கருத்தரங்கு 1 அ - டாக்டர் கென்ட் ஹோவிந்த் - www.drdino.com - தமிழ் (Tamil) நீங்கள் இதைப் பற்றி எப்பொழுதாவது நினைத்திருக்கிறீர்களா? நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்பதையே நான் உண்மையிலே உங்களிடம் கேட்கிறேன். நாம் ஏன் இங்கே இருக்கிறோம்? நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம்? அந்த வகையில், இந்த வாழ்க்கை முடிந்த பின்பு நாம் எங்கே போகப்போகிறோம்? இந்தக் கருத்தரங்கு இந்த பூமியின் வயதைக் குறித்துப் பேசுகிறது. டாக்டர் ஹோவிந்த் அவர்கள், இந்த உலகம் பலகோடி ஆண்டுகள் பழமையானது அல்ல என்பதைக் காண்பிக்க உறுதியான ஆதாரங்களை வழங்குகிறார். உண்மையிலே, ஆறு நாட்களில் படைக்கப்பட்டதை ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இதைக்குறித்து ஆதியாகமம் முதலாம் அதிகாரத்தில் நமக்குக் கூறப்பட்டுள்ளது. வணக்கம், எனது பெயர் எரிக், நீங்கள் இந்த ஆச்சரியமிக்கக் கருத்தரங்கைப் பார்த்து மகிழ்வீர்கள் என நாங்கள் நம்புகிறோம். இது டாக்டர் ஹோவிந்த் அவர்களால் வழங்கப்படுகிறது. இது "பூமியின் வயது" என்று அழைக்கப்படுகிறது. கருத்தரங்கு 1அ டாக்டர் கென்ட் ஹோவிந்த் - தமிழ் (Tamil Translation) மொழிபெயர்ப்பு: D. மந்திரி குமார், M.Sc. "பூமியின் வயது" கருத்தரங்கு எண் 1அ - டாக்டர் கென்ட் இ. ஹோவிந்த் நல்லது, எனது பெயர் கென்ட் ஹோவிந்த். இன்று இரவு டென்னிஸியில் இருப்பது மேன்மையாக இருக்கிறது. நான் உயர்நிலைப் பள்ளி அறிவியல் பாடத்தை 15 ஆண்டுகளாகக் கற்றுக்கொடுத்தேன். மேலும் தற்பொழுது 16 ஆண்டுகள் ஒரு நற்செய்தியாளராக, படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸர்கள் பற்றிய கருத்தரங்குகளை நடத்தி வருகிறேன். வேதாகமமானது, தவறில்லாத, நேர்த்தியான, உயிருள்ள தேவனால் அருளப்பட்ட வார்த்தை என்று நான் நம்புகிறேன் என்பதை முன்னதாகவே உங்களிடம் கூறிக்கொள்ளுகிறேன். உறையிலிருந்து உறைவரை இது உண்மையாகும். என் வேதாகமத்தின் உறையும் உண்மையாக இருக்கிறது. "கென்ட் ஹோவிந்துடையது." வேதாகமமானது, நீங்கள் இந்த உலகத்தை விட்டுப்போகும் முன்பு, அறிந்துகொள்ள வேண்டிய அடிப்படை அறிவுறுத்தல்களைக் கொண்டதாக இருக்கிறது. உண்மையிலே நீங்கள் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் ஆச்சர்யமிக்க நீண்ட காலத்திற்குள் போகப்போகிறீர்கள். நீங்கள் இந்த உலகத்தை விட்டுப்போன பின்பு, திரும்பி வரப்போவதில்லை. எனவே நீங்கள் போகும் இடம் சரியானதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள். இப்பொழுது, கிறிஸ்த்தவரான எனது கடமைகளில் ஒன்று: "எங்களில் இருக்கிற நம்பிக்கையைக் குறித்து எங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாக இருப்பதாகும்." இந்தப் பரிணாமக் கொள்கையை மறுக்கும் நல்ல பணியைக் கிறிஸ்த்தவர்கள் கடந்த சில நூற்றாண்டுகளாக செய்யவில்லை என்று நான் நினைக்கிறேன். மேலும், இந்தப் பரிணாமக் கொள்கையும், உண்மையிலே ஒரு மத நம்பிக்கையாகும். நாம் அதற்கு விட்டுக்கொடுத்து இருக்கிறோம். நாம் இந்த மத நம்பிக்கையை நமது பள்ளிப் பாடங்களிலும்; மற்றும் சட்ட முறையிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு அனுமதித்துவிட்டோம். எந்தவித அறிவியல் உண்மைகளூம் இல்லாத ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது நமது முழுச்சிந்தனைப் போக்குமுறையும் இருக்கிறது. பரிணாமக் கொள்கைக்கு உண்மையான அறிவியல் ஆதாரத்தை உடைய எவருக்கும் நாங்கள் 2,50,000 டாலர்கள் தொகையைப் பரிசாகக் கொடுப்பதாகக் கூறுகிறோம். தற்பொழுது 12 ஆண்டுகளாக அந்தப் பரிசுத்தொகை வழங்கப்படக் காத்துக்கொண்டிருக்கிறது. எந்த வகையிலும் அதற்குச் சரியான அறிவியல் ஆதாரம் இல்லை. இதனை மக்கள் நம்புகிறார்கள், அதை நான் புரிந்துகொள்ளுகிறேன்: எனினும், அது அறிவியலை உருவாக்காது. இப்பொழுது, நான் என்னுடைய கருத்தரங்கில் 3 காரியங்களைச் செய்துமுடிக்க முயற்சி செய்கிறேன். முதலாவதாக, தேவனுடைய வார்த்தையில் இருக்கும் உங்கள் விசுவாசத்தைப் பெலப்படுத்த நான் விரும்புகிறேன். இரண்டாவதாக, நீங்கள் இதுவரையில் மீட்கப்படவில்லையெனில், உங்களின் மனம் திரும்புதலுக்கு நான் முயற்சி செய்கிறேன். இப்பொழுது சொல்லுகிறேன், இரகசியமாக அல்ல, வெளிப்படையாகவே நான் உங்களைக் கேட்டுக்கொள்ளுகிறேன்! என்னுடைய வார்த்தைகள் தெளிவாக இருக்கிறதா? மூன்றாவதாக, நீங்கள் மீட்கப்பட்டிருந்தும் ஆண்டவருக்காக அதிகமாகச்செய்யவில்லையானால்,.... ஆண்டவருக்காகச் சேவைகள்செய்ய நான் உங்களை ஊக்கப்படுத்த முயற்சி செய்யப்போகிறேன். சரியா? நாம் இப்பொழுது எங்கே சென்றுகொண்டிருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரிகிறது. இது எனது மனைவியின் படம். இந்தப் படம் எனது மனைவி அல்ல. சென்ற கோடைகாலத்தில் எங்களது 31-வது திருமண ஆண்டு நிறைவு வந்தது. அப்பொழுது நாங்கள் திருமணம் ஆனதிலிருந்து இதுவரையில் எவ்வளவு பணம் செலவழித்திருக்கிறோம் என்று உட்கார்ந்து கணக்குப் பார்த்தோம். எல்லாப் பணத்தையுமே செலவழித்துவிட்டோம்! நாங்கள் புளோரிடா மாநிலத்தில் பென்ஸகோலா என்ற நகரில் வசிக்கிறோம். அங்கே வேறு என்ன இருக்கிறது? அங்கே ஒரு பெரிய புயல் பல பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அந்த நகரை மீண்டும் கட்டும் பணியில் நாங்கள் நல்ல வளர்ச்சி கண்டுகொண்டிருக்கிறோம். எனக்கு 3 பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒவ்வொருவரும் சிறப்பானவர்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணங்களை செய்துவைத்து விட்டோம். தேவனைத் துதியுங்கள்! அந்த வேலையைச் செய்துமுடித்துவிட்டோம்; அது மிகவும் ஆச்சர்யமானது! தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளுவதற்காகக் கூறுகிறேன். எங்களின் முழுக்குடும்பமும் ஊழியத்தில் பணிபுரிகிறது. இதுவரையில் எனக்கு 4 பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். மேலும் இதை அறியாதவர்களுக்காகக் கூறுகிறேன், உங்களுடைய சொந்தப்பிள்ளைகள் வாலிபத்தில் இருக்கும்போது, நீங்கள் பொறுமையை இழக்காமல் இருந்ததிற்காக, தேவன் பேரப்பிள்ளைகளை உங்களுக்கு வெகுமதியாகக் கொடுத்திருக்கிறார். அதை எத்தனைபேர்கள் ஏற்கனவே புரிந்துகொண்டீர்கள்? அது மகத்தானது, இல்லையா? அவர்கள் அனைவரும் என்னைச் சுற்றியே வாழ்கிறார்கள்; அத்துடன் எங்களுடைய ஊழியத்தில் பணிசெய்கிறார்கள்; அவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையினால் தேவனுக்குச் சேவைகள் செய்ய விரும்புகிறார்கள். அது எங்களுடைய குடும்பத்தில் ஒரு பெரிய பொக்கிஷமாக இருக்கிறது. எங்களுடைய ஊழியத்தில் சுமார் 40 ஆட்கள் இருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தையில் வைத்துள்ள உங்களின் விசுவாசத்தைப் பெலப்படுத்துவதற்கான காரியங்களைச் செய்ய நாங்கள் விரும்புகிறோம். உலகத்தைப் பற்றிய மக்களுடைய பார்வையை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். இந்த உலகத்தைப் பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. இது உங்களின் உலகப்பார்வை என்று அழைக்கப்படுகிறது. இந்த உலகத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்? சில மக்கள் இந்த உலகத்தை ஒரு விதமாகப் பார்க்கிறார்கள், மற்றவர்கள் அதை இன்னொரு விதமாகப்பார்க்கிறார்கள். நாம் இதைக் குறித்து ஒரு வினாடியில் பார்ப்போம். வாழ்க்கையின் 4 முக்கியமான கேள்விகளுக்கு எவ்வாறு பதில் கூறுவது? என்பதை, நீங்கள் இந்த உலகத்தைப் பார்க்கின்ற விதமானது தீர்மானிக்கிறது. பூமியின் மேலுள்ள ஒவ்வொரு மதமும் பதில் அளிக்க முயற்சிக்கும் 4 அடிப்படையானக் கேள்விகள் உள்ளன. நான் யார்? நான் எங்கிருந்து வந்தேன்? நான் ஏன் இங்கே இருக்கிறேன்? மேலும் நான் மரிக்கும்போது எங்கே போவேன்? நீங்கள் அந்தக் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதமானது, உங்களின் உலகப்பார்வையைப் பொறுத்தே முற்றிலும் தீர்மானிக்கப்படுகிறது. "உங்களுக்குத் தெரியுமா? இது ஆச்சர்யமானது - ஒன்றுமில்லாததில் இருந்து உண்டான ஒரு பெரு வெடிப்பு இதை உருவாக்கியது" என்று சில மக்கள் இந்த உலகத்தைப் பார்த்துக் கூறுகிறார்கள். அது மனிதனின் உலகப்பார்வை, பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் ஆனது. "உங்களுக்குத் தெரியுமா? அங்கே ஒரு ஒப்பற்ற வடிவம் இருக்கிறது - வடிவமைப்பாளர் ஒருவர் இருக்க வேண்டுமே!" என்று மற்ற மக்கள் இந்த உலகத்தை இப்படிப்பார்த்துக் கூறுகிறார்கள். அதுதான் படைப்பின் அடிப்படையில், உலகத்தைப் பற்றிய ஒரு உருவாக்குபவரின் உலகப்பார்வையாகும். மேலும் அந்த இரண்டு உலகப்பார்வைகளும் ஒன்றுடன் ஒன்று போரிடுகின்றன. யாரோ ஒருவர் தவறு செய்கிறார்; மேலும் அவர்கள் யார்? என்பதை காட்டுவதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நான் 90 க்கும் அதிகமான பல விவாதங்களை நடத்தி இருக்கிறேன். நான் பல்கலைக் கழகங்களில் 92 விவாதங்களை நடத்தியிருக்கிறேன். ஒன்று நாக்ஸ்விலிக் கல்லூரியில் டாக்டர் பிக்ளியுச்சி (Dr. Pigliuchi) அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்டது. நான் அவருடன் இரண்டுமுறை விவாதித்திருக்கிறேன்; அதை மறுபடியும் செய்வதில் நான் மகிழ்ச்சியடைவேன். அவர் சம்மதிப்பாரா என நான் சந்தேகிக்கிறேன். அப்படியே சம்மதித்தாலும் அது எனக்கு மேன்மையாக இருக்கும். நான் யாருடன் விவாதம் நடத்துகிறேனோ, அவர்கள் என்னைக் காட்டிலும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் நான் அவர்களை எளிமையாக தோற்கடிக்கிறேன். ஏனெனில், நான் சரியாக இருக்கிறேன், அவர்களோ தவறாக இருக்கிறார்கள். இது முற்றிலும் எளிமையானது. மேலும் பரிணாமக் கொள்கை உண்மையானால், வாழ்க்கையின் 4 முக்கியமானக் கேள்விகளுக்கு எப்படிப் பதில் கூறுவீர்கள்? நான் யார்? நான் என்னத்திற்குத் தகுதியானவன்? நல்லது, பரிணாமக் கொள்கை உண்மையானால், நீங்கள் ஒன்றுக்கும் முக்கியமில்லாதவர்களாக இருக்கிறீர்கள். கடற்கரையில் கழுவப்படும் சாதாரண புரோட்டோப்பிளாஸத்தின் ஒரு துண்டாக இருக்கிறீர்கள்; நீங்கள் ஒன்றிற்கும் பிரயோஜனமற்றவர். உண்மையிலே நீங்கள் பிரச்சனையின் பகுதியாக இருக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் சுற்றுச் சூழலைப் மாசுபடுத்துபவர்களில் ஒருவராக இருப்பதனால், உங்களை அகற்றுவதே நல்லது. பாருங்கள், பரிணாமக் கொள்கை உண்மையானால் அது சாதாரண சிந்தனையே. நான் எங்கிருந்து வந்தேன்? நல்லது, பரிணாமம் உண்மையானால், சுமார் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இவ்வுலகின் சிதறலால் நீங்கள் வந்திருக்கிறீர்கள். நான் ஏன் இங்கே இருக்கிறேன்? வாழ்க்கையின் நோக்கம் என்ன? நல்லது, பரிணாமம் உண்மையானால், வாழ்க்கைக்கான நோக்கமில்லை. எனவே நீங்கள் வினோதமாக இருப்பீர்கள். உங்களுக்கு நல்லதாக உணர்வதைச் செய்வீர்கள். நான் மரிக்கும்போது எங்கே போவேன்? நல்லது, பரிணாமம் உண்மையானால், நீங்கள் புதைகுழிக்குள் போவீர்கள், பின்னர் ஒரு புழுவாகவோ அல்லது தாவரமாகவோ மறுபிறவி அடைவீர்கள். ஆனால் பாருங்கள், "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது அது உண்மையானால், அந்த கேள்விகளுக்கு முற்றிலும் வித்தியாசமான பதில்களை அது வைக்கிறது. தேவன் யார்? மற்றும் அவர் விரும்புவது என்ன? என்று கண்டுபிடித்து, மேலும் அவர் என்ன கூறுகிறாரோ, எதை விரும்புகிறாரோ, அதன்படி செய்ய முயற்சிப்பீர்கள். அவர் இந்த இடத்தை உருவாக்கினபடியால், அவர் இதன் உரிமையாளராக இருக்கிறார். அவர் ஒழுக்க முறைகளை உருவாக்குகிறார் என்பது அதன் அர்த்தமாகும். அவர் என்ன விரும்புகிறார்? என்று கண்டறிவது நமக்கு நல்லது. மேலும் அவரின் ஒழுங்கு முறைகளுக்கு நீங்கள் கீழ்படியாவிட்டால், இந்த நாட்களில் நீங்கள் பிரச்சனைக்கு உள்ளாவீர்கள். இதைக் குறித்து பின்னர் அதிக விபரமாகப் பார்க்கலாம். தேவன் பூமியைச் சிருஷ்டித்தார் என்ற உண்மையை பிசாசு வெறுக்கிறான். ஏதேன் தோட்டத்தில், முதல் பெண்ணாகிய, ஏவாளைப் பிசாசு கண்டுபிடித்தான். "ஏவாளே, செய்யக்கூடாது என்று தேவன் உண்மையிலே கட்டளையிட்டாரா?" என்று அந்தப் பெண்ணிடம் அவன் கூறிய முதல் காரியம் ஆகும். தேவனின் வார்த்தைகள் பற்றிய சந்தேகங்களை அவன் எழுப்புவதற்கு முயற்சி செய்துகொண்டிருந்தான். தேவனின் வார்த்தைகள் பற்றிய சந்தேகங்களை சாத்தான் எப்பொழுதும் எழுப்ப முயற்சி செய்கிறான். நவீன பல வேதாகமங்களின் மொழிபெயர்ப்புகளில் காணப்படும் சில குழப்பங்களுக்கான பல காரணங்களில் அதுவும் ஒன்றாகும். வீடியோ எண் 7-ல் அதைப்பற்றி நாம் அதிகமாக அறிய இருக்கிறோம். அவன் அவளிடம் கூறிய இரண்டாவது காரியம், "நீங்கள் சாகவே சாவதில்லை." அடிப்படையில், அவன் தேவனைப் பொய்சொல்லுபவர் என்று அழைத்துக்கொண்டிருக்கிறான். அவன் ஏவாளிடம் மூன்றாவதாகக் கூறியக் காரியத்தைத்தான் இன்று இரவு உங்களிடம் பேச விரும்புகிறேன். ஏவாளே, நீங்கள் அந்த மரத்தின் கனியைச் சாப்பிட்டாள் தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்று சாத்தான் கூறினான். மேலும் அங்கிருந்துதான் பரிணாமத்தின் முழு யோசனையும் ஆரம்பித்தது. அது சார்லஸ் டார்வினிலிருந்து ஆரம்பிக்கவில்லை; அது ஏதேன் தோட்டத்தில் சாத்தானிடமிருந்து ஆரம்பித்தது. நீங்கள் ஒரு தேவராக மாறமுடியும் என்று சிந்திப்பதையே அவன் விரும்புகிறான். மாணவ, மாணவிகளே, நாம் ஒரு அமீபாவைப்போல் ஆரம்பித்தும், பரிணாம வளர்ச்சி அடைந்துகொண்டும் வருகிறோம். பெரியதாகவும், மேலானதாகவும், பலமுள்ளதாகவும் மற்றும் புத்திசாலிகளாகவும் நாம் மாற்றம் அடைந்து கொண்டிருக்கிறோம் என்று அவன் கூறுகிறான். மேலும் சினிமாக்களில் உள்ளதுபோல் ஒரு நாள் அண்டைவெளியில் நட்சத்திர வாகனத்தில் பிரயாணம்பண்ணி, புதிய உயிர் வடிவங்களைக் கண்டுபிடிக்க இருக்கிறோம் என்று கூறுகிறான். "ஹோவிந்த், மற்ற கோள்களில் புத்தி ஜீவிகள் இருக்கிறார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா?" என மக்கள் எப்பொழுதும் என்னிடம் கேட்கிறார்கள். இல்லை, உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் கற்றுக்கொடுத்திருக்கிறேன்; இந்தக் கோளில் அதிக புத்தி ஜீவி இல்லை என்று நான் கூறுகிறேன். நான் இதில் அதிகமானவற்றைப் பார்க்கவில்லை. சாத்தான் ஒரு பொய்யன். நீங்கள் தேவர்களைப்போல் ஆகமுடியும் என்று அவன் கூறுகிறான். அதைத் தற்பொழுது பல மதக்கட்டுக்கதைகள் போதிக்கின்றன என்று நான் கூறுகிறேன். நீங்கள் தங்களில் ஒருவரானால், நீங்கள் பரலோகம் செல்லும்போது, நீங்களும் தேவராகிவிடுவீர்கள் என மோர்மோன் என்னும் குழுவினர் மக்களுக்குப் போதிக்கிறார்கள். நீங்கள் ஒரு மோர்மோனின் மனைவியானால், நீங்கள் பரலோகம் போகும்போது நித்திய காலமாகக் கருவுற்று, ஆவிக்குழந்தைகளைப் பெறுவீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். எனது மனைவிக்கு அங்கே செல்ல விருப்பமில்லை. அது பரலோகம் இல்லை என்று அவள் கூறுகிறாள். மோர்மோன் குழுவினரைச் சென்றடையச் சில புத்தகங்கள் இருக்கின்றன. மேலும் www.utlm.org என்னும் ஒரு இணையதளம் இருக்கிறது. நீங்கள் மோர்மோன் குழுவினரை ஆதாயம் செய்ய விரும்பினால், அதை நீங்கள் படித்தே ஆகவேண்டும். மனிதன் தேவராக முடியும் என்று ரோமன் கத்தோலிக்க மறையியலார்களில் சில முந்திய முக்கியஸ்த்தர்கள் போதித்திருக்கிறார்கள் என்பதைப் படிக்கும்போது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன். அது இப்பொழுதும் அவர்களின் மறைக் கல்வியில் இருக்கிறது. கத்தோலிக்கர்களில் பலர் அதைத் தற்பொழுது நம்புவதில்லை; மேலும் அவர்களின் சில தலைவர்கள் அதைப் போதித்திருக்கிறார்கள் என்றுகூட அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. ஆயினும், "ஆதாம் ஏதேன் தோட்டத்தில், மாம்சத்தில் வெளிப்பட்ட தேவர்" என்று கென்னத் கோப்லேண்ட் என்பவர் கூறியிருக்கிறார். உங்களுக்குள் தேவர் இல்லை; ஆனால் நீங்கள் ஒரு தேவராக இருக்கிறீர்கள் என்று அவர் கூறினார். என்னை மன்னிக்க வேண்டும் கென்னத், அதைப்பற்றி நீங்கள் வெறிகொண்டவராக இருக்கிறீர்கள், சரியா? விசுவாசிகள் கிறிஸ்து என்று அழைக்கப்படுகிறார்கள்; அதுதான் நாமாக இருக்கிறோம், நாம் கிறிஸ்து என்று கென்னத் ஹேகன் கூறுகிறார். இல்லை, நீங்கள் வெறிகொண்டவர். அந்தப் பதவி கிடைக்காது, அது உங்களுக்குக் கிடைத்தாலும் அதை உங்களால் செய்ய முடியாது. நீங்கள் தேவன் இல்லை, சரியா? நீங்கள் கிறிஸ்துவுமல்ல. சற்று நேரம் தண்ணீரின்மேல் நடந்திடுங்கள்; நான் அதைப் பார்க்க விரும்புகிறேன். லூசிபர் என்பவனே தேவனாக வேண்டும் என்று விரும்புகிறான். "நான் வானத்திற்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்கு மேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்....." என்று லூசிபர் கூறினான். "நான் வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன்,...." "...நான் மேகங்களுக்கு மேலாக உன்னதத்திற்கு ஏறுவேன்: நான் உன்னதமானவருக்கு ஒப்பாவேன்." என்று லூசிபர் கூறினான். பாருங்கள், சாத்தான் தேவனாக விரும்புகிறான். ஆனால் அந்த வேலை கிடைக்கவில்லை. எனவே அதைப்பற்றிய அனைத்திலும் வெறுப்புடன் இருக்கிறான். அவனால் தேவனாக முடியாதபடியால், அவன் ஏவாளிடம் பொய் கூறினான். மேலும் அவள் தேவனைப்போல் ஆகலாம் என்று கூறினான். சாத்தான் நம்மை வெறுக்கிறான், ஏனெனில் நாம் தேவனின் சாயலில் உருவாக்கப்பட்டு இருக்கிறோம். மேலும் மாணவனே, அந்தப் பொய்யினால் ஏவாள் எளிதில் ஏமாற்றப்பட்டாள். "ஆ, நான் தேவனைப்போல் ஆவேனா!" என்று ஏவாள் கூறினாள். ஒரு பொய்யை நீண்ட காலமாகவும், போதிய சத்தமாகவும் மற்றும் அடிக்கடியும் கூறினால், மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்றும், சிறிய பொய்யை நம்புவதைவிட பெரிய பொய்யை நம்புவதற்கு அவர்கள் ஆவலாக இருக்கிறார்கள் என்றும் ஹிட்லர் கூறுகிறார். நீங்கள் யாரையாவது ஒரு பொய்யை நம்ப வைக்க வேண்டுமானால், என்னுடைய அண்ணன்மார்கள் எனக்குச் செய்ததைப்போன்று நீங்கள் செய்ய வேண்டும். எனக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்கிறார்கள்; என்னைக் காட்டிலும் எப்பொழுதுமே வயதில் மூத்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இன்றும் அப்படித்தான் இருக்கிறார்கள். எனக்குச் சுமார் ஆறு வயதாக இருக்கும்போது, வடக்குப் பகுதியில் வளர்க்கப்பட்டேன். இதனிடையே, டென்னிஸியில், தெற்குப் பகுதியில் தற்போது இருக்கிறோம் என்று எனக்குத் தெரியும். எனவே இன்று யாராவது வடக்கில் உள்ளவர்கள் இங்கு இருக்கிறீர்களா? வட அமெரிக்கர்கள் எவரும் இருக்கிறீர்களா? 5, 6, 7 சரி. மேலும் தெற்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எத்தனைபேர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். ஓ......! நல்லது, 1863-ல் நடந்த போரில் யார் வெற்றிபெற்றார்கள் என்று சற்று நினைத்துப்பாருங்கள். "அது இன்னமும் முடியவில்லை!" என சிலர் கூறுவது எனக்குத் தெரிகிறது. ஆயினும்; வடக்கிலுள்ளக் கிழக்குப் போரியா, இள்ளினாய்ஸில் நான் வளர்க்கப்பட்டேன். தெற்கு மறுபடியும் எழுச்சியடைப் போகிறது என்பதை சரியாக நான் கணித்தபோது புளோரிடா மாநிலத்திற்கு மாறிச்சென்றேன். நான் சுமார் ஆறு வயதாக இருக்கும்போது, ஒரு நாள் காலை உணவிற்காக ஓடிவந்தேன். நான்தான் காலை உணவிற்கு முதலாவதாக வந்தேன்; அதனால், தட்டில் வைக்கப்பட்டிருந்த கடைசி வாழைப்பழத்தை நான் எடுத்துவிட்டேன். எனது இரண்டு அண்ணன்மார்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு உள்ளே வந்தார்கள். "ஹேய், கென்ட், அதுதான் கடைசி வாழைப்பழமா?" என்று அவர்கள் கேட்டார்கள். "ஆமாம், நான் அதை எடுத்துக்கொண்டேன்" என்று கூறினேன். உங்களில் எத்தனை பேர்களுக்கு அண்ணன்மார்கள் அல்லது அக்காமார்கள் இருக்கிறார்கள்? நீங்கள் அவர்களை ஜெயித்ததினால் வரும் அற்புதமான உணர்வு உங்களுக்குத் தெரியுமா? மாணவரே, அன்று காலையில் நான் ஜெயித்துவிட்டேன், அது எனக்குப் புரிந்தது. எனது வாழைப்பழம் அவர்களுக்குத் தேவைப்பட்டது. எனினும் அண்ணன்மார்கள்; தம்பிகளிடம் எதையும் கெஞ்சிக் கேட்க மாட்டார்கள். அவர்கள் கொடூரமான வலிமையினால் அவர்களை அடித்து அதை எடுத்துக்கொள்வார்கள், அல்லது எப்படியோ அவர்களிடம் பொய் சொல்லி, தந்திரமாக அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்ளுவார்கள். அப்படியே என்னுடைய அண்ணன்மார்களும், "ஹேய், கென்ட், வாழைப்பழங்கள் எவ்வாறு உருவாகின்றன என்று உனக்குத் தெரியுமா?" எனக் கேட்டார்கள். "தெரியாது" என்று நான் கூறினேன். நான் ஆறு வயதுடையவனாக இருந்தேன், இளைய மூளைகள் 18 அல்லது 20 வயதுவரையில் சரியாக வேலை செய்ய ஆரம்பிப்பதில்லை. சிறுவர்களை வளர்ப்பதிலிருந்து எத்தனை பெற்றோர்கள் அது சரி என்று ஒத்துக்கொள்ளுவீர்கள்? "வாழைப்பழங்கள் எவ்வாறு உருவாகின்றன?" என்று நான் கேட்டேன். நல்லது, தென் அமெரிக்காவில், மரத்தில் வாழும் இந்த சிலந்திப் பூச்சிகள் மரிக்கும்போது, அவைகளின் கால்களை மடக்கி மரித்துப்போகின்றன. இந்த மரித்த சிலந்திப் பூச்சிகளின் கால்களிலிருந்து வாழைப்பழம் வளர ஆரம்பிக்கின்றன என்று கூறினார்கள். மேலும், "உண்மையிலேச் சொல்லப்போனால் வாழைப்பழமானது சிலந்திப் பூச்சிகளின் மடங்கிய கால்களேத் தவிர வேறொன்றுமில்லை" என்று கூறினார்கள். "அண்ணன்மார்களே, நீங்கள் என்னிடம் பொய் சொல்லுகிறீர்கள். இது கடைசியானது என்று உங்களுக்குத் தெரிந்தபடியால், இந்த வாழைப்பழம் உங்களுக்குத் தேவைப்படுகிறது." என்று நான் பதில் கூறினேன். "இல்லை, தம்பீ, நாங்கள் பொய் சொல்லவில்லை." என்றார்கள். "நீ அந்தப் பழத்தை இரண்டாக வெட்டி அதின் நடுவே பார்; அந்தச் சிலந்திப் பூச்சிகளின் கால்கள் இருந்த இடத்தில் கறுப்புப் புள்ளிகளை; நீ இன்னமும் பார்க்கலாம்." என்று கூறினார்கள். அதற்குப் பின்பு சுமார் 3 ஆண்டுகளாக நான் வாழைப்பழங்களைச் சாப்பிடவே இல்லை. அவர்கள் என்னிடம் பொய் சொன்னார்கள். இதற்கு முன்பு உங்களிடம் பொய் சொல்லப்பட்டிருக்கிறதா? அந்தக் கருப்புப் புள்ளிகள் இல்லாதிருந்தால், நான் அந்தப் பொய்யை நம்பியிருக்கமாட்டேன். பாருங்கள், நீங்கள் யாரையாவது ஒரு பொய்யை நம்ப வைக்க வேண்டுமானால், அதைச் சில உண்மைகளுடன் கலக்கவேண்டும். எலிகளைக் கொல்லுவதற்கு அவர்கள் பல்லாண்டுகளாகப் பயன்படுத்தின அதே நுணுக்கமேயாகும். நீங்கள் ஒரு பாத்திரத்தில் விஷத்தை வைத்து எலிக்குக் கொடுப்பதில்லை. நீங்கள் ஒரு பாத்திரத்தில் நல்ல உணவுடன் கொஞ்சம் விஷத்தையும் கலந்து கொடுக்கிறீர்கள். உண்மையிலேயே ஒரே வகையல்லாத இரண்டு பொருட்களை ஒன்றாகக் கலந்துகொண்டிருக்கிறார்கள். பாருங்கள், எலிக்கு வைக்கப்படும் விஷ உணவில் 99.995% நல்ல உணவு இருக்கிறது. அப்படித்தான் நீங்கள் அவைகளை ஏமாற்றுகிறீர்கள். அதைப்போலவே மார்ல்போரோ சிகரெட்டுகளை விற்பதற்கு அவர்கள் பல்லாண்டுகளாக செய்திருக்கிறார்கள். அவர்கள் குதிரையோட்டிகளின் படத்துடன் கலப்படம் செய்கிறார்கள். மார்ல்போரோ விளம்பரத்தில் உள்ள எதையுமே நீங்கள் கவனித்துப்பார்க்கலாம்; குதிரையோட்டிகள் பற்றி ஏதாவது அதில் இருக்கும். நீங்கள் நின்று அதைப்பற்றி சிந்தித்தது உண்டா? மார்ல்போரோ சிகரெட் புகைப்பதற்கும் குதிரையோட்டிகளுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது? அனைத்து குதிரையோட்டிகளும் மார்ல்போரோவைப் புகைக்கிறார்களா? இல்லையே. குதிரையோட்டி ஆவதற்கு நீங்கள் மார்ல்போரோவைப் புகைக்க வேண்டுமா? இல்லையே. நீங்கள் மார்ல்போரோவை புகைக்க ஆரம்பித்தவுடன், நீங்கள் தானாகவே குதிரையோட்டிகளாக மாறிவிடுகிறீர்களா? இல்லையே. ஒரு குதிரையைப்போல் மணக்கக்கூடும், ஆனால் நீங்கள் ஒரு குதிரையோட்டி ஆவதில்லை. சரியா? உலகில் எவரும் புகைவதில்லை என்று உண்மையிலே ஆய்வுக்கூடங்களில் சோதனைகள் நடத்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒருவரும் புகைவதில்லையே! சிகரெட் மட்டுமே புகைகிறது; மனிதன் "உறிஞ்சுபவன்" மட்டுமே. அவ்வளவுதான். அந்தப் பொருட்களின்மேல் உண்மையான பெயர்களை அவர்கள் வைக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன். விளம்பரங்களில் சில உண்மைகளை நாம் பின்பற்றியிருக்க வேண்டும். அவர்கள் அவைகளை உண்மையிலே இப்படி அழைக்கவேண்டும்: புற்றுநோய்க்காரணி, சுவாசத்தை நாற வைப்பவன், இருதய நோயளிப்பவன், உயிர் ஆபத்துக்காரன், சளிப்பிடிக்க வைப்பவன் மற்றும் பண உறிஞ்சிகள் என்றே அவர்கள் அவைகளுக்குப் பெயர் வைக்கவேண்டும். பீர் மதுபானத்திற்கும் அவர்கள் அதையே செய்கிறார்கள். விளையாட்டுகளுடன் பீர் மதுபானத்தை இணைக்க அவர்கள் முயற்சி செய்கிறார்கள். விளையாட்டுகளுடன் பீர் மதுபானத்திற்கு என்ன தொடர்பு இருக்கிறது? இளம் முட்டாள் அல்லது இளம் ஊமையன் என்கிற டப்பாவைத் தன் கையில் பிடித்துக் கொண்டிருக்கிற கால்பந்து விளையாட்டு வீரர்களில் சிலரை அவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அவர்கள் அதை "இளம் அறிவாளிகள்" என்று அழைக்கிறார்கள்; உண்மையிலே அது அவர்களை அறிவாளிகளாக்குவதில்லை. இளம் ஊமையன் அல்லது தரம் தாழ்ந்தவன் அல்லது இறந்த நாய், அது எதுவாகவும் இருக்கட்டுமே, அதை அவன் வாங்கிக்கொண்டான். "மனிதா, இந்த மதுபானத்தைக் குடி, நீ கால்பந்து விளையாட்டு வீரராக முடியும்" என்று அவன் சொல்லுகிறான். சரியா? அந்த மதுபானத்தை நீ குடித்தால், உன் வாழ்க்கையைப் பாழாக்குகிறாய் என்று வேதாகமம் கூறுகிறது. "யாருக்குத் துக்கம்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கியிருப்பவர்களுக்கே" என்றும் அது நொதிக்கையில்கூட நீ அதைப்பார்க்காதே என்று வேதாகமம் கூறுகிறது. "தன் அயலானுக்குக் குடிக்கக் கொடுக்கிறவனுக்கு ஐயோ" என்று ஆபகூக் புத்தகம் கூறுகிறது. அந்த மதுபானத்தைத் தொடக்கூடாது என்று வேதாகமத்தில் உள்ளது. "ஹோவிந்த் அவர்களே, என்ன காரணம்? உங்களுக்கு பீர் மதுபானம் பிடிக்காதா? என்று ஒருமுறை ஒரு சிறுவன் என்னிடம் கேட்டான். "எனக்குத் தெரியாது. நான் அதை ருசிபார்த்ததே இல்லை. எனக்கு 52 வயதாகிறது, என் வாழ்க்கையில் ஒருபோதும் ஒரு துளிகூட அதைப் பயன்படுத்தவில்லை!" (இரண்டொரு முறை நைகுயில் என்ற மருந்தைப் பயன்படுத்தியிருக்கிறேன்) என்றேன். "நீங்கள் அதை ருசிபார்க்கவில்லையானால், உங்களுக்கு அது பிடிக்காது என்று எப்படி அறிவீர்கள்?" என்று அவன் கேட்டான். "மகனே, இப்போது உனது வாழ்க்கையைப் புத்திசாலித்தனமாக வாழ்வதற்கான வழி அதுவல்ல" என்று நான் கூறினேன். "மகனே, உன்னிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். பாதியளவுக்கு சரக்குகளை ஏற்றியிருக்கிற கனரக லாரியின் அடியில் உன் தலையை எப்பொழுதாவது வைத்துப்பார்த்திருக்கிறாயா?" நீ அதைச் செய்துபார்க்காமலே அது உனக்கு விருப்பமில்லை என்று எவ்வாறு உனக்குத் தெரியும்? இது நல்லதா? அல்லது கெட்டதா? என்பதை அறிய, நீ ஒவ்வொன்றையும் செய்து பார்த்துத்தான் கண்டுகொள்ள வேண்டியதில்லை. யாரோ ஒருவர் செய்வதைக் கவனித்துக் கற்றுக்கொள்ளுவதுபோல, கற்றுக்கொள்ளுவதற்கு மேலும் பல வழிகள் உள்ளன. ஓ, அதைச் செய்யாதே, அது புண்படுத்தும். "ஹேய், நீங்கள் அனைவரும், இதைக் கவனியுங்கள்" என்கிற ரெட்னெக்ஸ் என்பவருடைய பிரபலமான வார்த்தைகளைப்போல் இருக்கிறது. நான் அறிவியலை விரும்புகிறேன், நான் அறிவியல் புத்தகங்களை சேகரிக்கிறேன். இந்தப் புத்தகங்களில் பல நல்ல அறிவியல் இருக்கிறது, ஆனால் அதனுடன் சில விஷம் கலக்கப்பட்டுள்ளது. இது எலிக்கு வைக்கப்படும் விஷத்தைப் போன்றது. நான் நல்ல உணவிற்கு எதிரானவர் அல்ல, விஷத்திற்கு எதிரானவர்! ஒரு ரப்பர் வளையத்தை அறிவியல் முறைப்படி எறிவதற்குக் கற்றுக்கொள்ள விரும்புகிற, ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் எனக்குத் தேவையாக இருக்கிறது. யார் கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்? சரியா, அங்கேயுள்ள அந்தச் சிறுவன், இங்கே வா. மேலும் ஒரு சிறுமி, ஒரு சிறுமி தேவை, வா. அங்கே பின்புறம் வழி இருக்கிறது. சரி, சீக்கிரம், ஓடி வா! எல்லாம் சரி, இதோ ஒரு ரப்பர் வளையத்தை எறிவதற்கான அறிவியல் முறை. உங்களின் பெயர் என்ன ஐயா? ...ஜோஸ், உங்களின் வயது என்னங்க ஜோஸ்? ... ஒரு காலத்தில் ஒரு ஆண்டு முழுவதும் எனக்கு 10 வயதாக இருந்தது. அது ஆச்சர்யமாக இருக்கிறது! எனக்கு 11 வயது இருக்க வேண்டும்; ஆனால் எனக்கு இரண்டரை வயதிருக்கும்போது, மூன்று ஆண்டுகளாக சுகவீனமாக இருந்தேன். ஏறக்குறைய 12 வயதாகும்போது, உங்களின் வயது எத்தனையாக இருக்கும்? "பதினொன்று." மேலும் நல்லவராக இருப்பதற்கு உங்களின் அம்மா எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள்? எனவே நீங்கள் ஒரு பணத்திற்கும் நல்லவர் இல்லை, உங்களுக்கு 10 வயதாகிறது. இங்கிருந்து ரப்பர் வளையத்தை எடுங்கள் ஜோஸ். சரி, பழுப்பு நிறமுள்ள ஒன்று. மேலும் உங்களின் பெயர் என்னம்மா? "லாரா." லாராவா? அங்கிருந்து ஒரு ரப்பர் வளையத்தைத் தேர்ந்தெடுங்கள், லாரா. உங்களுக்கு இளம் சிவப்பு நிறம் தேவைப்படும் என்று நினைக்கிறேன்; சிறுமிக்கு ஒன்று. சரி. ஜோஸ் மற்றும் லாரா, நீங்கள் செய்ய நான் விரும்புவது இங்கு இருக்கிறது. நாம் இங்கே நின்றுகொண்டு பாதையின் நடுவே முன்புறமாக ரப்பர் வளையத்தை எறியப்போகிறோம். அது செயல்படாது; அது இரட்டையானது. இங்கே, நான் அதை முயற்சி செய்து பார்க்கிறேன். ஆரஞ்சு நிறத்தில் உள்ள ஒன்றை இங்கே முயற்சி செய்துபாருங்கள். அது இரண்டும் சேர்ந்து கட்டியிருக்கிறது. நான் அதைக் கவனிக்கவில்லை. சரி, ஜோஸ், கீழே உள்ள நடைபாதையின் நடுவில் ரப்பர் வளையத்தை எறியுங்கள். மேஜையைத் தாண்டிவிட்டது; அதிகத்தூரமில்லை. லாரா, முயற்சி செய்யுங்கள்; வாங்க. ஓ..., மூன்று வரிசைகளுக்குப் பின்னாகச் சென்றுவிட்டது. இப்பொழுது, கவனமாகக் கவனியுங்கள்; மாணவர்களே நீங்கள் இருக்கும் அளவிற்கு நான் இறங்கி, ஒரு ரப்பர் வளையத்தை அறிவியல் முறையில் எறிவதைக் காண்பிக்கப்போகிறேன். நீங்கள் இதற்கு ஆயத்தமா? தற்பொழுது, எந்த நேரத்திலும் எனது விரல்கள் என் கையைவிட்டுப் போகாமல் இருப்பதை நீங்கள் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதை நீங்கள் நம்புகிறீர்களா? சரி இப்பொழுது, கவனியுங்கள். ஆலயத்தின் பின்பாக வழியில் உட்கார்ந்திருக்கும் நபரைப் பாருங்கள். ஆ...அங்கே நான்கில் மூன்று பகுதி பாதைக்குச் சென்றுவிட்டது. அநேகமாக ஐந்து சொற்கள் உள்ள ஒரு கேள்வியை நீங்கள் தற்பொழுது சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் சிந்தித்துக் கொண்டிருக்கும் கேள்வி என்ன? இப்பொழுது நீங்கள் அதை எவ்வாறு செய்கிறீர்கள்? பாருங்கள், அதில் ஐந்து சொற்கள் உள்ளது என்று கூறினேன், சரியா? தற்பொழுது, நீங்கள் இதை எவ்வாறு செய்வது என்பதை நான் உங்களுக்குக் காண்பிக்கும் முன்பு, நான் உங்களுக்கு ஒன்றை விளக்குவதற்கு விரும்புகிறேன். சில காரியங்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைச் சில சிறுவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது, ஏனெனில் சமுதாயத்திற்கு அச்சுறுத்தல் எனப்படும் மனிதர்களாக அவர்கள் மாறிவிடுகிறார்கள். இங்கே இந்தப் பையனுக்குப் பொறுப்பாளராக யார் இருக்கிறீர்கள்? உன்னுடைய அம்மா, அப்பா எங்கே? இந்தத் தகவலினால் இவன் பாதுகாப்புடன் இருக்கிறானா? ஆ...ஆ... அம்மா சொல்லுகிறார்கள், இல்லை! மேலும் இங்கே இந்தச் சிறுமிக்கு யார் பொறுப்பாளராக இருக்கிறீர்கள்? எங்கே இருக்கிறீர்கள்?..... ஒருவருமில்லையா? ஓ, அங்கே பின்புறத்தில் இருக்கிறீர்கள். உங்களின் கணவர் வந்திருக்கிறாரா? இல்லை. சரி, ஒரு ரப்பர் வளையத்தை அறிவியல் முறையில் எறிவதை இப்பொழுது கவனியுங்கள். ஒரு ரப்பர் வளையத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. இதுவரையில் என்னுடன் இருக்கிறீர்களா? ஒரு பக்கம் உங்களின் சரீரத்தைக் குறிக்கிறது, அதாவது உங்களின் உடல். மேலும் அடுத்த பக்கம் உங்களின் ஆவியைக் குறிக்கிறது. தற்பொழுது உங்களின் ஆவியானது உங்களின் உடலில் வாழவேண்டும், இல்லையெனில் நீங்கள் இறந்து விட்டீர்கள். எப்பொழுதாவது உங்களின் ஆவி உங்களை உடலைவிட்டுப் பிரியுமானால், உங்களின் கைகளில் உண்மையான பிரச்சனை வந்துவிட்டது! (உண்மையிலே அண்டைவீட்டார்கள் செய்கிறார்கள்) ஆனால் ரப்பர் வளையத்தை எறிவதிலும் மற்றும் உண்மையான வாழ்க்கையிலும், அநேக மக்கள் செய்கிற தவறு என்னவெனில், அவர்கள் சமமான முக்கியத்துவத்தை சரீரத்தின்மேலும், ஆவியின்மேலும் வைக்கிறார்கள். பாருங்கள், இரண்டு பக்கங்களிலும் சமமாக இழுத்து பறக்கவிட்டு, மெதுவான அசைவில் கவனிப்பீர்களானால், இரண்டு பக்கங்களும் செல்லுகின்றன. மேலும் அனைத்து ஆற்றலும் ரப்பர் வளையத்தின் உள்ளே செலவழிகிறது; ஏனெனில் மாமிசமும், ஆவியும் ஒன்றோடொன்று மோதுகின்றன. அப்படியே சுற்றுப்புறச் சூழ்நிலையைப் போன்ற திரவ படிகத்தின் வழியே செல்லும் அதிக வேகத்தின் இரகசியமும் இருக்கிறது. ....எது எதிர்ப்பைக் கொடுக்கிறதோ, அது குறைக்கிறது அல்லது அடங்காததை நீக்கிவிடுகிறது. சரியா? மாணவர்களே, நீங்கள் அனைவரும் கவனியாதிருந்தபொழுது நான் செய்தது என்னவெனில், மற்றொன்றைக் காட்டிலும் ஒன்றை அதிக இறுக்கமாக இழுத்தேன். ஒரு பக்கம் இறுக்கமாக இருந்தது. தற்பொழுது என்ன நடக்கப்போகிறது என்பதைக் கவனியுங்கள். நீங்கள் சரியாகச் செய்வீர்களானால், ஆவியானது முன்சென்று சரீரத்தை நடத்திச் செல்லுகிறது. கொந்தளிப்பான அநேகத்தைத் தாண்டி, தூரமாக எடுத்துச்செல்லுகிறது, மேலும் அதிக தூரம் செல்லுகிறது. பின் வரிசையில் உள்ள நபரிடம் சென்றுள்ளது! எனவே ரப்பர் வளையத்தின் கட்டோடு நான் இங்கு மேலே இருக்கும்போது..... ...இந்த அறையில் இருக்கும் எவரையும் தாக்கலாம் என நான் அறிந்துகொள்வதினால், இது உங்களுக்கு வலுவான உணர்வைத் தருகிறது.... ...சில சிறுவர்கள் உண்மையிலே சரியாகக் கையாளத்தெரியாதவர்கள்; நான் பேசிக்கொண்டிருப்பது உங்களுக்குப் புரிகிறதா? இப்பொழுது நீங்கள் அதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள், அப்படித்தானே? ஆம், நான் அப்படித்தான் நினைத்தேன். நாம் இவர்களுக்குக் கைகளைத் தட்டுவோம்; சிறுவர்களே, உங்கள் இடத்திற்குச் செல்லுங்கள். உங்களுக்கு மிகவும் நன்றி. "ஆவிக்கு விரோதமாய், சரீரம் இச்சிக்கிறது, சரீரத்திற்கு விரோதமாய் ஆவியும் போராடுகிறது" என்று வேதாகமம் கூறுகிறது. அவைகள் ஒன்றோடொன்று முரண்பாடாகக் காணப்படுகின்றன. எனவேதான் உங்களில் சிலர் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் அதிக தூரம் செல்லவில்லை. உங்கள் சரீரத்தை அதிகமாகப் போஷிக்கிறீர்கள். உங்கள் தொலைக்காட்சியை அவ்வப்பொழுது நிறுத்திவிடுங்கள்...சாதாரணமானது. எங்களது மிகச்சிறந்த விமானங்களை நீங்கள் பார்க்கும்வரையில் பொறுத்திருங்கள். எங்களது மிகச்சிறந்த விமானங்களை நாங்கள் நாளை உங்களுக்குக் காண்பிக்கப் போகிறோம். மிகவும் தொலைவில் செல்லும் காகித விமானங்களை நான் தயாரிக்கிறேன், அவைகள் மரத்திலோ அல்லது கட்டிடத்திலோ இறங்கவில்லையெனில், அவைகள் தரையை நோக்கிச் செல்லுகின்றன. 450 அடி காகித விமானமே எங்களது சாதனையாகும். நாளைக்கு, செங்குத்தாக இருக்கக்கூடிய கட்டிடத்தின் மேலே நாங்கள் முழுவதுமாக அவைகளைப் போடப்போகிறோம். நாங்கள் அறிவியலை விரும்புகிறோம். நாங்கள் அறிவியலுக்கு விரோதமானவர்கள் அல்ல, ஆனால் அறிவியலுடன் விஷம் கலந்திருப்பதற்கு நான் எதிராக இருக்கிறேன், அவ்வளவுதான். இங்கே முதலாம் வகுப்புப் பாடப்புத்தகம் ஒன்று இருக்கிறது. அவர்கள் இதைத்தான் முதல் வகுப்பில் சிறுவர்களுக்குச் சொல்லுகிறார்கள். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக, பூமி தோன்றினதிலிருந்து அதிக அளவில் மாறிவிட்டது. இப்பொழுது ஒரு நிமிடம் நிறுத்துங்கள். பூமிக்கு 4.5 பில்லியன் ஆண்டுகள் ஆகிறதா? இல்லையே. அதை ஒரு நிமிடத்தில் பார்க்கலாம். ஆனால் முதலாம் வகுப்பில் உள்ளவனுக்கு நீங்கள் சொல்லும்போது, அவன் உங்களை நம்புவான். நீங்கள் எதைச் சொன்னாலும் முதலாம் வகுப்புப் படிக்கிறவர்கள் அவைகளை நம்புவார்கள். சிலந்திப் பூச்சியின் சுருட்டப்பட்ட கால்களே வாழைப்பழம் என நம்புகிறார்கள். நான் அதைத்தான் நம்பினேன். அவர்கள் அவைகளையே இரண்டாம் வகுப்பிலும் மறுபடியும் சொல்லுகிறார்கள். 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதிலிருந்து, பூமி மாறிவிட்டது. "வாழ்க்கையும்கூட பூமியின்மேல் பரிணாம மாற்றமடைந்து விட்டது" என்று கீழே அடியில் அது கூறுகிறது. "பரிணாமம் அடைந்தது" என்கிற இந்த வார்த்தை, ஒரு ஏமாற்றுகிற வார்த்தையாக இருக்கிறது. நான் 90 விவாதங்களையும் மற்றும் சுமார் 7,000 ரேடியோ மற்றும் தொலைக்காட்சி அழைப்பு நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறேன். முதலாவதாக உள்ள ஐந்தே நிமிடங்களில் பரிணாம விவாதத்தில் எப்படி வெற்றிபெறுவது என்பதைக் கற்றுக்கொண்டேன். இது மிகவும் எளிது. "நீங்கள் பரிணாமத்தை நம்புகிறீர்களா?" என்று யாராவது கேட்டால்; "நீங்கள் எதைச் சொல்லுகிறீர்கள்?" என்று நான் கேட்பேன்; "நல்லது, பரிணாமம் என்பது உங்களுக்குத் தெரிந்ததே" என்று கூறுவார்கள். "இல்லை, எதனைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள்? அந்த சொல்லிற்கு ஆறு அர்த்தங்கள் உள்ளன. அண்டைவெளி வளர்ச்சி, கால வளர்ச்சி, ஆகாயம், பொருள் போன்றவற்றையா நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்?" பெருவெடிப்பில் நான் நம்பிக்கை வைக்கவில்லை. ஒரு நிமிடத்தில் நாம் இவைகளைப் பற்றிப் பேச இருக்கிறோம். நாம் வேதியியல் பரிணாமம் பற்றிப் பேசுகிறோமா? பெரு வெடிப்புக் கொள்கைப்படி, பெரு வெடிப்பானது ஹட்ரஜன் மற்றும் ஒருவேளை சொற்பமான ஹீலியத்தையும் வெளியிட்டிருக்கக்கூடும். அப்படியானால் மற்ற அனைத்து மூலகங்களையும் நாம் எவ்வாறு பெற்றோம்? ஹட்ரஜனிலிருந்து யுரேனியம் பரிணாமம் அடைந்தது என நான் நம்பவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நல்லது ஆம், நட்சத்திரங்களில் உருகுதல் இருக்கிறதே என்று அவர்கள் சொல்லலாம். ஆமா, ஆனால் கடந்த கால இரும்பை நீங்கள் ஒன்றாக உருக்கமுடியாதே. மேலும், ஒரு கோழிக்குஞ்சு மற்றும் ஒரு முட்டைப் பிரச்சனை இங்கே இருக்கிறது; ஏனெனில் நட்சத்திரங்கள் மூலகங்களை உருவாக்க வேண்டும், மற்றும் மூலகங்கள் நட்சத்திரங்களை உருவாக்க வேண்டும். இதில் எது முதலில் வந்தது? நட்சத்திரப் பரிணாம வளர்ச்சியை, நிச்சயமாக, எது கொண்டு வருகிறது? நட்சத்திரங்கள் எப்படி உருவாகின? ஒரு நட்சத்திரம் உருவாவதை இதுவரையில் ஒருவரும் பார்த்ததில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நட்சத்திரம் எவ்வாறு உருவாகிறது என்கிற தடயம்கூட விஞ்ஞானிகளிடம் இல்லை. நட்சத்திரம் உருவாகுதல் பற்றிய எந்தவொரு கொள்கைகூட இல்லை. (அதைப்பற்றி வீடியோ எண் 7-ல் அதிகம் பார்க்கலாம்.) எல்லா நேரங்களிலும் நட்சத்திரங்கள் எரிவதை நாம் பார்க்கிறோம். ஒரு நோவா என்று அது அழைக்கப்படுகிறது, அல்லது அது பெரியதாக இருந்தால் சூப்பர் நோவா ஆகும். அது அனைத்து நேரங்களிலும் நிகழ்கிறது. ஆனால் அது உருவாவதை நாம் பார்த்ததில்லை. இருப்பினும் இன்னமும் போதியளவு நட்சத்திரங்கள் பூமிக்கோளின் வெளியில் உள்ளன. பூமியின்மேல் இருக்கிற ஒவ்வொருவரும் 11 ட்ரிலியன் நட்சத்திரங்களைத் தமக்கெனச் சொந்தமாக வைத்திருக்க முடியும். நமக்குத் தெரிந்தவைகள் இவைகளே. நமக்குத் தெரியாதவைகளைப் பற்றி நமக்குத் தெரியாது. நான்காவதாக, உடல் உள்ளுறுப்புகளின் பரிணாமம், உயிரின் தோற்றம். சடப்பொருளில் இருந்தே உயிர் ஆரம்பமாயிருக்க வேண்டும். அது எப்படி நிகழும் என்பதற்கானத் தடயம் ஒருவரிடமும் இல்லை. அடுத்து, பெரிய பரிணாமம் என்று அழைக்கப்படுகிறதை உடையவர்களாக நாம் இருந்திருக்க வேண்டும். அங்கேதான் ஒரு விலங்கு வேறொரு வகை விலங்காக மாறுகிறது. ஒரு நாயானது, நாய் அல்லாத ஒன்றை எப்பொழுதாவது உருவாக்கினதை ஒருவரும் பார்த்ததில்லை. ஒருபோதுமில்லையே! ஒரு பெரிய நாயையோ அல்லது ஒரு சிறிய நாயையோ நீங்கள் பெறலாம். ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு நாயைத்தான் பெறலாம். அது நாய், ஓநாய் மற்றும் காட்டு நாயாக இருந்தாலும், அதற்குப் பொதுவான ஒரு மூதாதையர் இருந்திருக்கலாம். நான் அதைப்பற்றி விவாதிக்கப்போவதில்லை; ஒருவேளை அவைகள் அப்படிக்கூட இருந்திருக்கலாம். எனினும் ஒவ்வொரு 5 வயதுக்குட்டிக்கும், அவை ஒரே வகையான விலங்கினத்தைச் சேர்ந்தவை என்பது தெரியும். நான் உங்களுக்குக் காண்பிக்கிறேன். 5 அல்லது 6 வயதுடையவர்கள் யாராவது இங்கே இருக்கிறீர்களா? யாருக்கு 5 அல்லது 6 வயதாகிறது? யாராயினும் இருக்கிறீர்களா? சரி. சிறுவனே, உனக்கு எத்தனை வயதாகிறது? ஆறு வயதா? உன்னை நான் பரிசோதனை செய்ய விரும்புகிறேன். இங்கே ஒரு நாய், ஒரு ஓநாய், ஒரு காட்டுநாய் அத்துடன் ஒரு வாழைப்பழமும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளில் மற்றவைகளைவிட வேறுபட்டது எது? வாழைப்பழம்! அவனுக்குக் கைதட்டுங்கள்! சரியாகச் சொன்னான், மிகவும் நல்லது! இதைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் கல்லூரிப் பேராசிரியர்களாக இருக்கிறார்கள்! நீங்கள் என்ன செய்யனும் என்று நான் விரும்புகிறேன் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுவேன். கருத்தரங்கு முடிந்தபின்பு, அரங்கப் பாதையின் வெளியே உள்ள மேஜைக்கு நீங்கள் அனைவரும் செல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அங்கே நீங்கள் விரும்புகிற இலவச வீடியோ அல்லது DVD -யைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். சரியா? டைனோஸரைப் பற்றிய வீடியோ மற்றும் DVD-கள் அதிகம் அங்கே வைக்கப்பட்டுள்ளன. மிருகங்கள் அவைகளின் ஜாதிகளின்படியே (இனங்களின்படியே) பிறப்பிக்கும் என்று வேதாகமம் கூறுகிறது. இப்பொழுது சார்லி டார்வின் "இனங்களின் தொடக்கம்" என்றழைக்கப்படும் புத்தகத்தை எழுதியுள்ளார். நாயும் ஓநாயும் ஒரே இனத்தைச் சேர்ந்த மிருகங்களாகும்; ஆனால் வகையில் வித்தியாசமானவைகள். "வகை" என்பதிலிருந்து "இனம்" என்கிற வார்த்தையாக மாற்றி ஒவ்வொருவரையும் அவர் முட்டாளாக்கினார். நாம் அவைகளைப் பற்றி வீடியோ எண் 4-ல் அதிகமாகப் பேச இருக்கிறோம். இறுதியாக, நாம் வைத்திருப்பது நுண் பரிணாமம் என்றழைக்கப்படுகிறது. அது ஒரே இனத்திற்குள் ஏற்படும் மாற்றங்கள் ஆகும். அது தற்பொழுது நிகழ்கிறது. நான் ஆறாம் எண்ணுடன் செல்லப்போகிறேன். விலங்குகள் பல்வேறுபட்டக் குட்டிகளை உற்பத்திசெய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன். நீண்ட முடியுடையவைகள், நீண்ட கால்களையுடையவைகள், குறுகிய கால்களையுடையவைகள் ஆகும்; அவைகள் நிகழ்கின்றன. ஆனால் முதல் ஐந்தும் முற்றிலும் மத சம்மந்தமானவைகள். அது அறிவியல் அல்ல. அவைகளில் ஒன்றையும் நாம் ஒருபோதும் பார்த்ததில்லை. எனவே பரிணாமம் பற்றிய விவாதத்தில் நீங்கள் வெற்றிபெற விரும்பினால், நீங்கள் எதைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்பதை எளிமையாகவும் சரியாகவும் கூறுங்கள். மேலும் எண் 6-க்கு உரியவைகளுக்கு இதுவரையில் கொடுத்த உதாரணங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம். அதைப்பற்றி விவாதம் இல்லை. அது நேரிடுகிறது. மற்ற ஐந்திற்கும் அவர்கள் மாயவித்தையினாலாகிலும் ஆதாரம் காண்பிக்கப் பார்ப்பார்கள். ஆயினும் அதுக்கு ஆதாரம் இல்லை. பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று மாணவர்களிடம் வலியுறுத்துவதற்கு, உறுதியாக இருக்கவேண்டும் என்று ஆசிரியர்கள் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுவர்கள் இதை நம்புகிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள், பழைய வடிவத்துடன் நான் சிறியவனாக இருக்க எனக்கு நேரிடுகிறது. அறிவியல் வகுப்பில், நாம் அறிவியலைத்தான் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நாம் பார்க்கிற, படிக்கிற, பரிசோதிக்கிற மற்றும் விளக்கமளிக்கக்கூடிய காரியங்களை உள்ளடக்கியதுதான் அறிவியலாகும். தெர்மோடைனமிக்ஸின் முதல் விதிபோன்று இருப்பவைகளே ஆகும். "பொருளைப் படைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது" என்று தெர்மோடைனமிக்ஸின் முதலாம் விதி நமக்குக் கூறுகிறது. நல்லது, ஒவ்வொன்றும் பொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது; எனவே பொருளைப் படைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது எனில், பின்பு எவ்வாறு இந்த உலகம் இங்கு இருக்கிறது. நாம் இங்கே இருக்கிறோம் என்று உங்களுக்குத் தெரியும். எனவே அது இரண்டு தெரிந்தெடுத்தலை மட்டுமே வைக்கிறது. யாராவது ஒருவர் இந்த உலகத்தைப் படைத்திருக்க வேண்டும்; அல்லது இந்த உலகம் தானே உருவாகியிருக்க வேண்டும். இதனைத் தவிர வேறொரு தெரிந்தெடுத்தல் இல்லை. நல்லது, "நாம் உண்மையிலே இங்கே இருக்கவில்லை; நாம் இங்கே இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்" என்று பைத்தியர்கள்போல இருப்பவர்களில் சிலர் உங்களிடம் கூறலாம். சரி, நீங்கள் அந்த மக்களைப் பற்றி மறந்துவிடுங்கள். நாம் இங்கே இருக்கிறோம். எனவே, தேவன் உலகத்தைச் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுவதுபோல, யாரோ ஒருவர் இந்த உலகத்தை உருவாக்கியிருக்க வேண்டும்; அல்லது மானிட கோட்பாட்டாளர்கள் நம்புவதுபோல, இந்த உலகம் தானே உருவாகியிருக்க வேண்டும். இது தானாகவே தோன்றியது, உருவாக்கப்பட்டதல்ல. நல்லது, இந்த உலகம் தானாகவே தோன்றியது எனில், இது எப்படி நிகழ்கிறது? சிறுவனே, சாத்தான் நீண்ட காலமாக இதைப்பற்றிச் சிந்தித்தான். இறுதியாக, ஒரு நாள், பெரு வெடிப்புக்கொள்கையுடன் அவன் வந்தான். உங்களில் இதற்கு முன்பு பெரு வெடிப்புக் கொள்கையைப் பற்றி எத்தனைபேர்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? சில ஆண்டுகளுக்கு முன்பு, டல்லஸிலிருந்து ஸான் பிரான்ஸிஸ்கோவிற்கு ஒரு விமானத்தில் பயணம் பண்ணிக்கொண்டிருந்தேன். பெர்க்லியைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் அருகில் உட்கார நேரிட்டது. பெர்க்லியைப் பற்றி நாக்ஸ்விலியில் உள்ள மக்களாகிய நீங்கள் எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையா? என்று எனக்குத் தெரியாது. ஆனால் பெர்க்லி என்பது வேதாகமக் கல்லூரி அல்ல. எனவே அந்த விமானத்தில் அவருக்கு அருகில் இருந்துகொண்டு, படைப்பு மற்றும் பரிணாமம் பற்றி நாங்கள் பேச ஆரம்பித்தோம். விமானத்தில் எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த ஒவ்வொருவரும் அதைப்பற்றிப் பேச விரும்பினார்கள், எனவே அவர்களுடனும் நான் அதைப்பற்றிப் பேசினேன். அவர் பரிணாமத்தை நம்புவதாகக் கூறினார். "ஆம், ஐயா, நீங்கள் பெர்க்லியில் கற்பிப்பதாக இருந்தால், அதைத்தான் நம்புவீர்கள் என்று நான் கணித்துக்கொண்டேன்" என்று கூறினேன். "நீங்கள் பரிணாமத்தை நம்புவதானால், இந்த உலகம் எப்படி இங்கே வந்தது? என்று எனக்குச் சொல்லுங்கள் ஐயா." என்றேன் "ஓ, இது பெரு வெடிப்பிலிருந்து வந்தது" என்று அவர் கூறினார். "உண்மையாகவா? இதைப்பற்றிக் கேட்க நான் விரும்புகிறேன்!" என்றேன். "நீங்கள் ஒரு அறிவியல் ஆசிரியர், பெரு வெடிப்புக்கொள்கை பற்றி நீங்கள் கேள்விப்படவே இல்லையா?" என அவர் கேட்டார். ஆமா, பெருவெடிப்புக்கொள்கை பற்றி நான் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். அத்துடன் பெரு வெடிப்புக் கொள்கையை நான் நம்புகிறேன். ஆனால் நீங்கள் கூறுவதைப் பார்க்கிலும் எனது பெருவெடிப்புக் கொள்கை மிகவும் வித்தியாசமானது என்றேன். "உங்களின் பெரு வெடிப்புப் பற்றி எனக்குச் சொல்லுங்கள், அதற்குப் பின்பு நான் என்னுடைய பெரு வெடிப்புக் கொள்கை பற்றிக் கூறுகிறேன்" என்று கூறினேன். எனவே, பாடப்புத்தகத்தில் இருப்பதைப் போன்றே அந்தப் பேராசிரியர் பதில் ஒன்றைக் கூறினார். "நல்லது, திரு ஹோவிந்த் அவர்களே, 18 முதல் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் ......நடந்ததை நான் நம்புகிறேன்" என்று அவர் கூறினார். (அது நீண்ட காலமாக இருக்கிறது). "....உலகத்தில் உள்ள அனைத்துப் பொருட்களும்......." (நிறைய பொருட்கள் இருப்பதாக அது இருக்கிறது). இதற்கிடையே, "யுனிவர்ஸ் (உலகம்) என்கிற சொல்லானது, இலத்தீன் மொழியின் இரண்டு சொற்களில் இருந்து வந்திருக்கிறது. "யுனி" என்பதன் அர்த்தம் "ஒரு" என்பதும் "வெர்ஸ்" என்பதன் அர்த்தம் "பேசப்பட்ட வாக்கியம்" என்பதும் ஆகும். நாம் பேசப்பட்ட ஒரு வாக்கியத்தில் வாழ்கிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா? "உண்டாகக்கடவது........" என்று தேவன் சொன்னார். அது நமக்குப் போதிக்கும். அங்கே ஒரு இடத்தில் ஒரு பிரசங்கம் இருக்கிறது, சரியா? மேலும் உங்கள் போதகரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லையானால், அவருக்குள் ஒரு பிரசங்கமும் இல்லையே! "மிகவும் சூடான பகுதியான, மிகவும் அடர்த்தியுள்ள ஒன்றின்மீதே உலகின் பொருட்கள் அனைத்தும் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது, அது ஒரு புள்ளியைக் காட்டிலும் சிறியதாக இருக்கலாம்." எது என்று சொல்லுங்கள்? ஒரு முற்றுப்புள்ளியைக் காட்டிலும் சிறிய புள்ளிக்குள் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களும் குவிந்துள்ளதா? ஆச்சர்யமாக இருக்கிறது! ஒரு நெருக்கடி நிறைந்த புள்ளியாக இருக்கிறது. அத்துடன் அது பாரமானதாகவும் இருக்கிறது. மாணவ, மாணவிகளே, ஆனால் இது முதலாவதாக நிகழவில்லை. "இந்த வாக்கியத்தின் முடிவில் உள்ள முற்றுப்புள்ளியைக் காட்டிலும் ஒரு சிறிய இடத்திற்குள், அ நேக பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாளில், முழு உலகத்திலும் உள்ள பொருட்களும், ஆற்றலும் மறுபடியும் அடைக்கப்படும். அப்பொழுது மற்றுமொரு பெரு வெடிப்பு நிகழும்." என்று இந்தப் பாடப்புத்தகம் கூறுகிறது. "இது ஒவ்வொரு 80 முதல் 100 பில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது." அதை அச்சிடுவதற்கு அவர்கள் ஒரு மரத்தை வெட்டுவதை உங்களால் நம்ப முடிகிறதா? உங்களுக்குத் தேவைப்படும்போது அல் கோர் என்பவர் எங்கே இருக்கிறார்? அதைத்தான் நான் அறிய விரும்புகிறேன், ஆமா! மேலும் நீங்கள் அல் கோர் என்பவரை ஏன் வாஷிங்டனுக்கு அனுப்பினீர்கள்? அவர் இங்கே இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியுமே. இந்தப் பாடப்புத்தகத்தின் ஆசிரியர் புத்திசாலித்தனமாக இருந்திருக்கிறார். இவர் எப்படி புத்திசாலியாக இருந்தார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. "மாணவ, மாணவிகளே, ஒன்றுமில்லை என்பதன் உண்மையான அர்த்தம் ஒன்றுமில்லை" என அவர் குறிப்பிடுகிறார். ஒரு புத்தகத்தை எழுதுவதற்கு நீங்கள் குறைந்தபட்சம் அந்த அளவுக்காவது புத்திசாலியாக இருக்க வேண்டும். "பொருட்கள் மற்றும் ஆற்றல் மட்டுமல்லாமல், விண்வெளியும் காலமும்கூட மறைந்துவிடும்" என்று அவர் கூறினார். எதுஎப்படியிருந்தாலும், இந்த ஒன்றுமில்லாத நிலையில் இருந்து மிகப்பிரமாண்டமான வெடித்தலினால் இந்த உலகம் உண்டானது என்று இயற்பியலார்கள் கோட்பாடுகளை உருவாக்குகின்றனர். என்னது? ஆமா, மாணவ, மாணவிகளே, நீங்கள் பாருங்கள், ஒரு நாள் ஒன்றுமில்லாதது வெடித்ததாம்....... ....அதனால் நாம் இங்கே இருக்கிறோமாம்! பெரு வெடிப்புக்கொள்கையைப் பற்றி மூன்று நாட்களாகக்கூடப் பேசிக்கொண்டிருக்கலாம். வெடித்த பொருளானது சில ஒளியின் ஆண்டுகள் விட்டமுடையது என்று அவர்கள் வழக்கமாகக் கூறுவதுண்டு. பின்பு "ஓ... இல்லை, இது 275 மில்லியன் மைல்கள் மட்டுமே" என்றார்கள். அதற்குப் பின்பு, "இது 71 மில்லியன் மைல்கள் மட்டுமே" என்று கூறினார்கள். அவர்கள் சிறிதாக்கிக் கொண்டே சென்று, இப்பொழுது "ஒன்றுமில்லாதது" வெடித்தது என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள். "எங்கேயிருந்து எல்லாம் வந்தது?" என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இங்கே இருக்கிற "டிஸ்கவர் பத்திரிக்கை" குறிப்பிட்டது. மாணவ, மாணவிகளே, இந்த உலகமானது முற்றிலும் ஒன்றுமில்லாததிலிருந்து வெடித்து ஏதோ ஒன்றாக உருவாகியிருக்கிறதாம்.- பூஜ்ஜியமாம். அது பெரியதானபோது, முற்றிலும் எங்குமில்லாத இடத்தில் இருந்து வந்த பொருட்கள் அதை நிரப்பினதால் இன்னும் அதிகப் பொருட்களை உடையதாக இருக்கிறதாம். அது எப்படி சாத்தியமாகும்? என்று ஆலன் கூத்திடம் கேளுங்கள். ஒவ்வொன்றையும் அவருடைய கொள்கை விவரிக்கும். ஆச்சர்யமாக இருக்கிறதே! நான் இந்த ஆலன் கூத்தைச் சந்தித்திருக்கிறேன். "நாம் பார்க்கிற உலமானது மிகச்சிறிய பகுதியிலிருந்து உருவாகியிருக்கலாம்" என்று "அறிவியல் அமெரிக்கர்" என்பதில் ஆலன் கூத் கூறியுள்ளார். (எபிரெய மொழியில் "ஒரு புள்ளி" என்று அர்த்தம்.) "இந்த முழு உலகமும் ஒன்றுமில்லாததிலிருந்து உருவாகியிருக்கிறது என்பதை ஒருபடி மேலே சென்று சிந்திக்கத் தூண்டுகிறது" என்று அவர் கூறுகிறார். நீங்கள் பாருங்கள், மாணவ, மாணவிகளே, நாம் அனைவரும் ஒரு புள்ளியிலிருந்து வந்திருக்கிறோமாம், அத்துடன் அந்தப் புள்ளி ஒன்றுமில்லாததிலிருந்து வந்ததாம். அவர்கள் இதை அறிவியல் என்று சொல்லி, இதை ஒரு அறிவியல் பத்திரிக்கையில் வெளியிடலாமா? நான் அதை ஒரு மோகினிக் கதை என்று நினைத்து, அதைக் குப்பையில் போடுகிறேன். "பேராசிரியரே, உங்கள் புள்ளிக்கு என்ன நிகழ்ந்தது?" எனக் கேட்டேன். "ஹோவிந்த் அவர்களே, 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சூரிய மண்டலத்திலுள்ள அனைத்துத் துகள்களும் ஒரு சிறிய மிகச்சிறிய புள்ளிக்கு இழுக்கப்பட்டது" என்று அவர் கூறினார். "மேலும் அது சுழன்றுகொண்டிருந்தது. அது வேகமாகச் சுற்றியது, திடீரென, அது வெடித்தது: அதுவே பெரு வெடிப்பாகும்!" மேலும் அதிலிருந்து பறந்துசென்ற துகள்களால், வானமண்டலங்கள், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் உருவாயின, அத்துடன் நாம் இங்கே இருக்கிறோம். மக்கள் என்பவர்கள் நட்சத்திரத் துகள்களேயல்லாமல் வேறோன்றுமில்லை." என்று அவர் கூறினார். "ஐயா, நான் உங்களிடம் தயவுசெய்து இரண்டொரு கேள்விகள் கேட்கலாமா?" என்று நான் அவரிடம் கேட்டேன். "நிச்சயமாக, நீங்கள் என்ன அறிய விரும்புகிறீர்கள்?" என்று அவர் என்னிடம் கேட்டார். நாம் மூன்று மணி நேரமாகப் பறக்கின்ற விமானத்திற்குள் இவ்வளவு அருகில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். "நல்லது ஐயா, எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது" என்றேன். 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அனைத்துத் துகள்களும் ஒன்றாக சேர்ந்து, பெரியதாகச் சுழன்று ஒரு பெரு வெடிப்பை உண்டாக்கியது என்று நீங்கள் சொன்னீர்கள். அனைத்துத் துகள்களும் எங்கிருந்து வந்தன? யார் சடப்பொருட்களை உண்டாக்கியது என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டேன். "நமக்குத் தெரியாது" என்று அவர் கூறினார். "சரி ஐயா, அதை நிறுத்தி வையுங்கள். சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார் என்று நான் நம்புவதை உங்களிடம் கூறினால், "தேவன் எங்கிருந்து வந்தார்? என்று கேட்பீர்கள். அதைக் குறித்து எந்த ஒரு அபிப்பிராயமும் எனக்கில்லை." என்று நான் கூறினேன். "ஆனால், 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரு வெடிப்பு உண்டானது; அத்துடன் அந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தது? என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்கள்." ஆகவே அடிப்படையில், "ஆதியிலே தேவன் இருந்தார்" என்று நான் நம்புகிறேன்; நீங்கள் "ஆதியில் துகள் இருந்தது" என்று நம்புகிறீர்கள். என்னுடைய கொள்கை மத சம்மந்தமானது என்றும், உங்கள் கொள்கை அறிவியல் சம்மந்தமானது என்றும் சொல்லாதீர்கள். இல்லை, இல்லை, இல்லை! இவை இரண்டுமே மத சம்மந்தமானவைகளே. இது அறிவியலுக்கும், மதத்திற்கும் இடையே உள்ள எதிரான கருத்து என்று ஊடகச்செய்திகள் உருவாக்க முயற்சிக்கின்றன. இது அறிவியலுக்கு எதிரான மதம் அல்ல; இவைகள் இரண்டு மதங்கள் ஆகும். பரிணாமம் மற்றும் படைப்பு ஆகிய இவைகள் இரண்டுமே மத சம்மந்தமானவைகளே. நீங்கள் இவைகள் இரண்டில் ஏதாவது ஒன்றை நம்பவேண்டும். பரிணாம மதத்திற்கு வரி ஆதரவு இருப்பதே இதிலுள்ள வித்தியாசமாகும். அதுதான் வித்தியாசமாக இருக்கிறது - பல வித்தியாசங்களில் அதுவும் ஒன்று. இதனிடையே, எனக்குப் பின்பு இங்கே இருக்கிறதுபோல, இவைகளின் காலங்களின் இரண்டுமே ஒரே மாதிரியானவைகளாக இருக்கின்றன. மேலே உள்ள காலத்தின் கோட்டில், ஒவ்வொரு அங்குலமும் 150 ஆண்டுகளைக் குறிக்கிறது. ஒரு அங்குலக் காலம்வரைகூட ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதியாக இருக்கவில்லை. 20 பில்லியன் ஆண்டுகள் எவ்வாறு இருக்கும் என்பதை மேலிருக்கும் அட்டவணையின் அளவுக்குத் தக்கதாக நான் காண்பிப்பதாயின்..... (...நான் இந்த அட்டவணையை அடியிலிருக்கும் அளவிற்குக் கீழாக்க வேண்டும்.) ...இது 2100 மைல்கள் நீளமுள்ளதாக இருக்கவேண்டும். அது பென்ஸகோலாவிலிருந்து ஓரிகனில் உள்ள போர்ட்லாண்டு வரையில் உள்ள தூரமாகும். அந்த அளவு பெரிய அட்டவணைப் படத்தை நான் தூக்க விரும்பவில்லை. எனவே நான் மற்றொன்றுக்கு ஒரு புதிய அளவு திட்டத்தைத் தயாரித்தேன். அந்தச் சடப்பொருள் எங்கிருந்து வந்தது என்று தனக்குத் தெரியாது என்று அந்தப் பேராசிரியர் கூறினார். எனவே, "ஐயா, விதிமுறைகள் எங்கிருந்து வந்தன என்பதை உங்களால் கூறமுடியுமா?" என்று நான் கேட்டேன். இந்த உலகம் விதிமுறைகளால் இயங்கிக்கொண்டிருக்கிறது. புவி ஈர்ப்பு விதி, மைய விலக்கு விசை, அசைவற்ற நிலை, பாய்லீயின் விதி, கோலின் விதி (உருளைக்கிழங்கு பச்சடியுடன் அதைச்சாப்பிடலாம்). உலகில் பலவகையான விதிமுறைகள் உள்ளன. எங்கிருந்து அந்த விதிமுறைகள் வந்தன? மேலும் இதனிடையே, இன்னும் ஏன் விதிமுறைகள் பரிணாமம் அடையவில்லை? நீங்கள் அதைப்பற்றி எப்பொழுதாவது சிந்தித்திருக்கிறீர்களா? ஏன் இன்னும் ஈர்ப்பு விசை எப்பொழுதும் போலவே அப்படியே இருக்கிறது? ஒரு நாளில் ஏன் நீங்கள் அதிகமாக 10 பவுண்ட் எடை அதிகமாகமல் இருக்கிறீர்கள்? ("நான் எடையில் கூடுகிறேன்!" என நீங்கள் சொல்லுகிறீர்களா? நல்லது, அதற்கு வேறு ஒரு காரணம் இருக்கிறது). எங்கிருந்து ஆற்றல் வந்தது? இந்த இயந்திரத்தை இயக்குவதற்கு யார் எரிபொருள் வாங்கியது? "எனக்குத் தெரியாது; அவைகளைப் பற்றிய எதுவும் நமக்குத் தெரியாது" என்று அந்தப் பேராசிரியர் கூறினார். " நான் இன்னொரு கேள்வி கேட்கலாமா?" என்று கேட்டேன். "நிச்சமாக, நீங்கள் வேறு எதைப்பற்றி அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள்?" என்று கேட்டார். வேறு? வேறு எதைப்பற்றி என்று எதைக் கேட்கிறீர்கள்? நீங்கள் இன்னும் எதைப்பற்றியும் எனக்குக் கூறவில்லையே என்றேன். "ஐயா, பெர்க்லியில், சுற்றிவரும் இராட்டினம் இருக்கிறதா?" என்று நான் கேட்டேன். எத்தனைபேர்களுக்குச் சுற்றிவரும் இராட்டினம் பற்றித் தெரியும்? மேலே தூக்கி எறியும்வரையில் நீங்கள் சுற்றிக்கொண்டே வருவீர்கள். "இல்லை, பெர்க்லியில் சுற்றிவரும் இராட்டினம் எங்களிடம் இல்லை." என்று அவர் கூறினார். "நீங்கள் உண்மையிலே ஒன்று வைத்திருக்கவேண்டும்." என்று நான் கூறினேன். சுற்றிவரும் இராட்டினத்திலிருந்து, நீங்கள் சில நல்ல அறிவியலைக் கற்றுக்கொள்ள முடியும்." என்றேன். நான்காம் வகுப்புப் படிக்கிறவர்களை நீங்கள் அதில் வைத்தால்..... நான்காம் வகுப்புப் படிக்கிறவர்கள் இங்கே யாராவது இருக்கிறீர்களா? சென்ற ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு நான்காம் வகுப்பைச்சேர்ந்தவர்கள் இருக்கிறீர்களா? இப்பொழுது இங்கே கோடைகாலம் என்று எனக்குத் தெரியும். சரி! நான் நான்காம் வகுப்புப் படிக்கிறவர்களை விரும்புகிறேன்; என் வாழ்வின் மிகச்சிறந்த 5 ஆண்டுகளை நான் நான்காம் வகுப்பில் செலவிட்டேன். (அது அவர்கள் ADD- யைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு. இதனிடையே என்னுடைய சகோதரர் நான்காம் வகுப்பில் இருந்தார். 32 வயதில் உயர் நிலைப் பள்ளியை முடித்தபின்பு, அவர் என்ன செய்யப்போகிறார் என்று எங்கள் அனைவருக்கும் தெரிந்து இருந்தது!) நல்லது, நாம் நான்காம் வகுப்புப் படிப்பவர்களை ஒரு சுற்றும் இராட்டினத்தில் வைத்து, உயர் நிலைப்பள்ளியின் கால்பந்து அணியினரால், கடிகாரம் சுற்றும் திசையில், எந்த அளவு வேகமாகச்சுற்ற முடியுமோ, அந்த அளவு வேகமாக அதைச்சுற்ற வைக்கப்போகிறோம். இப்பொழுது டிஜிட்டல் கடிகாரம் உங்களிடம் இருந்தால், கடிகாரம் சுற்றும் திசையென்றால் என்ன என்று உங்களுக்குத் தெரியாதிருக்கலாம்..... பின்பு உங்களுக்குச் சொல்லுகிறேன். நாம் கடிகாரம் சுற்றும் திசையில் இராட்டினத்தைச் சுற்றவைக்கப்போகிறோம், மேலும் சிறுவர்கள் நான்கு நிலைகளில் அதன் உள்ளே செல்ல இருக்கிறார்கள். கால்பந்து விளையாட்டு வீரர்களை நோக்கிச் சத்தமிடும் அந்த இடத்திலிருந்து, அவர்கள் முதல் நிலையில் ஆரம்பிக்கிறார்கள், "வாருங்கள், விரைவாகச் செல்லலாம்! விரைவாக! உங்களுக்கு இதைவிட வேகமாகச் செல்ல முடியாதா?" என்று கேட்கிறார்கள். ஒரு மணிக்கு 30 மைல்கள் தூரம் வேகம் என்ற வேகத்தில் சுற்றும்போது, சிறுவர்கள் இரண்டாம் நிலையை அடைகிறார்கள். அப்பொழுது அவர்கள் சத்தமிடுவதை நிறுத்தி விடுகிறார்கள். அன்பான உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் முழுக்கவனத்தையும் செலுத்தி அமைதியாகப் பிடித்திருக்கிறார்கள். ஒரு மணிக்கு 60 மைல்கள் தூரம் வேகம் என்ற வேகத்தில் சுற்றும்போது, இந்தச் சிறுவர்கள் மூன்றாம் நிலைக்குள் வருகிறார்கள். மறுபடியும் அவர்கள் சத்தம்போட ஆரம்பிக்கிறார்கள். ஆயினும் தற்பொழுது "நிறுத்துங்கள்! நிறுத்துங்கள்! தயவுசெய்து மெதுவாக வேகத்தைக் குறையுங்கள்!" என்று சத்தமிடுகின்றனர். எனினும் நிறுத்தவேண்டாம்; தொடந்து அதிக வேகமாக இராட்டினத்தைச் சுற்றவையுங்கள். ஒரு மணிக்கு 100 மைல்கள் தூரம் வேகத்தில் சுற்றும்போது, நான்காவது நிலையை அடைவார்கள். இந்தச் சிறுவர்கள் சுற்றும் இராட்டினத்தைவிட்டுப் பறக்க ஆரம்பிக்கிறார்கள். இது நடைபெறும்போது இயற்பியல் அறிவியலின் மிகவும் விந்தையான ஒன்றைக் கவனிப்பீர்கள். சிறுவர்கள் பறக்கும்போது, கடிகாரம் சுற்றும் திசையில் இராட்டினம் சுற்றினால், கடிகாரம் சுற்றும் திசையிலேயே சிறுவர்களும் சுற்றிக்கொண்டு..... மரத்திலோ அல்லது அதுபோன்ற கம்பத்திலோ மோதி நிலத்தில் விழும்வரையில் சிறுவர்கள் செல்லுவார்கள். அது ஏனெனில், இயற்பியலில் உள்ள கோண உந்துவிசையின் அழிவின்மை என்னும் விதியின் காரணமாகத்தான் அப்படி நிகழ்கிறது. பாருங்கள், சுற்றுகிற ஒரு பொருள் உடைந்தால், அதிலிருந்து பறக்கும் துண்டுகளூம் அதே திசையிலேயே சுற்றுகின்றன. ஏனெனில், உள்புறத்தைவிட வெளிப்புறம் வேகமாகச் செயல்படுகிறது. நீங்கள் விரும்பினால் கோண உந்துவிசையின் அழிவின்மை விதிமுறை பற்றி நாள்முழுவதும் பேசலாம், ஆனால் அந்தப் பேராசிரியர், "ஆமா, கோண உந்துவிசையின் அழிவின்மை விதிகள் பற்றி எனக்குத் தெரியுமே!" என்றார். "மிகவும் நல்லது ஐயா, அப்படியானால், இன்னும் ஒரு கேள்வியையும் கேட்க என்னை அனுமதியுங்கள். நீங்கள் கூறுவதைப்போன்று சுற்றுகின்ற ஒரு புள்ளியிலிருந்து இந்த உலகம் உண்டாகியிருந்தால், ஏன் மூன்று கோள்கள் எதிர்த்திசையில் சுற்றுகின்றன?" என்று நான் கேட்டேன். அவர் உண்மையிலே அமைதியாகிவிட்டார், அவருடைய முகத்தில் ஒரு சிக்கலான பார்வை காணப்பட்டது. "ஐயா, அறியப்பட்ட 91 சந்திரன்களில் 8 மட்டும் ஏன் எதிர்திசையில் சுற்றுகின்றன என்று தெரியுமா?" என்று நான் கேட்டேன். ஜூபிட்டர், சனி மற்றும் நெப்டியூன் கிரகங்களில் சந்திரன்கள் ஏன் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளிலும் செல்லுகின்றன. ஏன் இந்த ஒன்பது கோள்களூம் ஒன்றைவிட மற்றொன்று மிகவும் வேறுபட்டுக் காணப்படுகிறது? அந்தப் பெரு வெடிப்பிலிருந்து அவைகள் வந்திருந்தால், அவைகள் எல்லாம் மிகவும் வேறுபட்டுக் காணப்படுவது ஏன்? மிகவும் வேறுபட்டக் கலவைகள்! மேலும் ஏன் சில நட்சத்திரக் கூட்டங்கள் முழுவதும் எதிர்த்திசையில் சுற்றுகின்றன? "முட்டாள் நட்சத்திரக் கூட்டம் தவறான திசையில் சுற்றுகிறது" என்ற ஒரு கட்டுரையை CNN வெளியிட்டது. "ஐயா, ஏன் இவைகள் அனைத்தும் எதிர்த்திசையில் செல்லுகின்றன?" என்று நான் கேட்டேன். "எனக்குத் தெரியாது." என்று அவர் கூறினார். "ஏன் அவைகள் எதிர்த்திசையில் செல்லுகின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அவர் அதைக்கேட்பார் என்று நான் எதிர்பார்த்திருந்தேன். "ஐயா, அது மிகவும் எளிதானது" என்று நான் கூறினேன். "நீங்கள் பாருங்கள், 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்,' தேவன் அதைக் காரணத்தோடு செய்து, பெரு வெடிப்புக்கொள்கையை முட்டாள்தனமாகக் காணப்பட வைத்துள்ளார்" என்று நான் கூறினேன். ஆமா, ஆமென். தற்பொழுது நான் பெரு வெடிப்பை (Big Bang) நம்புகிறேன். ஏனெனில், வேதாகமம் பெரு வெடிப்புக் குறித்துக் கற்பிக்கிறது. "வானங்கள் மடமட என்று அகன்றுபோகும்" என்று அது கூறுகிறது. கிரேக்க மூலமொழியில், அதற்குப் பெரிய இரைச்சல் என்று அர்த்தமாகும்! எனவே, பெரிய சத்தம் இனிமேல் நிகழப்போகிறது. அது இதுவரையில் நிகழவில்லை. சரியா? எனவே, சிறுவர்களே, நீங்கள் பள்ளிக்குச் செல்லும்போது, சில ஆசிரியர்கள், "ஹேய், நீங்கள் பெரிய சத்தத்தை (Big Bang) நம்புகிறீர்களா?" என்று கேட்பார்கள். "ஆமா, நான் நம்புகிறேன், நீங்கள் மீட்கப்பட்டு அதற்கு ஆயத்தமாக இருப்பது நல்லது" என்று நீங்கள் கூறலாம். அந்தப் பெரிய சத்தம் உங்களுக்கு அருகில் உள்ள ஒரு நகரத்திற்குச் சீக்கிரமாக வரப்போகிறது. இதனிடையே, ஒரு பெரிய வெடிப்பிலிருந்து இந்த உலகம் வந்திருந்து, பில்லியன் ஆண்டுகளுக்கு மேல் மெதுவாக பரிணாமம் அடைந்திருந்தால், இயேசு எதற்காக சிலுவையில் மரித்தார்? கிறிஸ்துவின் மரணத்திற்கான நோக்கம் என்ன? மேலும் தேவன், இந்த உலகம் ஏற்கனவே எப்படியிருந்ததோ அதை மறுபடியும் திருப்பிக்கொள்ளுவார் என்று வேதாகமம் சொல்லும்போது....... எதைத் திருப்பிக்கொள்ளுவார்? அதிகமான மரணத்தையும், வேதனையையுமா? கடவுள் நம்பிக்கை பரிணாமக் கொள்கை நிலை பற்றி நாம் வீடியோ எண் 7-ல் அதிகம் பார்க்க இருக்கிறோம். பல்வேறு காரணங்களால், அந்தப் பெரு வெடிப்புக் கொள்கையானது, கிண்டலுக்கு உரியதாக இருக்கிறது சரியா? பெரு வெடிப்புக்கொள்கை உண்மையாக இருந்திருந்தால், மூலப்பொருட்கள் ஒரே மாதிரியாக சிதறியிருக்கும். ஆனால் அது அப்படியில்லையே. ஆபத்தானது, அந்த பெரு வெடிப்புக் கொள்கையில் அபாயகரமானப் பிரச்சனைகள் உள்ளது! ""அந்தப் பெரு வெடிப்புக் கொள்கையின்மேல் அருவருப்பான சவச்சீலை தொங்கிக்கொண்டு இருக்கிறது" என்று நான் சொல்லுவதற்கு கொஞ்சம் தயக்கமிருக்கிறது" என்று பிரட் ஹோயிலிகூடக் கூறியிருக்கிறார். " இவலூஷன் கிரஞ்சர்" என்ற அந்தப் புத்தகதில் அதிகம் தெறிந்துகொள்ளுங்கள். இது 900 பக்கங்களைக் கொண்டது. இதன் விலை 5 அமெரிக்க டாலர்கள் மட்டுமே. உயர்நிலைப் பள்ளியின் ஒவ்வொரு சிறுவர்களுக்கும் கொடுப்பதற்கேற்ற ஒரு மிகச்சிறந்த புத்தகமாகும். "ஒவ்வொரு பொருளும் அழிவுக்கு ஏதுவாக இருக்கிறது" என்று தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதி நமக்குக் கூறுகிறது. ஏதாவது ஒன்றை சிறிது காலத்திற்கு அப்படியே விட்டுவிட்டால், அது அழுகிப்போகிறது, துருப்பிடிக்கிறது, இறந்துபோகிறது அல்லது உடைந்துபோகிறது. தானாகவே எதுவுமே நல்ல நிலையை அடைவதில்லை என்று அந்த இரண்டாம் விதி கூறுகிறது. "வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாக இருக்கிறது; அவைகள் அழிந்துபோகும்;......அவைகள் எல்லாம் ஆடைகள் போன்றுப் பழமையாகப்போகும்" என்று அதைத்தான் வேதாகமம் போதிக்கிறது. எதுவும் தானாகவே நல்ல நிலையை அடைவதில்லை. காலையில் நீங்கள் எழுந்தவுடன் உங்கள் தலைமுடிகளைப் பாருங்கள் அப்பொழுது இது உங்களுக்குப் புரியும். நான் பேசிக்கொண்டிருப்பதைப் பற்றி நீங்கள் சரியாகப் பார்க்கலாம். ஒவ்வொரு பொருளும் ஒழுங்கின்மைக்கு ஏதுவாக இருக்கிறது, சரியா? சூயி என்பவள் தனது 20வது வயதில் இவ்வாறும், அவள் 90வது வயதில் இவ்வாறும், அவள் 3000வது வயதில் இவ்வாறும் இருப்பாள். ஒவ்வொன்றும் பிரச்சனைக்கும் ஒழுங்கின்மைக்கும் ஏதுவாக இருக்கிறது. சரியா? நீங்கள் ஒன்றும் செய்யாமல் விடுவதினால், ஒவ்வொன்றும் சீரழிகிறது, அழிந்துபோகிறது, உடைகிறது அத்துடன் தேய்ந்துபோகிறது. இரண்டாம் விதியைப் பற்றிய அனைத்தும் அதுவாக இருக்கிறது. ஒவ்வொன்றும் அதிக கெடுதலடைகிறது. எதுவுமே நல்லதாவதில்லை. ஆனால், "4 பில்லியன் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு ஒருவேளை பாக்டீரியாக்களிலிருந்து மனிதர்கள் பரிணாமம் அடைந்திருக்கலாம்" என்று இந்தப் பாடப்புத்தகம் கூறுகிறது. உங்களுடைய முப்பாட்டன்-முப்பாட்டன்-முப்பாட்டன் ஒரு பாக்டீரியாவா? "நல்லது, ஹோவிந்த் அவர்களே, நீங்கள் ஆற்றலைச் சேர்த்தால், தெர்மோடைனமிக்ஸின் இரண்டாம் விதியை மேற்கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியாதா?" என்று பரிணாமவாதிகள் கேட்கலாம். மேலும் பூமியானது சூரியனிடமிருந்து ஆற்றலைப் பெறுகிறது, எனவே பூமியானது ஒரு திறந்த கட்டமைப்பு. அப்படித்தான் நாம் விதியை மேற்கொள்ளுகிறோம். அந்த வாதம் எனக்குப் புரிகிறது, ஆயினும் அவைகள் குறியைத் தவறவிடுகின்றன. முதலாவதாக: இந்த பிரபஞ்சமானது ஒரு மூடிய கட்டமைப்பாகும். இரண்டாவதாக: அந்த ஆற்றலைப் பயன்படுத்தவும், ஈடுபடுத்தவும், ஒரு சிறப்பான இயக்கமுறை இல்லையானால், ஆற்றலைச் சேர்ப்பது அழிவை உண்டாக்கும். பாருங்கள், ஜப்பானியர்கள் ஒரு நாள் முத்து துறைமுகத்தில், அதிகமான ஆற்றலைச் சேர்த்தார்கள். அவர்கள் நமக்காக எதையாவது ஒழுங்குசெய்திருந்தார்களா? எனவே சில ஆண்டுகளுக்கு முன்பு, நாம் அவர்களின் சில நகரங்களுக்கு ஆற்றலை அதிகம் சேர்த்தோம்- உதவியைத் திருப்பிச்செய்தோம். நாம் அவர்களுக்காக எதையுமே ஒழுங்கு செய்யவில்லை. அதிகம் ஆற்றலைச் சேர்ப்பது அழிவுக்குரியதாக இருக்கிறது. உங்களின் வீட்டுக்கூரையில் சூரியன் ஆற்றலைச் சேர்த்து வருகிறது; அதனால் உங்களின் வீட்டுக்கூரை அழிக்கப்படுகிறது. சூரியனின் ஆற்றல் வீடு முழுவதையும் அழித்துவிடும். சூரியனின் ஆற்றல் உங்கள் காரின் கூரையை அழித்துவிடும். அது இருக்கைகளின் உறைகள், திரைகள் போன்றவற்றை அழித்துவிடும். சூரியனின் ஆற்றலானது அதன் வர்ணப்பூச்சு வேலையை அழித்துவிடும். சூரியனின் ஆற்றலை உண்மையிலேயே ஒன்று மட்டுமே பயன்படுத்தக் கூடியதாக இருக்கிறது; அது தாவரத்தின் இலைப்பச்சையம் ஆகும். மேலும் ஒரு விண்கலத்தைப் பார்க்கிலும், ஒரு சிறிய தாவர செல்லானது அதிக அடுக்குகள் உள்ளதாக இருக்கிறது. நாம் அவைகளைப் பற்றி வீடியோ எண்4-ல் அதிகம் பார்ப்போம். பரிணாமம் இரண்டாவது விதியை மீறுகிறது, மேலும் பரிணாமம் தவறாகவும் இருக்கிறது, சரியா? இந்தப் புத்தகமானது சிறுவர்களிடம் நட்சத்திர மீனின் பழங்கால புதைபொருள் சுவடைக்காட்டி, " இது 3.4 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை.....தற்கால மனிதர்களின் ஆரம்ப மூதாதையர்களில் மீதியாக இருப்பவைகள்" என்று கூறுகிறது. உங்களுடைய முப்பாட்டன்-முப்பாட்டன்- முப்பாட்டன் ஒரு நட்சத்திர மீனாகவா இருந்தார். 2004 நவம்பரில் வந்த டிஸ்கவர் பத்திரிக்கை எவ்வாறானது? உங்களின் மூதாதையர் ஒரு கடற்பாசியாகவா இருந்தார்? ஆகா, உங்களின் அப்பா யாராக இருக்கிறார்? தற்பொழுது, தயவுசெய்து அடுத்தப் படத்தைப் பார்த்து சிரிக்காதீர்கள், சரியா? இது காலையில் எழுந்தவுடன் காட்சியளிக்கும் என்னுடைய சகோதரனின் படமாகும், அவர் முதலாவது காப்பியைக் குடித்ததும் கொஞ்சம் தைரியமாகத் தோற்றமளிப்பார். இதனிடையே, நான் இந்தச் சிறுவர்களை எச்சரிக்கவேண்டும். சிறுவர்களே, கவனமாகக் கேளுங்கள். காப்பியைக் குடிக்காதீர்கள்! நீங்கள் சிறுவர்களாக இருக்கும்போது காப்பியைக் குடித்தால், நீங்கள் திருமணம் முடித்தபின்பு, உங்களின் பிள்ளைகள் நிர்வாணமாகவும், எழுத்தறிவு இல்லாமலும் பிறப்பார்களாம்! அதைக்காட்டிலும் தேநீர் மிகவும் மோசமாக இருக்கிறது. குளிரூட்டப்பட்ட நான்கு கலன்கள் தேநீரைக் குடித்த செவ்விந்தியர் ஒருவர் இருந்தாராம். அந்த இரவு, அவர் அந்தத் தேநீர் பாத்திரத்தில் மூழ்கிவிட்டாராம். அதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அது ஆபத்தானது. எப்படியோ, இதுதான் எனது சகோதரனாக இருக்கப்போகிறார், தயவுசெய்து சிரிக்காதீர்கள். அவரால் அதற்கு உதவிசெய்ய முடியாது. அதோ அவர் அங்கே இருக்கிறார்! இந்தப் பாடப்புத்தகம் சொல்லுவதைக் கவனியுங்கள், "30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்,.." இப்பொழுது சிறுவர்களே, உங்களுக்காக அதை மொழிபெயர்க்க என்னை அனுமதிக்கவும். "மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்" என்று எப்பொழுதும் இந்தப் பாடப்புத்தகம் சொல்லுகையில், அதன் அர்த்தமானது: நீண்ட காலத்திற்கு முன்பு, மிகவும் தொலைவில் என்று அர்த்தமாகும். அதாவது அடுத்ததாக ஒரு விசித்திரக்கதை வருகிறது என்று அர்த்தமாகும், சரியா? அது உங்களுக்கான எச்சரிக்கை, ஒரு விசித்திரக் கதையாக வருகிறது. "முப்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் குரங்குகள் பரிணாமம் அடைந்தன." அந்த வார்த்தையானது மறுபடியும் அங்கே இருக்கிறது, நீங்கள் கவனமாக இருக்கவேண்டும். "மனிதர்களுக்கும் தற்கால மனிதக் குரங்குகளுக்கும், அவைகள்தான் மூதாதையர்கள்" என்று அது கூறுகிறது. மனிதர்களுக்கு அவைகள் மூதாதையர்களா? தாத்தாவா? உங்களுக்கு எவ்வளவு பெரிய கண்கள் தாத்தா! "என்னுடைய பையனுடன் உங்களைப் பார்ப்பது பரவாயில்லையே." சிறுவர்கள் விலங்குகளேயல்லாமல் வேறொன்றும் இல்லை என்று பிள்ளைகளுக்குக் கற்பித்து இருக்கிறோம் என்பது உங்களுக்கு இப்பொழுது தெரிகிறது. மேலும் அவர்களில் அதிகமானோர்கள் அவ்வாறே நடந்துகொள்ளுகிறார்கள். பார்பரா ரெனால்ஸ்கூட இதைக் கண்டுபிடித்துவிட்டார். "உங்கள் சிறுவர்கள் பள்ளிகளில் வாலில்லாக் குரங்குகளாகச் செயல்படுகிறார்களா?" அவனுக்குப் பரிணாமம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. "ஜானி, நீ ஒரு விலங்கு என்று ஊகித்துக்கொள். மேலும் மண்புழுவுடன் பொதுவான மரபுரிமைப் பங்கு உள்ளது. "ஆகா, நான் ஒரு விலங்கு என்று சொல்லுகிறீர்களா? சரியா?" நாம் சிறுவர்களுக்கு எதைக் கற்பிக்கிறோமோ, அது அவர்களின் நடத்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எப்பொழுதாவது நிறுத்தி சிந்தித்திருக்கிறீர்களா? நீங்கள் எவ்வாறு நடந்துகொள்ளுகிறீர்கள் என்பது, நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்துத் தீர்மானிக்கப்படுகிறது. "நீங்கள் ஒரு விலங்கு" என்று சிறுவர்களுக்கு இன்று போதிக்கப்படுகிறது. இன்றைய நாட்களில் ராக் இசையில் முழுமையாக இருப்பதெல்லாம் மரணம், அழிவு மற்றும் இரத்தம். "என்னை வெறுக்கிறவர்கள் மரணத்தை விரும்புகிறார்கள்" என்று வேதாகமம் கூறுகிறது. "பூரணமானவர்கள் எவரும் இல்லை" என்று சிறுவர்களுக்கு இன்று கற்பிக்கிறார்கள். ஒரு நேரம், நான் ஒரு விவாதத்தில் இருக்கும்போது, "ஹோவிந்த், பூரணமானவர்கள் எவரும் இல்லையே!" என்று இந்தப் பேராசிரியர் கூறினார். "நீங்கள் முற்றிலும் உறுதியாகவாக் கூறுகிறீர்கள்?" என்று நான் கேட்டேன். அவருடைய சிறிய மூளையில் ஊதியது! "தற்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், "பூரணமானவர்கள் இல்லாதபோது" நான் எப்படி முற்றிலும் உறுதியாக இருக்க முடியும்?" இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பெனிசில்வானியாவில் உள்ள ஒரு பொதுப் பள்ளியில் நான் பேசிக்கொண்டிருந்தபோது, இந்தச் சிறுவன் இரண்டாவது வரிசையில் உட்கார்ந்திருந்தான். "ஹோவிந்த், நான் ஒரு நாத்தீகன். கடவுள் என்று ஒருவர் இல்லை" என்று அவன் கூறினான். "உனக்கு நிச்சயமாகத் தெரியுமா?" என்று நான் கேட்டேன். "எனக்கு நிச்சயமாகத் தெரியும்" என்றான். "மகனே, உன்னிடம் ஒரு கேள்வியைக் கேட்க என்னை அனுமதிக்கவேண்டும்" என்று கூறினேன். "உனக்கு அனைத்தும் தெரியுமா?" என்று கேட்டேன். "ஓ, இல்லை.... தெரியாது" என்றான். "சரி, நல்லது. எல்லாவற்றிலும் பாதியளவாவது உனக்குத் தெரியும் என்று நீ நினைக்கிறாயா?" எனக்கேட்டேன். "இல்லை..." என்றான். நல்லது, எல்லாவற்றிலும் பாதியளவு உனக்குத் தெரியும் என சில நிமிடங்களுக்கு வைத்துக்கொள்ளுவோம். உனக்குத் தெரியாத அந்த மற்றைய பாதியில் கடவுள் இருக்க வாய்ப்பு இருக்கலாமா? புதிய வகையான சிந்தனையாக இருக்கிறது என்று சற்று நேரத்தில் அவனுடைய மூளையைச் சுற்றிச்சென்றது என்று நான் நிச்சயமாகக் கூறுகிறேன். "மேலும் இதற்கிடையே மகனே, நீ ஒரு நாத்தீகனாக இருந்தால், ஒரு சாதாரணக் கேள்வியைக் கேட்க என்னை அனுமதிக்கவும் என்று நான் கேட்டேன். எவ்வாறு உன்னால் தவறிலிருந்து சரியானதை வேறுபிரித்துக் கூறமுடிகிறது?" சில தடவைகள் இந்தக் கேள்வியை ஒரு நாத்தீகனிடம் கேளுங்கள். எவ்வாறு உன்னால் தவறிலிருந்து சரியானதை வேறுபிரித்துக் கூறமுடிகிறது?" "அது மிகவும் இலகுவானது......எது சரி, எது தவறு என்று நான் தீர்மானிக்கிறேன் என அவன் கூறினான். "எனது சொந்த உலகத்தின் கடவுள் நானே" என்றான். "மகனே, அதைப்பற்றிக் கேட்பதில் நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன், ஏனெனில் 5 நிமிடங்களில் உன்னைச் சுடப்போகிறேன்" என்று நான் கூறினேன். "உங்களால் அவ்வாறு செய்ய முடியாது" என்றான். "ஓ ஆமா என்னால் முடியும்! நீ பார், எனது சொந்த உலகத்தில் கடவுள் நானே, அத்துடன் நான் உன்னைச் சுடுவது நல்லது என்று தீர்மானித்துவிட்டேன்" என்று நான் கூறினேன். நியாதிபதிகளின் புத்தகத்தில் கூறுவதுபோல், "ஒவ்வொரு மனிதனும் அவன் பார்வைக்குச் சரியானதைச் செய்தான்" என்பதைப்போல், அந்தத் தத்துவம் வேகமாகும்போது அது எங்கே நடத்திச்செல்லும் என்பதைப் பாருங்கள். சமுதாயத்திற்கு அபாயகரமானப் பிரச்சனைகள் -கொடுமையான நேரமாகிவிடுகிறது. தவறிலிருந்து சரியை எவ்வாறு சொல்லுவீர்கள்? ஒரு பரிணாமவாதியைக் கேட்பதற்கான ஒரு சாதாரணக் கேள்வி இதுவாகும். சொல்லுவதற்கு ஒரு வழியும் அவர்களிடம் இல்லையே. தவறிலிருந்து சரியை ஒருவேளை ஒசாமா பின்லேடன் தீர்மானிக்க வேண்டும். தவறிலிருந்து சரியை ஒருவேளை பில் கிளிண்டன் தீர்மானிக்கவேண்டும். எங்கே அதைக் கண்டுபிடிப்பது என்று ஏதாவது யோசனை அவருக்கு இருக்குமானால், தவறிலிருந்து சரியை நீங்கள் எவ்வாறு சொல்லுவீர்கள்? எளிமையானதே! தவறிலிருந்து சரியைச் சொல்லுவது உண்மையிலே எளிமையானது. "என்று கர்த்தர் உரைக்கிறார்." தற்பொழுது நீங்கள் பாருங்கள், அது பூரணமாகிறது. மேலும் கர்த்தர் உரைப்பது, "செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக;....." தேவன் என்ன சொல்லுகிறார் என்பதைப் பற்றித் தெரியாமல், அல்லது தேவன் என்ன சொல்லுகிறார் என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் சில மக்கள் இருக்கிறார்கள். ஆனால், அதைச்செய்யாதே என்று தேவன் சொல்லுகிறார், சரியா? கடந்த காலங்களில் நீ செய்திருந்தால், "தேவனே என்னை மன்னியுங்கள்," என்று கூறி, இனிமேல் அதைச்செய்யாமல் இருக்க முடியும். அதிகமான ஆசிரியர்கள் புரிந்துகொள்ளுவதாகத் தெரியவில்லை. ஏதோ கண்மூடித்தனமாக இந்தப் பாடப்புத்தகத்தை பின்பற்றியும், இந்தப் பரிணாமக் கொள்கையை அவர்கள் போதிக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். இல்லை, நீங்கள் இந்தப் பரிணாமக் கொள்கையைக் கற்பிக்க வேண்டியதில்லையே! பொதுப்பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பிக்க விரும்பினால், படைப்பைப்பற்றிக் கற்பிக்கலாம். பொதுப்பள்ளிகளில் படைப்பைப் பற்றிப் போதிப்பதற்கான அனைத்து விதிமுறைகள் பற்றிய "பொதுப்பள்ளியில் ஆஜர் செய்தல்" என்றழைக்கப்படும் வீடியோ டேப் எங்களிடம் இருக்கிறது. என்ன நடந்தது எனில், இந்தப்படைப்புக் கொள்கையானது கற்பிக்கப்பட வேண்டும் என்று அர்கன்ஸாஸ் மற்றும் லூயிஸ்ஸியானா மாநிலங்களில் சட்டங்களை அமுல்படுத்தியுள்ளார்கள். நீதிமன்றமானது இரண்டு வழக்குகளையும் நிறுத்தி வைத்து, "நீங்கள் படைப்பைப் போதிக்கத் தேவையில்லை" என்று அவர்கள் கூறினார்கள். "ஆசிரியர்கள் விரும்பினால் அதைப் போதிக்கலாம், ஆனால் அதை ஆசிரியர்கள் தன்னார்வமாகச் செய்யவேண்டும்" என்று அவர்கள் கூறினார்கள். "படைப்பு அறிவியல்" போதனையைத் தடுப்பதற்கு எந்த மாநிலத்திலும் சட்டம் இல்லையே" என்று ஸ்டீபன் கோல்டுகூடக் கூறியிருக்கிறார். அதை முன்பே கற்பித்திருக்கலாம். அதை இப்பொழுதும் கற்பிக்கலாம். 1987-ஆம் ஆண்டின் உச்ச நீதிமன்றத்தீர்ப்பைப் பற்றி அவர் விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார். பொதுப்பள்ளிகளில் படைப்பைப் பற்றி நீங்கள் பேச இயலாது என்று ACLU என்கிற அமெரிக்கக் கம்யூனிஸ்ட் வக்கீல்களின் ஐக்கியம் சுற்றிலும் பிரச்சாரம் பரப்புவதற்குக் கடினமாக முயற்சித்தார்கள். மேலும் அது உண்மையும் அல்ல. எப்பொழுதும் பொதுப்பள்ளிகளில் தாராளமாகப் படைப்பைப் பற்றிக் கற்பிக்கலாம். அதற்கு எதிராக எந்த ஒரு சட்டமும் இல்லையே, சரியா? "சரி சிறுவர்களே, கவனியுங்கள். நீங்கள் ஒரு குழைந்த திரவமாக ஆரம்பித்து மெதுவாக மனிதனாகப் பரிணாமம் அடைந்தீர்கள்" என்று ஒரு ஆசிரியர் எழுந்து வகுப்பரையின் முன் நின்று சொல்லுவாரானால், வேதாகமம்மீது நம்பிக்கையுள்ள சில சிறுவர்களை, அந்தப் போதனை அழிக்கும் என்பதை நீங்கள் உண்மையிலே எண்ணிப்பார்க்கப் பெரிய மேதையாக இருக்க வேண்டியதில்லையே! மேலும் எவராவது ஒரு பிள்ளையின் நம்பிக்கையை அழித்தால், அதைப்பற்றி இயேசு என்ன கூறுகிறார் என்று வாசிப்பது நல்லது. "இந்தச் சிறியவரில் ஒருவருக்கு இடறல் உண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு........ மேலும் அவன் கடலின் ஆழத்திலே தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாக இருக்கும்," என்று அவர் கூறினார். பரிணாமத்தைப் போதிப்பவர்கள் எவரும் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது கஷ்டப்படுவார்கள். "நாம் அதிக ஆக்கினைத்தீர்ப்பு அடைவோம் என்று அறிந்து, அதிகம்பேர் போதகர்கள் ஆகாதிருங்கள்," என்று வேதாகமம் கூறுகிறது. இது மிகவும் ஆர்வமாக இருக்கிறது, இருப்பினும் என்ன நிகழ்ந்தது? மொத்தத்தில் இரண்டு அல்லது மூன்று ஆயிரம் வார்த்தைகள் இருந்த பரிணாமப் புத்தகங்களே சராசரியாக அமெரிக்காவில் 1950-ஆம் ஆண்டுகளில் இருந்தன. ஆனால், 1957-ல் ரஷ்யர்கள் ஸ்பூட்னிக்கை விண்வெளியில் மிதக்கவிட்டு, விண்வெளிப்போட்டியில், நம்மைத் தோற்கடித்ததால், அமெரிக்கர்கள் திகில் அடைந்தார்கள். ரஷ்யர்கள் விண்வெளிப் போட்டியில் வெற்றிபெற்றுக்கொண்டிருந்ததையும், அமெரிக்கர்கள் திகில் அடைந்ததையும் ஞாபகம் வைத்திருக்கிற வயதுடையவர்கள் எத்தனைபேர்கள் இருக்கிறீர்கள்? "வீழ்ந்து எவ்வாறு நீங்கள் வாழ முடியும்?" என்பதைப் போன்ற செய்திகளை "வாழ்வுப் பத்திரிக்கையில்" வெளியிட்டார்கள். "ஏனெனில், சோவியத் ரஷ்யர்கள் பரிணாமத்தைக் கற்பிப்பதினால், நமக்கு முன் செல்லுகிறார்கள்" என்று அவர்கள் கூறினார்கள். நமது பள்ளிகளில் நாம் அதைக் கற்றுக்கொடுப்பதில்லை. "உங்கள் சொந்த வெடிகுண்டு தாக்காத புகலிடத்தை நீங்கள் எவ்வாறு கட்டுவது?" என்னும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். அணுகுண்டு விழுந்தால் பிழைப்பதற்கு அவைகளை அவர்களின் பின்முற்றத்தில் கட்டினார்கள். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், சோவித்தியர்கள் பரிணாமத்தைக் கற்றுக்கொடுப்பதினால் அறிவியலில் முன்னிலையில் இருக்கிறார்களா? விண்வெளிக்கலத்தை அனுப்புவதற்கு பரிணாமம் என்ன செய்திருக்கிறது? பின்பு,1959-ல் டார்வினின் நூற்றாண்டு விழாவின்போது அவரின் புத்தகம் வெளிவந்தது. மேலும் 1959-ல், பள்ளிப்பாடத்திட்டத்தில் பரிணாமத்தைத் திணிப்பதற்கு, ஒரு பில்லியன் டாலர் பணத்தை எய்ஸன்ஹவர் கூட்டாட்சியினரிடம் லஞ்சம் கேட்டார். மேலும் அந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக்கொண்டார். பரிணாமம் பற்றி அதிகமாக சேர்ப்பதற்காக, 1950 மற்றும் 1960-ஆம் ஆண்டு காலப்பகுதிகளில், அமெரிக்காவின் பாடப்புத்தகங்கள் மாற்றி எழுதப்பட்டன. "அமெரிக்க அறிவியல் கல்வியின் குளிர் போர் புனரமைப்பு" என்று அவர்கள் அதை அழைத்தார்கள். பரிணாமம் கற்பிக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக நமது முழு அறிவியல் பாடத்திட்டமும் மற்றைய பாடத்திட்டங்களும் மறுபடியும் எழுதப்பட்டன. மேலும் 1963-ஆம் ஆண்டில் பரிணாமம் பற்றிய சராசரியானப் பாடப்புத்தகத்தில் 33,000 சொற்கள் இருந்தன. 1963-ஆம் ஆண்டில் ஜெபமானது பள்ளிக் கல்வியிலிருந்து வெளியேற்றப்பட்டது. " மேடுலைன் முர்ரே ஓ' ஹரே" என்ற அந்த வாக்கியம் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? வாலிப வயதில் தனித்து இருந்த ஒவ்வொருவரும், திருமணத்திற்கு முன்பே உடலுறவு கொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதை 1963-ல் நாம் பார்த்தோம். 10 முதல் 14 வயதுடையவர்களுக்குப் பாலுறவு நோய்கள் மிகவும் அதிகமானதை நாம் கண்டோம். ஒழுங்கின்படி திருமணமாகாதவர்களுக்குப் பிறந்த குழந்தைகளின் பிறப்பு விகிதம் மிக அதிகமானதையும், 550% கருவுற்றிருக்கும் நிலை அதிகமானதையும் நாம் கண்டோம். கருச்சிதைவு செய்துகொண்டிருப்பதுதான் அந்த வித்தியாசம். தற்பொழுது மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளிலும் மூன்றில் ஒரு குழந்தையானது திருமணமாகாத தம்பதிகளுக்குப் பிறக்கிறது. அவர்களில் மூன்றில் ஒருவர். சட்டத்திற்குப் புறம்பான பிள்ளைகள். இப்பொழுது கவனமாகச் செவிகொடுங்கள், அவர்களில் நீங்கள் ஒருவராக இருந்தால், இது உங்களுக்காகவே சொல்லப்படுகிறது. ஒருபோதும் பிறந்திருக்கக்கூடாத "கலப்பு வகை" மனிதனாக தீமோத்தேயு இருந்தான். தீமோத்தேயுவின் தாய் யூதப்பெண், அவனுடைய தகப்பன் கிரேக்கர். யூதர்களை அல்லாத எவரையும் யூதர்கள் திருமணம் செய்யக்கூடாது. தாய் கீழ்படியவில்லை; அதன் விளைவு தீமோத்தேயு. ஆனால், தீமோத்தேயு தேவனுக்குச் சேவைசெய்ய விரும்பினான். "மகனே, நான் உன்னைப் பராமரிப்பேன்" என்று தேவன் கூறி அவனுக்காக வேதாகமத்தில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். எனவே உங்கள் பெற்றோர்கள் கலப்புத்திருமணங்கள் செய்திருந்தாலும், முறுமுறுப்பதை நிறுத்திவிட்டு-அமைதியாக, உங்கள் வாழ்க்கையினால் தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள், சரியா? சாக்குப்போக்குக் கூறமுடியாது. தேவன் எவரையும் பயன்படுத்துவார், சரியா? 1963-ஆம் ஆண்டிலிருந்து, திருமணமாகாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளின் எண்ணிக்கை தீவிரமாக வளர்ந்துள்ளது. தேவனுடைய வார்த்தை மாறவில்லை. "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக" என்று தேவன் கூறுகிறார். "வேசிக்காரர்களையும் மற்றும் விபச்சாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்" என்று அவர் கூறுகிறார். "ஒரு பெண்ணை இச்சையோடு பார்த்தாலே உன் இருதயத்தில் அவளுடன் விபச்சாரம் செய்துவிட்டாய்" என்று இயேசு கூறினார். இதனிடையே, பெண்களே, எனவேதான் நீங்கள் எவ்வாறு ஆடையணிய வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது. "நீ வியாபாரத்தில் இல்லையெனில், விளம்பரம் செய்யாதே," என்று என்னுடைய அப்பா எபொழுதும் சொல்லுவார். இந்த நாட்டில் விவாகரத்து செய்யும் விகிதம் அதிகத் தீவிரமாகச் சென்றுவிட்டது. பிள்ளைகளை வெறுப்பது 2,300% வரை உயர்ந்துள்ளது. சட்டவிரோதப் போதைப்பொருட்கள் பயன்படுத்துவோர்கள் 6,000%. வன்முறைகள் ஏறக்குறைய 1000% வரை சென்றுவிட்டது. நான் அந்த அளவிற்கு வயது சென்றவன் அல்ல, எனினும் அந்த நாட்களில் நீங்கள் உங்கள் வீட்டைப் பூட்டி வைத்திருக்க வேண்டியதில்லை என்பது எனக்கு ஞாபகம் இருக்கிறது. அந்த நாட்கள் யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா? அத்துடன் உங்கள் வாகனத்தின் சாவிகளை அதிலேயே எப்பொழுதும் விட்டுவைப்பீர்கள். அவற்றை எடுத்துச்சென்றால் தொலைத்துவிடக்கூடும் என்பதற்காக, அவற்றை நீங்கள் ஒருபோதும் வெளியே எடுப்பதில்லை. மற்றும் சராசரி உயர்பள்ளிகளுக்கு நீங்கள் செல்லும்போது, வண்டிகள் நிறுத்தத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனங்களில் அதிகமானவற்றில் துப்பாக்கிகள் ரவைகளுடனேயே தொங்கவிடப்பட்டிருந்தன. அந்த நாட்களில் பள்ளிகளில் எவரும் சுட்டதில்லை, இல்லையா? இதைப்பற்றி ஒருவேளை கேள்விப்பட்டிருக்கவும் மாட்டீர்கள். கோலம்பைன் உயர்நிலைப்பள்ளியில், பரிணாமத்தில் தீவிர நம்பிக்கையுள்ள சிறுவர்களே அங்குள்ள ஒவ்வொருவரையும் சுட்டனர். ஹிட்லரின் பிறந்த நாளன்று வேண்டுமென்றே அந்தத் துப்பாக்கிச் சூட்டை அவர்கள் நடத்தினார்கள். அவர்கள், ஏசாயா சூல்ஸ் என்பவர் கறுப்பாக இருந்த காரணத்திற்காக அவரைச் சுட்டார்கள். ஹிட்லர் கருப்பர்களை வெறுத்தார்; அவர்களும் அதையே செய்தார்கள். இது பரிணாமக் கொள்கையின் எண்ணத்தால் நடந்தத் துப்பாக்கிச் சூடாகும். அந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்பு,"பாருங்கள், நமக்குத் துப்பாக்கிக் கட்டுப்பாடுச் சட்டம் அதிகம் தேவைப்படுகிறது" என்று ரோஸி ஓ டோனல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார். ரோஸி அவர்களே, அந்தச் சிறுவர்கள் 18 துப்பாக்கிக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை மீறி பள்ளிக்குள்ளே வந்திருக்கிறார்கள். மேலும் இரண்டு சட்டங்கள் அவர்களின் தீவிரத்தைக் குறைத்திருக்கும் என்று நான் நினைக்கவில்லை. பாருங்கள், ரோஸி அவர்களால் அதைக் கணிக்க முடியவில்லை; ஆனால் ஒருவர் அதை முழுவதுமாகக் கணித்துத் தனது வாகனத்தின் பின்பகுதியில் தனது மாற்றுச்சக்கரத்தின் உறையில், "நான் அதைப்பார்த்தேன்; மனிதனே, நான் அதைப் படம் பிடித்திருக்கிறேன்," என்று எழுதி வைத்தார். இது எல்லாவற்றையும் விவரிக்கிறது. "கொலம்பையினில் நடந்த சூட்டிற்குத் துப்பாக்கியைக் குற்றம் சாட்டுவது என்பது, ரோஸி ஓ டோனல் பருமனாக இருப்பதற்குக் கரண்டிகளைக் குற்றம் சாட்டுவதைப் போன்றது" என்று அவர் கூறினார். அது கரண்டியின் குற்றமல்ல, ரோஸி அவர்களே! மேலும் அது துப்பாக்கிகளின் குற்றமுமல்ல. ஆமா, துப்பாக்கியை குற்றம் சொல்லுவது - புத்திசாலித்தனமாக இருக்கிறது! SAT புள்ளிகள் 1963-லிருந்து வீழ்ச்சியடைந்துள்ளது. சென்ற 40 ஆண்டுகளில் இரண்டுமுறை அந்தச் சோதனையை நடத்தியிருக்கிறார்கள். கணீப்பீட்டுப் புள்ளிகள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் அந்தச் சோதனைகளை நடத்தியிருக்கிறார்கள். வாலிபர்களின் தற்கொலை வீதம் வெறித்தனமாக அதிகரித்துள்ளது. தற்பொழுது, நீங்கள் ஒரு தவளைக்கு முத்தம் கொடுப்பதினால், அது ஒரு இளவரசனாக மாறிவிடும் என்று நான் சொல்லியிருந்தால், நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? "இல்லை, தவளைகள் இளவரசனாக மாறாது" என்று சொல்லுவீர்கள். ஒரு தவளையை முத்தம் கொடுத்ததினால், எத்தனை பெண்கள் உங்களுடைய கணவரை உருவாக்கினீர்கள்? வாருங்கள், நாம் பார்க்கலாம். சுமார் மூன்று மட்டுமே என்று தெரிகிறது. பாருங்கள், இது அடிக்கடி நிகழ்வதில்லை; ஆனால் இது பாடப்புத்தகங்களில் இருக்கிறது. நாம் ஒரு அமீபாவாக ஆரம்பித்து, மெதுவாகத் தவளையாகப் பரிணாமம் அடைந்து, மேலும் மெதுவாக ஒரு இளவரசராக மாறிவிட்டோம். அது இதுபோன்ற விசித்திரக் கதையாகத்தான் இருக்கிறது. பாருங்கள், தவளை வேகமாக இளவரசனாக மாறினால், நாம் அதை ஒரு விசித்திரக்கதை என்று தெரிந்துகொள்ளுகிறோம். ஆனால் தவளையானது மெதுவாக இளவரசரானது என்றால், அது நவீன அறிவியல் என்கிறார்கள். இல்லை, என்னை மன்னித்துக்கொள்ளுங்கள், அதுவும் விசித்திரக்கதைதான். ஒரு விசித்திரக் கதையிலும் அதிகமாக இருக்கிறது. ஒரு முத்தம் வித்தியாசமல்ல. அது எதுவும் செய்யவில்லை. இன்றைக்கு மாணவ, மாணவிகளே, உங்களின் தவளையானது இளவரசனாக மாறவேண்டுமானால்; "பில்லியன்கள், பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு" என்கிற மேலான, சிறந்த, அதிக சக்தியுள்ள, மாயவித்தைக் கலையை உடையவராக நீங்கள் இருக்கவேண்டும். உங்களில் எத்தனைபேர்கள் இதற்கு முன்பு எப்பொழுதாவது அதைக்கேள்விப்பட்டிருக்கிறீர்கள்? "பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு" என்பது பாடப்புத்தகங்களில் இருக்கிறது. நீங்கள் இதைத் தொலைக்காட்சிகளில், பத்திரிக்கைகளில் மற்றும் நேஷனல் ஜியோக்கிரபிக்கில் காணலாம். "பில்லியன்கள் மற்றும் பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு......" என்று அவர்கள் இதை ஒரு அறிவியலின் உண்மையைப் போன்று பேசுகிறார்கள். இங்கே நான்காம் வகுப்புப் பாடப்புத்தகம் இருக்கிறது. "பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு" என்று அது கூறுகிறது. தற்பொழுது ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். எவராவது எப்பொழுதாவது அதை என்னிடம் சொன்னால், "நீங்கள் அப்பொழுது இருந்தீர்களா?" என்று நான் கேட்கிறேன். "இல்லை, உண்மையிலே நான் அப்பொழுது இருக்கவில்லை." என்று அவர்கள் சொல்லுவார்கள். அப்படியானால், "இந்த பூமியானது மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று நான் கேட்பேன். இது உண்மையிலே அறிவியலின் ஒரு பகுதியா? நாம் கவனிக்கக்கூடிய, படிக்கக்கூடிய, சோதனை செய்யக்கூடிய மற்றும் நிரூபித்துக் காட்டக்கூடிய ஒன்றாக இருக்கிறதா? "இல்லை, ஆனால், பூமி மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று எல்லாரும் நம்புகிறார்கள்" என்று அவர்கள் கூறுவார்கள். இல்லையே, அவர்கள் எல்லாரும் அப்படி நம்பவில்லையே. பூமியின் வயது 10,000 ஆண்டுகளுக்கும் குறைவானது என்றும், இதை தேவன் படைத்தார் என்றும் அதிகமான அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். அவர்கள் எடுத்த கணக்கெடுப்பில் 15% க்கும் குறைவாகவே பரிணாமக் கொள்கைக்காரர்களும் மற்றும் நாத்தீகர்களும் இருக்கிறார்கள். அதிகப்பெரும்பான்மையான அமெரிக்கர்கள் இந்தப் பூமிக்கு மில்லியன் கணக்கான ஆண்டுகள் வயதாகிறது என்று நம்புவதில்லையே. தற்பொழுது பாதிக்கும் சற்று அதிகமான விஞ்ஞானிகள் பரிணாமத்தை நம்புகிறார்கள் என்பது உண்மை. அதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன். ஆனால் அது உண்மையை உருவாக்காது. அவர்கள் நம்புகிறார்கள் என்பது உண்மை, ஆனால் அவர்கள் நம்புவது உண்மையை அல்ல. பாருங்கள், கொஞ்சம் விஞ்ஞானிகள் சிலவற்றை நம்புகிறார்கள் என்கிறதினால், எல்லாரும் என்று அர்த்தமாகாது. ஒரு காலத்தில் கோள்கள் பூமியைச் சுற்றி வருகின்றன என்று விஞ்ஞானிகள் கற்பித்தார்கள். ஒரு பெரிய கல் சிறிய கல்லைவிட வேகமாகக் கீழே விழும் என்று விஞ்ஞானிகள் கற்பித்தார்கள். "நீங்கள் வியாதிப்பட்டால், உங்களுக்குக் கெட்ட இரத்தம் இருந்திருக்கிறது. உங்களின் இரத்தத்தை வெளியே எடுத்துவிடுங்கள் அப்பொழுது குணமடைவீர்கள்" என்று கற்பித்தார்கள். உங்களின் இரத்ததை வெளியே எடுப்பதற்காக அமெரிக்காவின் அனைத்துப் பகுதியிலும் சிறப்பு இடங்கள் இருந்தன. அவர்கள் எங்கே இருந்தார்கள் என்று நீங்கள் கூறமுடிந்தது, சிவப்பு வரிக்கோடுகள் சுற்றிக்காணப்படும் கம்பத்தை வைத்திருந்தாரகள். முடிதிருத்துபவர் என்ற வார்த்தை சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதனை அடுத்து ஜார்ஜ் வாஷிங்டன்....... ..... அவரைச் சாகடிப்பதற்காக அவர்கள் இரத்தம் சிந்த விட்டார்கள். "மாமிசத்தின் உயிர் அதன் இரத்தத்தில் உள்ளது" என்று அவருக்கு வேதாகமம் கற்பிக்கவில்லையா? அந்த வசனத்தை அவர் வாசித்திருந்தால், இன்றுவரை அவர் உயிருடன் இருந்திருப்பார். அல்லது, எப்படியோ, அவர் நீண்ட நாட்கள் வாழ்ந்திருப்பார். ஆனால் கவனியுங்கள், நீங்கள் படகில் சென்று தண்ணீர்க்கடியில் சென்று தங்க நாணயங்கள் நிறைந்த பொக்கிஷப் பெட்டியைக் கண்டுபிடித்திருந்தால், "அந்தப் படகு எப்பொழுது மூழ்கியது?" என்னும் ஒரு சாதாரணக் கேள்வியை உங்களிடம் நான் கேட்டேன். "எனக்குத் தெரியாது" என்று நீங்கள் சொல்லக்கூடும். நல்லது, நாணயங்களில் உள்ள தேதிகளைப் பாருங்கள். அந்தப் பெட்டியில் 1750 ஆம் ஆண்டில் உள்ள நாணயம் இருந்ததென்றால், அந்தப் படகு 1750 ஆம் ஆண்டிற்குப் பின்னரே மூழ்கியிருக்க வேண்டும் என்று உங்களால் கணிக்க முடியும். உதவியில்லாமலே அதைக்கணிப்பதற்கு எத்தனைபேர்களால் முடிகிறது? ஏனெனில், அதற்கு முன்பே மூழ்கியிருக்க முடியாது. அது மூழ்கியிருக்குமா? பழமையான நாணயம் எது என்று பெட்டிக்குள் தேடமாட்டீர்கள். நீங்கள் சமீபத்திய நாணயத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். அது படகு எப்பொழுது மூழ்கியிருக்கக் கூடும் என்பதற்கான தேடுதலைக் மட்டுப்படுத்தும். அது மட்டுப்படுத்தும் காரணி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பூமிக்கு வயது எத்தனை என்பதைச் சொல்லுவதற்கு, ஒருவேளை நூற்றுக்கணக்கான வழிகள் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? பலரும் பெரிய எண்ணிக்கைகளைக் கொடுக்கிறார்கள், மேலும் பலர் சிறிய எண்ணிக்கையைக் கொடுக்கிறார்கள், ஆனால் நாம் சிறியவைகளைக் குறித்தே அக்கறைப்பட்டுள்ளோம். நீங்கள் டைனோஸரின் எலும்பைக் கண்டால், உடனே அதைப்பற்றிய இரண்டு காரியங்களைக் கவனிக்கவேண்டும். முதலாவதாக, அது பேசுவதில்லை. இரண்டாவதாக, அதின்மேல் ஒரு தேதி குத்தப்பட்டிருக்காது. "கி.மு. 70 மில்லியன் ஆண்டில், தாய்வான் நாட்டில் ஒரு டைனோஸரால் தயாரிக்கப்பட்டது" என்று அது சொல்லுவதில்லை, சரியா? எனவே, ஒரு பழங்கால புதைபொருளின் வயதை நீங்கள் எவ்வாறு சொல்லுகிறீர்கள்? பூமியின் வயதை நீங்கள் எவ்வாறு சொல்லுகிறீர்கள்? எவ்வாறாயினும், இந்தப் பூமியின் வயது எவ்வளவு? நல்லது, சுமார் 6,000 ஆண்டுகள் இருக்கும் என்று வேதாகமம் குறிக்கிறது. இதற்குப் பில்லியன் ஆண்டுகள் ஆகிறது என்று பாடப்புத்தகங்கள் சொல்லுகின்றன. இதில் ஏதோ ஒன்று தவறாக இருக்கிறது. 20 பில்லியனுக்கும் 6,000 திற்கும் இடையே ஒரு வித்தியாசம் இருக்கிறது. நாடாளுமன்றம் அந்த வித்தியாசத்தைப் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை, ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது, சரியா? நாம் இதைப்பற்றி அடுத்த பகுதியில் பேசுவோம். இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகவில்லை என்று நீங்கள் எவ்வாறு காண்பிப்பீர்கள்? ஆனால் வேதாகமம் கற்பிப்பதைப் போன்று, இதற்கு 6,000 ஆண்டுகள் மட்டுமேயானால், அது சில சுவாரசீகமானக் கேள்விகளை எழுப்புகிறது. டைனோஸரஸைப் பற்றியத் தகவல் என்ன? கரிப்பொருள் காலம் பற்றியத் தகவல் என்ன? நட்சத்திரங்களிலிருந்து ஒளி எவ்வாறு இங்கு வருகிறது? கிராண்ட் கேனியன் பற்றிய தகவல் என்ன? அது உருவாக மில்லியன்கள் ஆண்டுகள் ஆகவில்லையா? மண்ணின் தூண்கள் பற்றிய தகவல் என்ன? நல்லது மக்களே, எனது கருத்தரங்கிற்கு 17 மணி நேரங்கள் ஆகிறது. என்னால் முடிந்தளவு வேகமாகப் பேசிக்கொண்டிருக்கிறேன், ஆனால் நாம் அவை அனைத்தையும் உள்ளடக்கிப் பேசுவோம். நாம் அவற்றில் சிலவற்றை ஒரு நிமிடத்தில் பார்க்கலாம். - www.drdino.com - தமிழ் (Tamil) 1ஆ - டாக்டர் ஹென்ட் ஹோவிந்த் - www.drdino.com - தமிழ் (Tamil) "ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்" என்று வேதாகமத்தில் ஆதியாகமம் 1:1-ல் கூறுகிறது. ஆரம்பம் எப்போதாக இருந்தது? இயேசு வானத்திலும் பூமியிலும் உள்ள அனைத்தையும் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. நல்லது பொறுத்திருங்கள், தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தாரா? அல்லது இயேசு வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தாரா? நல்லது, அந்த இரண்டுமே சரிதான். "யெகோவாவின் பொய் சாட்சிகள்" என்னத்தைப் போதித்தாலும் வல்லமையுள்ள தேவனாக இயேசு சரீரத்தில் இருந்தார், சரியா? "ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா?" என்று இயேசு மத்தேயு புத்தகம் 19:4-ல் கூறினார். இதனிடையே, அது ஆதாம் மற்றும் ஏவாள் என்றே இருக்கிறது. ஆதாம் மற்றும் ஸ்டீவாக இல்லை. ஆனால் அதுதான் ஆரம்பமாக இருந்தது என்று இயேசு கூறினார். "ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார்" என்ற அதே விஷயம் மாற்கு 10:6-லும் இருக்கிறது. மனிதனுடைய பாவத்தினாலேயே மரணம் உலகில் வந்தது என்று வேதாகமம் கூறுகிறது. ஆதாம் பாவம் செய்யும்வரைக்கும் ஒன்றுமே மரிக்கவில்லை. மரணம் மனிதனால் வந்தது. அந்த விஷயத்தில் உண்மையாகவே வேதாகமம் தெளிவாக இருக்கிறது. முதல் மனிதனாக ஆதாமும், உயிருள்ள அனைவருக்கும் ஏவாள் முதல் தாயாகவும் இருந்தாள். நல்லது, அப்படியென்றால் அது இதை நேர்த்தியாகவும் எளிமையாகவும் ஆக்குகிறது; நாம் அந்தக் காலங்களைக் கூட்டிப்பார்ப்போம். சேத் பிறந்தபோது ஆதாமுக்கு 130 வயது என்று வேதாகமம் கூறுகிறது. ஏனோஸ் பிறந்தபோது சேத்துக்கு 105 வயதாக இருந்தது. கேனான் பிறந்தபோது ஏனோஸிற்கு 90 வயதாக இருந்தது. நீங்கள் வேதாகமத்தைப் படியுங்கள்; நீங்கள் காலங்களைக் கூட்டிப்பாருங்கள்; அதைச்செய்வது கடினமானதல்ல. நீங்கள் இதுபோன்ற ஒரு அழகான அட்டவணையை இலகுவாக உருவாக்கலாம். என்னுடைய கருத்தரங்குக் குறிப்புப் புத்தகம் உங்களுக்குக் கிடைத்திருந்தால், அதன் கடைசிப் பக்கத்தில் இந்த அட்டவணை உள்ளது, அல்லது இவ்வாறு லேமினேஷன் செய்யப்பட்ட அட்டை ஒன்று காணப்படும். உங்கள் நாஸ்தீக நண்பன் மதிய உணவிற்காக உங்களிடம் வரும்பொழுது, அதை அவனுக்கு முன்பாக மேஜையில் வைக்கும் அட்டைக்குப் பதிலாகப் பயன்படுத்தலாம். இதனால் அப்படிப்பட்டவர்களிடம் நீங்கள் ஒரு உரையாடலைத் தூண்டலாம். எங்களுடைய ஊழியத்தில் இந்த அட்டைகள் ஒருசிலவைகளே இருக்கின்றன. உணவுப் பொட்டலங்களின்மேல் எழுதியுள்ளதை வாசிப்பதற்குப் பதிலாக அந்தச் சிறுவர்கள் இதை வாசிக்க முடியும். வேதாகமத்தில் உள்ள காலங்களை நீங்கள் கூட்டிப்பார்த்தால், சுமார் கி.மு. 4000 ஆண்டுகளை நீங்கள் படைப்பிற்காகப் பெற முடியும். தற்பொழுது, இதன்மேல் சரியாகக் காலங்களைக் குறிக்க முயற்சி செய்யும் நபர்களில் ஒருவராக நான் இல்லை. அது கி.மு. 4004 என்றும் நான் சொல்லவில்லை. அது அக்டோபர், 23-ஆம் தேதி மதியம் இரண்டு மணிக்கு என்றும் நான் சொல்லவில்லை. அந்தளவுக்கு துல்லியமாகக் காலங்களை வேதாகமத்திலிருந்து எடுக்கலாம் என்றும் நான் நினைக்கவில்லை. ஆதாம், மாலைவேளைக்கு முன்பு (Afternoon) படைக்கப்பட்டிருக்கலாம், ஏவாள் (Eve- Evening) மாலைவேளையில் படைக்கப்படிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். நான் கண்டுபிடித்தத் தடயம் அது ஒன்றே. மேலும் இதை என்னால் நிரூபிக்க முடியாது; ஆனால் தேவன் ஏன் ஆதாமை முதலில் சிருஷ்டித்தார் என நான் கண்டுபிடித்துவிட்டேன் என்று நான் நினைக்கிறேன். அதை எவ்வாறு படைப்பது? என்ற அறிவுரையைத் தேவன் விரும்பாததினால், தேவன் முதலில் ஆதாமை உருவாக்கினார் என்று நான் நினைக்கிறேன். எத்தனைபேர்கள் இதை ஒத்துக்கொள்ளுவீர்கள்? இதனிடையே, கி.மு.(BC) என்பது கிறிஸ்துவுக்கு முன்பு என்று அர்த்தம். பொதுவான காலங்களுக்கு முன்பு (BCE - Before the Common Era) என்று குறிப்பிடுவதற்கு ஏறத்தாள எல்லாப் பாடப்புத்தகங்களுமே மாறிக்கொண்டு வருகின்றன. மக்களே, பள்ளிகளிலிருந்து கிறிஸ்து அகற்றப்பட்டுள்ளார். இந்தப் பூமிக்கு பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று பாடப்புத்தகங்கள் கூறுகின்றன. ஆதாம் உருவாக்கப்பட்டதே ஆரம்பம் என்று இயேசு கூறினார். நல்லது, அவர் பொய் சொன்னாரா? அவர் அறிவியலைப் புரிந்துகொள்ளவில்லையா? அல்லது அவர் சரியானவராக இருந்தாரா? பூமியின் வயது எவ்வளவு? ஆரம்பம் எப்பொழுதுதாக இருந்தது? "கர்த்தாவே நீரே ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரம் போட்டீர்." இந்தப் பூமிக்கு வயது எவ்வளவு? கி.மு. 4000 என்ற காலம் சரியானதாக இருக்க முடியுமா? பல்கலைக் கழகங்களில் பல காட்சிகள் காண்பித்து பல விவாதங்களை நான் நடத்துகிறேன். அங்கே எப்பொழுதுமே சில நாஸ்தீகர்கள் வந்திருப்பார்கள். "ஹோவிந்த் அவர்களே, எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஆதாமின் மகன்கள் யாரைத் திருமணம் செய்தார்கள்?" என்று அவர்களில் ஒருவர் கேட்பார். இது ஒரு நல்ல கேள்வியும் மற்றும் ஒரு நியாயமான கேள்வியுமாகும். அது ஒரு நல்ல கேள்விதான், நான் அதற்குப் பதில்சொல்ல மகிழ்ச்சியாக இருக்கிறேன். இருப்பினும் உங்களுக்கே அது ஒரு முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. "காயீன் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்," என்று வேதாகமம் கூறுகிறது. நல்லது, அவன் அவளை அங்கு கண்டுபிடித்தான் என்று அது கூறவில்லை. ஆனால் அவனின் மனைவி யார்? அத்துடன் சேத் யாரைத் திருமணம் முடித்தான்? என்னால் அதற்குப் பதில் சொல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன். இருந்தாலும் பரிணாமவாதிகளுடன் ஒப்பிடும்போது நமக்கு ஒரு சிறிய பிரச்சனையே உள்ளது. 18 அல்லது 20 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு, ஒன்றுமில்லாதது வெடித்து, எல்லாவற்றையும் உண்டாக்கினது என்று அவர்கள் நம்புகிறார்கள். மேலும் 4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு பூமி குளிர்ச்சியடைந்து சூடான உருண்டைப் பாறையானது. "பாறையின் சூடான உருண்டையாக இந்தப் பூமி ஆரம்பித்தது" அதன்பின்பு, பல மில்லியன்கள் ஆண்டுகள் பெய்த அதிவேக மழைகள் பெரிய கடல்களை உண்டாக்கின, கூட்டு வேதிப்பொருட்களினால் உண்டாகும் குமிழிகளே கடல் தண்ணீர்களின் சுழற்சியாகும். "கூட்டு வேதியல் குழம்பிலிருந்து மிகவும் மெதுவாக உயிருள்ள உறுப்புகள் வந்தன" என்று அவர்கள் கூறுகிறார்கள். அது நிகழவேயில்லை; எவ்வளவு மெதுவாக அது நடந்தது என்று அது உறுதியாகச் சொல்லுவதைப் பாருங்களேன். "முதலாவது தானே நகல் உண்டாக்கும் முறைகளினால், அந்த உயிர்க்குழம்பு தோன்றியிருக்கவேண்டும்," என்று இவர் கூறுகிறார். எனவே, பெரு வெடிப்புக் கொள்கைப்படி, 20 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரு வெடிப்பு இருந்ததாம், மேலும் 4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு பின்பு இந்தப் பூமியானது குளிர்ச்சியடைந்ததாம். வெடித்தத் துகள்கள் பாறைகளின்மேல், பல மில்லியன்கள் ஆண்டுகள் மழையாகப்பெய்ததாம், பின்பு அந்தக் குழம்பு 3 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு உயிருள்ளதாக வந்ததாம். மேலும் அந்த உயிர்-வடிவக் குழம்பு யாரையோத் திருமணம் முடிக்கக் கண்டுகொண்டதாம்,(பாருங்கள், இப்பொழ்து இங்கே ஒரு நல்ல தந்திரம் இருக்கிறது) சாப்பிடுவதற்கு ஏதோ இருந்ததாம், எல்லாம் மெதுவாக வளர்ச்சியடைந்து இன்று நாம் பார்க்கிற அனைத்தும் வந்ததாம்! அதுதான் பெரு வெடிப்புக் கொள்கையாகும். எனவே, அப்படிப்பார்த்தால், ஆதி -ஆதி-ஆதி-ஆதித்தாத்தா ஒரு குழம்பாக இருந்தாராம். ஒரு நேரம், போஸ்டனில் இருக்கும் கல்லூரியில் நான் பேசினேன். "ஹோவிந்த் அவர்களே, எங்களுடைய பேராசிரியர்களுக்கு விருப்பமான எந்தக் கேள்விகளுக்கும் உங்களால் பதில் கூறமுடியுமானால், நீங்கள் எங்கள் கல்லூரியில் பேசுவதற்கு வரலாம்" என்று கூறினார்கள். "கிறிஸ்தவர்களாகிய நீங்கள் எவ்வளவு முட்டாள்கள் என்பதை நாங்கள் மாணவர்களுக்குக் காண்பிப்போம்" என்றார்கள். "பதில் கூறுவதற்கு நான் அங்கே வருவது எனக்கு மதிப்பாக இருக்கும்" என்று நான் கூறினேன். எனவே நான் அங்கு சென்றேன். அந்த அறையில் ஆறு பேராசிரியர்களும் அவர்களின் மாணவர்கள் எல்லாரும் இருந்தனர். தானியேல் சிங்கங்களின் குகையில் இருந்ததுபோல நான் உணர்ந்தேன்! என்னுடைய அட்டவணையை வெளியே எடுத்துக்கொண்டு, "மக்களே, நான் வேதாகமத்தை நம்புகிறேன். தேவன் அனைத்தையும் 6000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கினார் என்றும் நம்புகிறேன். 4,400 ஆண்டுகளுக்கு முன்பு, எல்லாவற்றையும் அழிப்பதற்காகத் தேவன் ஒரு வெள்ளத்தை அனுப்பினார்" என்று கூறினேன். "நோவா மிருக ஜீவன்கள் ஒவ்வொரு வகையிலும் ஜோடிஜோடியாக -இனங்களாக அல்ல பேழையில் வைத்துக் காப்பாற்றினார்" என்று கூறினேன். பின்பு, அவர்கள் நம்புவதை அவர்களுக்குக் கூறினேன்; ஏனெனில், பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் எதை நம்புகிறார்கள் என்பதே தெரியவில்லை. 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் வெடிப்பு இருந்ததாம். பிறகு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் பூமியானது குளிர்ச்சியடைந்ததாம். பல மில்லியன்கள் ஆண்டுகளாக அது மழையாகப் பாறைகளில் பெய்ததாம், அவைகள் குழம்பாக மாறியதாம். மேலும் அந்தக் குழம்பு உயிரடைந்ததாம். ஒரு பேராசிரியர் உண்மையிலே குழம்பிப்போய்விட்டார். "ஹோவிந்த் அவர்களே, 'இந்த உலகத்தில் நூற்றுக்கணக்கான வகை நாய்கள் இருப்பதை நீங்கள் அறிந்துள்ளீர்களா?' என்று அவர் கேட்டார். "ஆமா, ஒரு தொகை இருக்கிறது" என்று நான் கூறினேன். "நோவாவின் பேழையிலிருந்து வந்த இரண்டு நாய்களிலிருந்து, இந்த அனைத்து நாய்களும் வந்தன என்று நீங்கள் நம்புகிறதை எனக்குச் சொல்லப்போகிறீர்களா?" என்று கேட்டார். அதை நான் நம்பவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்றார். "ஐயா, உங்கள் மாணவர்களுக்கு என்ன கற்பிக்கிறீர்கள் என்பதைப் பார்க்கிறீர்களா?" என்று நான் கேட்டேன். "ஒரு பாறையிலிருந்து அந்த நாய்கள் எல்லாம் வந்தன என்று நீங்கள் உங்கள் மாணவர்களுக்குக் கற்பிக்கிறீர்களே" என்று பதில் கூறினேன். அதற்குப் பிறகு அவருக்கு எந்தச் சந்தேகக் கேள்விகளுமே இல்லை. எப்படியோ, ஆதாமின் மகன்கள் யாரைத் திருமணம் செய்தார்கள்? நல்லது, சேத்தைப் பெற்றபின்பு, ஆதாம் 800 ஆண்டுகள் உயிரோடிருந்து குமாரர்களையும் குமாரத்திகளையும் பெற்றான் என்று வேதாகமம் கூறுகிறது. நீங்கள் 800 ஆண்டுகளில் எத்தனை பிள்ளைகளைப் பெறமுடியும்? ஏராளம், சரியா? அர்க்கன்ஸாவில் உள்ள எனது நண்பருக்கு 15 ஆண்டுகளில் 15 பிள்ளைகள் பிறந்தார்கள். 20 பிள்ளைகள் உள்ள ஒரு குடும்பத்தை நான் மின்னஸ்ஸோட்டாவில் சந்தித்தேன், அவர்கள் அனைவருமே 20 வயதிற்குட்பட்டவர்கள். மின்னஸ்ஸோட்டாவில் குளிராக இருக்கிறது. எனவே ஆதாமின் மகன்கள் யாரைத் திருமணம் முடித்தார்கள்? நல்லது, அவர்களின் சகோதரிகளைத் திருமணம் முடித்தார்கள். "அவர்களின் சகோதரிகளைத் திருமணம் முடித்தார்களா?!" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நல்லது, அமைதியாக இருங்கள்; முதலில் திருமணத்திற்குத் தேர்ந்தெடுக்க வேறு ஆட்களில்லை, சரியா? இரண்டாவது, நீங்கள் அவர்களைப் பற்றி யாரிடம் புகார் சொல்லப்போகிறீர்கள்? அதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். மூன்றாவதாக, 2,500 ஆண்டுகளுக்குப் பின்னர் மோசே சட்டத்தைக் கொடுக்கும் வரையில், அதற்கு எதிராக எந்தச் சட்டங்களுமே இல்லை. ஆரம்பத்தில் இதற்கு எதிராக அவர்களுக்குச் சட்டங்கள் தேவையில்லாமல் இருந்தது. முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் எந்தப் பிறப்புக் குறைபாடுகளும் மனித குலத்திற்கு அநேகமாக இருக்கவேயில்லை. ஒரு சகோதரியை திருமணம் செய்வதில் அன்று எந்தப் பிரச்சனையுமே இல்லை. பாருங்கள், உங்களைப் பற்றிய ஒவ்வொன்றும் பரம்பரையானவை. உங்களுக்குப் பிள்ளைகள் இருப்பது பரம்பரையானது. உங்கள் பெற்றோருக்குப் பிள்ளை எதுவும் இல்லையெனில், நீங்களும் இல்லை. "ஓ நான் இதைப்பற்றிச் சிந்தித்ததே இல்லை." என்று கூறுகிறீர்கள். போங்கள், அதைப்பற்றிச் சிந்தியுங்கள். நான் சொன்னது சரி என்று நீங்கள் கண்டுகொள்ளுவீர்கள். "நீங்கள் சகோதரிகளைத் திருமணம் செய்துகொள்ள இயலாது; வம்சாவழி ஒத்திருப்பது பற்றியத் தகவல் என்ன?" என்று மக்கள் சொல்லுகிறார்கள். ஆதாம் அவனுடைய விலா எழும்பை திருமணம் செய்தான். வம்சாவழி ஒத்திருப்பது பற்றிப் பேசுகிறீர்களே! அப்பொழுது அது ஒரு பிரச்சனையாக இருக்கவில்லையே. வேதாகமத்தை வாசிக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்கவில்லை, ஆனால் நீங்கள் காலத்தை வரைவதில் பார்த்தால், இது அழகான ஆச்சர்யமாக இருக்கிறது. பேர-பேர- பேரப்பிள்ளைகளைப் பற்றித் தெரியக்கூடிய அளவுக்கு, ஆதாம் நீண்ட காலம் வாழ்ந்தான் என்பதை நீங்கள் உணருவீர்கள். நோவாவுடைய அப்பா, ஆதாமை 56 ஆண்டுகளாக அறிந்திருப்பார். அந்தக் காலத்தில், ஒரு குடும்பம் மறுபடியும் இணைவதை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? எல்லாம் சரி, ஒவ்வொருவரும் ஒட்டகத்தின்மேல் தாவி ஏறுகிறார்களே! ஆதி-ஆதி-ஆதித் தாத்தாவாகிய ஆதாமைச் சந்திக்கப்போகிறோம். மேலும் ஏதேன் தோட்டமானது எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி அவர் நமக்குச் சொல்லப்போகிறார்.(முதல் பெண் முதல் ஆணைக் குடும்பத்திலும் வீட்டிற்கு வெளியிலும் சாப்பிடுவதற்கு முன்பு). ஆதாம் ஏவாளைப் பற்றிய ஏராளமான நகைச்சுவைகளை நான் சொல்லுவதுண்டு. அதை இப்பொழுது உங்களுக்குச் சொல்லுகிறேன். "பெண்களாகிய நாங்கள் இல்லாவிட்டால், ஆண்களாகிய நீங்கள் எங்கே இருந்திருப்பீர்கள்?" என்று ஒரு பெண் கேட்டாள். "ஏதேன் தோட்டத்தில் இருந்திருப்போம்" என்று நான் கூறினேன். ஆனால் அது தனிமையாக இருந்திருக்கும்; அது மதிப்பாக இருந்திருக்காது. வேதாகமத்தை வாசிக்கும்போது நீங்கள் இதைக் கவனிக்கவில்லை, ஆனால் நீங்கள் காலத்தை வரைவதில் பார்த்தால், ஆச்சர்யமாக இது மிகவும் அழகாகக் குளிர்ச்சியாக இருக்கும். நோவாவின் மகன் சேம் வெள்ளத்திற்குப் பின்பு, நீண்ட காலம் உயிரோடிருந்து ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபை அறிந்திருப்பார். யாக்கோபுக்கு 13 பிள்ளைகள்: 12 மகன்களும் 1 மகளும் இருந்தார்கள். அந்த மகன்களில் ஒருவன்தான் யோசேப்பு. பல கலர்கள் அங்கியைப் பெற்றவன் அவனேயாவான். அவனுடைய சகோதரர்கள் பொறாமை அடைந்து அவனை அடித்து குழியில் போட்டார்கள். அவன் இறுதியில் எகிப்திற்குக் கொண்டு செல்லப்பட்டான். மேலும் அவன் "துணைப் பார்வோன்" ஆக அல்லது அவர்கள் அதை எப்படி அழைத்தார்களோ அப்படியானான். பின்பு யோசேப்பு தன்னுடைய அனைத்துச் சகோதரர்களையும் எகிப்திற்கு வரவழைத்து அவர்களுடன் வாழ்ந்தான். எனவே யோசேப்பு தன்னுடைய தகப்பனாகிய யாக்கோபை, பார்வோனுக்கு அறிமுகம் செய்தான். மேலும் "உங்களின் வயது எவ்வளவு?" என்று பார்வோன் யாக்கோபிடம் கேட்டான். "எனக்கு 130 வயதாகிறது." என்று யாக்கோபு கூறுகிறான். நான் சொந்த இடத்தைவிட்டு வெளியே சுற்றி வாழ்ந்த நாட்கள் 130 ஆண்டுகள்; என் ஆயுசு நாட்கள் மனவருத்தமுள்ளதாக இருக்கிறது. அவைகள் சொந்த இடத்தைவிட்டு வெளியே சுற்றி வாழ்ந்த என் முன்னோர்களுடைய ஆயுசு நாட்களுக்குக்கூட வந்து தொடவில்லை என்று கூறினான். ஒரு புதிய கிறிஸ்தவனாக 36 ஆண்டுகளுக்கு முன்பு நான் அந்த வசனத்தை வாசித்தபோது, அவன் என்ன சொல்லுகிறான்? என்று நினைத்தேன். "எனக்கு 130 வயதாகிறது, ஆனால் என்னுடைய முன்னோர்களுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமில்லை." என்று யாக்கோபு கூறுகிறான். ஆமா, நீங்கள் இதைக்கணக்கிட்டால் அவன் தனிப்பட்ட விதத்தில் சேம், அர்பகசாத், சாலா மற்றும் ஏபேரை அறிந்திருக்க முடியும். உங்களுக்கு 130 வயதிருந்து, 600 வயதுடைய ஒருவரை உங்களுக்குத் தெரிந்திருந்தால், உங்களுக்கு அதிக வயதாகிறதுபோல நீங்கள் உணரமாட்டீர்கள். எப்படியோ, பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று இந்தப் பாடப்புத்தகங்கள் சொல்லுகின்றன. ஆதாம் படைக்கப்பட்டதே ஆரம்பம் என்று இயேசு சொன்னார். இயேசு பொய்சொல்லிக்கொண்டிருந்தாரா? அவர் புத்தியில்லாதவராக இருந்தாரா? அல்லது அவர் சொன்னது சரியா? பூமிக்கு எவ்வளவு வயதாகிறது? இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று இந்த நகரத்தில் இருக்கும் புத்தகங்கள் சிறுவர்களுக்குப் போதிக்கின்றனவா? அவர்கள் திரும்பிச்சென்று இதைப் பள்ளியில் கற்க இருக்கிறார்களா? "4.6 பில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு......" இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று சில கிறிஸ்தவர்களூம்கூடப் போதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டவரை நேசிப்பதற்காக உண்மையாகவும், நேர்மையாகவும் சில மக்கள் இதைச் செய்கிறார்களோ! இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் வயதாகிறது என்று போதிக்கிற சிலரின் வரிசையில் உள்ள மக்கள் சொல்லுகிறார்கள். நான் ஜான் ஆங்கர்பெர்க் காட்சியில், ஹக் ரோஸ் என்பவருடன் 3 மணி நேரம் விவாதித்தேன். இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று அவர்கள் இருவரும் நம்புகிறார்கள். "நல்லது, யார் அதைப்பற்றி அக்கரைப்படுகிறார்கள்? அது என்ன வித்தியாசத்தை உண்டாக்குகிறது?" என்று மக்கள் சொல்லுகிறார்கள். அது ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தை உண்டாக்குகிறது. ஏனெனில், பில்லியன்கள் ஆண்டுகளை நீங்கள் பெறப்போகிறீர்கள் எனில், பாவத்திற்கு முன்பாக மரணத்தைப் பெறப்போகிறீர்கள். இப்பொழுது ஒரு முரண்பட்ட மதப்போதனையை உடையவர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். அது ஒரு முரண்பட்ட மதப்போதனையே! இந்தப் பூமிக்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று நம்புவது மதபேதமல்ல, ஆனால் பாவத்திற்கு முன்பே மரணம் இருக்கிறது என்று கூறுவது தவறான முரண்பட்ட மதபோதனையாக இருக்கிறது. இப்பொழுது அது முரண்பட்ட, தவறான மதபோதனை என்று தெளிவாகத் தெரிகிறது. ஆதாம் முதல் மோசே வரையில் மரணம் ஆட்சி செலுத்தியது என்று வேதாகமம் கூறுகிறது. மரணம் மனிதனால் வந்தது. ஆதாமுக்குள் அனைவரும் மரிக்கிறார்கள். யார் பூமியின் வயதைப்பற்றி அக்கரைகொள்ளுகிறார்கள்? ஒரு காரியத்திற்கு நல்லதாக இருக்கிறது, ஆதியாகமத்தின் நம்பகத்தன்மையானது பந்தயத்தில் இருக்கிறது. அந்தப் புத்தகத்தை வாசிக்கிற ஒரு சராசரி நபர், அங்கே பில்லியன்கள் ஆண்டுகள் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்போவதில்லை. எனவே அந்தக் கேள்வி உண்மையிலே எளிமையானது. ஒரு சராசரி நபர் வேதாகமத்தை வாசித்து அதைப் புரிந்துகொள்ள முடியுமா? அல்லது அதின் அர்த்தம் சொல்ல சில குருக்கள் நமக்கு இருக்கவேண்டுமா? இரண்டாவதாக, இயேசுவின்மேல் உள்ள நம்பகத்தன்மை யாதெனில், அவர் ஆதியாகமத்தை 25 முறை மேற்கோள் காட்டியிருக்கிறார். மேலும் ஆதியாகமம் புத்தகத்தை வேதாகமத்தில் உள்ள மற்ற ஒவ்வொரு புத்தகமும் மேற்கோள் காட்டியிருக்கிறது. இது ஒரு முக்கியமான விஷயம். மேலும் பரிணாமவாதிகள் உண்மையிலே அக்கரைகொள்ளுகிறார்கள். பில்லியன்கள் ஆண்டுகளை நீங்கள் வெளியே எடுத்துவிட்டால், அவர்களின் கொள்கை உண்மையிலே அறிவில்லாததாகிவிடும். "நீங்கள் மோசேயை விசுவாசித்திருந்தால், என்னையையும் நீங்கள் விசுவாசித்திருப்பீர்கள்: ஏனெனில் அவன் என்னைப்பற்றி எழுதியிருக்கிறானே." என்று இயேசு சொன்னார். நல்லது, வேதாகமமானது 6,000 ஆண்டுகளைப் பற்றித் தெளிவாகப்போதிக்கிறது. அறிவியல் பூர்வமான ஆதாரம் என்ன சொல்லுகிறது என்று நாம் பார்க்கலாம். 1999-ல் உலகத்தின் மக்கள்தொகையானது 6 பில்லியன்கள் குறியீட்டைத் தாண்டியது. 1985-ல் 5 பில்லியன்கள் மக்கள் இந்தப் பூமியில் இருந்தார்கள். 1800-ல் ஒரு பில்லியன் மக்கள் இங்கே இருந்தார்கள். ஏறத்தாள 1800-ல் சுமார் ஒரு பில்லியன் மக்கள் இருந்தார்கள் என்று ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். மேலும் உலகத்தின் மக்கள்தொகையானது வேகமாக அதிகரித்துக் கொண்டுவருகிறது என்று ஒவ்வொருவரும் ஒப்புக்கொள்ளுகிறார்கள். ஆனால் உலகத்தில் மக்கள்தொகையானது அளவிற்கு அதிகமாகவில்லை. ஜனத்தொகை அதிகரித்துவிட்டது என்னும் பிரச்சாரத்தைப் பார்த்து ஏமாற்றமடைந்துவிடாதீர்கள். உலகமானது ஜனத்தொகையினால் அளவிற்கு அதிகமாகவில்லை. இன்றைய முழு உலகத்தின் ஜனத்தொகையானது, 6 பில்லியன்கள் ஆகும். இது ஜேக்ஸன்விலி மற்றும் புளோரிடாவில் இரண்டுமுறை உள்ளடங்கும். அந்தச்சிறிய நகரமானது 25 பில்லியன்கள் சதுர அடிகளுடையதாக இருக்கிறது. மக்களே, உலகில் ஜனத்தொகை அளவிற்கு அதிகமாகவில்லை. நெப்ரஸ்கா அல்லது கன்ஸாஸ்; நியூ மெக்ஸிகோ அல்லது டெக்ஸாஸிற்கு நீங்கள் வண்டியில் சென்றிருக்கிறீர்களா? டெக்ஸாஸின் குறுக்காக வண்டியை ஓட்டிச்செல்லுங்கள், டெக்ஸாஸின் குறுக்கே உங்களில் யாராவது வண்டியை ஓட்டிச்சென்றிருக்கிறீர்களா? நீங்கள் 3 நாட்களாகச் செல்லலாம். நாம் இன்னும் டெக்ஸாஸில்தான் இருக்கிறோமா? ஆமா, சமதரை முயல்களைத் தவிர அங்கு வேறொன்றுமில்லை. அது என்னவென்று நான் சொல்லுகிறேன். இந்த உலகில் அதிக அளவிற்குச் ஜனத்தொகை அதிகமாகவில்லை. பரலோகத்தின் நிமித்தமாக, டென்னிஸியின் குறுக்கே செல்லுங்கள். அதில் ஜனத்தொகை அதிக அளவிற்கு அதிகமாகவில்லை. பாருங்கள், நீங்கள் இருக்கும் இடமானது ஜன நெருக்கடியாக இருந்தால், அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்லுங்கள்! அங்கே மற்ற பகுதிகளில் ஏராளமான இடம் இருக்கிறது, சரியா? முன்பு இயேசு இங்கு இருந்த காலத்தில், இந்த உலகத்தின் மக்கள் தொகையானது ஏறக்குறைய 25 கோடி மட்டுமே. ஜனத்தொகை வரைவுகோட்டின் வளைவு சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. தற்பொழுது, நீங்கள் பரிணாமத்தை நம்பினால், உங்களுக்கு ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது. 3 மில்லியன் ஆண்டுகளாக மனிதன் இங்கே இருந்து வருகிறான் என்று நீங்கள் நினைப்பீர்கள். 3 மில்லியன் ஆண்டுகளில் மக்கள்தொகை அதிகமாகியிருந்தால், தற்பொழுது சுமார் 1,50,000 மக்கள்தொகை ஒரு சதுர அங்குலத்திற்குள் இருந்திருக்க வேண்டும். அது மிகுந்த நெருக்கடியாக இருந்திருக்கும். மனிதன் மில்லியன்கள் ஆண்டுகளாக இங்கே இல்லை. பலுகிப் பெருகிப் பூமியை நிரப்புங்கள் என்று தேவன் ஆதாமுக்குச் சொன்னார்; பிள்ளைகளினால் இதை நிரப்புங்கள். நிறையப் பிள்ளைகளை உடையவர்களாக இருங்கள். "வாழ்வதற்கு ஏற்றதாக உலகத்தை அவர் உருவாக்கினார்," என்று ஏசாயா 45-ஆம் அதிகாரம் நமக்குச் சொல்லுகிறது. நாம் பூமியின் மக்கள்தொகையைக் குறைக்கவேண்டும் என்று மறுபக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். உண்மையிலே, அது சாத்தானின் திட்டம். "ஒரு நாளுக்கு 3,50,000 மக்களை நாம் நீக்கவேண்டியிருக்கிறது" என்று ஜேக்கூயிஸ் காஸ்ட்டியு கூறுகிறார். "மக்கள்தொகையில் 95% குறைவு நமக்குத் தேவை" என்று டெட் டர்னர் கூறுகிறார். சரி, டெட், முதலில் உங்களைக் குறைக்கலாம். புதிய உலக வரைமுறையைச் சேர்ந்த இவர்கள், உலகின் மக்கள்தொகையை அரை பில்லியன் மக்களாகக் குறைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். பாருங்கள், "நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத்தின்பாய்" என்று ஏதேன் தோட்டத்தில் கர்த்தரால் சாத்தானுக்குக் கூறப்பட்டது. "உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்திற்கும் அவள் வித்திற்கும் பகையை உண்டாக்குவேன், அவர் உன் தலையை நசுக்குவார்." என்று அப்பொழுது கர்த்தர் சொன்னார். ஏதோ ஒரு நாளில் பெண்ணின் வித்துகளில் ஒன்று அவனுடையத் தலையை நசுக்கப்போகிறது என்று சாத்தானுக்குத் தெரியும். மேலும் அவன் அதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. எனவே, பூமியில் உள்ள ஒவ்வொரு மனிதனையும் கொலைசெய்வதற்கு அவன் தீர்மானித்துள்ளான். தேவனின் திட்டத்தைத் தடைசெய்ய, மனித சமுதாயத்தைக் கொலைசெய்வதே சாத்தானின் இலக்காக இருக்கிறது. பிள்ளைகளினால் பூமியை நிரப்புங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நிறையப் பிள்ளைகளை உடையவர்களாக இருங்கள். "இல்லை, நாங்கள் பூஜ்ஜியத்திற்குக் குறைக்கப்போகிறோம்" என்று சாத்தான் சொல்லுகிறான். குழந்தை இயேசுவை பெத்லகேமில் கொலை செய்ய, ஏரோது விரும்பினதை நினைத்துப் பாருங்கள். அவன் என்ன செய்தான்? அவன் அனைத்துக் குழந்தைகளையும் கொலைசெய்தான். சரியான அவரைக் கொலைசெய்வதை உறுதி செய்வதற்காக, அனைவரையும் கொலைசெய்துவிடுங்கள் என்றான். மேலும் பூமியின்மேல் உள்ள ஒவ்வொரு மனிதனையும் கொலைசெய்வதற்குச் சாத்தான் முயற்சிக்கிறான். "அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் மக்களே, அவர்களில் சிலரை நாம் அகற்றிவிட வேண்டும்." என்று சார்லஸ் வொர்ஸ்டர் கூறினார். உலகின் மக்கள்தொகையை ஒரு பில்லியனாக நாம் குறைக்க வேண்டியிருக்கிறது என்று கூறும் பல்லுயிர் ஒப்பந்தத்தில் பில் கிளிண்டன் கையெழுத்திட்டுள்ளார். இந்த உலகத்தை அவர்கள் ஏற்கனவே பல்வேறு பிராந்தியங்களாகப் பிரித்துவிட்டார்கள். படத்தில் உள்ள சிவப்புக் கலர் பகுதிகள் எல்லாம் விலங்குகளுக்கு மட்டுமே. மனிதர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஒப்பந்தமானது கையெழுத்தாகிவிட்டது; அது இன்னமும் அமுலாக்கத்திற்கு வரவில்லை. இருப்பினும் விரைவில் வருகிறது. குழந்தையானது பிறந்தபின்பு அதை அழிக்க விரும்பின நபர்தான் பீட்டர் சிங்கர் ஆவார். பிறந்தபின்பு, குழந்தையை வைத்திருக்க வேண்டுமா? என்ற தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு 28 நாட்கள் கொடுக்கப்படுகிறது. "கிறிஸ்தவம்தான் நமது எதிரி" என்று அவர் சொன்னார். "விலங்குகளின் உரிமைகள் வெற்றிபெற வேண்டுமென்றால், யூத - கிறிஸ்தவ மதங்களின் பாரம்பரியங்களை நாம் அழிக்கவேண்டும்" என்று அவர் கூறுகிறார். மனிதர்களைவிட விலங்குகளுக்கு உரிமைகள் அதிகமாக இருக்கவேண்டும் என்பது போன்று உள்ளது. "இந்த உலகத்திற்குப் புற்றுநோய் உள்ளது, அந்தப் புற்றுநோய் மனிதனே" என்று ஆலன் கிரக் கூறுகிறார். எலிசபெத் ராணியின் கணவர்தான் பிரின்ஸ் பிலிப்பு ஆவார். எலிசபெத் ராணிதான் "நுண் -அலையை" கண்டுபிடித்தவர் ஆவார். "என்னால் மறுபிறப்பு எடுக்கக் கூடுமானால், ஜனத்தொகையைக் குறைப்பதற்கு, மனிதர்களைக் கொல்லும் ஒரு வைரஸாக மறுபடியும் பூமிக்குத் திரும்பிவர விரும்புகிறேன்" என்று பிரின்ஸ் பிலிப்பு கூறியுள்ளார். நல்ல ஆளுய்யா பிலிப்பு, இதனிடையே, உணவுகளை மரபுரீதியாக மாற்றுவதை விருத்தி செய்வதில் மன்சண்டோ உண்மையிலே மும்முரமாக வேலை செய்துவருகிறார். ஐரோப்பாக் கண்டத்தில் அவைகளைத் தடைசெய்துவிட்டார்கள். ஆனால் நீங்கள் சாப்பிடுகிற எல்லாவற்றிலும் 70% மரபுரீதியாக மாற்றம் செய்யப்பட்ட உணவுகளே, ஆரோக்கியத்திற்கு எதிரான பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது. நீங்கள் அதைப்பற்றி முழுமையாக அறிய விரும்பினால், "ஏமாற்றும் விதைகள்" என்கிற புத்தகத்தை வாசியுங்கள். அல்லது, மக்கள்தொகையைக் குறைப்பதற்கு உணவுகள் எவ்வாறு ரகசியமாக மாற்றப்படுகிறது என்பதை அறிய, "புதிய அமெரிக்கன்" பத்திரிக்கையில் வரும் "என்ஜினியர்டு எக்ஸ்டிங்ஷன்" என்னும் பகுதியைப் படியுங்கள். "உணவுதான் சக்தி, நடத்தைகளை ஆதிக்கம் செய்ய நாம் அதைப் பயன்படுத்துகிறோம்.....நாம் அதற்காக மன்னிப்புக் கேட்பதில்லை" என்று ஐக்கிய நாடுகள் கூறியுள்ளன. நீங்கள் தடுப்பு மருந்துகளை போட்டுக்கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதற்கு முன்பாக, தடுப்பு மருந்துகளுடன் வைரஸ்களும் கலப்பதினால் என்ன நிகழ்கிறது என்பதைப் பற்றி நீங்கள் வாசிக்க விரும்பியிருக்க வேண்டும். அங்கே குறித்த நேரத்தில் வெடிக்கும் குண்டுகளும் சேர்த்துப் பொருத்தப்படுகின்றன. அங்கே ஒரு நீண்ட கதையே இருக்கிறது. "வேதாகமும் மற்றும் ஆரோக்கியம்" பற்றிய வீடியோ டேப்பைப் பார்க்கும்போது நாம் அதைப்பற்றி அதிகம் பார்ப்போம். மன அழுத்தம் வெறித்தனமாக அதிகரிக்கிறது. இல்லினோயிஸில் 75,000 சதவீதத்தால் மன அழுத்தம் அதிகரித்துள்ளதே! இது தடுப்பு மருந்துகளினால் உருவான மன அழுத்தம் என்று அநேக மக்கள் நம்புகிறார்கள். தடுப்பு மருந்து போடுவதினால், சிறு குழந்தைகளின் திடீர் மரண அறிகுறி (SIDS) காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் தடுப்பு மருந்து போடுதல் கட்டாயச் சட்டமாக்கப்படவில்லை. 50% மக்கள் தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதைக் நிறுத்திவிட்டார்கள்., அதனால் ஆஸ்திரேலியாவில் சிறு குழந்தைகளின் திடீர் மரண அறிகுறியும் 50% குறைந்துள்ளது. மேலும் தடுப்பு மருந்துகள் பற்றி நீங்கள் அறிய விரும்பினால், www.marytocco.com சென்று பாருங்கள். ஆனால் பூமியின் மக்கள்தொகையைக் குறைப்பதற்கு விரும்புகிற மக்கள் அங்கே இருக்கிறார்கள். அட்லாண்டா, ஜியார்ஜியாவுக்கு வெளியே, எல்பெர்ட்டன் நகருக்குச் செல்லுங்கள். தேசிய நெடுஞ்சாலை 77 வழியாக சுமார் 7 அல்லது 8 மைல்கள் வடக்கே செல்லுங்கள். வலதுபுறம் பாருங்கள். உலகத்தின் ஜனத்தொகையை நாம் குறைக்கவேண்டும் என்று அவர்கள் கற்பிக்கும் இடத்தைக் காண்பீர்கள். நீங்கள் வலதுபுறம் பார்ப்பீர்களானால், அங்கே இந்தக் கல் ஸ்தூபிகளைக் காணலாம். நீங்கள் அங்கே சென்றால், அது ஒரு விசித்திரமான இடம் என்பதைக் காண்பீர்கள். நீங்கள் அங்கே சென்றால் அவைகளை 12 மொழிகளில், புதிய உலக வரைமுறை என்ற அமைப்பின் பத்துக் கட்டளைகளைக் காணலாம். முதலாவது கட்டளை, அரை பில்லியனுக்குள் மனித ஜனத்தொகையை வைத்திருங்கள். நல்லது, தற்பொழுது ஒரு நிமிடம் நிறுத்துங்கள், இங்கே ஏற்கனவே 6 பில்லியன் மக்கள் இருக்கிறார்கள். "அரை பில்லியனுக்குள் மனித ஜனத்தொகையை வைத்திருக்க" அவர்கள் எவ்வாறு திட்டமிடுகிறார்கள்? மனித ஜனத்தொகையில் ஒரு பெரிய வீழ்ச்சியேற்பட்டாக வேண்டும் என்பதுபோல் எனக்குத் தெரிகிறது. அதைத்தான் குறிப்பாகப் பிசாசு விரும்புகிறான். மேலும் அறிய விரும்பினால், CSE 101 என்கிற எங்களது கல்லூரி வகுப்பின்மூலம் அறிந்துகொள்ளுங்கள். நல்லது, எதிர்காலத்தில் நிகழப்போவதைப் பொருட்படுத்தாவிட்டாலும், சுமார் 4,400 ஆண்டுகள் மாத்திரமே மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று இன்றுள்ள ஜனத்தொகை நமக்குக் கூறுகிறது. பரம்பரைத் தடைகள் இருந்ததுபோன்றுத் தெரிகிறது என்றும், சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்த மொத்த ஜனத்தொகையும் சில ஆயிரம் மக்களாகக் குறைக்கப்பட்டனர் என்றும் பரிணாமவாதிகள் கூறினார்கள். ஹேய், அவர்கள் நெருங்கி வருகிறார்கள். உண்மையிலே சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு 8 நபர்களாக முற்றிலும் குறைக்கப்பட்டார்கள். படித்துக்கொண்டே இருங்கள் என்று நான் ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுக்கிறேன். நீங்கள் உண்மையின் மலையில் ஏறினபின்பு, வேதாகம விசுவாசிகள் மட்டும் இருப்பதை நீங்கள் கண்டுகொள்வீர்கள். நட்சத்திரக்கூட்டங்கள் சுழன்றுகொண்டிருக்கின்றன, ஆனால் அதன் நடுவில் இருக்கும் நட்சத்திரங்கள், வெளியே இருக்கும் நட்சத்திரங்களைக் காட்டிலும் வேகமாகச் செல்லுகின்றன. அப்படியானால், நட்சத்திரக்கூட்டங்களில் சுழல்கரங்கள் ஏன் இன்னமும் இருக்கின்றன? அவைகள் அங்கே இருக்கக்கூடாதே. இந்த உலகம் பில்லியன்கள் ஆண்டுகள் பழமையானதில்லை என்பதற்கு நட்சத்திரக்கூட்டங்கள் சாட்சிகளாக இருக்கின்றன. நட்சத்திரங்கள் எந்நேரமும் வெடிக்கின்றன. அது ஒரு சூப்பர் நோவா அல்லது நோவா என்று அழைக்கப்படுகிறது. சுமார் ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் ஒருமுறை ஒரு நட்சத்திரம் வெடிக்கிறது. இருப்பினும் 300 க்கும் குறைவான சூப்பர் நோவாக்கள் அல்லது துண்டுகள் மட்டுமே இதுவரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவைகள் ஒருசிலவைகள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பாத்திரமான நட்சத்திரங்களேயாகும். ஏன் பில்லியன்கள் நோவாக்கள் அங்கே மீதமாக இல்லை? "புதிய நட்சத்திரங்கள் கிராப் நெபுலாவில் அல்லது ஹார்ஸ்ஹெட் நெபுலாவில் உருவாகின்றன? என்று சில மக்கள் சொல்லுகிறார்கள். இல்லை, அது அர்த்தமற்றது. அதைக்குறித்து வீடியோ எண் 7-ல் நாம் பார்க்கலாம். நட்சத்திரம் உருவாகிறதை எவரும் கண்டதில்லை. வியாழன் கோளானது வேகமாகக் குளிர்ச்சியடைந்து வருகிறது. சிவப்புக் கலர் இராட்சதரிலிருந்து வெள்ளைக் கலர் குள்ளராக நட்சத்திரங்கள் மாறிக்கொண்டு வருகின்றன. இதற்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகின்றன என்று பாடபுத்தகங்கள் கூறுகின்றன. அது உண்மையில்லை என்று நமக்குத் தெரியும். சிரியஸ் என்பது சிவப்புக் கலர் நட்சத்திரம் என்று பழங்கால வான சாஸ்திரிகள் அனைவரும் கூறுகின்றனர். அது தற்பொழுது வெள்ளைக் கலரில் குள்ளமாக உள்ளது. இது ஒரு சில ஆயிரம் ஆண்டுகளுக்குள் நிகழ்கிறது. இதற்குப் பில்லியன்கள் ஆண்டுகள் ஆகிறது என்று அவர்கள் உங்களிடம் சொல்லுவதற்கு அனுமதிக்காதீர்கள். வியாழன் கோளானது வேகமாகக் குளிரடைந்துகொண்டு வருகிறது. அது தொடர்ச்சியாக வெப்பத்தை இழக்கிறது, பில்லியன்கள் ஆண்டுகளாய் அவ்வாறு இருக்க முடியாது. அது இந்நேரத்தில் குளிர்ச்சியடைந்திருக்கும். கனிமிடி என்கிற வியாழனின் சந்திரனுக்கு ஒருவகையான காந்தத் தளம் இருக்கிறது. மத்தியப் பகுதியானது திரவமாக இருப்பதைக் குறிக்கிறது; அதற்குப் பில்லியன் ஆண்டுகள் ஆகவில்லை என்பதை அது அர்த்தப்படுத்துகிறது. சனிக்கோளின் வளையங்கள் கோளிலிருந்து விரிவடைந்துகொண்டு வருகின்றன. அவைகள் பில்லியன்கள் ஆண்டுகளாக இருக்க முடியாது. இதனிடையே, வால்ட் ப்ரெளன் எழுதிய ஒரு சிறந்த புத்தகமாகிய "இன் த பிகினிங்" என்கிற புத்தகத்தில் இதைப்பற்றி அதிகம் காணலாம். சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. அது ஏற்கனவே எத்தனைபேர்களுக்குத் தெரியும். சந்திரன் பூமியைச் சுற்றி வருகிறது. சந்திரன் பூமியைச் சுற்றி வருகையில், அது சிறிது சிறிதாகத் தூரத்திற்குச் சென்றுகொண்டிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? நாம் மெதுவாக சந்திரனை இழந்து வருகிறோம். ஒரு ஆண்டிற்கு இரண்டு அங்குல தூரம் அது நம்மைவிட்டுச் செல்லுகிறது. பெரிய வித்தியாசமில்லை. அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அத்துடன் உங்களால் அதற்கு ஒன்றும் செய்யவும் முடியாது. ஆனால் சந்திரன் பூமியைவிட்டு ஒவ்வொரு நாளும் தூரமாகிக்கொண்டே செல்கிறது. தற்பொழுது சிறுவர்களே, இது சிக்கலாகப்போகிறது, எனவே கவனமாகக் கேளுங்கள். சந்திரன் பூமியைவிட்டு ஒவ்வொரு நாளும் தூரமாகிக்கொண்டே செல்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில், அது வழக்கமாகச் சமீபத்தில் இருந்ததாகும். எந்த உதவியும் இல்லாமல் எத்தனைபேர்கள் இதை விளங்கிக்கொண்டீர்கள்? நல்லது, நீங்கள் சந்திரனை அருகில் கொண்டுவந்தால், நீங்கள் ஒரு பிரச்சனையை உண்டுபண்ண ஆரம்பிக்கிறீர்கள், ஏனெனில் சந்திரன் அலைகளை உண்டாக்குகிறது. நாக்ஸ்விலியில் இருக்கிற மக்களாகிய நீங்கள் ஒருவேளை அந்த அலைகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கலாம். ஆனால் பென்ஸகோலாவில், நீங்கள் அந்த அலைகளைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள். நீங்கள் பாருங்கள், சந்திரன் அருகில் இருந்திருந்தால், அலைகள் உயர்வாக இருந்திருக்கும். எதிர்த்தகவு இருமடி விதி என்றழைக்கப்படுகிற அறிவியல் விதிமுறை ஒன்று உள்ளது. 1/3 தூரத்திற்கு சந்திரனை நீங்கள் கொண்டுவந்து, நீங்கள் 1/3 எடுத்து, மேலே சுற்றி வர்க்கமாக்கினால், புவி ஈர்ப்பு விசையானது ஒன்பது மடங்கு அதிகமாக இருக்கும். நீங்கள் இதைக் குறித்தக் கணக்கு முழுவதையும் பார்ப்பீர்களானால், 1.4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சந்திரனும் பூமியும் ஏறக்குறைய ஒன்றாக இருந்திருக்க வேண்டும் என்பதைக் கண்டுபிடிப்பீர்கள். 1.2 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு என்பதே, பூமி மற்றும் சந்திரனின் அதிகபட்ச ஆயுட்காலமாக இருக்கிறது என்று டாக்டர் வால்ட் ப்ரௌன் கூறுகிறார். நல்லது, பூமிக்கு மேற்பரப்பில் சந்திரன் உஸ் என்கிற சத்தத்தைக் கொடுத்துக்கொண்டிருந்தால், அதிலிருந்து உயரமான டைனோஸரஸ்க்கு என்ன நடந்தது என்பதை அது விவரிக்கிறது. சந்திரன் அவைகளை அடித்துவிட்டது. வால் நட்சத்திரங்கள் வான்வெளியில் பறந்து கொண்டிருக்கின்றன, ஆனால் அவைகள் தொடர்ச்சியாக பொருட்களை இழந்துகொண்டிருக்கின்றன. வால் நட்சத்திரத்தின் வாலிலிருந்து பொருட்கள் வெடிக்கின்றன. அது இழந்துகொண்டே இருக்க முடியாது; மிக விரைவிலேயே அது இல்லாமல் போய்விடும். உங்களுக்குத் தெரியும், அது உங்களின் வங்கிக் கணக்கைப் போன்று இருக்கிறது. பாருங்கள், உங்களின் வருமானத்தைக் காட்டிலும், செலவு அதிகமானால், உங்களுடைய செலவே அழிவாகும், ஒவ்வொரு நேரமும்! நல்லது, இந்த வால் நட்சத்திரங்கள் எப்பொழுதும் பொருட்களை இழந்துகொண்டிருக்கின்றன. அதாவது நீங்கள் எபொழுதுமே இழந்துகொண்டே இருக்க முடியாது. வால் நட்சத்திரங்கள் சுமார் 10,000 ஆண்டுகளுக்குமேல் இருக்க முடியாது என்று அநேக வான சாஸ்திரிகள் கணக்கிடுகின்றனர். சரி, எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ஏன் இன்னமும் வால் நட்சத்திரங்கள் அங்கே இருக்கின்றன? இப்பொழுது அவைகள் அனைத்தும் அழிந்து போயிருக்க வேண்டுமே. சூரிய ஒழுங்குமுறையானது 10,000 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கிறது என்பதற்கான ஒரு அறிகுறியாகவே, வால் நட்சத்திரங்கள் காணப்படுகின்றன என்று சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கருத்தரங்கில் நான் குறிப்பிட்டேன். கடவுள் நம்பிக்கையற்றவர் ஒருவர் வீட்டிற்குச் சென்று, எனக்கு விரோதமாக ஒரு இணைய தளத்தை உருவாக்கினார். அது ஹோவிந்துக்கு விரோதமான ஒரு இணையதளமாகும். இப்பொழுது அதுபோன்றவைகள் ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளன. இப்பொழுது ஹோவிந்துக்கு எதிரான இணையதளங்கள் சுமார் 2,000 எண்ணிக்கையில் இருக்கின்றன என்று ஒருவர் என்னிடம் கூறினார். நான் என்னைக்குறித்து மேன்மையாக நினைக்கிறேன். "ஹோவிந்த் அவர்களே, 1950-ல் வாழ்ந்த டச்சு வானசாஸ்திரியைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? அவருடைய பெயர் ஜன் ஊர்ட் என்பதாகும்." என்று அந்தப் பரியாசக்காரர் தனது இணையதளத்தில் எழுதினார். அவர் முன்மொழுந்தது (அவர் நம்பியது, அவர் விரும்பியது, அவர் வேண்டிக்கொண்டது) வால் நட்சத்திரங்களின் பெரிய ஓடு ஒன்று அங்கே வெளியே இருக்கிறது. அத்துடன் எரிந்து முடிந்ததின் இடத்திற்கு புதியதாக மன்றொன்று வந்துகொண்டே இருக்கிறது என்று அவர் எழுதினார். எரிந்து முடிந்ததின் இடத்திற்குப் புதியதாக மற்றொன்று வந்துகொண்டே இருப்பதினாலேயே, நமக்கு இன்னமும் வால் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று அவர் கூறினார். அவர்கள் அதை வால் நட்சத்திரங்களின் "ஊர்ட் மேகம்" என்று அழைக்கின்றார்கள். இந்த ஊர்ட் மேகமானது 50,000 வானியல் அலகு தூரத்தில் இருக்கின்றன என்று அவர் கூறினார். ஒரு, வானியல் அலகு என்றால் என்ன? என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், தெரிந்துகொள்ளுங்கள், அது சூரியனிலிருந்து பூமிக்கு இடையில் இருக்கும் தூரமாகும். அது ஒரு வானியல் அலகு ஆகும். ஒரு உண்மையான, நல்ல டெலஸ்கோப் இல்லாமல் புளூட்டோவைப் பார்ப்பது மிகவும் கடினமாகும். புளூட்டோவானது 39 வானியல் அலகிற்கு அப்பால் மட்டுமே உள்ளது. 50,000 வானியல் அலகுகள் தூரத்தில் உள்ள ஒரு வால் நட்சத்திரத்தை நீங்கள் ஒருபோதும் பார்க்கப்போவதில்லை, அது உறுதியாகும். ஒருவரும் ஊர்ட் மேகத்தை ஒருபோதும் பார்த்ததில்லை. ஊர்ட் மேகத்தை ஊர்ட் என்பவரும் ஒருபோதும் பார்த்ததில்லை. கணிதத் தவறுகளின் அடிப்படையிலேயே இது முழுவதும் உள்ளது. ஊர்ட் மேகம் என்று ஒன்று இல்லவே இல்லை. "ஊர்ட் மேகம் பற்றி ஒவ்வொரு ஆண்டும் பல அறிவியல் தகவல்கள் எழுதப்படுகின்றன, அதன் பண்புகள், அதன் தோற்றம், அதன் பரிணாமம் பற்றி....."என்று கார்ல் ஸாகன் கூடக்கூறுகிறார். இருப்பினும், அது இருப்பதை நேரடியாகப் பார்ப்பதற்கான எந்த ஆதாரமும் நம்மிடம் இல்லை. ஊர்ட் மேகம் என்று எதுவும் இல்லை. "ஹோவிந்த் அவர்களே, இந்த வால் நட்சத்திரம் பற்றிய விவாவதத்தை வைத்து, இந்தப் பூமியானது இளமையானது என்று நீங்கள் நிரூபிக்க விரும்பினால்...... அந்த ஊர்ட் மேகமும் மற்ற காரணிகளும் இல்லை என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபிக்க வேண்டியது உங்களின் பொறுப்பாகும்," என்று அந்தப் பரியாசக்காரர் தன்னுடைய இணையதளத்தில் கூறுகிறார். பொறுங்கள், பொறுங்கள். இல்லாத ஒன்றை எவ்வாறு நிரூபிப்பது? இல்லாத ஒன்றை நிரூபிக்க நான் ஒரே நேரத்தில் எல்லா இடத்திலும் இருக்க வேண்டுமா? இங்கே அவர் என்ன செய்ய முயற்சிக்கிறார் என்றால், நிரூபிக்கும் சுமையை அடுத்தவர்கள்மேல் மாற்றி வைக்கிறார். அந்தத் தாராளவாதிகள் அனைத்து நேரங்களிலும் இதையே செய்கிறார்கள், மற்றும் அவர்கள் நம்மை இவ்வாறு ஏமாற்றுகிறார்கள். அதைச்செய்வது எவ்வளவு எளிமையானது என்பதை நன் உங்களுக்குக் காண்பிக்கிறேன். "தண்ணீர்பழமானது (watermelon) அதன் தோலை வெட்டும்வரையில் உள்ளே நீல நிறமாகவே இருக்கிறது" என்று நான் கூறுகிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். நான் தவறாகக் கூறினேன் என்று நிரூபியுங்கள் என்று சொல்லுவதைப் போன்று உள்ளது. அதுவே நிரூபிக்கும் சுமையை மாற்றுதல் என்று அழைக்கப்படுகிறது. அதை நிரூபிப்பதுக் கடினமாக இருக்கும், இல்லையா? தோலை வெட்டின உடனே, பாருங்கள், அது சிவப்பு நிறமாயிற்று. நான் சொன்னது சரிதானே; ஒரு வினாடிக்கு முன்பு அது நீல நிறமாக இருந்தது. ஊர்ட் மேகம் இல்லை என்பதை நான் நிரூபிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். டேவ் அவர்களே, தற்பொழுது பொறுத்திருங்கள், எங்களுக்குத் தெரிந்தவைகள் இங்கே இருக்கின்றன. வால் நட்சத்திரங்கள் இருக்கின்றன என்று எங்களுக்குத் தெரியும். சுமார் 10,000 ஆண்டுகளுக்குமேல் அவைகள் இருப்பதில்லை என்றும் எங்களுக்குத் தெரியும். இந்தப் பூமியானது 6,000 ஆண்டுகள் பழமையானது என்று வேதாகமம் கூறுவது எங்களுக்குத் தெரியும். வால் நட்சத்திரங்களுடன் எனக்குப் பிரச்சனை இருப்பதுபோல் அவர் காண்பிக்க விரும்புகிறார். அவருக்குத்தான் அந்தப் பிரச்சனை இருக்கிறது. "வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன" என்று வேதாகமம் கூறுகிறது. இது சுவாரசீகமாக இருக்கிறது. பூமி உருவாவதற்கு முன்பே சூரியனும் நட்சத்திரங்களும் இருந்தன என்று பரிணாமக் கொள்கை கூறுகிறது. சூரியனும் நட்சத்திரங்களும் உருவாக்கப்படுவதற்கு முன்பு, தேவன் பூமியைச் சிருஷ்டித்தார் என்று வேதாகமம் கூறுகிறது. பரிணாமக் கொள்கைக் கூறுகிற ஒவ்வொன்றும், வேதாகமத்திற்கு எதிராக உள்ளது. ஒவ்வொரு காரியமும் - முற்றிலும் எதிராகவே இருக்கிறது! இந்தக் கொள்கைகள் ஒருபோதும் ஒத்துப்போவதில்லை. ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் இருக்கிறது. மனிதனே மரணத்தை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தான் என்று வேதாகமம் கூறுகிறது. மரணமானது மனிதனை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தது என்று பரிணாமம் கூறுகிறது. தேவனே மனிதனை உருவாக்கினார் என்று வேதாகமம் கூறுகிறது. இல்லை, மனிதனே கடவுளை உருவாக்கினான் என்று பரிணாமம் கூறுகிறது. இந்தக் கொள்ளைகள் முற்றிலும் எதிர் எதிரானவைகள். "சிருஷ்டிப்பதற்குக் கடவுள் பரிணாமத்தைப் பயன்படுத்தியிருக்க முடியுமா?" என்று சில மக்கள் கேட்கிறார்கள். நல்லது, அதைப் பயன்படுத்தியிருக்கலாம், ஆனால் வேதாகமத்தின் தேவன் அதைப் பயன்படுத்தவில்லை என்பது உறுதி. பரிணாமத்தைப் பயன்படுத்துகிற அப்படியொரு கடவுள் கொடுமையானவர், வீணானவர் மற்றும் தடங்களை ஏற்படுத்துகிறவராக இருந்திருப்பார். அப்படிப்பட்ட ஒரு கடவுளிடம் நீங்கள் ஜெபிக்க விரும்பமாட்டீர்கள் என்பது உறுதி. பின்பக்கத்தில் இருக்கிற நீல நிறத்தொடர் வீடியோ எண் 7-ல் அதைப்பற்றி நாம் அதிகம் பார்க்கலாம். "உம்முடைய வானங்களை நான் பார்க்கும்போது......." என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். இதனிடையே, வானங்கள் என்பது பன்மையாகும்; வீடியோ எண் 2-ல் நாம் அதைப்பற்றி அதிகம் பார்க்கலாம். "நான் கருதும்பொழுது" என்று அவர் கூறுகிறார். சிறுவர்களே, அந்தத் தொலைக்காட்சியை நிறுத்துவதினால், அவ்வப்பொழுது உங்களுக்கு நீங்களே உதவி செய்வீர்கள். வெளியே சென்று வானங்களைப் பாருங்கள். தேவன் என்ன செய்திருக்கிறார் என்று பாருங்கள். "நான் தியானிக்கும்பொழுது அக்கினி மூண்டது" என்று சங்கீதக்காரன் கூறுகிறான். தியானிக்கும்பொழுது என்பதின் அர்த்தம் என்னவென்றால் "ஆழ்ந்து சிந்தி" என்பதாகும். ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள். வேதாகமம் அந்த வார்த்தையை இரண்டுமுறைப் பயன்படுத்துகிறது. சிந்தித்துப்பாருங்கள். தற்பொழுது, ஆங்கிலம் ஒரு சுவாரசீகமான மொழி என்று உங்களுக்குத் தெரியும். "கடவுளை நம்புகிற ஒரு மனிதன்" என்பதே A "theist" என்பதின் அர்த்தமாகும். அந்த வார்த்தைக்கு முன்பாக "a" என்ற எழுத்தை நீங்கள் போட்டால், நாஸ்தீகன் என்று அர்த்தமாகிறது. எனவே, "atheist" என்றால், கடவுளை நம்பாத ஒரு மனிதன் என்று அர்த்தம். "Muse" என்றால் சிந்திக்க என்று அர்த்தம். எனவே, அதற்கு எதிரானது என்னவாக இருக்கும்? உங்களுக்குப் புரிகிறதா? "Amuse" என்பதின் அர்த்தம் உண்மையிலே என்னவெனில், "சிந்திக்காமல்" (மகிழ்ந்திரு) என்பதாகும். நாம் பணத்தைக் கொடுத்து சிந்திக்காமல் மகிழ்ந்திருப்பதற்கான பூங்காக்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவைகள் கேளிக்கைப் பூங்காக்கள் என்று அழைக்கப்படுகின்றன. சிந்திக்காமல் இருப்பதற்கான ஒரு இடம் அதுவே. "உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்பொழுது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷக்குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன்?" என்று சங்கீதக்காரன் கூறுகிறான். சுவாரசீகமானது எது என்று உங்களுக்குத் தெரியுமா? தேவன் என்ன செய்திருக்கிறார் என்று ஆழ்ந்து சிந்திக்கத் தனது நேரத்தைச் செலவிடும் நபரை, மனித செயல்பாட்டால் மகிழ்விக்க முடியாது. உங்களில் சில பெற்றோர்கள் வீட்டிற்குச்சென்று, உங்கள் பிள்ளைகளின் படுக்கை அறையைப் பார்க்கவேண்டும். சுவர்களின் மீது சிறந்த விளையாட்டு வீரர்களின் படங்களைக் காண்பீர்களானால், (நீங்கள் கவனமாகக் கேளுங்கள்) கடவுள் என்ன செய்ய முடியும் என்பதை அல்ல, மனிதர்கள் என்ன செய்யமுடியும் என்பதையே உங்கள் பிள்ளைகளுக்குத் தியானிக்கப் பயிற்சி கொடுக்கிறீர்கள். மேலும் அவனது மூளையும், அவனுடைய சிந்திக்கும் முறையும் அவ்வளவு ஆழமாகவே இருக்கப்போகிறது. "ஓ, அவன் வளையத்தின் வழியாகப் பந்தை எறிந்தான்." என்கிற அவனுடைய புரிந்துகொள்ளுதலின் ஆழம் உங்களுக்குத் தெரியும். யார் ஆயிரம் ஆண்டுகளைப் பற்றி அக்கரைப்படுகிறார்கள்? யார் ஐந்து ஆண்டுகளைப் பற்றி அக்கரைப்படுகிறார்கள்? அறிவில்லாத கோப்பையை, தவறு, சூப்பர் கோப்பையை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு யார் வென்றது என்று யாருக்காவது தெரியுமா? யாராவது அக்கரைப்படுகிறார்களா? அது ஒரு விஷயமே இல்லை, சரியா? அங்கே வளர்ந்த ஆண்கள் அனைவரும், தாங்களாகவே வாங்கிக்கொள்ளக்கூடிய பந்திற்காக அனைவரும் சண்டைபோடுகிறார்கள். இது பாவமானது என்று நான் அர்த்தப்படுத்தவில்லை. பன்றியின் சிறுநீர்ப்பையை (பந்தை) எடுத்துக்கொண்டு, மாடு மேயும் பசுந்தரையில் (மைதானத்தில்) நீர்க்குழாய்களை (இலக்குக் கம்பத்தை) நோக்கி ஓடுகின்ற ஒருவருக்கு 5 மில்லியன் டாலரைக் கொடுப்பது மடத்தனமாக இருக்கும் என்று நான் கூறுகிறேன். மக்களே, அது நிலைக்கப்போவதில்லை. தேவன் செய்திருப்பதைப் போன்று என்றென்றும் நிலைத்து நிற்கக்கூடியக் காரியங்களைச் சிந்தியுங்கள். அதைத் தியானியுங்கள். "பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்" என்று வேதாகமம் கூறுகிறது. இந்தப் பூமியானது ஒரு பெரிய காந்தத்தைப் போன்றது. காந்தங்கள் எப்பொழுதுமே தமது சக்தியை இழக்கின்றன. சென்ற 150 ஆண்டுகளில் பூமியின் காந்த சக்தியில் அது 10% இழந்திருக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில், அது பெலவீனமடைய ஆரம்பிக்கும் வரையில் - அது வலிமையாக இருந்துள்ளது. மேலும் அது 25,000 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்க முடியாது. பூமியின் காந்த சக்தி தளர்வது என்பது, அதனை 25,000 ஆண்டுகளுக்குள் வரையறுக்கிறது. மேலும் கார்பன்-14 மூலமும் காலத்தைக் கணக்கிட முடியாது. இங்கே சில உதாரணங்கள் இருக்கிறது: மாபெரும் விலங்கின் பின்னங்காலின் காலம் 15,000 ஆண்டுகள் பழமையானது என்றும், ஆனால் தோல் 21,000 ஆண்டுகள் பழமையானது என்றும் காலம் குறிக்கப்பட்டுள்ளது. ஒரு மாபெரும் விலங்கின் ஒரு பாகத்திற்கு 29,000 ஆண்டுகள் என்றும் இன்னொரு பாகத்திற்கு 44,000 ஆண்டுகள் என்றும் கூறுகிறார்கள். அது மிகவும் மெதுவாகப் பிறந்திருக்குமோ! கார்பன் -14 - லின்படி காலம் அறிதல் மற்றும் அதனுடனான ஆபத்தானப் பிரச்சனைகள் பற்றியும் வீடியோ எண் 7-ல் நாம் அதிகம் பார்ப்போம். காந்த சக்தியானது பெலவீனமடைந்துகொண்டு வருகிறது என்று இந்தப் பாடப்புத்தகங்கள் கூறும், ஆனால் அது எதிர்த்திசையில் செல்லுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். இது எதிர் திசைகளின் ஒரு வடிவமாக இருக்கிறது. இல்லை, கடல்களின் அடியில், காந்தப்புலத்தில், காந்தத்தின் எதிரெதிரானவைகள் அங்கே இல்லை. இதைப் பற்றி நாம் வீடியோ எண் 6-ல் பார்ப்போம். பங்கயா என்று அழைக்கப்படும் மற்றொரு கொள்கையின் ஒரு பகுதியே இதுவாகும். உங்களில் "பங்கயா"வை ஏற்கனவே கேள்விப்பட்டவர்கள் எத்தனைபேர்கள்? அது அனைத்துக் கண்டங்களின் நிலப்பரப்பு ஒன்றாகப் பொருந்தக்கூடியது என்பதாகும். நல்லது, அவர்கள் அவ்வாறு பொருத்திக் காண்பிப்பதற்காக ஆப்பிரிக்காவை 40% சுருக்கியதை உங்களுக்கு அவர்கள் தெரிவிக்கவில்லை. தெரிவித்தார்களா? மெக்ஸிகோ முழுவதையும், மத்திய அமெரிக்காவையும் அகற்றிவிட்டதை அவர்கள் உங்களுக்குச் சொன்னார்களா? ஐயா, மெக்ஸிகோ, பனாமா, கோஸ்டாரிக்கா மற்றும் குவட்டமாலா எங்கே போனது? நான் நினைப்பது ஒரு கிண்டர்கார்டன் பள்ளி மாணவன் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கவேண்டும் என்று அவர்கள் உங்களுக்குக் கூறவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். கடல்களிலிருந்து தண்ணீரை அகற்றிவிட்டால், அதன் அடியில் அழுக்கு இருக்கிறதை நீங்கள் கவனிக்க முடியும். "ஹோவிந்து அவர்களே, கண்டங்கள் எப்பொழுதுமே இணைக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் சிந்திக்கிறீர்களா?" என்று மக்கள் கேட்கிறார்கள். "என்ன சொல்லுகிறீர்கள்? அவைகள் இன்னும் இணைக்கப்பட்டே இருக்கின்றன" என்று நான் பதில் கூறினேன். இப்பொழுது இங்கே அவர்கள் சரியாகச் சொல்லுகிறார்கள் என்று நான் அர்த்தம்கொள்கிறேன். அது என்னவெனில், தாழ்வான இடங்களில் மட்டுமே தண்ணீர் நிரம்பி உள்ளது. என்ன சொல்லுகிறீர்கள்? "அவைகள் இணைக்கப்பட்டிருந்தனவா?" "ஹலோ, அவைகள் இன்னும் இணைந்தே இருக்கின்றன. என்ன மடத்தனமான கொள்கையாக இருக்கிறது. வீடியோ எண் -6-ல் பங்கயாவைப் பற்றியும், "ஹோவிந்த் கொள்கை"யைப் பற்றியும் நாம் அதிகம் பார்ப்போம். இந்தப் பூமியானது மணிக்குச் சுமார் 1,000 மைல்கள் வேகத்தில் பூமத்திய ரேகையில் சுழன்றுகொண்டிருக்கிறது. ஆனால் பூமியின் வேகம் குறைந்துகொண்டிருக்கிறது. உண்மையிலே, இந்தப் பூமி ஒவ்வொரு நாளும் ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பகுதியில் வேகத்தில் குறைகிறது. இந்தப் பூமியின் வேகம் குறைகிறது. 1992-ல் "வானவியல் பத்திரிக்கை"யானது ஒரு கட்டுரையை வெளியிட்டது. "பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டிருக்கிறது......வழக்கத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில் ஒரு நொடி நீண்டு காணப்படும். நமக்கு லீப் செகண்ட் கிடைக்கும்" என்று அவர்கள் கூறினார்கள். லீப் செகண்டா? ஆமா, ஒவ்வொரு ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லீப் செகண்ட் அவர்கள் கொடுக்கவேண்டும். ஏனெனில் இந்தப் பூமியானது வேகத்தில் குறைந்துகொண்டு வருகிறது. இப்பொழுது சிறுவர்களே, இது மிகவும் குழப்பமாகப்போகிறது, எனவே, கவனமாகக் கேளுங்கள். பூமியானது சுழல்கிறது, ஆனால் சுழற்சி வேகத்தில் குறைந்துகொண்டு வருகிறது. அதாவது அது முன்பு வேகமாகச் சுழன்றுகொண்டிருந்தது. எந்த உதவியும் இல்லாமல் இதை எத்தனைபேர்கள் விளங்கிக்கொள்ள முடிகிறது? நல்லது, இந்தப் பூமியானது 6,000 ஆண்டுகள் மட்டுமே பழமையானது எனில், இது ஒரு பிரச்சனையே இல்லை. ஆரம்பத்தில் இதன் வேகம் சற்று அதிகமாகவே இருந்தது; அதை ஆதாம் கவனித்திருக்கமாட்டான். ஏனெனில் அவனிடம் ஒரு கடிகாரம் இல்லை. இந்தப் பூமிக்குப் பில்லியன் ஆண்டுகள் வயதாகிறது என்று நான் நம்பவேண்டும் என்று சிலர் விரும்புகிறார்கள். நீங்கள் பில்லியன்கள் ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் சென்றால், உங்களுக்கு ஒரு பிரச்சனை இருக்கப்போகிறது. இந்தப் பூமியானது அதிக வேகமாகச் சுற்றியிருக்குமே! எழுந்திருங்கள், தூங்குங்கள்; எழுந்திருங்கள், தூங்குங்கள். இப்படி இருந்திருக்கும். எதையுமே செய்து முடித்திருக்க முடியாது. மையவிலக்கு விசையானது மிக அதிகமாக இருந்திருக்கும். கொரியோலிஸ் விளைவிலிருந்து காற்றானது ஒரு மணிக்கு 5,000 மைல்கள் வேகத்தில் வீசியிருக்கும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோஸரஸ் வாழ்ந்ததாக நான் நம்பவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? அவைகளுக்கு என்ன நடந்திருக்கும் என்று எனக்குத் தெரியும். அவைகளைக் காற்று அடித்துச் சென்றிருக்குமோ! இல்லை. அவைகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருக்கவில்லை. காற்று அடிக்கும் முறை என்று அழைக்கப்படுகிற ஒன்று சஹாராப் பாலைவனத்தில் இருக்கிறது. ஏறக்குறைய எல்லா நேரங்களிலும் ஒரே வகையிலேயே காற்று இங்கே வீசுகிறது. இது ஒரு முக்கியமான பிரச்சனையை உருவாக்குகிறது. பாலைவனத்திலிருந்து வருகிற அந்த வெப்பக்காற்றானது அருகிலுள்ள மரங்களை சாகடிக்கிறது, அதனால் அந்த இடமும் பாலைவனமாகிறது. இந்த நிகழ்வானது பாலைவனமாகுதல் என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் இதைப்பற்றிப் பூமி குறித்த அறிவியல் புத்தகத்தில் வாசிக்கலாம்.. சஹாராப் பாலைவனமானது மிகவும் கவனமாக ஆராயப்பட்டுள்ளது. இதைப்பற்றி அவர்கள் நீண்ட ஆய்வு செய்து, "சஹாராப் பாலைவனமானது சுமார் 4,000 ஆண்டுகள் பழமையானது" என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்துதான் இந்தப் பாலைவனம் வளர ஆரம்பித்திருக்கிறது. எகிப்து நாட்டின் அனைத்து இடங்களிலும் செழிப்பானதாக இருந்திருக்கிறது. அப்படியானால், எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது: இந்தப் பூமியானது பல மில்லியன் ஆண்டுகள் பழமையானது எனில், ஏன் இன்னமும் ஒரு பெரிய பாலைவனம் ஒருசில இடங்களில் இல்லாமல் இருக்கிறது? உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் ஏன் 4,000 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கிறது? அதைப்பற்றிய ஒரு கொள்கை என்னிடம் இருக்கிறது. என்னுடைய கொள்கை என்னவெனில்: சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் எல்லாவற்றையும் படைத்தார் என்றும், 4,400 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வெள்ளம் வந்தது என்றும் நான் நம்புகிறேன். வெள்ளத்திற்குக் கீழே பாலைவனத்தை வைத்திருப்பது மிகவும் கடினமானது. அது கடினமானது என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளவேண்டும். எனவே, வெள்ளம் வடியும்வரையில் பாலைவனமானது வளருவதற்கு ஆரம்பித்திருக்க முடியாது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய பாலைவனமானது, 4,400 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கவேண்டும் என்று வேதாகமத்தின் அடிப்படையில் முன்கூட்டியே நான் சொல்லுகிறேன். ஆமா, ஒருவேளை வேதாகமம் சரியாக இருக்கலாம்! நிலத்தில் துளையிடும்பொழுது, சில நேரங்களில் எண்ணெய் கிடைக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். சில இடங்களில் எண்ணெய்யானது, ஒரு சதுர அங்குலத்திற்கு 20,000 (psi) அழுத்தம்வரையில் அதிக அழுத்தத்தில் இருக்கிறது. அது நிலத்திலிருந்து பீறிட்டுக்கொண்டு வெளியே வருகிறது. நல்லது, எண்ணெய்யின் மேலுள்ள பாறைகளைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் கூறுவது, "சுமார் 10,000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அழுத்தத்தை அதின்மேல் இருக்கும் பாறையானது தாங்கமுடியாது." பாறையின் எடையானது அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று எனக்குத் தெரியும். ஆனால், மேலே உள்ள பாறையின் எடையைக் காட்டிலும், கிணற்றின் உள்ளே அழுத்தமானது அதிகமாக இருக்கிறது. 10,000 க்கும் குறைவான ஆண்டுகளுக்குள், அது பாறையை உடைத்துக்கொண்டு கசிந்திருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சரி, எனக்கு இரண்டு கேள்விகள் இருக்கின்றன. எங்கிருந்து எண்ணெய் வருகிறது? மேலும் அது இன்னமும் ஏன் அழுத்தத்திற்குள்ளாக இருக்கிறது? மக்கிப்போன உடல்களிலிருந்து எண்ணெய் கிடைக்கிறது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் ஒத்துக்கொள்கின்றனர். அவைகள் வெப்பத்தினாலும் மற்றும் அழுத்தத்தினாலும் எண்ணெய்யாக மாறுகின்றன. 1971-ஆம் ஆண்டில், 20 நிமிடத்திற்குள் ஆய்வகத்தில் எவ்வாறு எண்ணெய் தயாரிப்பது என்று கற்றார்கள். கழிவுகளிலிருந்து 30 நிமிடங்களில் எண்ணெய்யாக மாற்றும் ஆலை ஒன்று ஆஸ்திரேலியாவில் உள்ளது. வான்கோழிகளின் கழிவுப்பொருட்களை எடுத்து, அழுத்தம் கொடுத்து, வெப்பம் உண்டாக்குவதினால் அவைகளை எண்ணெய்யாக மாற்றும் கம்பெனியானது டெக்ஸாஸில் ஒன்று இருக்கிறது. "இயற்கை செய்ததையே நாங்களும் செய்திருக்கிறோம், ஆனால், இயற்கையானது மில்லியன் ஆண்டுகளில் செய்ததை, நாங்கள் 30 நிமிடங்களில் செய்துவிட்டோம்" என்று அவர்கள் அந்தக் கட்டுரையில் எழுதினார்கள். சின்கிளேயர் எண்ணெய் விற்பனையாளர்கள், அவர்களின் அடையாளமாக டைனோஸரை வைத்திருக்கிறார்கள். டைனோஸரானது எண்ணெய்யாக மாறியது என்று அவர்கள் கூறுகிறார்கள். புதைந்த டைனோஸரிலிருந்து 80 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்பு எண்ணெய் கசிந்து வருகிறது என்று கூறுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. எண்ணெய்யைப் பற்றிய கொள்கை என்னிடம் ஒன்று இருக்கிறது. எனது கொள்கை என்னவெனில், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் எல்லாவற்றையும் படைத்தார் என்றும், சுமார் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வெள்ளம் வந்தது என்றும் நான் நம்புகிறேன். அந்த வெள்ளத்தில், பல பிராணிகளும் மற்றும் மக்களும் மூழ்கினார்கள். சரளைக்கற்கள், பாறைகள், சகதி மற்றும் மண்ணினால் அவைகள் புதைக்கப்பட்டன. பின்பு இவைகள் மிகவும் கடினமாகிவிட்டன. அவைகள் எண்ணெய்யாகப் பிழியப்பட்டன. ஆகவே கீழ் இருக்கும் எண்ணெய்யானது எதுவெனில், அந்த வெள்ளத்தில் மூழ்கிப்போன மனிதர்களும் மற்றும் விலங்குகளுமாகும். நீங்கள் அதைப்பற்றி நிறுத்தி சிந்தனைசெய்துபார்த்தால், உங்களின் சில மூதாதையர்களையே, வாகனத்திற்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு இங்கே வந்திருக்கிறீர்கள். நல்லது, எப்படியோ அவர்கள் நோவாவின் உறவினர்கள். அடுத்த முறை நீங்கள் எண்ணெய் நிரப்பும் நிலையத்தில், அவரை நிரப்புகின்றபோது, நீங்கள் இவ்வாறு சொல்லுவீர்கள், "Bye, தாத்தா. நீங்கள் நோவாவின் பேச்சைக் கேட்டிருக்க வேண்டும்; மழை வரப்போகிறது என்று அவர் உங்களுக்குச் சொன்னாரே!" "ஹோவிந் அவர்களே, இந்தப் பூமி 6,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று நீங்கள் கற்றுக்கொடுக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நீங்கள் சொல்லுவது தவறு என்று நாங்கள் நிரூபிக்க விரும்புகிறோம். தயவுசெய்து, எங்களுடன் வருவீர்களா?" என்று பரிணாமவாதிகள் என்னிடம் கேட்டார்கள். நான் நிச்சயமாக வருவேன் என்று கூறினேன். கொலோரடோவில், டென்வர்க்குக்கு வெளியே இருக்கும் லேக்வுட்டில் உள்ள இந்தப் பெரிய உறையவைக்கும் குளிரூட்டிக்கு என்னைக் கொண்டுசென்றார்கள். இதுதான் தேசிய ஐஸ் கட்டி ஆய்வகம். இங்கே -36 டிகிரி பாரன் ஹீட் (-38C) குளிராக இருக்கிறது. அவர்கள் இந்தப் பெரிய ஆடையை என்மேல் போட்டார்கள், பெரிய தொப்பி, பெரிய கை உறைகள் மற்றும் பெரிய கால்பூட்சுகள். நான் அங்கே நடந்தபோது 5 நொடிகளுக்குள் உறைந்துகொண்டிருந்தேன். எனக்குள் இருப்பது புளோரிடாவின் இரத்தம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அது மிகவும் மெல்லியது. "ஹோவிந், நாங்கள் கிரீன்லேண்ட் சென்று, நாங்கள் பனிக்கட்டிகளில் துவாரங்கள் போட்டோம்" என்று அவர்கள் கூறினார்கள். அது ஒரு அரசாங்க வேலையாகும். எப்படியிருக்கும் என்று உங்களுக்கே தெரியும். "நாங்கள் இந்தப் பெரிய குழாயை எடுத்துத் துளையிடும்போது, இந்தக் குழாயின் நடுப்பகுதியில் பனிக்கட்டியை வெளியே எடுக்கிறோம். பின்பு கொலோரோடோவில், லேக்யுட்டில் உள்ள இந்தப் பெரிய உறையவைக்கும் குளிரூட்டியில் வைத்துப் பாதுகாக்கிறோம். கிரீன்லேண்டில் எடுத்த பத்து பனிக்கட்டிகளை இந்தக் குளிரூட்டியில் சேமித்து வைத்திருக்கிறோம் என்றார்கள். அவர்கள் என்னை அங்கே அழைத்துச்சென்று, பனிக்கட்டியின் மத்தியப் பகுதிகளில் ஒன்றைக் காண்பித்து, "மரவளையங்கள் போன்று இங்கே கருமையாகவும், வெளுப்பாகவும், கருமையாகவும், வெளுப்பாகவும் இருக்கிற வளையங்கள் தெரிகிறதா?" என்று என்னிடம் கேட்டார்கள். "ஓ, ஆமா, மிகவும் தெளிவாகத் தெரிகிறது" என்று நான் சொன்னேன். "கோடை காலத்தில், இந்தப் பனியானது சிறிது உருகுகிறது, அதன்பின்பு அது மறுபடியும் குளிரடைந்து தெளிவான பனிக்கட்டியாகிற நிகழ்வு நடைபெறுகிறது" என்று அவர்கள் கூறினார்கள். (கருமையாக இந்தப் படத்தில் காணப்படுகிறது) குளிர்காலத்தில், இந்தப் பனியானது அடுக்காகிறது. அது உருகுவதற்கு வாய்ப்பில்லை. எனவே அது ஒரு வெள்ளை அடுக்காகக் காணப்படுகிறது. எனவே இந்த அடுக்குகள், கோடைகாலம் மற்றும் குளிர்காலம் என்று அடுத்தடுத்து உள்ளதைக் காண்பிக்கின்றன. இப்பொழுது, நாங்கள் இதுவரையில் மிக அதிகமாகத் துளையிட்டது 10, 000 அடி ஆழமாகும் என்று அவர்கள் கூறினார்கள். "மேலும் நாங்கள் இந்தப் பனிக்கட்டி வளையங்களைக் கணக்கிட்டோம். அங்கே அவைகள் 1,35,000 இருக்கின்றன. தற்பொழுது, இந்தப் பூமி 6,000 ஆண்டுகள் பழமையானது என்று நீங்கள் சுற்றிலும் சென்று எல்லோரிடமும் கூறுகிறீர்கள். இது குறைந்த பட்சம் 1,35,000 ஆண்டுகள் பழமையானது என்று எங்களால் நிரூபிக்க முடியும்" என்று கூறினார்கள். "நண்பர்களே, அந்த வளையங்கள் வருடாந்திர வளையங்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?" என்று நான் அவர்களிடம் கேட்டேன். பாருங்கள், காணாமல்போன விமானக்கழிவின் ஒரு பகுதியைப் பற்றி அவர்களுக்குத் தெரியவில்லை. இரண்டாம் உலகப்போரின்போது, எரிபொருள் பற்றாக் குறையினால் சில விமானங்கள் கிரீன்லேண்டில் தரையிறங்கின. காணாமல்போன விமானப்படைப் பகுதியைப் பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சரி, கொஞ்ச காலம் அது தொலைக்காட்சியில் காணப்பட்டது. அங்கே அந்த விமானங்கள் 1942-ல் கைவிடப்பட்டன. அவர்கள் சென்று போரிட்டனர், ஆனால் ஒவ்வொருவரும் அவைகளை மறந்துவிட்டனர். கெண்டக்கில் இருந்த ஒரு பணக்காரர் ஒருவருக்கு புத்திசாலித்தனமான யோசனை ஒன்று வந்தது. அது என்னவெனில், அந்த விடுபட்ட விமானங்களைக் கண்டுபிடித்து வீட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்ற சிந்தனையாகும். அந்த விமானங்களைத் தேடுவதற்காக அவர் அங்கே சென்றார். அவர்கள் பனிக்கட்டிகளின் உள்ளே தரையில் இருக்கும் பொருட்களைக் கண்டுபிடிக்கும் ரேடார் கருவியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது, மேலும் அவர்கள் அந்த விமானங்கள் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தார்கள். P-38 ரக விமானத்தைக் கண்டுபிடிப்பதற்காக, அவர்கள் பனிக்கட்டியை உருக்கி இந்த துவாரத்தை உண்டாக்கினார்கள். அது தரையின் மேற்பரப்பிலிருந்து 263 அடிகள் ஆழத்தில் இருந்தது. அந்த விமானத்தைப் பாகங்களாக எடுத்தார்கள். அவைகளை இந்தத் துவாரத்தின் வழியாக வெளியே எடுத்தார்கள். கெண்டக்கில் உள்ள மிடில்ஸ்போரோவில் அந்தப் பாகங்களை எல்லாம் ஒன்றாகப் பொருத்தினார்கள். அது இங்கிருந்து அதிகத் தூரம் இல்லை. நாக்ஸ்விலியிருந்து கெண்டக்கியில் உள்ள மிடில்ஸ்போரோ இடமானது எவ்வளவு தூரம் இருக்கும்? ஒருவேளை இரண்டு மணி நேரப்பிரயாணத் தூரமாக இருக்குமா? மிடில்ஸ்போரோவில்தான் அவர்களின் விமான அடித்தளம் இருக்கிறது. அந்த விமானங்கள் பனிக்கட்டியின் உள்ளே 48 ஆண்டுகள் இருந்தன. அவைகள் 263 அடிக்குக் கீழே இருந்தன. அதாவது ஒரு ஆண்டிற்கு 5.5 அடிக்குக் கீழே சென்றுள்ளன. இப்போது, இதுவரையில் அவர்கள் துளையிட்ட அதிகத் தூரம் 10,000 அடிகளே. நீங்கள் அதை இரண்டால் வகுத்தால் 1,800 ஆண்டுகளைப் பெறுவீர்கள். ஆழத்தில் உள்ள அடுக்குகள் நசுங்குகின்றன என்று எனக்குத் தெரியும். அது கிளேசியல் பெர்ன் என்று அழைக்கப்படுகிறது. எனவே, உண்மையிலே, அனைத்துப் பனிக்கட்டிகளையும் வடக்கு மற்றும் தென் துருவங்களில் போடுவதற்கு 4,000 ஆண்டுகள் போதியளவுக் காலமாக இருக்கிறது. எனவே, வடக்கு மற்றும் தென் துருவங்களில் ஏன் அதிகமாகப் பனிக்கட்டிகள் இல்லை? நான் அந்த அருங்காட்சியகத்திற்குச் சென்று, அந்த விமானத்தைத் தோண்டி எடுத்த நபரைப் பார்த்தேன். அவருடைய பெயர் பாப் கார்டன் என்பதாகும். "பாப் அவர்களே, அந்த விமானத்தைப் பெற, நீங்கள் கீழே சென்றபோது, பனிக்கட்டி வளையங்களை உருக்கிச் சென்றீர்களா?" என்று நான் கேட்டேன். "ஆமா, பல நூறு வளையங்கள் இருந்தன" என்று அவர் கூறினார். "இப்பொழுது ஒரு நிமிடம் பொறுத்திருங்கள். 48 ஆண்டுகளில், அங்கே நூற்றுக்கணக்கானப் பனிக்கட்டி வளையன்கள் எவ்வாறு இருக்க முடியும்? அங்கே 48 வரையிலான வளையங்கள்தானே இருந்திருக்க வேண்டும்?" என்று நான் கூறினேன். "அவைகள் வருடாந்திர அடுக்குகள் என்று உங்களுக்கு யார் சொன்னது? அவைகள் குளிர்காலம், கோடைகாலம் என்பதைக் குறிப்பதில்லை." என்று விளக்கம் அளித்தார். அது வெப்பம், குளிர், வெப்பம், குளிர் என்று குறிக்கிறது. அதுபோன்ற வளையங்களை நீங்கள் நாக்ஸ்விலியில் ஒரு வாரத்தில் 5 வளையங்களைப் பெறமுடியும். ஆனால், அவைகள் ஆண்டுகளைக் குறிக்கும் அடுக்குகள் என்று இன்னும் ஒருவர் இங்கே அழைத்துக்கொண்டிருக்கிறார். அவர் அறியாதவராகவோ அல்லது பொய்சொல்லுகிறவராகவோ இருக்கிறார். அவர் ஒரு அறியாதவர் என்று நான் நம்புகிறேன். ஏனெனில், அறியாமையை சீர்படுத்தமுடியும். நீங்கள் பாருங்கள்,புத்தியீனத்தைக் குணமாக்க முடியாது, ஆனால் அறியாமையை சீர்படுத்தமுடியும். இதுதான் அதிலுள்ள வித்தியாசம் ஆகும். "ஹோவிந்த் சகோதரரே, எட்டுமணி நேரத்தில், என் காரில் 15 பனி அடுக்குகள் கிடைத்தன" என்று எஸ்கிமோக்களுடன் பணிபுரிகிற ஒருவர் கூறுகிறார். 15 அங்குல பனிக்கட்டிகள் அல்ல, பனியின் வித்தியாசமான 15 அடுக்குகளாகும்! பூமியின் ஒவ்வொரு அடுக்கும் வேறுபட்டக் காலத்திற்குரியவை என்று உங்களின் பிள்ளைகளுக்குப் போதிக்கப்போகிறார்கள். செனோஸோயிக், மெஸோஸோயிக், பாலியோஸோயிக், ஆர்க்கியோஸோயிக் போன்றவைகளை வைத்துள்ளார்கள். பூமியின் தூண் என்று பாடப்புத்தகங்கள் கூறுவது முட்டாள்தனமானது என்று உங்களுக்குத் தெரியுமா? அது இல்லவே இல்லை. வீடியோ எண் 4-ல் நாம் அதைப்பற்றிப் பார்ப்போம். உலகமெங்கும் இந்தப் பாறை அடுக்குகளுக்குள் இணைந்து, மேல் நோக்கி நிற்கிற விறைத்துக் கெட்டியாகிய மரங்கள் காணப்படுகின்றன. இறுகிக் கெட்டியாகிய ஒரு மரமானது பல அடுக்குகளுடன் தொடர்புபடுத்தி இருக்கிறது. அடுக்குகளின் காலத்தில் ஒரு மில்லியன் ஆண்டுகள் வேறுபாடாக இருக்க முடியாது. டென்னிஸியில் உள்ள குக்விலியில் அதுபோன்று ஒன்று உள்ளது. இங்கிருந்து அது வெகு தொலைவில் இல்லை. அடிப்பகுதியில் நிலக்கரியாகவும், நடுவில் கெட்டியாகவும், மேலே மறுபடியும் நிலக்கரியாகவும் இருக்கிறது. மரத்தின் தண்டுப்பகுதியானது இரண்டு நிலக்கரி அடுக்குகளுக்குள்ளாகச் செல்லுகிறது. நிலக்கரி உருவாகுதல் பற்றி வீடியோ எண் 6-ல் நாம் விபரமாகப் பார்ப்போம். செயிண்ட் ஹலன்ஸ் எரிமலையானது, மரங்களை ஆவி ஏரிக்குள் ஊதித்தள்ளியது. அந்த மரங்கள் நின்றுகொண்டே அதிக விரைவில் கெட்டியாகின்றன. அவைகள் அவ்வாறே அடியில் மூழ்கிப்போயின. தண்ணீர் நிரம்பி இருக்கும் பகுதியில் அவைகள் இருந்தன. மரமானது விரைவில் கெட்டியானது. கெட்டியாகிய மரத்தின் விறகானது இங்கே இருக்கிறது. பிரசவிக்கும்போது கெட்டியாகிய மீன் ஒன்று இங்கே இருக்கிறது. மீன் பிரசவிப்பதற்குப் பல மில்லியன் ஆண்டுகள் ஆவதில்லை. கெட்டியாகிய குதிரையோட்டியின் பூட்சு இங்கே இருக்கிறது. அவனின் கால் இன்னமும் அதனுள்ளே இருக்கிறது. "சுண்ணாம்புக்கல் குதிரையோட்டி" என்று இந்த மேஜையின் கீழேயுள்ள கட்டுரையானது அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மணி நேரத்திலும் 80,000 டன்கள் வீதம் வண்டல் படிவுகளை மிஸிஸிபி ஆறு படியச்செய்கிறது. 80,000 டன்கள் சகதி மண் கீழே வந்து நியூ ஒர்லியன்ஸைச் சுற்றி குவிகிறது. மேலும் அதனால் அந்த ஆற்றுப்படுகையானது பெரிது பெரிதாகிறது. அவர்கள் ஆற்றுப்படுகையைக் கவனமாக ஆய்வுசெய்து, அனைத்து சகதி மண்ணையும் அங்கே போடுவதற்கு ஒருவேளை 30,000 ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று கூறினார்கள். நல்லது, அப்படியானால், என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. இந்தப் பூமி மில்லியன் ஆண்டுகள் பழமையானதெனில், ஏன் இன்னமும் மெக்ஸிகோவின் வளைகுடாப் பகுதி முழுவதும் மண்ணினால் நிரப்பப்படாமல் இருக்கிறது? வேதாகமமானது 6,000 ஆண்டுகள் என்று சொல்லுகிறது. அது 30,000 ஆண்டுகளாக இருக்கிறது, வேதாகமம் தவறு என்று அது நிரூபிக்கிறது" என்று அவர்கள் பதில் கூறுவார்கள். ஆனால் அதுபற்றி எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் எல்லாவற்றையும் படைத்தார் என்றும்; 4,400 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வெள்ளம் வந்தது என்றும் நான் நம்புகிறேன். வெள்ளத்தின் தண்ணீரானது செல்லும்போது, ஏறத்தாள பாதியளவு மண் சகதியை 20 நிமிடங்களில் அரித்துக்கொண்டு சென்றது. ஆகவே அந்த மண் சகதி வந்துசேருவதற்கு 30,000 ஆண்டுகள் ஆனதுபோல் காணப்படுகிறது. அதற்குக் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் ஆனது, அதற்குப் பின்பு அதிலிருந்து 4,400 ஆண்டுகள் ஆகிவிட்டன. லூயிஸ்ஸியானாவைச் சேர்ந்த எனது நண்பர் ஒருவர் போதகராக இருக்கிறார். "சகோதரர் ஹோவிந்த் அவர்களே, மெக்ஸிகோவின் பள்ளத்தாக்கில் எண்ணெய் நிலத்தில் எண்ணெய்க்காகத் துளையிடும் வேலை செய்வது எனது வழக்கம்" என்று சொல்லுகிறார். "மண்ணில் துளையிட்டு 14,000 அடிகள் செல்லும்பொழுது 60 அடிகள் உயரமாக மேல் நோக்கி நின்ற மரங்களை இடித்தோம்" என்று அவர் சொன்னார். மண்ணிற்குள் 14,000 அடி ஆழத்தில் 60 அடி செங்குத்தான மரங்கள் இருக்கின்றன. வீடியோ எண் 6-ல் அதைப்பற்றி அதிகமாக இருக்கிறது. உலகத்திலேயே மிகவும் பழமையான மரத்தின் படம் ஒன்று இங்கே இருக்கிறது. இது பிரிஸ்ட்டில் கோன் பைன் என்று அழைக்கப்படுகிறது. பென்ஸகோலாவில் உள்ள எங்களின் அருங்காட்சியகத்தில், பிரிஸ்டில் கோன் மரத்தின் துண்டு ஒன்று இருக்கிறது. அதனுடைய குறுக்களவானது 30 அங்குலங்கள் மட்டுமேயாகும். அது 700 ஆண்டுகள் பழமையானது. நீங்கள் பூதக் கண்ணாடியினால் அதன் வளையங்களைக் கணக்கிட முடியும். அது மிகவும் மெதுவாக வளர்கிறது. மரத்தின்-வளையங்களைக்கொண்டு, காலத்தைக் கணக்கிட்டால், அது ஒரு அறிவியலாக இருக்காது. ஒரு ஆண்டுக்கு 2 அல்லது 3 வளையங்களை மரங்களால் உருவாக்க முடியும். மேலும் மரத்தின் வளையத்தை வைத்துக் காலத்தைக் கணக்கிடும்போது தவறுகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். நீங்கள் விரும்பினால், கேள்வி மற்றும் பதில் நேரத்தில் வீடியோ எண் 7-ல் நாம் அதைப்பற்றி அதிகம் பார்க்க இருக்கிறோம். உலகத்திலேயே மிகவும் பழமையான மரத்திற்கு 4,300 ஆண்டுகள் வயதாகிறது என்றும் பூமியிலே இது வயது முதிர்ந்த உயிரியாகும் என்று இந்தப் பாடப்புத்தகம் கூறுகிறது. அது ஒரு மிகவும் பழமையான மரமாக இருக்கிறது. ஆனால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. பூமி மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றால், ஏன் பழமைவாய்ந்த மரம் ஒன்றுகூட வேறு எங்குமே இல்லை? ஏன் பழமைவாய்ந்த மரத்திற்கு 4,300 ஆண்டுகளாகிறது? அதைப்பற்றி எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. என்னுடைய கொள்கை என்னவெனில்: சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் எல்லாவற்றையும் படைத்தார்; 4,400 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு வெள்ளம் வந்தது. ஆகவே, ஏறக்குறைய 4,300 ஆண்டுகள் பழமையான மரமானது எங்கேயோ இருக்கவேண்டும் என்று நான் முன்னறிவிக்கிறேன். ஆச்சரியமாயிருக்கிறது! ஒருவேளை,இந்த வேதாகமம் சொல்லுவது சரியாக இருக்கலாமே! ஒருவேளை, நான் அதை வாசித்து அதை நம்பவேண்டியதுதான். ஒரு பவளப்பாறையின் படம் ஒன்று இங்கே இருக்கிறது. உலகத்திலேயே மிகப்பெரிய பவளப்பாறையானது ஆஸ்திரேலியாவில் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? ஒருமுறை பிரிஸ்பேனில் உள்ள ஒரு ஆலயத்திலிருந்து எனக்கு ஒரு அழைப்புக் கிடைத்தது. "நீங்கள் இங்கே ஆஸ்திரிலேயாவுக்கு வந்து கற்பிக்க விரும்புகிறீர்களா?" என்று அவர்கள் கேட்டார்கள். நான் இதற்காகச் ஜெபிக்க வேண்டும் என்று சொன்னேன். (அவர் "ஆமா" என்றார்). என் முழுக்குடும்பத்தையும் ஆஸ்திரிலேயாவுக்குக் கூட்டிச்சென்றேன். கிரேட் பேரியர் ரீவ் என்னும் இடத்தில் தண்ணீருக்குள் நானும் எனது மகளும் நீச்சலடிக்கச் சென்றோம். அது வியப்புடையதாக இருக்கிறது!` இரண்டாம் உலகப்போரின்போது, கப்பல்கள், நங்கூரங்கள், வெடிகள் போன்றவற்றால் பவளப்பாறையின் சில பகுதிகள் அழிக்கப்பட்டுவிட்டன. எனவே, அது மறுபடியும் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்று பார்ப்பதற்காக சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள் அங்கே சென்றனர். அவர்கள் பவளப்பாறையின் வளர்ச்சியை 20 ஆண்டுகளாகக் கவனித்தார்கள். (அது ஒரு அரசாங்கத் திட்டமாகும்). இந்தப் பாறைகள் 4,200 ஆண்டுகளுக்கும் குறைவானவையே என்று அதன் வளர்ச்சியை 20 ஆண்டுகளாகக் கவனித்த பின்பு அவர்கள் கூறினார்கள். சரி, அப்படியானால் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. இந்தப் பூமி மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்றால், ஏன் பெரிய பழமையான பவளப்பாறையானது வேறு எங்குமே இல்லை? ஏன் உலகிலேயே பெரியப் பவளப்பாறையானது 4,200 ஆண்டுகள் மாத்திரமே பழமையானதாக இருக்கிறது? அதைக்குறித்து என்னிடம் ஒரு கொள்கை இருக்கிறது. அது ஏன் என்று உங்களுக்கு நிச்சயம் தெரியும் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது நீங்கள் அதைக்கண்டுபிடிக்க முடிகிறதா? இங்கே நயாகரா நீர்வீழ்ச்சியின் படம் ஒன்று இருக்கிறது. "மாணவ, மாணவிகளே, நயாகரா நீர்வீழ்ச்சியின் மேல் உள்ள பாறையின் விளிம்பானது, ஏறக்குறைய 9,900 ஆண்டுகளாகச் சிதைந்து வருகிறது" என்று இந்தப் பாடப்புத்தகம் கூறுகிறது. அது அவர்களுக்கு எப்படித் தெரியும்? நல்லது, விளிம்பிலுள்ள பாறைகள் உடைந்துகொண்டிருக்கின்றன. அனைத்து நீர்வீழ்ச்சிகளிலுமே அது நிகழ்கிறது. அவைகள் பாறைகளை உடைப்பதினால், நீர்வீழ்ச்சிகளின் விளிம்பானது பின் நோக்கிச்செல்லுகிறது. ஒரு திசையில் தண்ணீர் ஓடுகிறது; மறு திசையில் அது பாறையை அரிக்கின்றது. ஒரு ஆண்டிற்கு 4.7 அடிகள் நயாகரா நீர்வீழ்ச்சியானது பின்புறமாக நகர்ந்துகொண்டிருக்கிறது. "நல்லது, நயாகரா நீர்வீழ்ச்சி இங்கே இருக்கிறது. நியூயார்க்கின் லெவிஸ்டனின் மலைப்பாறையிலிருந்து இந்த அரிப்பானது ஆரம்பித்தது (பின்நோக்கி நகர்ந்து விட்டது)" என்று சார்லஸ் லைல் என்பவர் 1841-ல் அங்கே சென்று கூறினார். அது "10,000 ஆண்டுகளுக்குரிய அரிப்பாகும்" என்று அவர் கூறினார். "சார்லி அவர்களே, நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் வேகமாக அது அரிக்கிறது," ஒரு நல்ல புயல் மழையினால் ஏற்படுகிற அரிப்பு அதிகமாக இருக்கிறது" என்று அங்கே வாழ்கிற மக்கள் கூறினார்கள். ஒரு ஆண்டிற்கு 3 அடிகள் அரிப்பு என்று அவர் கணக்கிட்டார். (வேதாகமமானது தவறானது என்று காண்பிக்க வேண்டுமென்றே உருவாக்கியதுதான் அதுவாகும்.) அவர் வேதாகமத்தை வெறுத்தார். வீடியோ எண் 4-ல் அவரைப்பற்றி அதிகம் பார்க்கலாம். இன்று நயாகரா நீர்வீழ்ச்சியானது அங்கே எவ்வளவு தூரமோ பின் நோக்கி நகர்ந்துவிட்டது. உண்மையிலே, அங்கே இரண்டு நயாகரா நீர்வீழ்ச்சிகள் இருக்கின்றன. கனடாவின் பகுதியிலும் மற்றும் அமெரிக்காவின் பகுதியிலும் இருக்கின்றன. சார்லஸ் லைலின் காலத்திற்கு முன்பாகவே அது எவ்வளவோ பின்புறமாக அரித்துவிட்டது. "இந்த ஆறு ஓடும் மலைகளுக்கு இடையில் உள்ள இடுக்கான வழியின் நீளமானது 7.5 மைல்கள் தூரமுள்ளது. இது 9,900 ஆண்டுகளாக இருந்துவருகிறது என்பது ஒரு எளிய கணக்காகும்" என்று இந்தப் பாடப்புத்தகம் கூறுகிறது. அது அவ்வளவு எளிமையாது அல்ல. பாருங்கள், நயாகரா நீர்வீழ்ச்சியானது தற்பொழுது இங்கே இருக்கிறது. லிவிஸ்டனின் வடக்கே தூரத்தில் இது ஆரம்பித்தது. இந்தப் பூமிக்கு மில்லியன்கள் ஆண்டுகள் ஆகியிருந்தால், பின்புறம் இருக்கிற எரி என்கிற ஏரிவரையில் ஏன் இன்னும் அரிப்பு ஏற்படவில்லை? தற்பொழுது நயாகரா நீர்வீழ்ச்சி அங்கே இருப்பது ஏன்? அதைப்பற்றி எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. எனது கொள்கை என்னவெனில்: நீங்கள் பாருங்கள், சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் ஒவ்வொன்றையும் படைத்தார்; மேலும் 4,400 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு வெள்ளம் வந்தது. அந்த வெள்ளம் வடிந்து செல்லும்போது, 20 நிமிடங்களில் அந்தச் சிற்றோடையில் சுமார் பாதியளவு அடித்துச் சென்றது. எனவே அது 9,900 ஆண்டுகள் ஆனதுபோலக் காணப்படுகிறது. அந்த வெள்ளத்தை அவர்கள் மறந்துவிட்டார்கள். மேலும் சரியான எண்ணைப் பெறுவதற்கும் அவர்கள் மறந்துவிட்டார்கள். அது 8,400 ஆண்டுகள் என்று இருந்திருக்கவேண்டும். அவர்கள் 4.7 அடிகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? மழை பெய்யும்பொழுது, 30% தண்ணீரானது கடலுக்குச் செல்லுகிறது. தண்ணீர் அப்படி வரும்பொழுது கனிம உப்புகளைக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு நாளும் கடல்கலானது உப்பாகிக்கொண்டே வருகிறது. இன்று கடல்களில் 3.6% உப்பு இருக்கிறது. 5,000 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில் அவைகள் உப்பாக மாறியிருக்க முடியும். கேள்வி என்னவெனில், ஏன் கடல்கள் அதிகம் உப்பாகவில்லை? நல்லது, நீங்கள் பாருங்கள், 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, தேவன் ஒவ்வொன்றையும் படைத்தார்; 4,400 ஆண்டுகளுக்கு முன்பு அங்கே ஒரு வெள்ளம் வந்தது. வெள்ளமானது நின்றுவிட்டக் காரணத்தால், கடல்களானது படிப்படியாக உப்பாக மாறுகிறது. "ஹோவிந்த் அவர்களே, நல்ல தண்ணீரில் உள்ள மீனானது, எவ்வாறு வெள்ளத்தின் தண்ணீரில் வாழமுடியும் என்று தயவுசெய்து எனக்குச் சொல்ல முடியுமா?" என்று ஒரு நாஸ்தீகர் என்னுடன் வாதிட்டார். "ஐயா, அந்த வெள்ளம் உப்புத்தண்ணீர் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று நான் சொன்னேன். "கடல்கள் உப்பாக இருக்கின்றன" என்று அவர் சொன்னார். "அது இன்றுகூட அப்படித்தான் இருக்கிறது" என்று நான் கூறினேன். வெள்ளத்தின்போது அது ஒருவேளை பெரும்பாலும் நல்ல தண்ணீராக இருந்து, படிப்படியாக உப்புத்தண்ணீராக மாறியிருக்கலாம். மேலும் உப்புத் தண்ணீருக்கு ஏற்றவிதத்திற்கு மாற்றம் அடையும் சில விலங்குகள் இன்றும் இருக்கின்றன. தற்பொழுது, நல்ல தண்ணீரில் வாழும் முதலைகள் மற்றும் உப்புத்தண்ணீரில் வாழும் முதலைகள் இன்று நம்மிடம் இருக்கின்றன, மேலும் ஒருவேளை ஒரே பொதுவான முன்னோர்கள் இருந்திருக்கலாம். "ஒரு முதலை" என்று அவர் சொன்னார். "அது பரிணாமம்" என்று நான் சொன்னேன். "இல்லை, அது அப்படியில்லை" என்று நான் கூறினேன். "உங்களுடைய பரிணாமக் கதையை ஒப்பிடும்பொழுது, நல்ல தண்ணீர் முதலையானது, உப்புத்தண்ணீர் முதலையாக மாறுவது ஒரு சிறிய மாற்றமேயாகும். ஒரு பாறையானது ஒரு முதலையாக மாறினது என்று நீங்கள் நம்புகிறீர்கள். தற்பொழுது, அது ஒரு பெரிய மாற்றமாக இருக்கிறதே!" என்று நான் சொன்னேன். அலபாமாவில் உள்ள எனது நண்பர் மீன்களை வளர்க்கிறார். மேலும் பிளாக் மோலிஸ் என்னும் ஒரு நல்ல தண்ணீர் மீனை அவர் எடுத்து, அவர் தனது மீன் தொட்டியில் சிறிது சிறிதாக உப்பைக் கலந்தார். இரண்டு வாரங்களில் அவைகள் உப்புத் தண்ணீர் மீன்களாக மாறிவிட்டன. அவர் அவைகளை மறுபடியும் நல்ல தண்ணீரில் விட்டபொழுது, 30 நிமிடங்களில் அவைகள் இறந்துவிட்டன. அவைகள் உப்புத் தண்ணீருக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ள முடியும், ஒரு பிரச்சனையும் இல்லை. எத்தனைபேர்கள் எப்பொழுதாவது ஒரு குகைக்குள் சென்றிருக்கிறீர்கள்? "இந்த உருவங்களைத் தொடாதீர்கள், அவைகள் உருவாகிறதற்குப் பல மில்லியன்கள் ஆண்டுகள்ஆகின்றன" என்று ஒரு வழிகாட்டி கூறினார். அவர்கள் ஒரேமாதிரியான பேச்சுகளைப் பேசுவார்கள், சரியா? கெண்டக்கியில் உள்ளது எவ்வாறானது? மிகப்பெரிய குகையா? அல்லது கார்ல்ஸ்பேடில் உள்ள பெரிய குகைகளுக்குச் சென்றால், 250 மில்லியன்கள் ஆண்டுகள் அது எடுத்தது என்று அவர்கள் சொல்லுகிறார்கள். இந்தப் பழமையான உருவங்களைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்தார்கள். "உங்களுக்குத் தெரியும், ஆயிரம் ஆண்டுகளில் 2.5 அங்குலங்கள்தான் அவைகளால் மிக அதிகமாக வளர முடியும். அதுதான் அதிகபட்சமான வளர்ச்சி விகிதம்" என்று ஒருவர் கூறினார். நான் அப்படி நினைக்கவில்லை. லிங்கன் நினைவுக் கட்டிடத்தில், வளர்ந்துகொண்டு வரும் 50 அங்குல அளவுள்ள சில பழமையான உருவங்கள் இங்கே இருக்கின்றன. அவைகள் 40 ஆண்டுகளில் வளர்ந்துள்ளன. இங்கே ஒரு மட்டையானது, அது அழிகிப்போவதற்கு முன்பே ஓடுகல்லால் மூடப்பட்டுள்ளது. புளோரிடாவின் பென்ஸகோலாவில் குளிரூட்டியின் தாழ்வாரத்தில் வளர்ந்துகொண்டுவருகிற 2 அங்குல அளவுள்ள உருவங்கள் இங்கே இருக்கின்றன. இங்கே இண்டியானாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில் ஒருவர் இருக்கிறார். சுண்ணாம்புக் கல்லின் வழியே தண்ணீர் வழிந்துகொண்டிருக்கும் அடிமட்டத்தை உடைய பெரிய குகை உருவங்களுடன் அது இருக்கிறது. இங்கே ஆஸ்திரேலியாவில் 55 ஆண்டுகளாக மூடப்பட்ட ஒரு சுரங்கம் இருக்கிறது. அதைச்சோதிப்பதற்காக அவர்கள் மறுபடியும் திறந்தபொழுது, 55 ஆண்டுகளாக உருவாகியிருந்த உருவங்கள் அங்கே இருந்தன. இங்கே ஒரு குழாயானது 7 ஆண்டுகளாகக் கசிந்துகொண்டிருக்கிறது. அது 13 அங்குல உருவத்தை உண்டாக்கியிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளில் 2.5 அங்குலம் மட்டுமே உருவம் உருவாகியிருக்கும் என்று நான் நினைத்தேன். ஒரு ஆண்டிற்கு 2 அங்குலத்திற்குமேல் வளர்ந்துள்ளதுபோல் காணப்படுகிறது. அங்கே கீழே இருந்த உருவத்தை அவர்கள் உடைத்து என்னிடம் கொடுத்தார்கள். அது எங்களுடைய அருங்காட்சியகத்தில் இருக்கிறது. டெக்ஸாஸில் 1997-ல் கட்டப்பட்ட மோட்டார் வண்டியை நிறுத்திவைக்கும் கொட்டகை ஒன்று இங்கே உள்ளது. மாணவர்கள் கார் நிறுத்துமிடத்திற்குக் கீழே அது ஸ்தம்பித்த நிலையில் உருவம் உண்டாக்கிக்கொண்டிருந்தது. வழிகிறத் தண்ணீரைப் பிடிப்பதற்கு அவர்கள் ஒரு தட்டை வைக்கவேண்டியிருக்கிறது. யோமிங்கில் உள்ள தெர்மோபோலிஸில் ஒரு நபர் அவருடைய உடைமைகளின்மேல் சூடான தாது நீருற்றை உடையவராக இருந்தார், யோமிங்க்; எனவே ஒரு குழாயை தரையில் படும்படியாக இருக்கச்செய்தார். அந்தக் குழாயின் மேலே அந்தத் தண்ணீர் வெளியேறி குமிழிகளாக அந்தக் குழாயின் மேல்பகுதியில் உள்ள பக்கவாட்டில் கீழ்நோக்கி வந்தது. ஒரு சிறிய நீருற்று அவர்களிடம் இருந்தது. கூடார ஊற்று என்று அதை அவர்கள் அழைத்தார்கள். நல்லது, அந்த நபர் இறந்துவிட்டார். முற்றத்தில் ஒட்டியிருந்தபடியே அவர்கள் அந்தக் குழாயை விட்டுவிட்டார்கள். அந்தக் குழாய் அங்கே இருக்கும்பொழுது, தண்ணீர் ஆவியாதலினால், தாதுப்படிவங்களை அது விட்டுச்சென்றது. எத்தனைபேர்கள் கனிமப்பொருள் படிவங்களைப் பார்த்திருக்கிறீர்கள்? இங்கே உள்ள கைகழுவும் தொட்டியில் நீங்கள் அவைகளைக் காணலாம். அந்த நபர் மரித்தபின்னர், 95 ஆண்டுகளாக அந்தக் குழாயானது அந்த நிலத்தில் தொட்டுக்கொண்டிருந்தது. நான் அதைப்பார்க்கச் சென்றேன். 1998 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அது இவ்வாறு இருக்கிறது. அதைச் சுலபமாகச் சுரண்டிச் சுத்தப்படுத்த பெரிய முயற்சித் தேவைப்பட்டிருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆமா, கொஞ்சமாவது சுத்தமாயிருக்கும். அந்தத் தெருவில் இருந்த ஒரு நபர் இதைப் பின்பு செய்தார். அந்தளவுக்கு அது பெரியது இல்லை. தற்பொழுதுள்ள கடல் அரிப்பு விகிதப்படி பார்த்தால், 14 மில்லியன் ஆண்டுகளில், இந்தக் கண்டங்கள் மட்டமாக அரிக்கப்பட்டிருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். கடல் மட்டத்திற்கு மேலே, 300 மடங்குகளுக்கும் அதிகமானப் பழங்காலப் பொருட்களின் அடிச்சுவடுகள் நம்மிடம் இருக்கின்றன என்று அவர்கள் இன்னும் நம்மிடம் ஏன் சொல்லுகிறார்கள்? அவைகள் 300 தடவைகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு விமானத்தில் பிரயாணம்செய்து, அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் காணப்படும் அரிப்பு வகைகளைப் பார்த்தால் "இந்த இடமானது ஒரு வெள்ளத்தினால் அழிக்கப்பட்டிருக்கிறது" என்பதை நீங்கள் கவனிப்பீர்கள். இந்த முழு உலகமும் ஒரு வெள்ளத்தினால் அழிக்கப்பட்டது. நான் விமானத்தில் பயணம்செய்வதுபோல, நீங்களும் பயணம்செய்து, அவ்வப்பொழுது ஜன்னலின் வெளியே பாருங்கள். உலகின் மிகப்பழமையான மொழிகள் சுவாரசீகமானவைகள். "நேஷனல் ஜியோகிராபிக்"கிலிருந்து வருகிற "முக்கிய எழுத்துக்களின் முறையின் ஆரம்பம்" பற்றிப் படிக்கிற அவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? சுமார் கி.மு. 3000 முதல் 5,000 ஆண்டுகளுக்கு முன்புதான் மிகப்பழமையான எழுத்துக்கள் எழுதும் முறைகள் உலகில் ஆரம்பித்தன என்று அவர்கள் கூறுகிறார்கள். மிகப்பழமையான எழுதும் முறைகளானது, நவீனப்படுத்தப்பட்டு, வசதியாக்கப்பட்டுப் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. சீனர்கள் 2000-ம் ஆண்டானது 4,700-ராவது ஆண்டு என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்களது காலண்டரை வெள்ளத்திலிருந்து ஆரம்பித்தார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்கள் அதை நோவா, பூ ஹி என்று அழைத்தார்கள். மிகப்பெரியத் தண்டனை வழங்குதல் 3,800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்று பழமையானப் பதிவேடு குறிப்பிடுகிறது. 2000-மாவது ஆண்டானது எபிரெயக் காலண்டரில் 5760-வது ஆண்டாகும். இயேசுவைப் பற்றியத் தீர்க்கதரிசனங்கள் பொருத்தமில்லாமல் இருப்பதற்காக, ஒரு யூதப்போதகரானவர், சில ஆண்டுகளை வேண்டுமென்றே அகற்றிவிட்டு, எபிரெயக் காலண்டரைக் குழப்பியுள்ளார் என்று நமக்குத் தெரியும். ஆதாம்வரையில் செல்லும் மரபியலை ஸாக்ஸன்ஸ் வைத்திருந்தனர். நோவாவரையில் செல்லும் அரசர்களின் பட்டியலை, டென்மார்க் நாட்டினர்களும் நார்வே நாட்டினர்களும் வைத்து இருந்தார்கள். எகிப்தியர்களின் அரசப்பட்டியலை நம்பாதீர்கள். அது அதிகமாக மிகைப்படுத்தப்பட்டுள்ளது. "பரிணாமத்தின் பற்கடிப்பாளர்" பற்றி கோர்விலி எழுதிய புத்தகத்தில் பாருங்கள். மிகப்பழமையான, நம்பத்தக்க, சரித்திர ஆவணங்கள் 6,000 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருப்பது ஏன்? நல்லது, அதைப்பற்றி எனக்கு ஒரு கொள்கை இருக்கிறது. அது என்னவென்று உங்களுக்குத் தெரியும் என்று நான் நினைக்கிறேன். மக்களே, இந்த வேதாகமம் முற்றிலும் நேர்மையானது. முற்றிலும் சரியானது, அறிவியல் பூர்வமானதாக இருக்கிறது. இந்தப் பூமி இளமையானது என்பதற்கான ஆதாரம் நிரம்பி வழிகிறது. மாணவர்களுக்கு அது கற்றுக்கொடுக்கப்படவில்லை. பூமியானது பழமையானது என்பதற்கான ஆதாரம் மட்டுமே மாணவர்களுக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. பெட்டியில் இருந்த நாணயங்களை நினைத்துப்பார்க்கிறீர்களா? அவர்கள் சமீப காலத்தின் நாணயங்களையே எடுக்க வேண்டும். நாணய காலத்திற்கு முந்திய பழங்கதைகளை அல்ல. இனிமேல், இந்தப் பாடபுத்தகங்கள் உண்மையிலேயே அறிவியல் புத்தகங்களாக இருக்காது. அவைகள் பரிணாமம் பற்றிய புத்தகங்களாக இருக்கின்றன. ஒரு புதிய உலக ஒழுங்குமுறை என்ற படத்திற்கான, ஒரு பகுதியாகவே இது இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். "இந்தச் சத்தியத்தை சுய ஆதாரமான அத்தாட்சியாகப் பிடித்திருக்கிறோம்......" என்று இந்த அமெரிக்க நாட்டை ஆரம்பித்தவர்கள் கூறினார்கள். அனைத்து மனிதர்களும் சமத்துவமாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் சமமான சிலவகையான உரிமைகள் அவர்களைப் படைத்தவரால் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கிறிஸ்தவக் குடும்பங்களிலிருந்து பொதுப்பள்ளிகளுக்குச் செல்லுகிற சிறுவர்களில் 75% பேர்கள், கல்லூரில் ஒரு ஆண்டி படித்த பிறகு, கிறிஸ்தவ விசுவாசத்தை நிராகரிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிராபோர்டு டாய் என்பருக்கு அதுதான் நிகழ்ந்தது. ஒருபோதும் அதிகமானபேர்கள் கிராபோர்டு டாயைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ஆனால், அவர் ஒரு மிகப்பிரபலமான பாப்டிஸ்ட் சபையின் வேதாகமக் கல்லூரிப் பேராசிரியராக இருந்தார். அநேகமாக, அவர் லோட்டி மூன் என்கிற பெண்ணை திருமணம் செய்தார். லோட்டி மூன் என்பவரைப் பற்றி எவராவது எப்பொழுதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒவ்வொரு கிறிஸ்மஸ் பண்டிகையின்போதும் லோட்டி மூன் காணிக்கை உங்களிடம் கேட்கப்படுவது உங்களுக்குத் தெரியும். அந்தப் பெண், சீனாவிற்குச் சென்ற ஒரு பெரிய மிஷனரியாக இருந்தாள். கிராபோர்டு டாய், உள்நாட்டுப் போருக்குப் பின்பு, ஐரோப்பாவிற்குச் சென்று பரிணாமம் பற்றிக் கற்றார். அவர் பரிணாமத்தை உறிஞ்சினார், மேலும் அதை அவர் நம்பினார். ஒரு பரிணாமவாதியாக அவர் மாறினார். கிராபோர்டு, அவருடைய வேதாகம வகுப்பிற்கு திரும்பி வந்து, "சாதாரண ஆறு நாள் படைப்பைப் போதிக்க வேதாகமம் உத்தேசிப்பது உங்களுக்குத் தெரியும். அந்த விஷயத்தில் வேதாகமம் பிழையாக இருக்கிறது" என்று அவர் சொன்னார். வேதாகமம் பிழையாக இருக்கிறதா!? இப்பொழுது கிராபோர்டு, நிறுத்துங்கள்! ஒருவேளை உங்களின் கொள்கையானது பிழையாக இருக்கலாம். மேலும் ஒருவேளை உங்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கலாம். மூளைச்சலவை செய்வது மிகவும் சுலபமானது. நான் இந்தக் கூட்டத்தினர்கள் அனைவரையும் மூளைச்சலவை செய்ய முயற்சிக்கப்போகிறேன். அதன்பின்பு, கூட்டத்தை முடித்துவிட்டு நாம் வீட்டுக்குச் செல்ல இருக்கிறோம். நாளைக்கு நாம் ஏதேன் தோட்டம் பற்றிப் பேசுவோம். அது எதைப்போன்று இருந்தது? ஏன் அவர்கள் 900 ஆண்டுகள் வாழ்ந்தார்கள்? என்பதைப் பற்றிப் பார்க்க இருக்கிறோம். ஆனால், முதலில் நான் ஒவ்வொருவரையும் மூளைச்சலவை செய்ய முயற்சிக்க விரும்புகிறேன். இங்கே இதுதான் நடக்கப்போகிறது. நான் உங்களுக்கு ஒரு சிறு கதை சொல்லப்போகிறேன். அந்தக் கதையைச் சொல்லும்போது, உங்களை மூளைச்சலவை செய்வேன். ஒருவேளை இதற்கு முன்பு நீங்கள் ஒருபோதும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்க மாட்டீர்கள். இது வலி இல்லாத ஒரு செயல் முறையாக இருக்கிறது. இதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். அந்தக் கதையை நான் சொல்லி முடித்ததும், அந்தக் கதையைப் பற்றி இரண்டு சாதாரண கேள்விகளைக் கேட்பேன். உங்களுக்குப் பதில் தெரியுமானால், உங்களின் கையை நீங்கள் உயர்த்தவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்குப் பதில் தெரியவில்லையானால், நீங்கள் வெற்றிகரமாக மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்டீர்கள் என்று அர்த்தமாகும். இப்பொழுது அந்தக் கதையைக் கவனியுங்கள். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் இருப்பிடத்தை விட்டு ஓடினான். அவன் சிறிது தூரம் ஓடியதும் இடதுபுறமாகத் திரும்பினான். அவன் சிறிது தூரம் ஓடியதும் இடதுபுறமாகத் திரும்பினான். அவன் சிறிது தூரம் ஓடியதும், இடதுபுறமாகத் திரும்பினான். மேலும் அவன் மறுபடியும் இருப்பிடத்தை நோக்கி சிறிது தூரம் ஓடி வந்தான். அவன் இருப்பிடத்திற்கு ஓடிவரும்பொழுது, முகமூடி அணிந்த இரண்டு மனிதர்கள் அவனுக்காக இருப்பிடத்தில் காத்திருந்தார்கள். முகமூடி அணிந்திருந்த அந்த மனிதர்கள் யார்? அவன் ஏன் இருப்பிடத்தை விட்டு ஓடினான்? உங்களுக்குப் பதில் தெரிந்தால், கையை உயர்த்துங்கள், ஆனால் பதிலைச் சத்தமாகச் சொல்லாதீர்கள். அங்கே சுமார் 5 அல்லது 6 பேர்களுக்குத் தெரிகிறது. மற்றவர்கள் கவனியுங்கள். நாம் மறுபடியும் அதை முயற்சி செய்யப்போகிறோம். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் இருப்பிடத்தை விட்டு ஓடினான். அவன் சிறிது தூரம் ஓடியதும் இடதுபுறமாகத் திரும்பினான். உங்களுக்கு ஒரு குறிப்புக் கொடுக்கிறேன். அது முக்கியமானது. அவன் சிறிது தூரம் ஓடியதும் இடதுபுறமாகத் திரும்பினான். அவன் சிறிது தூரம் ஓடியதும், இடதுபுறமாகத் திரும்பி, மறுபடியும் இருப்பிடத்திற்கு ஓடினான். அவன் இருப்பிடத்திற்கு ஓடிவரும்பொழுது, இருப்பிடத்தில் முகமூடி அணிந்த இரண்டு மனிதர்கள் அவனுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். முகமூடி போட்டிருந்த அந்த மனிதர்கள் யார்? மேலும் அவன் இருப்பிடத்தை விட்டு ஏன் ஓடினான்? புதிதாக யாராவது அதைக் கண்டுபிடித்தீர்களா?... மேலும் 2 பேர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மீதமுள்ளவர்கள் கவனியுங்கள். நாம் மறுபடியும் அதை முயற்சிசெய்யப்போகிறோம். ஆனால், இப்பொழுது உங்கள் மூளையைப் பழைய நிலைக்குத் திருப்புவேன். பாருங்கள், நீங்கள் அதை உணரவில்லை. ஆனால் முதல் 3 நொடிகளிலே நான் உங்களை மூளைச்சலவை செய்துவிட்டேன். இப்பொழுது, இரண்டொரு படங்களை உங்களுக்குக் காண்பித்து, உங்கள் அனைவரது மூளையையும் பழைய நிலைக்குக் கொண்டுவரப்போகிறேன். நான் அதே கதையை வார்த்தை, வார்த்தையாகக் கூறுவேன். நீங்கள் படங்களைக் கவனியுங்கள். உங்களது மூளையானது பழைய நிலைக்குத் திரும்புவதை நீங்களாகவே உணருவீர்கள். அது ஒரு அருமையான உணர்வாகும். நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? இதோ கதையைக் கேளுங்கள். முன்னொரு காலத்தில், ஒரு மனிதன் (Home) இருப்பிடத்தை விட்டு ஓடினான். அவன் சிறிது தூரம் ஓடியதும் இடதுபுறமாகத் திரும்பினான். அவன் சிறிது தூரம் ஓடியதும், இடதுபுறமாகத் திரும்பினான். அவன் சிறிது தூரம் ஓடி, இடதுபுறமாகத்திரும்பி, வீட்டிற்கு மறுபடியும் ஓடிவந்தான். அவன் இருப்பிடத்திற்கு ஓடிவரும்பொழுது, முகமூடி அணிந்திருந்த இரண்டு மனிதர்கள் அவனுக்காக இருப்பிடத்தில் காத்துக்கொண்டிருந்தார்கள். முகமூடி அணிந்திருந்த அந்த மனிதர்கள் யார்? பிடிப்பவரும் நடுவருமேயாகும். "சகோதரர் ஹோவிந்த் அவர்களே, மூளைச்சலவை செய்வது இவ்வளவு சுலபமானதா? என்று நீங்கள் கேட்கிறீர்கள். ஆம், இவ்வளவு சுலபமானதே! நீங்கள் பாருங்கள், "ஒரு மனிதன் (Home) இருப்பிடத்தை விட்டு ஓடினான்....." என்று நான் சொன்னவுடனே, நீங்கள் ஒரு (House) கட்டிடமாகிய வீட்டைப்பற்றி சிந்திக்க ஆரம்பித்து விட்டீர்கள். அப்பொழுதே நீங்கள் பாதையைவிட்டு விலகிச்சென்று விட்டீர்கள். மேலும் நீங்கள் பாதையைவிட்டு விலகின உடனே, மறுபடியும் உங்களைச் சரியான பாதைக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாயிருக்கிறது. உங்கள் பள்ளிப்பாடத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு ஆண்டும், மில்லியன்களால் உங்கள் பிள்ளைகள் எவ்வாறு மூளைச்சலவைச் செய்யப்படுகிறார்கள் என்பதைப் பார்க்க நீங்கள் விரும்புகிறீர்களா? அமெரிக்காவில், மில்லியன் கணக்கான சிறுவர்கள், ஒவ்வொரு ஆண்டும் மூளைச்சலவைச் செய்யப்படுகிறார்கள். மேலும் அதை அவர்கள் மிகவும் சுலபமாகச் செய்கிறார்கள். அவர்கள் குழந்தையை நர்சரிப் பள்ளியில் சேர்க்கிறார்கள்; அந்தக் குழந்தைக்கு இன்னும் வாசிக்கக்கூட இயலாது. மேலும் "டைனோஸரைப் பற்றி என்னால் வாசிக்க முடியும்" என்று எழுதியிருக்கிற இதுபோன்ற ஒரு புத்தகத்தை அந்தக் குழந்தைக்குக் கொடுக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் முதல் வாக்கியம் என்ன சொல்லுகிறது என்று உங்களில் யாராவது யூகித்துச் சொல்ல முடியுமா? "மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு........" என்று சொல்லுகிறது. அந்தக் குழந்தையானது முதல் 5 நொடிகளிலேயே பாதையைவிட்டு வெளியே தூக்கி எறியப்படுகிறதே! உங்கள் ஊரில் எத்தனை பிள்ளைகளுக்கு இது கற்பிக்கப்படுகிறது? இயேசு ஒரு பொய்யர் என்று ஏறத்தாள அனைவருக்கும் இது கற்பிக்கப்படுகிறதே! பல மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு டைனோஸரஸ் வாழ்ந்ததா? "நீங்கள் பிறப்பதற்கு மில்லியன்கள் ஆண்டுகளுக்கு முன்பு" என்று டாக்டர் ஸீயஸ் என்பவர்கூடச் சொல்லுகிறாரே. ஆதாம் படைக்கப்பட்டதே ஆரம்பம் என்று இயேசு சொன்னார். மக்களே, யாரோ ஒருவர் தவறாக இருக்கிறார். தற்பொழுது ஒரு நிமிடம் பொறுத்திருங்கள், வெள்ளம் ஏற்படுவதற்கு முன்பு, மக்கள் 900 வயதுவரையில் வாழ்ந்தார்கள் என்று இந்த வேதாகமம் கூறுகிறது. அது எவ்வாறு சாத்தியமானது? நாம் அதைப்பற்றி அதிகமாகக் கருத்தரங்கம் எண் 2-ல் நாளைக்குப் பார்ப்போம். வெள்ளத்தைப் பற்றிய விபரம் என்ன? நல்லது, அது வீடியோ எண் 6-ல் விபரமாக உள்ளது. மேலும் டைனோஸரஸ் பற்றிய விபரம் என்ன? நல்லது, அதுபற்றிய விபரங்கள் வீடியோ எண் 3-ல் உள்ளன. ஆனால் கவனியுங்கள், நீங்கள் ஒரு மென்மையானத் திரவப்பொருளாக ஆரம்பித்து, காலப்போக்கில் மனிதனாக மாறினீர்கள் என்று பள்ளிகளில் உங்களுக்குச் சொல்லப்படப்போகிறது. நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அந்தத் தத்துவம் உங்களைக் கெடுக்கக்கூடியதாகும். "எச்சரிக்கையாக இருங்கள், உலக ஞானத்தினாலும், மாயமான தந்திரங்களினாலும், ஒருவனாலும் நீங்கள் ஏமாற்றமடைந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும், உலக வழிபாடுகளையும் பற்றியதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றியதல்ல." என்று வேதாகமம் கூறுகிறது. உங்கள் ஊரில் உள்ள பள்ளிக்கு 12 முதல் 16 வயதுவரை உள்ள ஒரு சிறுவன் சென்றால், இந்த உலகத்தைப்பற்றிய அவனுடைய மனப்பார்வை எவ்வாறு இருக்கப்போகிறது? பெரும்பாலும் ஒரு பரிணாமவாதியைப் போன்றுதான் அவன் மனப்பார்வையானது இருக்கும். இந்த வேதாகமம் ஆரம்பத்தைப் பற்றிச் சரியாகக் கூறமுடியுமானால், முடிவைப் பற்றியும் அது சரியாகக் கூறமுடியும். நாம் இப்பொழுது சுருக்கமாகப் பார்போம். தேவன் இந்த உலகத்தைப் படைத்தார். அவர் இதைத் தனக்குச் சொந்தமாக வைத்திருக்கிறார். அவர் ஒழுங்குமுறைகளை உருவாக்குகிறார். மேலும் நாம் அவருடைய ஒழுங்குமுறைகளை மீறினபடியால், குற்றவாளிகளாக நாம் இருக்கிறோம். நாம் அனைவரும் குற்றவாளிகள் என்பதை உங்களுக்குக் காண்பிக்க என்னை அனுமதிக்கவும். தேவன் சொன்ன அந்தப் பத்துக்கட்டளைகளும் இங்கே இருக்கின்றன. "பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக." (பொய் சொல்லாதே.) என்று தேவன் நமக்குச் சொன்னார். உங்கள் வாழ்க்கையில் எத்தனைபேர்கள் ஒரு பொய்யாவது சொல்லியிருக்கிறீர்கள்? ஒத்துக்கொண்டவர்கள் உங்கள் கையை மேலே தூக்குங்கள், நீங்கள் கையை தூக்கவில்லையெனில், இன்னொரு பொய் சொல்லுகிறீர்கள் என்று அர்த்தமாகும். "களவு செய்யாதிருப்பாயாக." என்பது அடுத்த கட்டளையாகும். எதையாவது, எப்பொழுதாவது திருடினவர்கள் எத்தனைபேர்கள் இருக்கிறீர்கள்? சொல்லுங்கள், நீங்கள் ஒரு பொய்யர் என்று ஏற்கனவே என்னிடம் சொல்லிவிட்டீர்கள். ஒத்துக்கொண்டவர்கள் உங்கள் கைகளை உயர்த்துங்கள். (உங்கள் கை மேலே போனதா சகோதரா? மேலே வைத்திருங்கள்.) இதுவரைக்கும், நாம் பொய்சொல்லும் திருடர்கள் என்பதை நாம் அறிந்துகொள்கிறோம், சரியா? தேவனுடைய கட்டளைகள் பத்தையும் வாசித்து நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம் என்பதை அறிய விரும்புகிறீர்களா? இங்கேயே நிறுத்துவது நமக்கு நலமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எந்தச் சந்தேகமுமே இல்லை. நாம் குற்றவாளிகள்தான். மேலும் நாம் அதற்காகத் தண்டிக்கப்படப்போகிறோம். தேவன் ஒரு நீதியுள்ள நியாயாதிபதியாக இருக்கிறார். பாவத்தைப் பார்த்துக்கொண்டிருக்க அவரால் முடியாது. மேலும் நாம் தண்டிக்கப்படப்போகிறோம். இல்லையென்றால், நீங்கள் ஒரு பரிகாரத்தைக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது. அங்கேதான் இயேசு உள்ளே வருகிறார். உங்கள் பாவங்களுக்காக (குற்றங்களுக்காக) அவர் கிரயம் செலுத்த விரும்புகிறார். எனக்காக அவர் கிரயம் செலுத்த முடியும் என்று 36 ஆண்டுகளுக்கு முன்பு நான் அவரிடம் சொன்னேன். என்னை மன்னித்து, என்னக் காப்பாற்றுங்கள் என்று நான் இயேசுவிடம் கேட்டேன். ஹேய், இன்று நீங்கள் மரித்தால், எங்கே செல்லுவீர்கள்? எரிகிற இடத்திற்கா? அல்லது எரியாத இடத்திற்கா? நீங்கள் மரிக்கும்போது எங்கே செல்லுவீர்கள்? நீங்கள் அதைப்பற்றிச் சிந்தனைசெய்தே ஆகவேண்டும், ஏனெனில், உண்மையாகவே, நீண்டகாலமாக நீங்கள் மரித்தவராக இருக்கப்போகிறீர்கள். இந்த வாழ்க்கையில் நிங்கள் பெறும் அனைத்தும் இரண்டு தேதிகளுக்கிடையில் இருக்கிற ஒரு சிறிய ஓட்டப்பந்தயமாக இருக்கிறது. என்றைக்கோ ஒரு நாளில் நான் மரிக்கப்போகிறேன். கடைசியாக, நான் அதைத்தான் செய்ய முயற்சிக்கப்போகிறேன். ஆனால் அது நிகழப்போகிறது. அது இன்றுகூட நிகழலாம். டென்னிஸி, நாக்ஸ்விலியைச் சுற்றிலும் மக்கள் வாகனங்களை ஓட்டும் விதத்தைப் பார்த்திருக்கிறீர்களா? மக்களே, கொடூரமாக வாகனங்களை ஓட்டியவர்கள் அங்கே சாலையைவிட்டு வெளியே கிடக்கிறார்கள். ஒருவேளை, நீங்கள் வீட்டிற்குப் போகும் வழியிலேகூட கொலைசெய்யப்படலாம். இப்படியிருக்கிற சூழ்நிலையில், நீங்கள் மரிக்கும்போது எங்கே போவீர்கள்? நீங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து இதுவரையில் மீட்கப்படவில்லை என்று உறுதியாக உணர்ந்தால், உங்களை மன்னித்து, மீட்கும்படி நீங்கள் ஆண்டவர் இயேசுவிடம் கேளுங்களேன். நீங்கள் ஏற்கனவே பாவ வாழ்க்கையிலிருந்து மீட்கப்பட்ட அனுபவம் உடையவரானால், நீங்கள் பூமியின்மேல், பரலோகத்திற்காக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? ஒவ்வொருவரும் ஆண்டவருக்காக எதையாவது நல்ல காரியம் செய்யவேண்டும். ஒரு போர் நடந்துகொண்டிருக்கிறது. ஏதாவது ஒரு வகையில் நல்ல தொண்டு செய்ய கண்டுபிடியுங்கள். தீவிரமாகத் தொண்டு செய்யுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்யுங்கள். ஓய்வுநாட்பள்ளி ஆசிரியராக இருங்கள். உங்கள் வாழ்க்கையில் தேவனுக்காக ஏதாவதொரு தொண்டு செய்யுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவிகள் செய்வதற்காகவே, எங்களது உதவிப்பொருட்கள் இருக்கின்றன. அங்கே பின்புறம் உள்ள அந்த மேஜையின்மேல் எங்களது பொருட்களைப் பற்றிய பட்டியல் இருக்கிறது. எங்களுடைய வீடியோக்களும் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தைகளில் உள்ள உங்களின் விசுவாசத்தைப் பெலப்படுத்த நாங்கள் உதவி செய்ய விரும்புகிறோம். படைப்பு, பரிணாமம் மற்றும் டைனோஸரஸ் பற்றிய தொடர்களை நீங்கள் பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அறிவியலைப் பற்றிய அனைத்து உண்மைகளையும், தகவல்களையும் அறிவதைக் காட்டிலும் உங்களைப் பற்றி அறிந்துகொள்ளுவது மிகவும் முக்கியமாகும். நீங்கள் பரலோகம் செல்லப்போகிறீர்களா? அல்லது இல்லையா? என்பதை அறிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். நீங்கள் இதுவரையில் ஒருபோதும் இயேசுவை உங்களின் பாவங்களிலிருந்து மீட்கும் மீட்பர் என்று நம்பவில்லையெனில், நீங்கள் பரலோகம் செல்லுவதற்கு என்ன செய்யவேண்டிருக்கிறது? என்பதை விரைவாக விளக்கமளிக்க என்னை அனுமதியுங்கள். நாம் அனைவருமே பாவிகள் என்று இந்த வேதாகமம் கூறுகிறது. ஏனெனில், தேவனுடைய கட்டளைகளை நாம் அனைவரும் மீறி இருக்கிறோம். நம்மைப் படைத்தவருக்கு நாம் கீழ்படியவில்லை. நாம் துன்மார்க்கமான காரியங்களைச் செய்தோம். எனவே, நாம் பாவிகளாய் இருக்கிறோம். மனிதர்களின் பார்வையிலே பார்த்தால்கூட, மற்றவர்களைக் காட்டிலும் சிலர் மோசமானவர்களாக இருக்கிறார்கள். ஆனாலும், நாம் அனைவருமே தேவனுடைய கட்டளைகளை மீறியிருக்கிறோம். நீங்கள் மனம் திரும்பவேண்டும் என்று இந்த வேதாகமம் கூறுகிறது. மனம் திரும்பவேண்டும் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவெனில், "திரும்பு" என்பதாகும். "உங்கள் பாவங்களிலிருந்து திரும்பி, தேவனிடம் திரும்புங்கள் என்பதே இதனுடைய இரண்டு அர்த்தங்களாகும். உங்களுடைய மனநிலையில் ஒரு மாற்றத்தைத் தேவன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார். "ஆண்டவரே, இனிமேல் நான் தவறுசெய்ய விரும்பவில்லை; உங்களுக்கு விரோதமாக நான் குற்றங்கள் செய்ததிற்காக மன்னிப்புக் கேட்கிறேன். இனிமேல் நான் சரியானவைகளைச் செய்ய விரும்புகிறேன்" என்று நீங்கள் ஆண்டவரிடம் சொல்லுங்கள். மேலும் நீங்கள் பாவ வாழ்க்கையிலிருந்து திரும்பி, தேவனிடத்திற்குத் திரும்புங்கள். "தேவனே, நீங்கள் தயவுசெய்து என்னை மன்னிப்பீரா? என்னை நீங்கள் மீட்டுக்கொள்வீரா?" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். வேதாகமத்தில் உள்ள ரோமர் புத்தகத்தில் 3:23--ல் இவ்வாறு சொல்லுகிறது. "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகினோம்" என்று கூறுகிறது. நீங்கள் ஒரு பாவி என்று ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கிறது. இரண்டாவதாக, "பாவத்தின் சம்பளம் மரணம்" என்று ரோமர் 6:23 கூறுகிறது. நம்முடைய பாவத்தினால் நாம் மரித்து நரகம் செல்லுவதற்கு நாம் தகுதியுடையவர்களாக இருக்கிறோம்; ஆனால், இயேசு உங்களுக்காக மரித்தார். அவர் உங்களை நேசிக்கிறார். நீங்கள் பரலோகம் வரவேண்டும் என்று அவர் விரும்புகிறார். இலவசமான அவருடைய மீட்பை, அவரிடத்தில் கேட்கிற எவருக்கும், நித்திய வாழ்வு என்னும் பரிசை தேவன் தருவார் என்று ரோமர் 6:23 கூறுகிறது. இது ஒரு இலவசமான பரிசு ஆகும். "கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் மீட்கப்படுவான்" என்று ரோமர் 10:13 கூறுகிறது. "கர்த்தாவே, நான் ஒரு பாவிதான். தயவுசெய்து என்னை மன்னியுங்கள்" என்று அவரிடம் கேட்டால், நித்திய வாழ்வு என்னும் இலவச பரிசை அவர் உங்களுக்குத் தருவார். இப்பொழுது, நீங்கள் என்னுடன்சேர்ந்து ஜெபிக்கலாம். மேலும் இயேசுவை உங்கள் மீட்பராக நீங்கள் ஏற்றுக்கொள்ளமுடியும். மாயாஜால வார்த்தைகள் இல்லை; தேவன் உங்கள் இருதயத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆனால், நீங்கள் இதை உணர்ந்து சொன்னால், தேவன் உங்களை மன்னிப்பார். இதைச் சொல்லுங்கள். "அன்புள்ள ஆண்டவர் இயேசுவே, நான் ஒரு பாவி என்று எனக்குத் தெரியும். நான் உங்களுடைய கட்டளைகளை மீறியிருக்கிறேன். நான் அதற்காக வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை மன்னியுங்கள். என்னுடைய பாவக்கணக்கின்மேல் உங்களின் இரத்தத்தைத் தயவுசெய்து வைப்பீராக. என் பாவங்களை மன்னித்து, என்னைப் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்வீராக. இயேசுவின் நாமத்தில் ஆமென்." என்று சொல்லுங்கள். நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டால், நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று வேதாகமம் சொல்லுகிறது. எனவே, உங்களை மீட்கும்படி நீங்கள் கர்த்தரிடத்தில் உண்மையாகவே கேட்டிருந்தால், அவர் உங்களை மீட்பார் என்று அவர் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இப்பொழுது, இயேசுவை நம்பி வளர்வதே உங்களின் கடமையாகும். உங்களின் வேதாகமத்தை வாசியுங்கள். ஜெபம் செய்யுங்கள், வேதாகமத்தை விசுவாசிக்கிற ஒரு நல்ல சபையுடன் நீங்கள் சேர்ந்து ஊழியத்தில் பங்குபெறுங்கள். ஒரு நல்ல கிறிஸ்தவராக வளருவதற்கு ஆரம்பியுங்கள். உங்களுக்கு மிகவும் நன்றிகளை நாங்கள் தெரியப்படுத்துகிறோம். நாங்கள் ஏதாவது விதத்தில் உங்களுக்கு உதவியாக இருக்க முடியுமானால், தொலைபேசியில் கூப்பிடுங்கள் அல்லது எழுதி அனுப்புங்கள். உங்களுக்கு உதவி செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம். மேலும் விபரங்களுக்கு அல்லது படைப்பு அறிவியல் நற்செய்தியினால் வழங்கப்படும் மற்ற பொருட்களுக்கு, தொலைபேசியில் தொடர்புகொள்ள 1(850)-479-3466. அல்லது எங்களது இணையதளத்தின் ஆன்லைனில் தொடர்பு கொள்ளவும்: www.drdino.com - [Ed.13.5]