளவராய் இருந்தார். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் செல்லுவதற்கு ஆயத்தமாக இருக்கிறீர்களா? தேவன் இந்த உலகத்தை சிருஷ்டித்தார். இது அவருக்கு உரியது. அவர் சட்டங்களை உருவாக்குகிறார், நாமோ அவருடைய அனைத்துச் சட்டங்களையும் உடைத்துப்போட்டோம். "பொய் சாட்சிசொல்லாதிருப்பாயாக" என்று அவர் நமக்குத் தெளிவாக்கூறினார். பொய் சொல்லாதே. நாம் அனைவரும் பொய் சொல்லியிருக்கிறோம். "களவு செய்யாதிருப்பாயாக" என்று அவர் நமக்குச் சொன்னார்; நாம் அனைவரும் திருடியிருக்கிறோம், அது பத்து சட்டங்கள் மட்டுமே...... பழைய ஏற்பாட்டுப் புத்தகத்தில் 600 க்கும் மேற்பட்ட கட்டளைகள் இருக்கின்றன. அது பத்து கட்டளைகள் மட்டுமே. அந்தச் சட்டங்களில் பலவற்றை நாம் உடைத்திருக்கிறோம். அங்கே கேள்வியே இல்லை; நாம் குற்றவாளிகளாக இருக்கிறோம், நாம் தண்டிக்கப்படப்போகிறோம். அல்லது, நாம் ஒரு பரிகாரம் கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது. அங்கேதான் இயேசு உள்ளே வருகிறார். உங்களுடைய பாவங்களுக்குப் பரிகாரம்செய்ய அவர் விருப்பமுள்ளவராகவும் மற்றும் பரிகாரத்தைச் செலுத்தமுடிந்தவராகவும் அவர் இருக்கிறார். 1969-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று, நான் இவ்வாறு கூறினேன், "ஆண்டவரே, நான் ஒரு பாவி என்றும் மற்றும் நரகத்திற்கு நேராகச்செல்ல நான் தகுதியுடையவனாய் இருக்கிறேன், ஆனால், நீங்கள் எனக்காக மரித்தீர் என்று நான் விசுவாசிக்கிறேன், நீங்கள் என்னை மன்னிக்கவேண்டும் என்று உம்மிடத்தில் கேட்கிறேன். என்னுடைய பாவத்திற்கு நீங்கள் பரிகாரம் செலுத்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன் ஆண்டவரே. என்னை மன்னியுங்கள், நான் உம்முடைய சட்டங்களை உடைத்திருக்கிறேன் மற்றும் நான் நம்பிக்கையில்லாதவனாய் இப்பொழுது இருக்கிறேன், எல்லாம் இழந்தவனாக உதவியின்றி இருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைச் சரிசெய்ய முடியும் என்று நான் விசுவாசிக்கிறேன். தயவுசெய்து என்னை மீட்டுக்கொள்ளும்." என்று கூறினேன். "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." என்று வேதாகமம் கூறுகிறது. எனவே அந்த நாளில், நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன் மற்றும் என் இருதயத்தை அவருக்குக்கொடுத்தேன், அவர் என்னை இரட்சித்தார். மேலும் இன்று நான் மரித்தாலும், பரலோகம் செல்லுவேன். அது நான் நல்லவனாக இருப்பதனால் அல்ல. நீங்கள் நகைச்சுவையாகச் சொல்லுகிறீர்களா? எனக்கு என்ன தகுதியாய் இருக்கிறதோ, அதை நான் பெற்றுக்கொள்வேனாகில், நான் பிரச்சனையில் இருக்கிறேன். நீங்களும்கூடத்தான். அந்தப் பிரசங்கியார் ஒரு நேரம் ஆலயத்தின் உதவி ஊழியரோடு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார்; மற்றும் அந்தப் பிரசங்கியார் ஆலயத்தின் ஓரத்தில் உள்ள வழியில், பின்புறமாக உள்ள கதவின்பக்கம் வேகமாக ஓடினார். சிலர் அவரை நிறுத்தி, போதகரே, போதகரே, எங்கே செல்லுகிறீர்கள்? என்று கேட்டனர். அவர் சொன்னார், " நான் இங்கிருந்து வெளியே செல்லவேண்டும்." என்றார். "ஏன்? ஏன், போதகரே? என்று அடுத்தவர் கேட்டார். "நான் அங்கே அந்த உதவி ஊழியரோடு ஜெபம் செய்துகொண்டிருந்தேன்." என்றார். "ஆமா, அப்பொழுது என்ன நடந்தது?" என்று அடுத்தவர் கேட்டார். " ஆண்டவரே, நான் எதற்குத் தகுதியாக இருக்கிறேனோ, அதை எனக்குத் தாரும் என்று அந்த உதவி ஊழியர் ஜெபம் செய்துகொண்டிருந்தார்." என்றார். அவர் அதைப் பெற்றுக்கொண்டதற்கு அடுத்து நான் அடுத்தவனாக பெற்றுக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் இங்கிருந்து வெளியே செல்லுகிறேன்!" என்றார். எனக்கு என்ன தகுதியோ அதைப் பெற்றுக்கொள்ள நான் உண்மையிலே விரும்பவில்லை. தேவனுடைய இரக்கத்தைப் பெற நான் விரும்புகிறேன். நீங்கள் அந்த தேவனின் இரக்கத்தைப் பெற்றுக்கொண்டீர்களா? நீங்கள் இன்று மரித்தால், நீங்கள் எங்கே செல்லுவீர்கள்? புகையும் இடத்திற்கா அல்லது புகையாத இடத்திற்கா? நீங்கள் நீண்ட காலமாக மரித்தவராக இருப்பீர்கள். நீங்கள் அந்த உண்மையைப் பற்றி சிந்திக்கவேண்டும். நீங்கள் மீட்கப்பட்டவரானால், பரலோகத்தின் காரியத்திற்காக நீங்கள் இந்தப் பூமியில் என்ன செய்துகொண்டுவருகிறீர்கள்? நீங்கள் ஆண்டவருக்காக என்ன செய்துகொண்டுவருகிறீர்கள்? பிள்ளைகளே, நீங்கள் தூங்கச்செல்லலாம். உங்களுக்கு இது விளங்காது; ஆனால் பெற்றோர்களே, நீங்கள் இதை விளங்கிக்கொள்வீர்கள். அம்மாவினால் ஆடைகளைத் துவைக்கலாம், காயப்போடலாம், அவைகளை மடித்துவைக்கலாம் மற்றும் படுக்கையறையின் கதவின் அருகே அடுக்கிவைக்கலாம். அந்தக் குழந்தை உள்ளே வருகிறது, மற்றும் அவைகளைப் பார்ப்பதுகூடக் கிடையாது. நான் எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறேன் என்பதை விளங்கிக்கொண்டவர்கள் எத்தனைபேர்கள்? அந்த ஆடைகளை நீங்கள் கவனிக்கக்கூட இல்லையா? இல்லை. பரலோகத்திலே தேவன் இருக்கிறார் என்று நான் நினைக்கிறேன், கீழே உள்ள தன்னுடைய பிள்ளைகளைக் கவனித்துப் பார்த்துக்கொண்டிருந்து இவ்வாறு சொல்லுகிறார், "என்ன செய்யப்படவேண்டும் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கேட்பார். கவனியுங்கள், எதாவது செய்யுங்கள்! யாருக்காவது நற்செய்தித் தாளைக் கொடுங்கள், அவர்கள் மீட்கப்பட உதவி செய்யுங்கள். நீங்கள் வேதாகம படிப்பு வகுப்புகளை ஆரம்பிக்கலாம். எதையாவது செய்யுங்கள். நீங்கள் ஆண்டவருக்காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? நிங்கள் இந்த வீடியோத் தொடரான படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸரஸ் பற்றி அறிந்து மகிழ்ந்திருப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். அனைத்து உண்மை மற்றும் அறிவியலின் உண்மைகள் பற்றி அறிவதைக் காட்டிலும் மிகவும் முக்கியமானது என்னவெனில், நீங்கள் பரலோகம் செல்லுவீர்களா அல்லது இல்லையா என்பதின் உண்மையை அறிவதே முக்கியமாகும். நிங்கள் இதுவரை கிறிஸ்துவை உங்கள் மீட்பராக நம்பவில்லையெனில், நீங்கள் பரலோகம் செல்ல உங்களுக்கு என்ன தேவையாக இருக்கிறது என்பதை விவரிக்க என்னை அனுமதியுங்கள். நாம் அனைவரும் பாவிகள் என்று வேதாகமம் கூறுகிறது. நாம் அனைவரும் தேவனுடைய சட்டங்களை உடைத்துவிட்டோம். சிருஷ்டிகருக்கு நாம் கீழ்ப்படியவில்லை. நாம் தீய காரியங்களைச் செய்திருக்கிறோம்.. நாம் பாவிகளாக இருக்கிறோம். சில மக்கள் மற்றவர்களைவிட மோசமானவர்கள், மனிதனின் பார்வையிலாவது, ஆனால் நாம் தேவனின் அனைத்துச் ச ட்டங்களையும் உடைத்திருக்கிறோம். நீங்கள் மனம் திரும்ப வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது. மனம் திரும்பு என்ற வார்த்தையின் அர்த்தம் "திரும்ப" இதனுடைய உண்மையான அர்த்தம் இரண்டு காரியங்கள்: உங்கள் பாவத்திலிருந்து திரும்புங்கள், மற்றும் தேவனுடன் திரும்புங்கள்" உங்களுடைய மனோபாவத்தில் ஒரு மாற்றத்தைத் தேவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார், அங்கே நீங்கள் சொல்லுங்கள், "ஆண்டவரே, இனிமேல் நான் தவறுசெய்ய விரும்பவில்லை. என்னை மன்னியுங்கள். நான் உங்களுக்கு விரோதமாக குற்றம் செய்திருக்கிறேன். சரியானதைச் செய்ய நான் விரும்புகிறேன். நீங்கள் பாவத்திலிருந்து திரும்பித் தேவனிடத்திற்குத் திரும்பிச் சொல்லுங்கள், தேவனே, நீர் தயவாய் என்னை மன்னிப்பீரா? என்னை மீட்பீரா? வேதாகமத்தில் உள்ள ரோமர் 3:23 சொல்லுகிறது, "எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்களாகினோம்." நீங்கள் ஒரு பாவியென்று ஒப்புக்கொள்ளவேண்டியிருக்கிறது. மேலும் வேதாகமத்தில், ரோமர் 6:23-ல் "பாவத்தின் சம்பளம் மரணம்." என்று சொல்லுகிறது. நம்முடைய பாவத்தினால் நாம் மரித்து, நரகம் போவதற்குத் தகுதியுடையவர்களாக இருக்கிறோம். ஆனால் இயேசு உங்களுக்காக மரித்தார். அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் பரலோகம் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இலவசமான மீட்பை அவரிடத்தில் கேட்கிற எவருக்கும் நித்திய வாழ்வு என்னும் பரிசை தேவன் தருவார் என்று ரோமர் 6: 23 கூறுகிறது. மேலும் ரோமர் 10:13 கூறுகிறது, "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான்." "கர்த்தாவே நான் ஒரு பாவி, தயவாய் என்னை மன்னியும் என்று அவரிடம் கேட்டால், நித்திய வாழ்வு என்னும் இலவசப் பரிசை அவர் உங்களுக்குத் தருவார். உங்களில் ஒவ்வொருவரும் இப்பொழுதே என்னுடன் சேர்ந்து ஜெபிக்கலாம். மேலும் கிறிஸ்துவை உங்கள் மீட்பராக ஏற்றுக்கொள்ள முடியும். அங்கே மாயாஜால வார்த்தைகள் இல்லை. தேவன் உங்கள் இருதயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார், அதனால் நீங்கள் இதைக் கருதிச்சொல்லமுடியுமானால், தேவன் உங்களை மன்னிப்பார். இதைச் சொல்லுங்கள், "அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நான் ஒரு பாவி என்று எனக்குத் தெரியும். நான் உம்முடைய கட்டளைகளை மீறி இருக்கிறேன். அதற்காக நான் வருத்தமடைகிறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். என்னுடைய கணக்கின்மேல் உம்முடைய இரத்தத்தை வைப்பீராக. என் பாவங்களின் நிமித்தம் என்னை மன்னித்து, பரலோகத்திற்குச் கொண்டுசெல்வீராக. இயேசுவின் நாமத்தில், ஆமென். வேதாகமம் சொல்லுகிறது, நீங்கள் கர்த்தரை நோக்கிக்கூப்பிட்டால், நீங்கள் மீட்கப்படுவீர்கள். எனவே, உங்களை மீட்கும்படி நீங்கள் கர்த்தரிடத்தில் கேட்டிருந்தால், அவர் உங்களை மீட்டுக்கொள்வார் என வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இப்போது வளர்வது உங்களின் பணியாகும். உங்கள் வேதாகமத்தை வாசியுங்கள், ஜெபம் செய்யுங்கள். வேதாகமத்தை விசுவாசிக்கிற ஒரு நல்ல சபையுடன் நீங்கள் பங்குகொள்ளுங்கள், ஒரு நல்ல கிறிஸ்தவராக வளர ஆரம்பியுங்கள். உங்களுக்கு மிக்க நன்றி. நாங்கள் ஏதாவது விதத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கமுடியுமானால், தொலைபேசியில் அழையுங்கள் அல்லது எழுதுங்கள். உங்களுக்கு உதவிசெய்வதால் நாங்கள் மிகவும் சந்தோஷமடைவோம். மேலும் தகவல்களுக்கு அல்லது சிருஷ்டிப்பு அறிவியல் நற்செய்தி ஊழியம் பற்றி அறிய, எங்களைத் தொடர்புகொள்ளவேண்டிய முகவரி: சிருஷ்டிப்பு அறிவியல் நற்செய்தி, தபால் அலுவலகப் பெட்டி எண்: 37338, பென்ஸகோலா, ஃப்ளோரிடா-32526, அமெரிக்கா என்ற முகவரியில் ஆங்கிலத்தில் தொடர்புகொள்ளவும். அல்லது தொலைபேசியில் தொடர்புகொள்ள : 1-850-479-3466. நீங்கள் எங்களுடைய் இணையதளமான www.drdino.com என்கிறதிலும் தொடர்புகொள்ளலாம். அதாவது www.drdino.com என்கிற இணையதளம். கருத்தரங்கு 2ஆ நிறைவடைகிறது -டாக்டர் ஹெண்ட் ஹோவிந் - www.drdino.com - [Ed.13.5]